Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthamittal Enna?
Muthamittal Enna?
Muthamittal Enna?
Ebook97 pages24 minutes

Muthamittal Enna?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அத்தை மகன் அமர் அயல் நாட்டிலிருந்து திரும்பும் நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஆராதனா...

இந்தியாவிற்கு கிளம்பி வந்தவன்...

வீட்டிற்கு வரவில்லை...

காணாமல் போகிறான்.

எங்குதேடியும் கிடைக்கவில்லை -

மனசு நொறுங்கிப் போகும் ஆராதனா வீட்டாரின் கட்டாயத்திற்காக கபிலனை கரம் பிடிக்கிறான்.

கபிலனும் ஆராதனைவும் திருமணம் முடிந்த செல்கிறார்கள்...

அங்கே...

தன்னை மறந்த நிலையில் சுய நினைவை தொலைத்து நிற்கும் ஆசைக்காதலனை அமரைப் பார்க்கிறாள் ஆராதனா...

அதன் பின் நிகழ்வுகள் என்ன...?

முத்தமிட்டால் என்ன? நாவலை வாசியுங்கள்.

- இந்திரா நந்தன்

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130704919
Muthamittal Enna?

Read more from Indira Nandhan

Related to Muthamittal Enna?

Related ebooks

Reviews for Muthamittal Enna?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthamittal Enna? - Indira Nandhan

    http://www.pustaka.co.in

    முத்தமிட்டால் என்ன?

    Muthamittal Enna?

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    தீக்குச்சியை உரசினாள் ஆராதனா.

    நெய் ஊற்றி, திரி போட்டு தயாராய் இருந்த எலுமிச்சைப்பழ மூடிகளில் தீபங்களை ஏற்றி, விரல்களால் நன்றாகத் தூண்டிவிட்டாள்.

    அழகாய் சுடர் விட்டு எரிந்தது நெய்விளக்கு.

    இளஞ்சிவப்பு வண்ணச்சேலைக் கட்டப்பட்டு கம்பீரமாய் காட்சியளித்த துர்க்கையம்மனைப் பார்த்து கைகளைக் குவித்தாள்.

    'துர்க்கையம்மன் தாயே! என்னுடைய அமர் சிங்கப்பூரிலிருந்து வெகு சீக்கிரமாய் திரும்பி வரவேண்டும். பத்திரமாய் வரவேண்டும். எங்களுடைய கல்யாணம் நல்லவிதமாய் நடக்க வேண்டும்.'

    மனமுருக வேண்டினாள்.

    கண்ணீர்த் துளிர்த்தது.

    துர்க்கையம்மன் காலடியில் கொட்டிக் கிடந்த குங்குமத்தை விரலால் தொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

    மனசுக்கு இதமாக இருந்தது.

    ஒருவித அமைதி உள்ளுக்குள் புகுந்துக் கொண்டதைப்போல தோன்றியது.

    உலகம் இயந்திரத்தனமாகிவிட்டது.

    மனித வாழ்க்கையும் இயந்திரம் போல ஆகிவிட்டது. பரபரப்பான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி கோவிலுக்கு வருவதுதான்.

    ஆராதனா அடிக்கடி வரமாட்டாள்.

    மாதம் ஒரு தடவை வெள்ளிக்கிழமையாய்ப் பார்த்து வந்துவிடுவாள். அரைமணி நேரமாவது கோவிலில் இருந்துவிட்டுதான் கிளம்புவாள்.

    யாரோ ஒரு சோழ மன்னன் கட்டிய கோவில் அது.

    மிகப்பெரிய கோவில்.

    முழுக்க முழுக்க கருங்கற்களாலேயே கட்டப்பட்ட கோவிலின் அமைப்பு காண்போரை பிரமிக்க வைக்கும்.

    உள்ளே நுழைந்துவிட்டால் வெளியே போக மனசே வராது.

    ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனியே சந்நிதி இருந்தது.

    கையில் கொண்டு வந்திருந்த வெண்கல அர்ச்சனைக் கூடையை எடுத்துக்கொண்டு துர்க்கையம்மன் சந்நிதியை விட்டு நகர்ந்தாள் ஆராதனா.

    கோவிலில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது.

    நவக்கிரக மண்டபத்தில் பெண்கள் பயபக்தியோடு அடிப்பிரதட்சணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    ஆராதனா கொடிமரத்திற்கு எதிரே வந்து நின்றாள்.

    'அமர் வந்ததும், அமரோடு கல்யாணம் முடிந்ததும் அமரின் கையைப் பிடித்துக்கொண்டு நூற்றியெட்டு சுற்றுகள் பிரஹாரத்தை சுற்ற வேண்டும்'

    நினைத்தபடியே கீழே விழுந்து வணங்கினாள்.

    டி ஆராதனா...

    யாரோ கூப்பிட்டார்கள்.

    ஆராதனா எழுந்தாள். பின்னால் திரும்பிப் பார்த்தாள். தேரடித்தெரு வான்மதி நின்றிருந்தாள். தலைநிறைய பூ வைத்து முகம் முழுவதும் புன்னகையோடு காணப்பட்டாள்.

    ஏய் வான்மதி... சௌக்கியமா இருக்கியாடி?

    கேட்டபடியே துள்ளலாய் ஓடி, வான்மதியின் கையைப் பற்றினாள் ஆராதனா.

    இருக்கேன்.

    தலையை அழகாய் ஆட்டினாள் வான்மதி.

    இருவரும் ஒரே ஊர். பக்கத்து பக்கத்து தெருவில்தான் வீடு.

    பன்னிரண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளிக்கூடத்தில் இணைபிரியாமல் படித்தவர்கள். ஆராதனா பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டாள். வான்மதி கல்லூரியில் போய் சேர்ந்துவிட்டதால் ஒருவரை ஒருவர் சந்திக்கவே முடியவில்லை.

    ஒரே ஊருல இருக்கோம்னுதான் பேரு...! ஆனா ஆறுமாசத்துக்கொரு தடவைதான் நாம் சந்திக்கறோம்... என்றபடியே, ஆராதனாவைக் கூட்டிக்கொண்டு சிற்ப மண்டபத்தை நோக்கி நடந்தாள் வான்மதி.

    கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கு வான்மதி?

    நல்லா போகுது ஆராதனா.

    எப்ப டி உன் படிப்பு முடியும்?

    இன்னும் ஆறு மாசம் இருக்கு. ஆனா அதுக்குள்ளே எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாண நாளையும் முடிவு பண்ணிட்டாங்கடி. நிச்சயத்தார்த்தம் முடிஞ்சிடுச்சி இனி காலேஜ்க்கு போகக் கூடாதுன்னு ஒரே தொல்லை...

    நிச்சயத்தார்த்தத்துக்கு கூட என்னை கூப்பிடலையே...

    ஸாரிடி! அவசர அவசரமா நடந்துடுச்சு. அதுவும் எங்க சித்தி வீட்ல வெச்சு பேசி முடிச்சுட்டாங்க. உள்ளூர்ல நடந்திருந்தா உன்னைக் கூப்பிடாம இருப்பேனா?

    வான்மதி தோள்களைக் குலுக்கினாள்.

    "மாப்பிள்ளை என்னடி

    Enjoying the preview?
    Page 1 of 1