Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhini Oru Nandhavanam
Nandhini Oru Nandhavanam
Nandhini Oru Nandhavanam
Ebook91 pages1 hour

Nandhini Oru Nandhavanam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466350
Nandhini Oru Nandhavanam

Read more from Vimala Ramani

Related authors

Related to Nandhini Oru Nandhavanam

Related ebooks

Related categories

Reviews for Nandhini Oru Nandhavanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhini Oru Nandhavanam - Vimala Ramani

    21

    1

    கையில் அந்த விலாச அட்டையை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாள் நந்தினி.

    இந்த மாலை நேரத்தில் கூட நல்ல வெய்யில். புரட்டாசி வெய்யில் புரட்டி எடுக்கும் என்பார்கள். அதுதானோ இது?

    ஒவ்வொரு பொட்டிக் கடையாக விசாரித்து. எதிரில் தென்பட்ட மனிதர்களைக் கேட்டு, திறந்திருந்த வீட்டுக் கதவில் எல்லாம் நுழைந்து விலாசம் கேட்டு...

    ஊஹம் பிரயோஜனமே இல்லை. யாருக்கும் அப்படி விலாசம் இருப்பதாகவே தெரியவில்லை.

    இது பழைய நம்பரா?

    முந்தி இந்த இடத்திலே இருந்திருக்கலாம். இப்படி ஊர் முழுக்க ப்ளாட் போட்டு விற்று அபார்ட்மெண்ட் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. முல்லை நகர், தேவயானி நகர், வள்ளி நகர், - அப்படின்னு நிறைய புதுப்புது இடங்கள்...

    நல்லவேளை அந்த முருகனுக்கு இன்னொரு மனைவி இருந்திருந்தால் அவள் பெயரிலும் ஒரு நகர் வந்திருக்கும்.

    தாகமாக இருந்தது. அந்தப் பொட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்தால் என்ன? நேரமாகிக் கொண்டிருந்தது. நந்தினி நடப்பதும், நிற்பதும்.

    இப்போதெல்லாம் குளிர்பானத்தில் கலரைத் தவிர, கரப்பான் பூச்சிகளும் இருக்கிறதாமே! வேண்டுமா? வேண்டாமா?

    இவள் தடுமாற்றத்தைப் பார்த்து விட்டு அந்தக் கடைக்காரரே கேட்டார்.

    நானும் பார்க்கறேன் அம்மணி அப்போ புடிச்சு அலையா அலையுது... என்ன சேதி அம்மணி? யாரையாச்சும் பாக்கோணுங்களா?

    உம்... என்னோட அத்தை இந்த ஊர்லேதான் இருக்காங்க. கோயமுத்தூர் வந்தா வீட்டுக்குவான்னு விலாசம் தந்திருக்காங்க. ஆனா இந்த விலாசமே இல்லை, இருட்டிட்டு வருது. என்ன பண்றதுன்னே தெரியல்லை

    அம்மணிக்கு, இந்த ஊர்லே சாதிசனம் வேற யாருமில்லையாக்கும். இரு அம்மணி அந்த விலாசச் சீட்டை இப்படிக் கொடு. என்ற பையனைக் கூப்பிட்டுக் காட்டறேன். இந்த படிப்பெழவெல்லாம் என்ற புத்திக்கு எட்டல்லை. அம்மணி, ஆனா மவனை கம்யூட்டருக்கு படிக்க வைக்கறேன். இந்தப் பொட்டிக்கடை பொழப்பு என்னோட போகட்டும்... -- என்ற அந்தப் பெரியவர் உள்ளே திரும்பி...

    துறை - என்று இரைந்து கூப்பிட்டார்.

    என்ற பையன். ராசதுரை. சுருக்கமா துரைன்னு கூப்பிடுவேன். சம்சாரம் இறந்து போச்சு. இப்ப நானும் என்ற மகனும்தான். ஏதோ நிலபுலம் இருக்கு. பொட்டிக் கடை வருமானம் இருக்கு. ஆ... அ இதோ துரை வந்தாச்சு...

    வீட்டின் உள்ளே இருந்து ஒரு வாலிபன் வெளிப்பட்டான். பெயருக்கு ஏற்ற மாதிரி ராஜாதான். பெரியவர் ராஜதுரை என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்.

    துரை, டவுனிலே இருந்து வந்துட்டியா? இந்தா இந்த அம்மணி அப்போ புடிச்சு இந்த விலாசத்தை வைச்சுட்டு அலையா அலையுது தம்பி. எந்த இடம்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லு... பாவம் பொட்டப் புள்ள...

    ராஜா அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

    ஏனோ நந்தினி தலைகுனிந்தாள்.

    ப்ளீஸ்... அட்ரஸ் தர்றீங்களா?

    நான் நந்தினி... மெட்ராஸிலே இருந்து வரேன்...

    ஸாரி மேடம், உங்க அட்ரஸ் கேக்கல்லை. நீங்க இங்கே தேடி வந்த அட்ரஸ்...

    தன்னை சுதாரித்துக் கொண்டவள் தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து அந்த துண்டு சீட்டை எடுத்தாள், கொடுத்தாள்.

    அவன் சற்றே யோசித்தான்.

    இங்கே ஹவுசிங் யூனிட் ஏதுமில்லை. பின் கோட் நம்பர் கோவைப்புதூர் இடம். ஆனா போட்டிருக்கிறது வடவள்ளின்னு... ஏதோ தப்பு. வட வள்ளியோட பின்கோடு வேற...

    ஐய்யயோ... என்றாள் நந்தினி.

    பயப்படாதீங்... இது

    அத்தை வீடு

    அவங்க விட்டிலே போன் இருக்கா?

    தெரியல்லை

    என்னம்மா ஊரை விட்டு ஊர் வந்து விலாசம் தேடும்போது முக்கியமானதைக் குறிச்சுக்க வேண்டாமா?

    இருட்டிட்டு வருதே. என்ன பண்றது?

    கவலைப்படாதே அம்மணி, என்ற துரை உன்னயைக் கொண்டு உன்ற அத்தை வீட்டிலே விட்டுட்டு வருவான்.

    வந்து...

    கவலைப்படாதே. என்ற பையன்னுக்கு நான் ‘பைக்’ வாங்கிக் கொடுத்திருக்கேன். துரை என்றாது பாத்துட்டு நிக்கறே. அம்மணியைக் கூட்டிக் கொண்டு அவங்க அத்தை வீட்டிலே விடு...

    அவன் வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஷெட்டில் இருந்து ஒரு அழகான புத்தம் புது பைக்கை எடுத்து வந்தான்.

    மேடம்...

    என் பேர் நந்தினி...

    ஓகே... பைக்கிலே போய்ப்பழக்கம் உண்டா?

    சென்னையிலே ஹோண்டாவை எடுத்துட்டு ஊர் சுத்தறதுதான் வேலை...

    சேல்ஸ் கேர்ளா? சரி பைக்கில ஏறிக்கங்க...

    அவள் கொஞ்சம் தயங்கி பின் மெல்ல வண்டியில் ஏறிக் கொண்டாள்.

    கிளம்முபுன்...

    "கோவை

    Enjoying the preview?
    Page 1 of 1