Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappu Thaarani Thappu
Thappu Thaarani Thappu
Thappu Thaarani Thappu
Ebook114 pages36 minutes

Thappu Thaarani Thappu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Thappu Thaarani Thappu

Read more from Rajeshkumar

Related to Thappu Thaarani Thappu

Related ebooks

Related categories

Reviews for Thappu Thaarani Thappu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappu Thaarani Thappu - Rajeshkumar

    23

    1

    சந்தனக் கிண்ணத்துக்குள் நடுவிரலையும், மோதிர விரலையும் கொஞ்சமாய் நனைத்துக் கொண்டுவிட்டு குங்குமத்தை நெற்றிக்கும், கழுத்துக்கும் சின்னப்புள்ளியாய் பரிச்சயமாக்கினாள் தாரிணி. மஞ்சள் நிற தாம்பூல பாக்கெட்டைப் புன்னகைச் சிந்தலோடு பெற்றுக் கொண்டபின் வாழைக் கம்பங்களோடும், வெளிர் என விடிந்தததும் அணைக்கப்படாத ஸீரியல் விளக்குகளோடும் இன்னமும் நல்வரவு என்று சொல்லிக் கொண்டிருந்த சைன் போர்டோடும் இருந்த கல்யாணப் பந்தலைத் தாண்டி வெளியே வந்தாள். பந்தலோடு ஐக்கியப்பட்டிருந்த ராகிணி சவுண்ட் சர்வீஸின் பெயிண்ட் உதிர்ந்து போன ஸ்பீக்கர் ‘மன்மதராசா மன்மதராசா’ என்று மாலதியின் குரலை கீச்சென்று இழைத்துக் கொண்டிருக்க -

    சாலைக்கு வந்தாள் தாரிணி

    சாலைக்கு வந்த தாரிணி இளம்பச்சை பாரஸ் பட்டுப் புடவையில் உடலைச் சாத்தியிருந்தாள். ஒரு சின்ன மின்னலாய் மல்லிகைச் சரம் அவள் கூந்தல் பிரதேசத்தில் நெளிந்திருந்தது. நடக்கிறபோது உதயமாகிய அசைவுகளுக்கு ஏற்ப கழுத்தில் புரண்ட தங்கச் செயின் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் அவள் நிறத்திலிருந்தது. லான்சர் கார் டாப்பின் வளைவோடு புருவங்கள். அதற்கும் கீழே, பார்க்கிறவர்களுக்கு இன்ஸ்டண்ட் மின் ஈர்ப்பை வினியோகிக்கும் கண்கள். தக்காளி ஜாம் நிற உதடுகள். போனமாதம் டீன் ஏஜை முடித்துக் கொண்ட சாலையின் மறுகோடிக்குப் போய்விட்ட தாரிணிக்கு இப்போது வயது இனிக்கும் இருபது.

    மணிக்கட்டை உயர்த்தி மணி பார்த்தாள்.

    ஆபீஸ்க்கு டயமாச்சு என்று சொன்னது டாடாவின் சொனாட்டா வாட்ச்.

    நடையை வேகமாய் எட்டிப் போட்டாள். தெருமுனையை அடைந்து திரும்பின ஐம்பதாவது அடியில் பஸ் ஸ்டாப்பிங் சொற்ப காத்திருப்பவர்களோடு தெரிய அவர்களோடு ஒன்றாய் இணைந்து கொண்டாள் தாரிணி.

    பக்கத்திலிருந்த ஒரு பிந்துகோஷ் சைஸ் பெண்ணை நெருங்கிய தாரிணி கேட்டாள்.

    ட்வென்ட்டி நைன் என் இப்ப வருமா?

    தாரிணி அழகாயிருப்பதை பொறாமையோடு பார்த்தவள் -

    ம்ஹூம்... எட்டு பத்துக்குத்தான் என்றாள் உதட்டுச் சுழிப்போடு.

    முப்பத்தெட்டு?

    அதற்கும் ‘உச்’ கொட்டினாள்.

    எட்டு பத்துக்கு மேல்தான் எல்லா பஸ்ஸுமே வரும்.

    அவள் சொன்னதும் தவிப்புக்குள் விழுந்தாள் தாரிணி.

    அடக் கடவுளே... இந்த ஸ்டாப்பிலிருந்து பஸ் பிடிச்சு ஆபீஸ் போய்ச் சேரவே முப்பது நிமிஷங்களுக்கு மேலாயிடும். என்ன செய்யலாம்?

    யோசிப்பதோடு தலையை திருப்பிய அதே விநாடி -

    சட்டென முகத்தில் பிரகாசம் பற்றிக்கொள்ள நிமிர்ந்தாள். தூரத்து பைக்கில் படபடத்தபடி வந்து கொண்டிருந்த பாரத் தெரிந்தான். பைக் பக்கத்தில் நெருங்க நெருங்க சாலைக்கு வந்து அவனை எதிர் கொண்டாள் தாரிணி.

    பாரத் பிரேக் பிடித்து அவளை உரசி நிறுத்தினான்.

    பைக்கில் புன்னகையோடு பரவியிருந்த பாரத் குளிர் கண்ணாடியைக் கழற்றியபடியே அவளைப் பார்த்து அட தாரிணி... என்றான்.

    இருபத்தெட்டு வயது இந்தியனான பாரத்துக்கு தேக்கு நிறம், சதுர முகத்தில் கொஞ்சம் சின்ன சைஸ் கண்கள். மணிக்கொருதரம் நிகோடினோடு கைகுலுக்கும் உதடுகளுக்கு மேல் கறுப்படித்துப் படர்ந்திருந்த அடர்த்தியான மீசை. மோவாய்ப்பிரதேசம் தினசரி ஷேவிங்கில் பச்சை வாங்கியிருந்தது. கறுப்பு வெள்ளையில் பட்டை கோடுகளோடு தெரிந்த காட்டன் சட்டையை அதே நிற ஜீன்ஸுக்குள் திணிய விட்டிருந்தான்.

    என்ன தாரிணி பட்டுப்புடவையில் இன்னிக்கு ஒரே அமர்க்களமா நிக்கறே?

    ஆச்சர்யம் பரவின முகத்தோடு கேட்டான். தாரிணி பைக்கை நெருங்கி வந்து பில்லியனில் பரவியபடியே சொன்னாள்.

    மொதல்ல பைக்க கிளப்பி என்னோட ஆஃபீசுக்கு விடுங்க... போகப் போக சொல்றேன்.

    உத்தரவு தாரிணி அம்மையாரே! என்றவன் கண்களுக்கு குளிர் கண்ணாடியைத் திரும்பக் கொடுத்தபடி, ஆக்ஸிலேட்டரைப் பற்றினான். திருகத் தொடங்க... வண்டி உருண்டது.

    எதிர்ப்புறமாய் பயணப்பட்டு வரும் காற்று அவர்களை ஜிலீர் என்று உரசிக் கொண்டு போயிற்று. அலைந்து சிலும்பும் கேசங்களை ஒரு கையால் ஒதுக்கிவிட்டுக் கொண்டு மறுகையால் பாரத்தின் தோளைப் பற்றிக் கொண்டிருந்தாள் தாரிணி.

    திவான் பகதூர் சாலையைத் தொட்ட பின்னால் கேட்டான் பாரத்.

    என்ன பதிலைக் காணோம்?

    மயூரா கல்யாண மண்டபத்தில் என்னோட ஃப்ரெண்ட் மீனலோசனிக்கு மேரேஜ். சாப்பிடாமே அவங்க விடலை. ஆஃபீசுக்கு ஏகப்பட்ட லேட். நல்ல வேளையா நீங்க வந்து சேர்ந்தீங்க. நான் பிழைச்சேன் என்றவள் ஒரு விஷயம் என்றாள்.

    தலையைத் திருப்பி என்னது? என்றான் பாரத்.

    பைக்கை ஒரு வளைச்சலுக்கு உட்படுத்தி எதிரே வந்த காரைத் தவிர்த்துக் கொண்டபின் மறுபடியும் கேட்டான் பாரத்.

    என்ன விஷயம்?

    ஆமா... நீங்க எங்கே இந்தப் பக்கம்? தாரிணி கேட்டாள்.

    பிரேமா தெரியுமா உனக்கு?

    திக்கென நிமிர்ந்தாள் தாரிணி. தோளில் ஒரு கோப் இடிப்பை வெளியிட்டுவிட்டு முறைத்தாள்.

    பைக்கை ஸ்லோ பண்ணுங்க. நான் இப்படியே இறங்கிக்கிறேன்.

    ஏன் தாரிணி... ஆஃபீசுக்குப் போக வேண்டாமா? புன்னகையோடு கேட்டான் பாரத்.

    நான் எப்படியோ போய்க்கறேன். பிரேமாவையும், மேனகாவையும் கட்டிட்டு அழுங்க...

    ச்சை, ரொம்ப மோசம் நீ... முழுசும் சொல்றதுக்குள்ள அவசரப்படறியே... அந்தப் பிரேமாவோட அண்ணன் ஹரிகுமாரைப் பார்க்கப் போனேன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள உனக்கு கோபம் வந்துடுச்சு...

    எனக்கொண்ணும் கோபமில்லை. உங்க மூஞ்சிய என்னைத் தவிர வேற எவ காதலிப்பா?

    சிரித்தபடியே தாரிணி சொன்னபோது காலை நேர டிராஃபிக் இல்லாத தாமுநகர் ஏரியவைக் கடந்து, கொண்டிருந்தது வண்டி.

    ரியர்வியூ மிரர் வழியாக தாரிணியைப் பார்த்து பாரத் கேட்டான்.

    "இப்படியே எத்தனை நாளைக்குத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1