Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaaro Paadiya Paadal
Yaaro Paadiya Paadal
Yaaro Paadiya Paadal
Ebook99 pages47 minutes

Yaaro Paadiya Paadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466183
Yaaro Paadiya Paadal

Read more from Rajeshkumar

Related to Yaaro Paadiya Paadal

Related ebooks

Reviews for Yaaro Paadiya Paadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaaro Paadiya Paadal - Rajeshkumar

    13

    1

    கோவை ரெயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரம் அந்த பகல் நேர பதினொரு மணிக்கு திடீர் பரபரப்பைத் தத்தெடுத்துக் கொண்டது.

    குரலில் ஜாங்கிரி இனிப்பைத் தடவிக் கொண்ட அறிவிப்புப் பெண் மலையாள வாசம் கலந்த தமிழிலும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பு வார்த்தைகளை ரெயில்வேயின் பாரம்பரிய சுருதியில் கொட்டினாள்.

    ஜம்மு, தாவியிலிருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில் மூன்றாவது பிளாட்பாரத்தை வந்தடையும்..., ஜம்மு தாவிலே கன்னியாகுமரி கே ஓர் ஜானேவாலா ஹிம்சாக எக்ஸ்பிரஸ் அவர் தோடி ஹி தோமே...

    அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருக்க - மங்களம் பிளாட்பாரத்தின் விளிம்பில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பட்டுபுடவையின் பச்சை பார்டர் ஓரங்களில் அடர்த்தியாய் தங்க ஜரிகை இழையோடியிருந்தது.

    ராஜாராமன் அவளைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.

    ஏய் மங்களம்... ட்ரெயின் இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து சேர்ந்துடும்ன்னு அறிவிச்சிட்டாங்களே... நீ எட்டி எட்டிப் பார்க்கறதால சீக்கிரம் வந்துடுமா...? உள்ளே விழுந்து தொலைச்சிடாதே... இப்படி ஓரமா வந்து நில்லு...

    லேசான வெட்கத்தோடு பிளாட்பார விளிம்பை விட்டு விலகி வந்த மங்களம் அவரைப்பார்த்துச் சொன்னார்.

    நான் எவ்வளவு டென்ஷன்ல இருக்கேன்னு உங்களுக்குத் தெரியாது...

    டென்ஷனா...? எதனால...?

    கல்யாணத்துக்கு இன்னும் முழுசா நாலு நாள் கூட இல்லை... மாப்பிள்ளைப் பையன் இன்னும் வந்து சேராம இருந்தா டென்ஷனா இருக்காதா...?"

    பெண்ணை பெத்தவங்க தான் அதுக்காக கவலைப்படணும்... டென்ஷன் ஆகணும்... நீ ஏன் டென்ஷனாகறே...?

    இல்லைங்க... ஆரம்பத்திலிருந்தே எனக்கென்னமோ மனசுக்குள்ளே பக்பக்ன்னு இருக்கு...

    ஏன்...?

    என்னன்னு தெரியலை... கல்யாணம் ஒழுங்கா நடக்குமா... எல்லாம் சரிவர இருக்குமான்னு என்னோட மனசுக்குள்ளே என்னென்னவோ குழப்பம்...

    பெண் வீட்டைச் சேர்ந்தவங்க பழகற விதம்... பேச்சு... எல்லாமே திருப்திகரமாத்தான் இருக்கு... பொண்ணும் அடக்க ஒடுக்கமாத்தான் தெரியறா... நீ ஏன் அநாவசியமா கவலைப்படறே..."

    மங்களம் அவசரமாய்க் குறுக்கிட்டாள். அய்ய்ய்யோ... நான் பெண் வீட்டைச் சேர்ந்தவங்க மோசமா இருப்பாங்க... சரியில்லை... அப்படியெல்லாம் சொல்ல வரலை... எனக்கு உண்மையில் பெண்ணையும் பெண்ணைச் சேர்ந்தவங்களையும் ரொம்ப ரொம்பப் பிடிச்சது...

    அப்புறம் என்ன...?

    இந்த கல்யாண காரியங்களில் என்னவோ விட்டுப் போனா மாதிரியே உணர்வு... வழக்கத்துக்கு மாறா ஏதோ நடந்திட்டிருக்கற மாதிரி தோணுது...

    ராஜாராமன் சிரித்தார்.

    மங்களம் உன்னோட பயம் என்னன்னு எனக்கு இப்ப புரியுது...

    என்ன புரிஞ்சது...?

    மாப்பிள்ளையும் பொண்ணும் ஒருத்தரையொருத்தர் நேரில் பார்த்துக்கலை... அது ஒண்ணுதான் வழக்கத்துக்கு மாறா நடந்த விஷயம்... நேரில் பார்க்கறப்ப நம்ம பையன் சசிதரனுக்கு பொண்ணையோ... பொண்ணுக்கு சசிதரனையோ பிடிக்காம போயிடுமோன்னு நீ பயப்படறே... என்ன நான் சொல்றது சரியா?

    மங்களம் அவசரமாய்த் தலையாட்டி ஆமோதித்தாள்.

    ஆமாங்க...

    சசிதரன் இங்கே எங்காவது இருந்தா பரவாயில்லை... அவன் டெல்லிக்கு பக்கத்தில் இருக்கான்... ஏர் ஃபோர்ஸ் வேலை... லீவ் கிடைக்க செளகரியப்படலை... வேற வழியில்லாமதானே பொண்ணோட போட்டோவை மட்டும் அனுப்பி சம்மதம் வாங்கினோம்... பொண்ணு வீட்டிலும் இதை ஒரு பெரிய விஷயமா நினைக்கலை... எங்க பொண்ணு நாங்க யாரைக் காட்டறோமோ அந்த மாப்பிள்ளைகிட்டே கழுத்தை நீட்டுவா... அப்படின்னு உறுதியா சொன்னாங்க... நாம பொண்ணுகிட்டே நேரடியாப் பேசி அவளோட சம்மதத்தைத் தெரிஞ்சிகிட்டோம்... இவ்வளவுக்கும் பிறகு உனக்கு என்ன பயம்...?

    இல்லைங்க... என்று மங்களம் என்னவோ சொல்ல வர குறுக்கிட்டார் ராஜாராமன்.

    இங்கே பார் மங்களம்... நானும் நீயும் அந்தக் காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்துகிட்டப்புறமா கல்யாணம் பண்ணிகிட்டோம்...? இல்லையே... உன் கழுத்துல தாலி கட்டி நாலு நாளைக்கப்புறம்தான் தனியா உன்கிட்டே பேசவே எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சது. முப்பது வருஷ காலம் நாம் குடித்தனம் நடத்தலையா...?

    அந்தக் காலம் வேற... இந்தக் காலம் வேறங்க... இந்தக்காலத்துல சர்வ சாதாரணமா ரோட்டுல நாம் கண்ணார பார்க்கறோமே... பொண்ணாகட்டும், பையனாகட்டும். யாராவது தெரிஞ்சவங்க பார்த்துடுவாங்க அப்படிங்கற அடிப்படை பயம் கூட இல்லாம தாலிகட்டறதுக்கு முன்னமே எப்படி இழைஞ்சிட்டுப் போறாங்க...

    அந்தக் காலமாகட்டும்... இந்தக் காலமாகட்டும்... பெரியவங்க உணர்வுகளைப் புரிஞ்சிக்கற நல்ல பிள்ளைங்களும் இருக்காங்க... பெரியவங்களை மதிக்காத தறுதலைகளும் இருக்காங்க... நம்ம பசங்க மேல நமக்கு நம்பிக்கை இருந்தா எதைப் பத்தியும் நாம் கவலைப்ப... வேண்டியதில்லை...

    இந்த விஷயம்ன்னு இல்லைங்க. இந்தக் கல்யாண் சம்பந்தம் பேசின நாளிலிருந்தே எனக்கு அடி மனசில் படபடன்னு அடிச்சிக்கிட்டே இருக்கு...

    முதல் முதலா ஒரு கல்யாண காரியத்தை செய்யறோம் சாதாரணமாவே நீ டென்ஷன் திலகம்... ஒரு பெரிய காரியத்தை செய்யப்போறோம்ங்கற உணர்வில் உனக்கு டென்ஷன் அதிகமாயிடுச்சு... அவ்வளவுதான் விஷயம்... சசிதரன் கிட்டேயும் இதே மாதிரி எதையாவது புலம்பித் தொலைச்சு வந்ததும் வராததுமா அவன் மூடை ஸ்பாயில் பண்ணிடாதே...

    "சற்றே கண்டிப்போடு ராஜாராமன் சொல்ல -

    Enjoying the preview?
    Page 1 of 1