Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Ullam Ennidam
Un Ullam Ennidam
Un Ullam Ennidam
Ebook111 pages47 minutes

Un Ullam Ennidam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாணி,தன் குழந்தை வீணா மற்றும் தன் தாய் மீனாட்சி உடன் வேறு ஊரிலிருந்து சேலத்திற்கு மாறுதல் பெற்று வருகிறாள். கணவன் கிட்னி பெயிலாகி, இறந்து விடுகிறான். அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் கரண்,தன் மகள்மீனா மற்றும் அவன் அம்மா காமாட்சியுடன் வசிக்கிறான். வீணா,மீனா இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். மீனாவின் தாய் என்ன ஆனாள்,கரண், வாணி இருவருமே வாழ்க்கையில் பெரும் போராட்டங்களை சந்திக்கிறார்கள். முடிவில் இவர்கள் இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் வாசிப்பில் காணலாம். குடும்ப பிண்ணனியில் குறைந்த கதாபாத்திரங்களை உங்களை சந்திக்கிறார்கள். இந்த நாவலிலும் "வேகமுண்டு",அதற்கு நான் உத்திரவாதம். விமர்சனங்களை எதிர் நோக்கி"
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580128604983
Un Ullam Ennidam

Read more from Kanchi Balachandran

Related to Un Ullam Ennidam

Related ebooks

Reviews for Un Ullam Ennidam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Ullam Ennidam - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    உன் உள்ளம் என்னிடம்

    Un Ullam Ennidam

    Author:

    காஞ்சி பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    இருபது நாள் விடுப்பிலிருந்து அன்று அலுவலகத்திற்கு வந்தான் கரண். உள்ளே நுழைந்ததும் தெரிந்த முகங்களோடு ஒரு புதுமுகம். சந்தேகத்துடன் புவனாவை பார்த்தான். அவன் கேள்விக்கு விடை கிடைத்தது.

    அவங்க புதுசா நம்ம ஆபீசுக்கு வந்திருக்காங்க. பேரு வாணி

    ஊரு?

    சேலம்! வேறு எதாவது விஷயம் வேணுமா?. புவனா கிண்டலடித்தாள்.

    புவனா-கிண்டல் இரண்டும் ஒன்றுதான். அவளிடமிருந்து அதை பிரிக்க முடியாது.

    வேறென்ன? சொல்லு!

    வந்ததிலிருந்து யாருடனும் கலகலப்பா பேச மாட்டேன் என்கிறாள்.

    உன்னை மாதிரியா?

    போ, கரண்! அவள் உண்டு, அவள் வேலை உண்டு. சாப்பிடும்போது கூட தனியே உட்கார்ந்து தான் சாப்பிடுறா

    உங்களோடு ஷேர் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாளா?

    இல்லே! ஆனா அது மாதிரித்தான் நடந்துக்கிறா

    ஏன் அப்படி நடந்துக்கணும்?

    அவ மனசிலே ஏதோ சோகமிருக்கு!

    ம்.... ம்... ம்...! யாருக்குத்தான் சோகமில்லே?

    சாரி! சாரி கரண்! உன் கதையை ஞாபகப்படுத்தி உன் மனசை புண்படுத்திட்டேனா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லே! என் சோகம், என் கவலை என்னோடு தான். நான் ஆபீசுக்கு வந்துட்டா எல்லாத்தையும் மறந்திடறேன்! தெரியாதா, உனக்கு?

    கரண்

    சொல்லு

    இவங்களை நம்ம செக்ஷனுக்குத்தான் போட்டிருக்காங்க!

    அப்படியா, சரி!

    நீ வந்ததும், ‘நான் தான் சார் புதுசா வந்திருக்கிற அசிஸ்டென்ட்'னு சொல்ல வேண்டாமா! அப்படியே உட்கார்ந்திருக்கா பாரு!

    நான் யாருன்னே அவங்களுக்கு தெரியாது. யாராவது அறிமுகம் செஞ்சி வைச்சால் தானே!

    அது சரி கரண்! உன் குழந்தை எப்படியிருக்கு. நீ ஊருக்கு போனியே யார் பார்த்துகிட்டாங்க?

    அம்மா!

    கரண் முப்பதை கடந்த அழகான இளைஞன். முதுகலை பட்டதாரி. கலகலப்பாக பழகுவான். அதை நம்பி அவனை மடக்க நினைத்த பெண்கள் உண்டு. ஆனாலும் அவன் அதில் கண்ணியம் காத்தான்.

    கரண், கல்யாணமாகியும் பிரமச்சாரி!

    ஒரு பெண் குழந்தை. மனைவி இவனோடு வாழவில்லை. அது ஒரு கதை!

    அழைப்பு மணி!

    எம்.டி. கேபினில் நுழைந்த கரண் எதிர் சீட்டில் அமர்ந்தான். அவன் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். எல்லாவற்றையும் கேட்டு குறித்துக் கொண்டான்.

    ஓகே. கரண். உங்க செக்ஷனுக்கு சேலத்திலிருந்து ஒரு லேடி வந்திருக்காங்க.

    வாணிதானே சார்!

    நீங்களே இப்பத்தான் லீவிலயிருந்து வந்திருக்கீங்க. அதுக்குள்ளாற அறிமுகம் செய்துட்டீங்களா?

    இல்லே சார்! புவனா சொன்னாங்க

    ஓகே! கூப்பிடுறேன்

    அழைப்பு மணி.

    எம்.டி. முன்னால் வாணி.

    வாணி! இவர் மிஸ்டர் கரண். லீவில் இருந்தார். இங்கே செக்ஷனிலே நல்ல அனுபவம் வாய்ந்தவர். இவர் கூடத்தான் நீங்க வேலை பார்க்கணும்.

    சரி சார்!

    வணக்கம் சார்! கரணை பார்த்து கை கூப்பினாள்.

    கரண் அவளைப் பார்த்தான். சாந்தமான முகம், கறுப்பு என்று சொல்ல முடியாத மாநிறம்! ஒல்லியான தேகம். காட்டன் சேலையிலே அவளின் மெலிந்த தேகம் எடுப்பான தோற்றத்தை அளித்தது. மிக சின்ன புன்னகை மட்டும் அவள் இதழ்களில் உதிர்ந்தது. மற்றப்படி குறையின்றி நிறைவாகவேயிருந்தாள்.

    மவுனம்? அது ரொம்ப நேரம் நீடிக்க கூடாது! அது பேச்சின் சுவாரஸ்யத்தையே கலைத்து விடும்.

    நீங்க சேலத்திலே எந்த இடம்?

    மவுனத்தை கலைத்தான் கரண்.

    அம்மாப்பேட்டை

    என்ன கரண்! சேலம் உங்களுக்கு பரிச்சயமா? எம்.டி. கேட்டார்.

    அங்கே என் பிரண்ட்ஸ் இருக்காங்க சார்

    வாணி! நீங்க ஏன் அங்கேயிருந்து இங்கே வந்தீங்க. இங்கே யாராவது உறவுகள் இருக்காங்களா?

    எனக்கு அங்கு இருக்க பிடிக்கலை. மாறுதல் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இங்கே என் மனசுக்கு அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையிலே இங்கே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேன்

    சாரி! நான் உங்கக்கிட்டே இந்த கேள்வியை கேட்டிருக்கக் கூடாது

    பரவாயில்லை!

    வாணி! இங்கே வீடு பார்த்திட்டியா?

    இல்லே சார்! சொல்லி வைச்சிருக்கேன். இப்போதைக்கு லேடிஸ் ஹாஸ்டல் வாசம். வீடு கிடைச்சதும், அம்மாவையும், என் குழந்தையையும் அழைச்சிட்டு வந்துடுவேன்.

    வாணி! அப்போ நீங்க...?

    எஸ்! எனக்கு மேரேஜ் ஆயிடுச்சு. ஆனா அவரு இப்போ இல்லை

    அவள் அப்படி சொன்னதற்கு உடனடியாக அடுத்த கேள்வி கேட்க முடியவில்லை.

    கரண் குழம்பிப் போனான். நம்ம கதை மாதிரியே இருக்கே! ஆனால் அவள் கதை வேறு, இவன் கதை வேறாகத்தான் இருக்கும்"

    2

    காலையில் மீனாவை எழுப்புவதற்குள் பாடாய்ப்பட்டு விட்டாள் காமாட்சி.

    எட்டு நாற்பந்தைந்துக்கு பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டியவள். ஏழு பதினைந்து ஆகியும் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. அவளை எழுப்பி குளிப்பாட்டி டிரஸ் பண்ணி பள்ளிக்கு அனுப்புவதற்குள் ஒரு யுகமே காமாட்சிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1