Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yugangal Marumpothu
Yugangal Marumpothu
Yugangal Marumpothu
Ebook101 pages49 minutes

Yugangal Marumpothu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'யுகங்கள் மாறும்போது', கல்கியில் தொடராக வெளிவந்தது.

இன்றைய புதிய சமுதாயப் பின்னணியிலே எழுகின்ற இளம் பருவத்தினரின் துடிப்பையும் எண்ணங்கள், ஆசைகள், முடிவுகளையும் கதாபாத்திரங்கள் பிரதிபலிப்பதால், நேருக்குநேர் சந்திக்கும் பலரோடு இணைத்துப் பார்த்துச் சிந்திக்கவும் இந்நாவல் தூண்டுகின்றன.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580125404565
Yugangal Marumpothu

Read more from Vaasanthi

Related to Yugangal Marumpothu

Related ebooks

Related categories

Reviews for Yugangal Marumpothu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yugangal Marumpothu - Vaasanthi

    http://www.pustaka.co.in

    யுகங்கள் மாறும்போது

    Yugangal Marumpothu

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    ஆர்வத்துடன் கையை நீட்டி அழைக்கிற மாதிரி அந்தப் பெரிய குல்மொஹர் மரம் தன்னுடைய நிழலை விரித்து ஆசை காட்டிற்று. அதனடியில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி மைதிலி அண்ணாந்து, அதன் ரத்தச் சிவப்புப் பூக்களைப் பார்த்தாள். எங்கேயிருந்து வந்தன இத்தனை பூக்கள்? பதினைந்து நாட்கள் முன்வரை இலைகள் கூட இல்லாமல் மொட்டை மரமாக இது நின்றது ஞாபகத்திற்கு வந்தது. இத்தனை சுருக்கில் இது எப்படி இப்படி ஒரு ஜோடனையுடன் நிற்கிறது. அவசரமவசரமாகத் தயாராகிப் போன கல்யாணப் பெண் மாதிரி! ஏதோ ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி வேளையும் நேரமும் வந்ததும் இது திடீரென்று பூத்துச் சிரிப்பதைப் பார்க்கப்பார்க்க விந்தையாக இருந்தது. அதற்குப் பக்கத்திலேயே ஒரு மாமரம். இதுவரை பூக்கவே பூக்காத காய்க்கவே காய்க்காத மாமரம். அது ஏன் எந்தவித நியதிக்கும் உட்படாமல் மலட்டு மரமாக நிற்கிறது? மைதிலிக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த மரத்தில்தான் பொழுது சாயும் நேரத்தில் பட்சிகள் எல்லாம் நூற்றுக் கணக்கில் வந்து தஞ்சம் அடைகின்றன. அத்தனை அழகாகப் பூத்துக் குலுங்கும் குல்மொஹர் மரத்தில் ஒரு பட்சியும் உட்காருவதுகூட இல்லை; அந்த குல்மொஹர் மரம் நம்பகமானது இல்லை என்று நினைத்த மாதிரி...

    வாசல் கேட்டை யாரோ திறக்கிற சத்தம் கேட்டது. அவள் நிமிர்ந்து பார்த்தாள். தபால்காரர் உள்ளே வருவது தெரிந்தது. தோட்டத்தில் ரோஜா பாத்தியைக் கிளறிக் கொண்டிருந்த முனுசாமி எழுந்து ஓர் அவசர நடையுடன் தபாலை வாங்கிக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தான்.

    அவள் ஓர் ஆர்வத்துடன் கடிதத்தை வாங்கிக் கொண்டாள். துபாயிலிருந்து மூத்த மகள் மாலாவிடமிருந்து ஒரு கடிதம். டில்லியிலிருந்து யாரிடமிருந்தோ வேறு ஒரு கடிதம். மாலாவின் கடிதத்தை அவள் முதலில் பிரித்தாள். உறையிலிருந்து தொப்பென்று கலர் ஃபோட்டோக்கள் இரண்டு மடியில் விழுந்தன. ஒரு குழந்தைத்தனமான சந்தோஷத்தோடு அவள் அவற்றை முதலில் பார்த்தாள். மாலாவின் மகன் அருண் ரோஜாக் கன்னங்களுடன் பொக்கை வாய்ச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். மைதிலிக்கு மனசில் ஒரு பிரவாகம் பொங்கினாற்போல் இருந்தது.

    அவள் கடிதத்தைப் பிரித்தாள். தாங்கள் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் போய்விட்டு வந்ததைப் பற்றி மாலா எழுதியிருந்தாள். பிறகு வரிசையாகக் கேள்விகள், அம்மா நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் உடல் நிலை எப்படியிருக்கிறது? மருந்து சாப்பிட்டு வருகிறீர்களா? நளினி எப்படியிருக்கிறாள்? அவளுடைய கோபதாபங்கள், பிடிவாதங்கள் எல்லாம் எப்படியிருக்கின்றன?

    மைதிலி ஒரு புன்னகையுடன் கடிதத்தை மடித்து உறையில் வைத்தாள். மற்றொரு கடிதம் அவள் கணவர் பரமேச்வரனின் பழைய நண்பர் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. பரமேச்வரனின் மரணத்தைப் பற்றித் தமக்குச் சமீபத்தில்தான் தெரிந்தது என்று தமது அனுதாபத்தைத் தெரிவித்து எழுதியிருந்தார். கடிதத்தை மடித்து வைத்து விட்டு, மைதிலி நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டாள். மாமரத்தில் பட்சிகளின் ஆரவாரம் காதைத் துளைத்தது. முதல் கடிதத்தைப் படித்தபோது மனசில் பொங்கிய பிரவாகம் சட்டென்று இப்பொழுது அடங்கிப் போன மாதிரி இருந்தது. இனம்புரியாத ஒரு சோகம் மனசை அழுத்தின மாதிரி இருந்தது.

    எனது ஆழ்ந்த அனுதாபங்கள்…

    எதற்கு?

    அவள் வாழ்ந்து அனுபவித்த அனுபவங்களுக்கா? வெளியில் சொல்ல முடியாமல் விழுங்கிக் கொண்ட அனுபவங்கள்... அப்படி விழுங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானிக்க வைத்த அனுபவங்கள்… ஓ மம்மி, எவ்வளவு வாயில்லாப்பூச்சி நீ! என்று இப்பொழுது நளினி அவளைப் பார்த்துப் பரிதாபப்படும் போது, அவள் நினைத்துக் கொள்வாள். வாயுள்ளவளாக அவள் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஏதேனும் லாபம் இருந்திருக்குமா? நளினி சொல்கிற மாதிரி இவையெல்லாம் லாப நஷ்டம் பார்க்கும் விஷயங்கள் இல்லையோ? தன்மானம், சுரணை என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்களோ? அவளுக்கு ஏன் அவையிரண்டும் இல்லாமல் போய்விட்டன?

    கடிதங்கள் இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டு எழுந்தாள். சுவாமிக்கு விளக்கேற்றி விட்டுச் சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றிற்று.

    சமையலறையில் சமையல்காரப் பெண் கஸ்தூரி சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தது தெரிந்தது. சாட்டை மாதிரி தலைப் பின்னல் தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அழகாக இயற்கையாக வளைந்திருந்த புருவங்களுக்கு இடையில் பெரிதாகக் குங்குமப் பொட்டு பளிச்சென்று தெரிந்தது, அந்தக் களையான முகத்தையும் அளவான உடம்பையும் பார்த்துக் கொண்டு பூஜை அறைக்கு நகர்ந்தாள்.

    பூஜை அறையில் பழகிப்போன கைகளுடன் அவள் விளக்கை ஏற்றினாள். கொஞ்ச காலமாக எதற்கும் ஆண்டவனை வேண்டிக் கொள்வது ஓர் அபத்தமான குழந்தைத்தனமான செய்கை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது.

    கஸ்தூரி சப்பாத்திக் கூட்டுக்கு அம்மியில் அரைத்துக் கொண்டிருந்தாள். சமையலறை வாயிலில் மைதிலி ஒருவிநாடி நின்றாள்.

    கஸ்தூரி, நா கொஞ்சம் நடந்துட்டு வரேன். வீட்டைப் பார்த்துக்கோ.

    சரிம்மா!

    நளினி வந்தா, அவ என்ன குடிக்கக் கேக்கறாளோ குடு. வழக்கம் போல எட்டு மணிக்குச் சாப்பிடலாம்.

    சரி.

    அவள் சாவிக்கொத்தை இடுப்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1