Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padithean... Rasithean...
Padithean... Rasithean...
Padithean... Rasithean...
Ebook173 pages1 hour

Padithean... Rasithean...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மதிப்புரை' என்ற தலைப்பிலேயே அமரர் கல்கி அவர்கள் ஒரு சுவையான கட்டுரையை எழுதினார். 'ஏட்டிக்குப் போட்டி' தொகுப்பில் உள்ள இந்தக் கட்டுரை வெளியானபோது (14.1.1930) அவர் 'ஆனந்த விகட'னில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கவில்லை. அடுத்த ஆண்டில்தான் ஆனந்த விகடனில் 'மெய்யாசிரிய'ராகிறார்.

தம்முடைய சொந்த நூலான 'சாரதையின் தந்திரம்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு மதிப்புரைக்கு அனுப்பி, ஏமாற்றமடைந்த கதையைப் படு சுவாரஸ்யமாக அவர் அதில் எழுதுவார்.

"மொத்தம் ஐம்பது புத்தகங்கள் மதிப்புரைக்கு அனுப்பினேன். 48 மதிப்புரைகள் வெளியாயின. இவற்றின் பயனாக மொத்தம் மூன்றரைப் புத்தகம் விலையாயிற்று.” (ஒரு வாசக சாலைக்குப் பாதி விலைக்குக் கொடுத்த புத்தகத்தை அரைப் புத்தகம் என்று கணக்கிட்டேன்.)

அமரர் கல்கி அப்போது வேடிக்கையாக எழுதி விட்டாலும், முன்னுரைகள், மதிப்புரைகள் என்று எழுதுவதிலும் படிப்பதிலும் ஓர் ஆனந்தம் இருக்கவே செய்கிறது. அதிலும் அவை 'கல்கி' எழுதியவையாக இருந்தால் சிரஞ்சீவித் தன்மை பெற்று, எழுபது ஆண்டுகள் ஆனாலும் சுவாரஸ்யம் குன்றாதிருக்கின்றன! அமரர் கல்கி தம்முடைய பல நூல்களுக்குக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் சிலரின் நூல்களுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறார். இவை தவிர, தம்முடைய சொந்தப் பத்திரிகையான 'கல்கி'யிலும் பல நூல்களுக்குத் தாமே பல மதிப்புரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் அமரர் கல்கி எழுதிய முன்னுரைகளும் மதிப்புரைகளும் இடம் பெறுகின்றன.

தம்முடைய நூல்களுக்கு எழுதியவற்றுள் 'பாங்கர் விநாயகராவ்’ நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை வித்தியாசமானது, மிகவும் பிரபலமானது. முன்னுரையே 55 பக்கங்களுக்கு நீண்டிருக்குமாயினும், அது திருச்செங்கோடு காந்தி ஆசிரம வாழ்க்கையை விவரிப்பதால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏறக்குறைய அவருடைய சுயசரிதையைப் போலவே அமைந்திருக்கிறது. இவ்வளவு விரிவான முன்னுரையை வேறு எந்த நூலிலும் பார்த்திருக்க முடியாது. இன்னும், 'அலைஓசை', 'சங்கீத யோகம்', 'ஏட்டிக்குப் போட்டி', 'பொய்மான் கரடு', 'சிவகாமியின் சபதம்', 'சோலைமலை இளவரசி' போன்ற தம்முடைய நூல்களுக்கும் முன்னுரை எழுதியுள்ளார். இவை இந்தத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட நூல்களைப் படிக்கும்போது, அவசியம் இந்த முன்னுரைகளைப் படித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறோம்.

அமரர் கல்கியின் முன்னுரைகளை இன்றைக்கு எடுத்துப் படித்துப் பார்க்கும்போதும் எதிர்காலத்தில் எடுத்துப் படிக்கும்போதும், சுவையும் பயனும் ஒன்று போலவே இருக்கும்; ஏராளமான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். சம்பிரதாயமான வறட்டு முன்னுரைகளாக ஒன்றைக்கூடக் காண முடியாது. அதுதான் 'கல்கி'யின் குணவிசேஷம் - அல்லது தனித்தன்மை! இந்தத் தொகுப்பு முழுமையானது என்று சொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் உள்ள தொகுப்பாசிரியர் குறிப்புக்கு பெரும்பாலும் நான் ஆதாரமாக எடுத்துக் கொண்டது அமரர் சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்' வரலாற்று நூலைத்தான் என்பதையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

- சுப்ர.பாலன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580101704604
Padithean... Rasithean...

Read more from Kalki

Related to Padithean... Rasithean...

Related ebooks

Related categories

Reviews for Padithean... Rasithean...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padithean... Rasithean... - Kalki

    http://www.pustaka.co.in

    படித்தேன்... ரசித்தேன்...

    Padithean… Rasithean…

    Author:

    கல்கி

    Kalki

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalki-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    என்னுரை

    'மதிப்புரை' என்ற தலைப்பிலேயே அமரர் கல்கி அவர்கள் ஒரு சுவையான கட்டுரையை எழுதினார். 'ஏட்டிக்குப் போட்டி' தொகுப்பில் உள்ள இந்தக் கட்டுரை வெளியானபோது (14.1.1930) அவர் 'ஆனந்த விகட'னில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கவில்லை. அடுத்த ஆண்டில்தான் ஆனந்த விகடனில் 'மெய்யாசிரிய'ராகிறார்.

    தம்முடைய சொந்த நூலான 'சாரதையின் தந்திரம்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு மதிப்புரைக்கு அனுப்பி, ஏமாற்றமடைந்த கதையைப் படு சுவாரஸ்யமாக அவர் அதில் எழுதுவார்.

    மொத்தம் ஐம்பது புத்தகங்கள் மதிப்புரைக்கு அனுப்பினேன். 48 மதிப்புரைகள் வெளியாயின. இவற்றின் பயனாக மொத்தம் மூன்றரைப் புத்தகம் விலையாயிற்று. (ஒரு வாசக சாலைக்குப் பாதி விலைக்குக் கொடுத்த புத்தகத்தை அரைப் புத்தகம் என்று கணக்கிட்டேன்.)

    அமரர் கல்கி அப்போது வேடிக்கையாக எழுதி விட்டாலும், முன்னுரைகள், மதிப்புரைகள் என்று எழுதுவதிலும் படிப்பதிலும் ஓர் ஆனந்தம் இருக்கவே செய்கிறது. அதிலும் அவை 'கல்கி' எழுதியவையாக இருந்தால் சிரஞ்சீவித் தன்மை பெற்று, எழுபது ஆண்டுகள் ஆனாலும் சுவாரஸ்யம் குன்றாதிருக்கின்றன!

    அமரர் கல்கி தம்முடைய பல நூல்களுக்குக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் சிலரின் நூல்களுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறார். இவை தவிர, தம்முடைய சொந்தப் பத்திரிகையான 'கல்கி'யிலும் பல நூல்களுக்குத் தாமே பல மதிப்புரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

    இந்தத் தொகுப்பில் அமரர் கல்கி எழுதிய முன்னுரைகளும் மதிப்புரைகளும் இடம் பெறுகின்றன.

    தம்முடைய நூல்களுக்கு எழுதியவற்றுள் 'பாங்கர் விநாயகராவ்’ நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை வித்தியாசமானது, மிகவும் பிரபலமானது. முன்னுரையே 55 பக்கங்களுக்கு நீண்டிருக்குமாயினும், அது திருச்செங்கோடு காந்தி ஆசிரம வாழ்க்கையை விவரிப்பதால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏறக்குறைய அவருடைய சுயசரிதையைப் போலவே அமைந்திருக்கிறது. இவ்வளவு விரிவான முன்னுரையை வேறு எந்த நூலிலும் பார்த்திருக்க முடியாது.

    இன்னும், 'அலைஓசை', 'சங்கீத யோகம்', 'ஏட்டிக்குப் போட்டி', 'பொய்மான் கரடு', 'சிவகாமியின் சபதம்', 'சோலைமலை இளவரசி' போன்ற தம்முடைய நூல்களுக்கும் முன்னுரை எழுதியுள்ளார். இவை இந்தத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.

    மேற்கண்ட நூல்களைப் படிக்கும்போது, அவசியம் இந்த முன்னுரைகளைப் படித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறோம்.

    அமரர் கல்கியின் முன்னுரைகளை இன்றைக்கு எடுத்துப் படித்துப் பார்க்கும்போதும் எதிர்காலத்தில் எடுத்துப் படிக்கும்போதும், சுவையும் பயனும் ஒன்று போலவே இருக்கும்; ஏராளமான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். சம்பிரதாயமான வறட்டு முன்னுரைகளாக ஒன்றைக்கூடக் காண முடியாது. அதுதான் 'கல்கி'யின் குணவிசேஷம் - அல்லது தனித்தன்மை!

    இந்தத் தொகுப்பு முழுமையானது என்று சொல்ல முடியவில்லை.

    ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் உள்ள தொகுப்பாசிரியர் குறிப்புக்கு பெரும்பாலும் நான் ஆதாரமாக எடுத்துக் கொண்டது அமரர் சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்' வரலாற்று நூலைத்தான் என்பதையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - சுப்ர.பாலன்

    சென்னை - 45.

    30-10-2005

    *****

    அமரர் கல்கி

    எழுதிய

    முன்னுரைகள்

    1

    நூல்: திவ்யப் பிரபந்த ஸாரம்

    ஆசிரியர்: பி.ஸ்ரீ. ஆச்சார்யா

    இந்த நூலின் முதல் பதிப்புக்குக் 'கல்கி' அவர்கள் எழுதிய முன்னுரை

    கம்பனில் ஆழ்ந்து தோய்ந்த அறிஞர் பி.ஸ்ரீ. 'ஆனந்த விகட’னில் 'சித்திர ராமாயணம்' என்ற தலைப்பில் பல ஆண்டுகள் தொடர்ந்து கம்பனின் சுவையை எடுத்து வழங்கியவர். அமரர் கல்கிக்கு மிக நல்ல நண்பராக விளங்கிய வேங்கடாச்சாரி பிறந்த நெல்லை மாவட்டத்து 'விட்டலாபுரம்'தான் பி.ஸ்ரீ. பிறந்த ஊரும் கூட.

    இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்யப்பிரபந்தக் கட்டுரைகள், 'ஆனந்த விகட'னில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா? என்று கேட்டார். படிக்காமற் போனால் ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை என்று பதில் சொன்னேன். அதுமட்டுமல்ல; கட்டுரைகளின் ஆசிரியருக்கும் அதனால் நஷ்டம் ஒன்றும் கிடையாது. ஏனென்றால் பி.ஸ்ரீ. இது போன்ற இலக்கியக் கட்டுரைகளை எழுதும் போது, பிறர் படித்துப் பயன் பெறுவதற்கென்று மட்டும் எழுதுவதில்லை. தாமே அநுபவிக்கிறார்; ஆனந்திக்கிறார்; ஆனந்தித்து எழுதுகிறார்.

    தமிழ்நாட்டில் வேறு பல பண்டிதர்கள் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பிறருடைய லாபத்தை முன்னிட்டுப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். சிலர் கவிதையை வியாஜமாக வைத்துக் கொண்டு தங்களுடைய சொந்த சாமர்த்தியத்தை வெளிப் படுத்துகிறார்கள். ஆனால் பி. ஸ்ரீ.யோ அவருடைய கட்டுரைகளில் தம்மை மறந்து, கேட்கிறவர்களையும் மறந்து, கவிதையின் இன்பத்திலேயே பூரணமாய் ஆழ்ந்து விடுகிறார். தாம் கவிதையை எப்படி அநுபவிக்கிறாரோ, அதை அப்படியே மற்றவர்கள் பார்க்கும் படியும் உணரும்படியும் செய்கிறார்.

    தமிழ்க் கவிதையின் பண்பை எனக்கு உணர்த்தி, அதன் இன்பத்தை நன்கு அநுபவிக்கும்படி செய்தவர்கள் இருவர் உண்டு. ஒருவர்தான் டி. கே. சி. என்று நண்பர்களால் அழைக்கப்பெறும் ஸ்ரீ.டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள். கவிதைச் சிறப்பிலே தமிழை மிஞ்சக் கூடிய மொழி உலகிலேயே வேறு இல்லை, இருக்க முடியாது என்று எனக்கு உறுதி உண்டு பண்ணியவர் டி.கே.சி. தான். இவர் தமது கவிதாநுபவத்தைப் பிறரும் உணர்ந்து அநுபவிக்கும்படி செய்வதற்குப் பேச்சையே முக்கிய சாதனமாகக் கொண்டிருக்கிறார்.

    பி.ஸ்ரீ. தமது இயற்கையான கவிதை உணர்ச்சியுடனே, டி.கே.சி.யின் கூட்டுறவினாலும் லாபம் அடைந்தவர். இவர் பேச்சுடன்கூட, எழுத்தையும் தமது சாதனமாகக் கொண்டிருக்கிறார். கவிதை இன்பத்தைத் தெரியப்படுத்துவதற்குப் பேச்சைப்போல் எழுத்து அவ்வளவு சிறந்த சாதனமல்ல என்பது உண்மையே. இந்த எண்ணத்தினால், பி.ஸ்ரீ. அவர்களுக்கே சில சமயம் சந்தேகம் தோன்றுவதுண்டு.

    ஆரம்பத்திலே குறிப்பிட்ட நண்பரைப் போல் பி. ஸ்ரீ.யும் நான் எழுதும் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா? என்று கேட்பார். அப்போதெல்லாம், உங்கள் கட்டுரைகளுக்கு ஒரு வாசகன் நிச்சயமாக இருக்கிறேன் என்று நான் உறுதி கூறுவேன். ஆனால் உண்மையில், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான வாசகர்கள் - வாரந்தோறும் 'விகடன்' இதழில் பி. ஸ்ரீ.யின் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - தமிழர்கள் உள்ள இடங்களிலெல்லாம் பரவி இருக்கிறார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

    இந்தப் புத்தகத்தின் விஷயமான திவ்யப் பிரபந்தத்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். முதல் முதலில் தமிழ்க் கவிதையின் இன்பத்தை நான் உணரும்படி செய்தவை ஆழ்வார் பாசுரங்களேயாகும். நான் பத்து வயதுச் சிறுவனாய் இருந்தபோது, ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ஸ்வாமிகள் சரித்திரம் என்ற ஒரு தமிழ் நூல் வெளியாகியிருந்தது. அது வங்காளத்தில் நானூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு வைஷ்ணவப் பெரியாரின் சரித்திரம். அவரை ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் என்றே கொண்டாடுகிறவர்கள் இன்றும் வங்காளத்தில் ஏராளமாக உண்டு.

    அந்த நூலைத் தமிழில் எழுதிய ஆசிரியர் இடையிடையே திவ்யப் பிரபந்தத்திலிருந்து சில பாடல்களை எடுத்துப் போட்டிருந்தார். அவற்றில் ஆனாத செல்வத்து, கம்ப மதயானை, ஆலமா மரத்தின், கொண்டல் வண்ணனை என்று தொடங்கும் நாலு பாடல்களையும் நான் எத்தனை தடவை வாசித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. பள்ளிக்கூடங்களில் பரீட்சைக்காக நெட்டுருச் செய்த எத்தனையோ செய்யுள்களும் பாடல்களும் மறந்து போய் விட்டன. ஆனால் இந்த நாலு பாடல்களும் என் மனசை விட்டு அகலவே இல்லை.

    இவ்வாறு ஆழ்வார் பாசுரங்களினால் தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட ஆர்வம், பின்னால் பாரதியார் பாடல்களினால் வளர்ந்தது. கடைசியில் கம்பனுக்கு வந்து பூரணமடைந்தது.

    தமிழில் கவிதைச் சுவையையும், பக்தி ரஸத்தையும் அநுபவிக்க விரும்புகிறவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படிக்காமலிருக்க முடியாது. அப்படி அப்பாசுரங்களைப் படித்து நாம் இன்புறுவதற்கு, பி.ஸ்ரீ.யின் இந்தக் கட்டுரைகள் ஒரு சிறந்த துணையாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ரா. கிருஷ்ணமூர்த்தி

    சென்னை

    20.09.1938

    *****

    2

    நூல்: சுவாமியும் சினேகிதர்களும்

    ஆசிரியர்: ஆர்.கே. நாராயணன்

    தமிழில்: வி. கிருஷ்ண சாமி எம்.ஏ.,

    ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்களில் மிகவும் புகழ் பெற்றவர் 'மால்குடி'யை மையப்படுத்தி நிறைய எழுதிய ஆர்.கே. நாராயணன். பிரபல கேலிச் சித்திரக் கலைஞர் ஆர்.கே. லக்ஷ்மணனின் சகோதரர் இவர். 'த கைடு', 'மான் ஈட்டர்ஸ் ஆஃப் மால்குடி', 'வெயிட்டிங் ஃபார் த மகாத்மா' போன்ற அருமையான நூல்களை எழுதியவர் நாராயணன். நூலைத் தமிழாக்கம் செய்தவர் 'மதுரம்' என்னும் பெயரில் கதைகள், கட்டுரைகள் எழுதிய கிருஷ்ணசாமி. 'ஆனந்த விகடன்' உதவியாசிரியராக இருந்து பின்னர் வானொலியில் பணியாற்றப் போய்விட்டார்.

    இது குழந்தைகளைப் பற்றிய புஸ்தகம்.

    Enjoying the preview?
    Page 1 of 1