Yathumagi…
By Vaasanthi
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Nizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Kadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyellam Shenbaga Poo Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Suriyargal Rating: 0 out of 5 stars0 ratingsVeedu Varai Uravu Rating: 0 out of 5 stars0 ratingsPoi Mugam Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaigalum Pathivugalum Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yathumagi…
Related ebooks
Shurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5En Uyire Rating: 4 out of 5 stars4/5Anbenum Pookkal Malaratum.... Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Veli Rating: 3 out of 5 stars3/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsChitrerumbugalin Kalam Rating: 5 out of 5 stars5/5Siragukal Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Vannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsNazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Anbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo! Rating: 3 out of 5 stars3/5Kadambavana Kaadhal Devathai! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Yathumagi…
0 ratings0 reviews
Book preview
Yathumagi… - Vaasanthi
http://www.pustaka.co.in
யாதுமாகி…
Yathumagi…
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
காலைச் சத்தங்களில் தான் புதையுண்டு போவது போல சுஜாதாவுக்குத் தோன்றிற்று, எத்தனை விதமான சத்தங்கள்! அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சத்தங்கள். ஆகாசத்துக்கு மிக சமீபம் இருக்கக்கூடிய பாவனையைக் கிளப்பும் தளத்தில் குடியேறுவது கல்யாணமான புதிதில் மிகவும் உற்சாகமாக இருந்தது. அதாவது அந்த நினைப்பு ஏற்படுத்திய உற்சாகம். அதிகமான ஏகாந்தம் இருக்கும் என்கிற நினைப்பு. நினைப்புகளே, அவை தூண்டிய கற்பனைகளே, கிளுகிளுப்பை ஏற்படுத்திய நாள்கள் அவை.
சப்பாத்தி மாவை வேக வேகமாகப் பிசைந்துக் கொண்டிருந்த சுஜாதாவின் கை நினைவுகளில் சில விநாடிகள் கரைந்து நின்றதில், தனது துரிதத்தைக் குறைத்துப் பிறகு விசையைப் போல வேலையைத் தொடர்ந்தது.
நினைவுகளில் கரைந்து நிற்பதற்கு விநாடி நேரம்கூட இல்லை. ஆனால் நேற்று இரவு பொழுதுக்குப்பின் நேற்று வரை இருந்த காலகட்டம் முடிந்து இன்றிலிருந்து புதிய கட்டம் உருவானதுபோல நெஞ்சுக்குள் படபடக்கிறது. நேற்றுவரை நகர்ந்த நாள்கள், 'அந்த நாள்கள்' என்கிற சரித்திரத்தில் பெயர் பெற்று விடும் போல திகைப்பு ஏற்படுகிறது.
திகைப்புதான், இது விசனம் இல்லை. கலவரம் இல்லை. 'சுந்தரா இப்படி நடந்து கொள்கிறான்!' என்ற திகைப்பு. எத்தனை முட்டாள்தனமாகப் பேசுகிறான் என்கிற எரிச்சலூட்டும் திகைப்பு. அந்த எரிச்சல் இரவு முழுவதும் அவளைத் தூங்க விடாமல் அடித்தது. பக்கத்தில், இவ்வளவிற்குப் பிறகும் நிம்மதியாகப் படுத்துத் தூங்கும் அவனை ஓர் உலுக்கு உலுக்கி, 'நீயா இப்படிப் பேசறே? இத்தனை நாள் உனக்கு என்ன குறை வெச்சேன்?' என்று கேட்க வேண்டும் போல் ஆத்திரம் குமுறிக் கொண்டிருந்தது ‘நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி ஆயிற்று. அதன்படி நடப்பது உன் பொறுப்பு' என்று அவன் மறுபுறம் திரும்பிப் படுத்து, இந்தப் பிரச்சனை அத்துடன் தீர்ந்தது என்கிற நிம்மதியுடன் தூங்கியும் போனது அவனது மெத்தனத்தைக் காட்டியது. அதை நினைத்து அவளுக்கு இப்பொழுதுப் புதிதாகக் கோபம் வந்தது. இப்பொழுது என்ன ஆகிவிட்டது என்று அவன் அத்தனைக் கண்டிப்புடன் பேசினான்?
ஆ, அவன் ஆண், புருஷன். அவன் அப்படித்தான் பேசுவான். அதாவது அப்படிப் பேசுவது தனது பிறப்புரிமை என்று நினைக்கப் பழகியவன்.
சுஜாதா! காப்பி!
அவள் சட்டென்று உலுக்கப்பட்டவள் போல சுய நினைவுக்கு வந்தாள். இயந்திர கதியில் சமையலறைக் கடிகாரத்தைப் பார்த்தாள். எட்டு அடிக்கப் பத்து நிமிஷம். எட்டே முக்காலுக்கு இருவரும் ஆபீசுக்குக் கிளம்ப வேண்டும். அவன் ஏழே முக்காலுக்குத்தான் எழுந்திருப்பான். அதற்குள் அவள் டிபன் செய்து இரவுக்கும் சேர்த்துச் சமைத்து, இடையில் அவனுடைய உடுப்புகளுக்கு இஸ்திரி போட்டு - ஒருமுறை இஸ்திரிக்கு ஓர் ஆளிடம் உடுப்புகளைக் கொடுத்து, உடுப்புக்களோடு ஆள் காணாமல் போய்விட்டான். 'இனிமே யார் கிட்டயும் துணி கொடுக்க வேண்டாம். நாமே இஸ்திரி செஞ்சுக்கலாம்' என்றான் சுந்தர்.
'நாமே' என்பது வீட்டு வேலை என்னும் சமாச்சாரத்தில் 'நீ' என்று அர்த்தம். ஆனால் அவள் அதையெல்லாம் பொருட்டாக நினைத்ததில்லை. வீட்டு வேலையெல்லாம் செய்வது, வேலைக்காரியின் வேலையை மேற்பார்வை பார்ப்பது, அவள் வராத நாள்களில் (அவைதான் அதிகம்) தானே செய்வது - இதெல்லாம் மீன் குட்டிக்கு இருக்கும் நீச்சல் திறமையைப் போல் இருந்தது.
கல்யாணமான புதுசிலெல்லாம் அவன் படுக்கையில் படுத்தபடி 'காப்பி' என்று குரல் கொடுத்ததும் அவளுள் ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படும். காப்பியைக் கப்பில் ஊற்றிப் படுக்கையறையில் நுழையும் போது அவன் கண்ணை மூடிய நிலையில் ஒய்யாரமாகப் படுத்திருப்பான். அவள் உள்ளே நுழையும் அரவத்திலேயே அவனுடைய அதரங்களில் புன்னகை விரியும். அப்படி அவன் படுத்திருக்கும் நிலையே வசீகரமாக இருக்கும். அடிவயிறு துவண்டு கன்னங்களில் செம்மை ஏறும்.
அவன் கண்ணைத் திறக்காமலே படுத்திருப்பான். அவள் காப்பியை முக்காலியில் வைத்து அவன் மூக்கை நிமிண்டி 'காப்பி வந்தாச்சு' என்பாள். அவன் பெரிய புன்னகையுடன் அவளைத் தன்னிடம் இழுத்துக் கொள்வான். நழுவிப்போன நேரத்தை ஈடுகட்டி ஆபீஸுக்குப் பறப்பதற்குள் போதும் என்றாகிவிடும். ஆனாலும் அதிலும் ஓர் இன்பம் இல்லாமல் இல்லை. வழிநெடுக ‘அவனால் லேட்டாச்சு' என்று அவள் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அவன் குறும்புடன் கல்லுளிமங்கனாய் வாய் திறக்காமல் இருப்பான். கல்யாணமாகி இந்த இரண்டு வருஷங்களில் முன்பிருந்த சரசமும் குறும்பும் குறைந்து விட்டன. வீட்டு வேலையும், ஆபீஸ் வேலையும் இயந்திரகதியாய் அவளுக்குப் பழகி விட்டன. அவள் ஐந்து மணிக்கு எழுந்து எல்லா வேலையும் ஜுர வேகத்துடன் செய்வதும், அவன் ஏழே முக்காலுக்கு எழுந்து அவள் மேஜைமேல் தயாராக வைத்திருக்கும் டிபனைச் சாப்பிட்டு அவள் இஸ்திரி போட்டு வைத்திருக்கும் உடுப்பை மாட்டிக் கொண்டு கட்டி வைத்திருக்கும் காரியரை எடுத்துக் கொண்டு இருவரும் ஆபீசுக்குக் கிளம்புவதும் இருவருக்கும் பழகிப் போய்விட்டது. அது ரொம்பவும் இயல்பான விஷயம் போல் வாழ்க்கை இயங்கி வந்தது.
இந்த இயக்கத்தில் எந்தவிதமான மாறுதலும் வரக் கூடாது என்று அவன் தெளிவாகச் சொல்லிவிட்டான். அதாவது மாறுதலுக்கு அவள் காரணமாக இருக்கக் கூடாது என்கிறான்.
சுஜாதா!
இதோ வரேன்!
என்றபடி அவள் காப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றாள். அவன் அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். அவள் மெளனமாகக் கோப்பையை முக்காலியில் வைத்து விட்டு மீண்டும் சமையலறையை நோக்கி நடந்தாள்.
நான் சொன்னது ஞாபகமிருக்கா?
என்றான் சுந்தர் பேப்பரிலிருந்து பார்வையை விலக்காமல். தீர்மானமா உன் 'பாஸ்' கிட்டச் சொல்லிடு. இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு.
அவள் பதிலே சொல்லாமல் மீதி வேலையை முடிக்கச் சென்றாள். இப்போது ஒரு பாட்டம் வாக்குவாதம் நடந்தால் இன்று ஆபீசுக்கு நேரத்தோடு போக முடியாது. அவள் மெளனமாக சமையல் மேடையைத் துடைத்து இருவருக்கும் சின்னக் காரியரில் சாப்பாட்டை வைத்துக் கட்டி தனித்தனிப் பைகளில் போட்டு சாப்பாட்டு மேஜை மேல் வைத்து அவசரமாகத் தன்னைத் தயாரித்துக் கொள்ள அடுத்த அறைக்குச் சென்றாள். முடமுடத்த கஞ்சி போட்ட புடவை கட்ட நேரமில்லாமல் நைலான் புடவையைக் கட்டித் தலையைச் சீவும் போது கை சோர்ந்து போயிற்று. நேற்று இரவு தூக்கமில்லாததில் கண்களுக்கு அடியில் களைப்பு தெரிந்தது. மையிட்ட பிறகு சற்றுத் தெம்பு வந்தது போலத் தோன்றிற்று. ஆபீஸில் அவளுக்குத்தான் 'ஸ்மார்ட்டாக ட்ரஸ் செய்துக் கொள்ளும் பெண்’ என்று பட்டப் பெயர் உண்டு. இன்று அதில் ஐம்பது சதவீதம் கூடத் தேறாது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
மேஜைமேல் வைத்திருந்த டிபனை இன்னும் சுந்தர் சாப்பிட வரவில்லை. மணி எட்டே முக்கால். அவளுக்குத் திக்கென்றது. அவனுடன் தான் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அவள் செல்வது வழக்கம். அவளை அவளது அலுவலகத்தில் இறக்கிவிட்டுச் செல்வான். எட்டே முக்காலுக்குக் கிளம்பினால்தான், ட்ராஃபிக் நெரிசலைத் தாண்டி ஒன்பதரை மணி ஆபீசுக்கு நேரத்துக்குச் செல்ல முடியும், எந்தக் காரணத்துக்காகவும் ஆபீசுக்குத் தாமதமாகச் செல்ல அவளுக்குப் பிடிக்காது. இதுவே அவளுக்கு நல்ல பெயர் கொடுத்திருப்பது என்று அவளுக்குத் தெரியும்.
அவள் அவசரமாக இரண்டு விள்ளல் இட்லியை வாயில் போட்டுக் கொண்டு சுந்தர் கிளம்பல்லியா?
என்று குரல் கொடுத்தாள்.
இன்னிக்கு ஒன்பது மணிக்குக் கிளம்பலாம்
என்றான் அவன் சாவகாசமாக.
ஏன்?
என்றாள் அவள் திடுக்கிட்டு.
ஏன்னா, நா இன்னும் குளிக்கல்லே, எழுந்திருக்கும் போதே இன்னிக்கு லேட்.
என்ன இது சுந்தர்?
என்றாள், அவள் லேசான கோபத்துடன். இன்னிக்கு எனக்கு வழக்கத்தை விட சீக்கிரம் போகணும்.
நான் கிளம்ப இன்னும் பதினைஞ்சு நிமிஷம் ஆகும்,
என்றான் அவன் நிர்தாட்சிசயமாக. கொஞ்சம் லேட்டாப் போனா உன் பாஸ் என்ன தலையைக் கிள்ளிவிடுவானா? அவனுடைய பேச்சுக்கெல்லாம் இதென்ன ஆட்டம் ஆடறே நீ?
அவளுக்குச் சுரீரென்று கோபம் வந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் மேஜையில் பதார்த்தங்களை மூடிவைத்துக் கைகழுவி டிபன் பாக்ஸை கைப்பையில் திணித்து, எனக்கு இப்ப விவாதம் பண்றதுக்கு நேரமில்லே சுந்தர்... ப்ளீஸ்!
என்றாள் அடங்கின குரலில். உனக்குக் கிளம்ப நேரமாகும்னா நான் ஆட்டோவிலே போறேன்.
உன் இஷ்டம்
என்றான் அவன் சற்று நிஷ்டூரமான குரலில். என் செளகர்யத்தைவிட உன்னுடைய 'பாஸ்'ஸுக்கு சலாம் போடறது முக்கியம்னா கிளம்பு!
அவள் ஆயாசத்துடன் ஒரு விநாடி தயங்கி நின்றாள். அவன் மிகவும் குழந்தைத்தனமாக நடந்து கொள்வது போல் இருந்தது.
வேலைக்கு நேரத்தோடு போறது எனக்கு ரொம்ப முக்கியம்
என்றபடி, கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ, நான் கிளம்பறேன்,
என்று அவள் செருப்பை மாட்டிக் கொண்டு வாசலுக்கு விரைந்து லிஃப்ட் முன்னால் நின்றாள். சுந்தர் வேண்டுமென்றே சோதிக்கிறான் என்று எரிச்சல் வந்தது. நல்ல வேளையாக இன்று லிஃப்ட் வேலை செய்துக் கொண்டிருந்தது. தெருவிற்கு வந்த போது ஆட்டோவும் அதிசயமாகக் கிடைத்தது. பிழைத்தோம் என்று தனக்குள் திருப்திபட்டுக் கொண்டு ஆட்டோவில் அமர்ந்தபோது மனசில் தம்மென்று ஒரு விசனம் கனமாக அமர்ந்தது.
சுந்தர் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? ஆபீசுக்குச் சென்று வேலை செய்வதால் என்ன குறை வைத்தேன் அவனுக்கு? நாக்குக்கு ருசியாக சமைக்காமல் இருக்கிறேனோ? வீட்டை ஒழுங்காக வைக்காமல் இருக்கிறேனோ? வீட்டு நிர்வாகம் பூராவும் நான் தான் செய்கிறேன். சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் வீட்டுக்காக செலவழிக்கிறேன். சில பெண்கள் போல கண்டபடி புடவைகள் வாங்குகிற பித்துகூட கிடையாது. இன்னும் எப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கிறான்? தன்னைத் தவிர வேறு பாஸ் மனைவிக்கு இருக்கக் கூடாது என்ற எண்ணமா? அது எப்படி சாத்தியம் வேலைக்குச் செல்லும்போது? 'சரிப்பட்டு வராதுன்னு சொல்லிடு!' அவளுக்கு அந்த வார்த்தைகளை நினைத்து மீண்டும் சுரீரென்று கோபம் வந்தது. இவன் என்ன அண்ணாவி இப்படி ஒரு கண்டிஷன் போடுவதற்கு?
இவனுக்குப் பிரமோஷன் கிடைத்து, அதனால் வேலை அதிகரித்தது. வீட்டிற்குத் திரும்ப எட்டுமணி ஆகும் என்ற நிலை வந்தால், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது, பிரமோஷனே வேண்டாம்'