Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vaanile Neeye Nila
En Vaanile Neeye Nila
En Vaanile Neeye Nila
Ebook97 pages31 minutes

En Vaanile Neeye Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128304663
En Vaanile Neeye Nila

Read more from Maheshwaran

Related to En Vaanile Neeye Nila

Related ebooks

Reviews for En Vaanile Neeye Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vaanile Neeye Nila - Maheshwaran

    http://www.pustaka.co.in

    என் வானிலே நீயே நிலா

    En Vaanile Neeye Nila

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    பைரவி மேடம்...! உங்களுக்கு போன். லைன்ல காத்திருக்காங்க. ரிசப்ஷன்ல போய்... பேசிட்டு வாங்க...

    பியூன் ரங்கசாமி வந்து சொன்னதும் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தாள் பைரவி.

    பைரவியிடம் செல்போன் இருந்தது.

    ஆனால் ஆபிஸ் வேலை நேரத்தில் யாரும் யாரோடும் செல்போனில் பேசக்கூடாது என்பது எம்.டியின் கண்டிப்பான உத்தரவு. அதனால் எல்லோரும் செல்போனை ஆப் பண்ணிதான் வைத்திருப்பார்கள். பைரவியும் தன்னுடைய செல்ஃபோனை ஆப் பண்ணிதான் வைத்திருந்தாள். 'எதாவது முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே பேசலாம்' என்று சொல்லி, அம்மாவிற்கும் தன்னுடைய நெருங்கிய தோழிகளுக்கும் பைரவிதான் ஆபிஸ் எண்ணைக் கொடுத்திருந்தாள்.

    'போனில் பேசுவது யாராய் இருக்கும்?'

    அம்மாவாய் இருக்குமோ?

    முக்கியமான விஷயமாக இருந்தால் ஆபிஸிற்கு கிளம்புகிறபோதே அம்மா நினைவு படுத்தியிருப்பாளே! நிச்சயமாய் அம்மா பேசமாட்டாள். வீணாவோ, சரயுவோதான் கூப்பிட்டிருக்க வேண்டும்.'

    யோசனையுடன் பியூன் ரங்கசாமியின் பின்னால் நடந்தாள்.

    ரிசப்ஷன் கெளண்ட்டரில் மல்லாந்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த ரிஸீவரைப் போய் கையிலெடுத்தாள்.

    நா பைரவி பேசறேன். நீங்க யாரு? என்றாள்.

    குட்மார்னிங் பைரவி மறுமுனையில் கரகரப்பான ஒரு ஆண்குரல் கேட்டது.

    நீங்க யாரு?

    என்னைத் தெரியலையா பைரவி?

    தெரியலை. பைரவி ஒற்றை வார்த்தையைக் கசப்பாய் உதிர்த்தாள்.

    நா கணேஷ் பேசறேன் பைரவி... னபரவியின் முகத்தில் சட்டென்று இறுக்கம் படர்ந்தது.

    உங்களுக்கு என்ன வேணும்?

    நீதான் வேணும் பைரவி.

    தபாருங்க கணேஷ், உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எதுக்காக என்னை தொந்தரவு பண்றீங்க? படபடத்தாள்.

    உன்னோட பதில் என்னை சந்தோஷப்படுத்தியிருந்தா நா எதுக்கு உன்னை தொந்தரவு பண்ணப் போறேன்?

    கணேஷ்.. நா அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். நா உங்களுக்கு எந்த விதத்துலயும் ஒத்துவரமாட்டேன். என்னை விட்ருங்க...

    ம்ஹூம். நீ எனக்கு வேணும் பைரவி. உன்னை என்னால் மறக்க முடியலை. மறுக்கவும் முடியாது. உன்னைத் தவிர வேற எந்தப் பெண்ணையும் எம்மனசுல சுமக்கமாட்டேன். இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு மனைவி, உன்னோட ஒரு வார்த்தைக்காகத்தான் காத்திருக்கேன். சரின்னு சொல்லிட்டின்னா நாளைக்கே என் பேரண்ட்ஸ்ஸோட உன் வீட்டுக்கு வந்து மொறைப்படி பொண்ணு கேட்டுடுவேன்...

    ரிஸீவரின் வழியே கணேஷ் தழுதழுத்தான்.

    கணேஷ் என்னன விட அழகான எத்தனையோ பெண்ணுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தியை செலக்ட் பண்ணிக்கங்க. அதான் உங்களுக்கு நல்லது...

    பிடிவாதம் பிடிக்காதே பைரவி..

    பிடிவாதம் பிடிக்கறது நீங்கதான். நிறைவேறாத விஷயத்தை நெனைச்சிகிட்டு உங்களோட வாழ்க்கையை வீணாக்காதீங்க... கணேஷ்…

    பைரவி... உன்னை நான் நேர்ல பார்க்கணும்...

    நா அதை விரும்பலை...

    இன்னைக்கு சாயங்காலம் உனக்காக பீச்சுல காத்திருப்பேன். ஆபிஸ் முடிஞ்சதும் நீ பீச்சுக்கு வர்றே... ஓகே...

    என்னை எதிர்பார்க்காதீங்க.

    எதிர்பார்ப்பேன். நீ வருவே. கண்டிப்பா வருவே! குட் பை... மறுமுனையில் தொடர்பைத் துண்டித்தான் கணேஷ்.

    முகத்தில் முத்துமுத்தாய் வியர்வை பூத்திருக்க, அப்படியே திகைத்துப்போய் நின்றாள் பைரவி.

    போன்ல யாரு பைரவி? எதாவது பிராப்ளமா? ரிசப்ஷனிஸ்ட் ஹேமா கேட்டாள்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லை... ஹேமா. சும்மா தெரிஞ்சவங்கதான் பேசினாங்க... அங்கிருந்து வேகமாய் தன்னுடைய இருக்கையை நோக்கி நடந்தாள்.

    இதயம் குட்டி முயலாய் குதித்தது.

    இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

    வேலையில் கவனத்தையே செலுத்த முடியவில்லை.

    கண்ணுக்குள் கணேஷ் வந்து போனான். தலையை சாய்த்து கருகரு மீசை வழிய தெத்துப்பல் காட்டி சிரித்தான்.

    'கணேஷின் காதல் பிடியிலிருந்து நழுவுவது எப்படி?'

    'கணேஷிற்கு என் நிலைமையை எப்படி புரியவைப்பேன்?'

    "கணேஷிற்கு என்னைப் பற்றி முழுமையாய் தெரியுமா? தெரிந்துதான்

    Enjoying the preview?
    Page 1 of 1