Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Enum Thean Kalanthu!
Anbu Enum Thean Kalanthu!
Anbu Enum Thean Kalanthu!
Ebook153 pages58 minutes

Anbu Enum Thean Kalanthu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரியில் நடந்த மாணவர் தலைவர் தேர்தலின் போது மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முரட்டு மாணவனான கதிர், சேகர் என்னும் சக மாணவனின் இடுப்பை உடைத்து ஆஸ்பத்திரியில் போடுகிறான்.

பிரின்ஸிபால், கதிரின் தாய் ரத்தினத்தை வரவழைத்து விஷயத்தைச் சொல்ல, அவள் அந்த சேகரின் தாய் கனகத்தைச் சந்தித்து மன்னிப்புக் கோர மருத்துவமனை செல்கிறாள். அங்கு சென்ற பின்தான் தெரிகிறது பல வருடங்களுக்கு முன்னால், கதிர் பிறந்த போது தனக்கு தாய்ப்பால் சரிவர சுரக்காத காரணத்தால்...தன் குழந்தை கதிருக்கு தன் தாய்ப்பாலைக் கொடுத்தவள் அந்தக் கனகம் என்பது.

இந்த உண்மை தெரிய வந்ததும், கதிர், சேகரைத் தன் தம்பியாகவே எண்ணிப் பழகலானான்.

அன்று முதல் அவர்களிருவருக்கும் இடையில் நிகழும் சம்பவங்களை உருக்கமாகவும், உன்னதமாகவும் காட்டுகின்றார் கதாசிரியர்.

இறுதியில் அந்தக் கதிர் செய்யும் மாபெரும் தியாகமே...கதைக்கு அச்சாணியாகின்றது.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004785
Anbu Enum Thean Kalanthu!

Read more from Mukil Dinakaran

Related to Anbu Enum Thean Kalanthu!

Related ebooks

Reviews for Anbu Enum Thean Kalanthu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Enum Thean Kalanthu! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    அன்பு எனும் தேன் கலந்து!

    Anbu Enum Thean Kalanthu!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 1

    பிரின்ஸிபாலின் அறைக்குள் பதட்டமாய் வந்து நின்றார் கல்லூரியின் நிர்வாக அதிகாரி சுதர்சனம்.

    என்ன சுதர்சனம்?... நிலைமை இப்ப எப்படி இருக்கு?... கட்டுப்பாட்டுக்குள் இருக்கா... இல்லை போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ண வேண்டியிருக்குமா? பிரின்ஸிபால் தியாகராஜனும் அதே பதட்டத்துடன் பேசினார்.

    சார்... எனக்கென்னமோ உடனே போலீஸுக்குத் தகவல் குடுத்திடறதுதான் பெட்டர்னு தோணுது...! ஏன்னா?... பசங்க ரெண்டு கோஷ்டியாப் பிரிஞ்சு... இந்தப்பக்கம் பத்துப் பேரு... அந்தப் பக்கம் பேர் நின்னுக்கிட்டு, கைல கிடைச்சதையெல்லாம் எடுத்து ஆயுதமா யூஸ் பண்ணி ஒருத்தரையொருத்தர் தாக்கிக்கிட்டு இருக்காங்க சார்...! ஒண்ணு ரெண்டு பேருக்கு ஏகமா அடிபட்டிருக்கு சார்...! இதுக்கு மேலேயும் நாம் காப்ம்ரமைஸ் முயற்சி பண்ணினா... விஷயம் ரொம்ப சீரியஸாயிடுமோ?ன்னு தோணுது சார்!

    நல்ல அனுபவசாலியான சுதர்சனம் சொன்னால் நிச்சயம் அது சரியாய்த்தான் இருக்கும், என்று முடிவு செய்த பிரின்ஸிபால் தியாகராஜன் உடனே போனை எடுத்து பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு டயல் செய்தார்.

    ஹலோ... பி சிக்ஸ் போலீஸ் ஸ்டேஷன்! என்று எதிர் முனையிலிருந்து குரல் வர,

    சார்... நான் நேஷனல் ஆர்ட்ஸ் காலேஜிலிருந்து பிரின்ஸிபால் தியாகராஜன் பேசறேன்...! அங்க இன்ஸ்பெக்டர் துரைராஜ் இருக்காரா?

    ம்... சொல்லுங்க சார்...! நான் துரைராஜ்தான் பேசறேன்!

    மிஸ்டர் துரைராஜ்...! இங்க நம்ப காலேஜ்ல ஸ்டூடன்ஸ்களுக்குள்ளார ஒரே தகராறா இருக்கு...! பசங்க ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு ஒருத்தரோட ஒருத்தர் மோதிக்கறாங்க...! எங்களால காம்ப்ரமைஸ் பண்ண முடியலை...! நிலைமை ரொம்ப சீரியஸாகிட்டிருக்கு...! கொஞ்சம் வந்து நிலைமையைச் சரி பண்ணிக் குடுங்க...! மேனேஜ்மெண்ட் அவ்வளவு சீக்கிரம் காவல்துறைக்குப் போவதை விரும்பாது என்பதால், வெகு நாசூக்காகவே விஷயத்தைச் சொன்னார் பிரின்ஸிபால்.

    ஓ.கே.சார்...! இப்பவே புறப்பட்டு வர்றோம்!

    இன்ஸ்பெக்டர்... ஒரு விஷயம்...! கல்லூரியோட பேரு கெட்டுடாத அளவுக்கு கொஞ்சம் லைட்டாவே பிரச்சினையை சுமுகமாக்கிக் கொடுத்தால் போதும்!

    இட்ஸ் ஓ.கே.சார்...! எனக்குத் தெரியும்... நான் ரொம்ப கேர்ஃபுல்லாவே டீல் பண்ணிக்கறேன்!

    அடுத்த இருபதாவது நிமிடத்தில், காவல்துறை அங்கு வந்து சேர்வதற்குள் அந்தக் கல்லூரியின் பேஸ்கட் பால் மைதானம் ஒரு கலவர பூமியாய் மாறிக் கிடந்தது. பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தக் காயங்களுடன் ஆங்காங்கே உட்கார்ந்திருக்க, இடுப்புப் பகுதியில் மிகவும் சீரியஸாக அடிபட்டிருந்த ஒரு மாணவனை மரத்தடியில் படுக்க வைத்து, அவனுக்கு அவனது சகாக்கள் முதலுதவி செய்து கொண்டிருந்தனர்.

    போலீஸ் ஜீப் வந்து நின்றதும் அவர்கள் ஆளுக்கொரு பக்கமாய்த் தெறித்து ஓடத் துவங்க,

    ஓட முடியாத அளவிற்கு அடிபட்டிருந்த நான்கு மாணவர்கள் மட்டும், வேறு வழியில்லாமல் அப்படியே நின்றனர்.

    ஜீப்பிலிருந்து வேக, வேகமாய் இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் துரைராஜ், கான்ஸ்டபிள்... ஓடிப் போன பசங்களையெல்லாம் வளைச்சுப் பிடிச்சு இங்க இழுத்திட்டு வாங்க...! அதுக்குள்ளார நான் இவனுகளுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு பண்றேன்! என்றார் பரபரப்பாய்.

    நாலைந்து காவலர்கள் ஓடும் மாணவர்களைத் துரத்திக் கொண்டு ஓட, அடிபட்டுக் கிடந்தவர்களிடம் வந்தார் இன்ஸ்பெக்டர்.

    ஏண்டா... உங்களைப் பெத்தவங்கெல்லாம் எதுக்குடா உங்களை காலேஜுக்கு அனுப்பறாங்க?... போய் நல்லா அடிதடி பழகிட்டு வாங்க! ன்னு சொல்லியா அனுப்பறாங்க?... படிக்க வந்த இடத்துல படிக்கற வேலையை விட்டுட்டு இப்படி ஆளாளுக்கு அடிச்சுக்கிட்டு சாவறீங்களே?... இதுக்காடா லட்சக் கணக்குல பணத்தைக் கட்டிட்டு வர்றீங்க?... உங்களைச் சொல்லக் கூடாதுடா... உங்களுக்கெல்லாம் பணம் கட்டி அனுப்பறாங்க பாரு?... அவங்களைச் சொல்லணும்!

    பேசக் கூட முடியாத நிலையில் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் முனக,

    இன்ஸ்பெக்டர் மொபைலை எடுத்து ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்தார்.

    பத்தே நிமிடத்தில் வந்து நின்ற ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு, கான்ஸ்டபிள்கள் பிடித்து வந்த மற்ற மாணவர்களிடம் வந்தார் இன்ஸ்பெக்டர். வந்து நின்றதும் தன்னுடைய புதர்ப்புலிப் பார்வையை அவர்கள் மீது நிதானமாய்ப் பாய்ச்சி விட்டு, என்னடா?... என்னடா பிரச்சினை உங்களுக்குள்ளே?... சொல்லித் தொலைங்கடா? என்றார் பற்களைக் கடித்துக் கொண்டு.

    ஒரு கோஷ்டியின் தலைவன் போலிருந்த கதிர்வேல், சார்... இது இன்னிக்கு நேத்திக்கு வெடிச்ச கோபமில்லை சார்...! காலேஜ் எலக்‌ஷன் நடந்தப்ப இருந்தே இந்தக் கோபம் எங்களுக்குள்ளார இருந்திட்டுத்தான் இருக்குது! என்றான் துளியும் பயமில்லாமல்.

    கதிரை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்து விட்டு, ஓ... நீதான் இந்த கோஷ்டிக்கு லீடரா?... சொல்லு... சொல்லு... என்ன கோபம் அது?

    சார்... காலேஜ் எலக்‌ஷன்ல எங்க அணி தோத்திடுச்சு...! இங்க இடுப்பொடிஞ்சு கிடந்தானே ஒருத்தன்... நீங்க கூட ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பிச்சீங்களே?... அவன்தான் ஜெயிச்சவன்!

    அவன் பேரு?

    சேகர்!

    அப்படின்னா... அவன்தான் உங்க எதிரி கோஷ்டிக்குத் தலைவன் என்றபடி தன் தலையை மேலும், கீழும் ஆட்டிய இன்ஸ்பெக்டர், ம்ம்... மேலே சொல்லு! என்றார் கதிரைப் பார்த்து.

    சார்... நாங்க எங்க தோல்வியை ஏத்துக்கிட்டு அமைதியாயிட்டோம்...! ஆனா அவங்க அப்படி ஆகலை...! ஜெயிச்சிட்டோம்கற தெனாவெட்டுல தினமும் என்னையும்... என்னோட நண்பர்களையும் ரொம்ப டீஸ் பண்ணினாங்க...! நாங்களும் ரொம்பவே பொறுத்துப் பொறுத்துப் போனோம்...! எங்களோட பொறுமையை அவங்க பேடித்தனம்னு நக்கல் பண்ண ஆரம்பிச்சதும்தான் நாங்க எங்க வேலையைக் காட்ட வேண்டியதாயிட்டுது! என்று தங்கள் பக்கத்து நியாயத்தை தைரியமாக எடுத்துரைத்தான் கதிர்.

    ஓ... அதுக்காக உடனே அடிச்சிடுவீங்களா?... காலேஜ்ல பிரின்ஸிபால்ன்னு ஒருத்தர் எதுக்கு இருக்கார்?... போய் அவர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியதுதானே? இன்ஸ்பெக்டர் நெத்தியடியாச் சொல்ல,

    ம்... கம்ப்ளைண்ட் பண்ணினோமே...! அவர் காம்ப்ரமைஸ் பண்ணத்தான் முயற்சி பண்ணினாரே தவிர அவங்க மேலே எந்த ஒரு ஆக்‌ஷனும் எடுக்கலை...! எடுக்கத் தயங்கறார்...! அதான்!

    என்று யோசனையுடன் தாடையைச் சொறிந்த இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பக்கம் திரும்பி, கான்ஸ்டபிள்... இவனுகளோட பேரு... வகுப்பு... அப்பா அம்மா பேரு... போன்ற டீட்டெய்ல்ஸையெல்லாம் வாங்கிட்டு இவனுகளை அனுப்பிடுங்க! என்றார்.

    அந்த கதிர் முறைப்புடன் அங்கிருந்து நகர எத்தனிக்க,

    இந்தாப்பா... நீ எங்க போறே?... நீ என் கூட பிரின்ஸிபால் ரூமுக்கு வா! என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் துரைராஜ் முன்னே நடக்க,

    சற்றும் பயமில்லாமல் முகத்தில் அலட்சியப் புன்னகையுடன் அவரைப் பின் தொடர்ந்தான் கதிர். போகும் அவனையே மிரட்சியாய்ப் பார்த்துக் கொண்டு நின்றனர் அவன் நண்பர்கள்.

    ***

    பிரின்ஸிபால் அறை.

    அவர் மேஜைக்கு எதிரே இருந்த இருக்கையில் இன்ஸ்பெக்டர் துரைராஜ் அமர்ந்திருக்க, கதிர் சற்றுத் தள்ளி, இரு கைகளையும் ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்டிற்குள் நுழைத்துக் கொண்டு, மிகவும் கேஷுவலாக நின்று கொண்டிருந்தான்.

    பிரின்ஸிபால் சார்... நான் விசாரிச்சதுல... இங்க காலேஜ் எலக்‌ஷன் நடந்த நாளிலிருந்தே ரெண்டு கோஷ்டிகளுக்கு நடுவிலேயும் ஒரு பனிப்போர் நடந்திட்டே இருந்திருக்கு!

    யெஸ் சார்... ஐ நோ...! அது சம்மந்தமா எலக்‌ஷன்ல தோற்றுப் போன கோஷ்டியைச் சேர்ந்த மாணவர்கள் என்கிட்ட வந்து கம்ப்ளைண்ட் கூடக் குடுத்தாங்க!

    ஓ.கே...! அதுக்கு நீங்க என்ன ஆக்‌ஷன் எடுத்தீங்க? இன்ஸ்பெக்டர் கொக்கி போட,

    "சார்... உண்மையைச் சொல்லணும்னா...

    Enjoying the preview?
    Page 1 of 1