Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Mattum Kadanthu Pogathu!
Ithu Mattum Kadanthu Pogathu!
Ithu Mattum Kadanthu Pogathu!
Ebook128 pages49 minutes

Ithu Mattum Kadanthu Pogathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல எழுத்தாளர் கயிலைநாதன் இறந்த பிறகு, ஆறு மாதமாய் பூட்டியே கிடந்த அவரது அறையைச் சுத்தம் செய்ய செல்கிறாள் அவரது மனைவி சிவபாக்கியம்.
அவர் கைப்பட எழுதிய ஒரு நாவல் பேப்பர் கற்றையாய் இருக்க, எடுத்துப் பார்க்கிறாள். அது முடிக்கப்படாமல் இருக்க அதை குப்பைகளோடு குப்பையாய் போட்டு விடுகிறாள். இரவு முழுவதும் அந்தப் பேப்பர்க் கற்றையிலிருந்து ஏதோ சத்தம் வந்து கொண்டேயிருக்க அதை பழைய பேப்பர்க்காரனுக்குப் போட்டு விடுகிறாள். அதை எப்படியாவது அச்சில் ஏற்றி விடுவது என்கிர குறிக்கோளோடு அதனுள் கயிலை நாதனின் ஆவி உட்கார்ந்திருப்பதை அவள் அறியாள்.
அவன் அதை ஒரு பலகார வண்டிக்காரனுக்குத் தந்துவிட, பலகார வண்டிக்காரன் அதிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழிக்கப் போக, பெரிதாய் ஒரு காற்றும், வானத்திலிருந்து ஒரு பேரிடியும் வந்திறங்க, அந்தப் பேப்பர்க் கற்றை கயிலைநாதனின் பரம ரசிகன் ஒருவனின் கைக்குச் செல்கிறது. அவன் தன்னையேயறியாமல் அந்தக் கதையின் மீதியை எழுதி முடிக்கிறான்.
பணத்தாசையால் அதை தான் எழுதியதாகச் சொல்லி பரிசையும் பெறுகிறான் அந்த ரசிகன்.
அதன் காரணமாய் அவன் சந்திக்கும் விளைவுகளை திகிலோடு எழுதியுள்ளார் ஆசிரியர்.
வாசித்து ரசியுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005110
Ithu Mattum Kadanthu Pogathu!

Read more from Mukil Dinakaran

Related to Ithu Mattum Kadanthu Pogathu!

Related ebooks

Related categories

Reviews for Ithu Mattum Kadanthu Pogathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Mattum Kadanthu Pogathu! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    இது மட்டும் கடந்து போகாது!

    Ithu Mattum Kadanthu Pogathu!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நேற்றிரவு தீர்மானித்ததைப் போலவே, இறந்து போன தன் கணவரின் அறையைச் சுத்தம் செய்யும் பொருட்டு அதிகாலையிலேயே எழுந்து, கடந்த எட்டு மாதங்களாக பூட்டியே கிடந்த கணவரின் அறையைத் திறந்தாள் சிவபாக்கியம். திறக்கும் முன் பூஜையறைக்குச் சென்று கடவுளை வணங்கி விட்டுத்தான் ஆரம்பித்தாள்.

    சிவபாக்கியம், தமிழகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் கயிலை நாதனின் மனைவி. எட்டு மாதங்களுக்கு முன் கணவனை இழந்து விதவைக் கோலம் பூண்டிருக்கும் சராசரி குடும்பத் தலைவி. ஒரே மகன் அஷ்வின் படித்து முடித்து விட்டு பணி புரிந்தால் வெளிநாட்டில் மட்டும்தான் பணி புரிவேன் என்கிற உறுதியோடு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். அவன் வயது பையன்களெல்லாம் பைக்கையும், காரையும் விழுந்து விழுந்து பார்ப்பது போல் அவன் அவ்வப்போது மேலே பறந்து செல்லும் விமானங்களைப் பார்த்து ரசிப்பான்.

    முகத்திலடித்த ஒட்டடைகளை துடைப்பத்தால் ஒதுக்கி விட்டு, மூக்கை அடைத்த தூசிக்காய் முகத்தில் கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டு, தாறுமாறாய்க் கிடந்த பொருட்களை ஒன்றொன்றாய் எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்தாள்.

    ஹும்... அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த ரூமுக்குள் நான் வந்திருக்கவே முடியாது... நூறு தடவைக்கும் மேல் கேட்டுப் பார்த்திட்டேன், ஒரு பத்து நிமிஷம் உள்ளார விடுங்க... மேலோட்டமாக வேணும் சுத்தம் பண்ணி விடறேன்!ன்னு... மனுஷன் விட்டாரா? ரொம்பக் கேட்டா மூஞ்சில ஒரு அறை வேணா விடுவார்! தாலி கட்டிக்கிட்ட நாளிலிருந்து பார்த்த கோபம்தானே? சத்தமின்றிப் புலம்பினாள்.

    திருமணத்தின் போது தன் தோழிகளிடமும் மற்றவர்களிடமும் பெருமையாய்ச் சொல்லிக் கொள்வாள் சிவபாக்கியம், எனக்கு வரப் போகிறவர் பெரிய எழுத்தாளராக்கும்! தமிழ்ல வர்ற எல்லா மேகஸைன்களிலும் கதைகள் எழுதிக்கிட்டிருக்கார்! ஒண்ணு ரெண்டு நாவலும் எழுதியிருக்காராம்! நெம்பர் ஒன் ஜீனியஸ்! என்று.

    என்னது உனக்கு வரப் போகிறவர் எழுத்தாளரா? அடடே... பேங்க்ல ஆபீஸரா இருக்காருன்னுதானே சொன்னாங்க? யாரோ ஒருத்தர் விலாவாரியாய் விசாரிக்க,

    பேங்க் ஆபீஸர்தான்! அது மெயின் வேலை அதுதான்! இந்த எழுத்து வேலை சைடு வேலை!

    பரவாயில்லையே... நம்ம ஆளுங்களிலேயும் ஒரு எழுத்தாளரா? கேட்கவே சந்தோஷமாயிருக்கு! சரி... என்ன பேர்ல எழுதறார்? ஒரிஜினல் பேரிலேயா? இல்லை புனை பெயர் ஏதாச்சும் வெச்சிருக்காரா?

    சேச்சே... புனைபெயர்... பூனை பெயரெலாம் எதுவுமில்லை! கயிலை நாதன் என்கிற ஒரிஜினல் பேரிலேயே தான் எழுதறார்!

    அந்தக் காலகட்டத்தில் அந்த உரையாடல்களெல்லாம் மகிழ்ச்சியை அளித்ததென்னவோ உண்மைதான். ஆனால், கல்யாணத்திற்குப் பிறகு எழுத்தாளர் மனைவிகள் அனுபவிக்கும் சின்ன சின்ன அசௌகரியங்களை அவளும் அனுபவிக்க நேர்ந்த போதுதான் தெரிந்தது, ச்சே... ஏன்தான் ஒரு எழுத்தாளரைக் கட்டிக்கிட்டோமோ? என்று தினமும் மௌனமாய்ப் புலம்பும் நிலைக்கு ஆளானாள். எழுத்தாளனின் பார்வை சராசரியை விட சற்று மேலோங்கிய பார்வை என்றானதால், சராசரி வாழ்க்கையின் சராசரி இன்பங்கள் கூட கிடைக்காமல் போனது அவளுக்கு.

    கற்பனையில் வாழும் மனிதனுக்கு நிஜங்கள் எங்கே தெரியப் போகின்றது? புரியப் போகின்றது?

    அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாய்ந்து கிடந்த குப்பைக் கூடைகளை எடுத்து வந்து எல்லாக் குப்பைகளையும் ஒரே கூடையில் போட்டு மற்ற இரண்டையும் மேசைக்கு அடியில் வைத்த சிவபாக்கியம், ஒண்ணு பத்தாதுன்னு மூணு குப்பைக் கூடை வேற! தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    மேசைக்கு மேலே தாறுமாறாய்க் கிடந்த காகிதங்களையும், புத்தகங்களையும் ஒழுங்கு படுத்தும் போது, அதனுள்ளிருந்து கிடைத்த அந்தப் போட்டோவை கூர்ந்து பார்த்தாள்.

    மாமதுரைத் தமிழர் பேரவை விழாவில் யாரோ ஒரு பெரிய மனிதரிடம் கேடயம் வாங்கிக் கொண்டிருந்தார் கயிலை நாதன். இந்த விழாவிற்கு என்னையும்தானே அழைச்சிட்டுப் போயிருந்தார்! அவர்கிட்ட பேட்டி எடுத்த பத்திரிக்கைகாரங்க... என்கிட்டேயும் ஒண்ணு ரெண்டு கேள்விகள் கேட்டு... நான் சொன்ன பதிலை அவங்க பத்திரிக்கையிலும் போட்டிருந்தாங்களே!

    மலர்ந்த நினைவுகளால் விரிந்த மகிழ்ச்சியில் எட்டு மாத சோகத்தை கொஞ்சமாய் மறந்து, தற்காலிக உற்சாகத்தை கொஞ்சமாய் அனுபவித்தாள்.

    ஒரு கட்டத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வங்கிப் பணியை உதறித் தள்ளி விட்டு, முழு நேர எழுத்தாளராக கயிலைநாதன் மாறிய போது அதைக் கடுமையாய் எதிர்த்தாள். எழுத்து சோறு போடாது... அப்படியே போட்டாலும் அரை வயிறுதான் போடும் என்று இருபத்தி நாலு மணிநேரமும் கோஷம் எழுப்பினாள். ஆனாலும், அவள் கணவர் தான் நினைத்தைத்தான் சாதித்தார். முழு நேர எழுத்தாளர் ஆன பின் அவர் வாழ்க்கையின் கிரக நிலை கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்கியது. உச்சங்கள் எளிதாய் வசப்பட்டன.

    சிறுகதைப் படைப்பில் சிகரத்தைத் தொட்டார். எண்ணிக்கையில் ஆயிரத்தைக் கடந்தவர், அடுத்து நாவல் படைப்பிலும் நங்கூரம் பாய்ச்சினார். பத்து... இருபது... முப்பது... நாற்பது... என்று வளர்ந்து கொண்டே போன எண்ணிக்கை மூன்றே வருடத்தில் ஆயிரத்தை நெருங்கி விட,

    பத்திரிக்கை உலகம்... வெள்ளித் திரை உலகம்... சின்னத் திரை உலகம்... என்று எல்லோர் பார்வையும் இவர் மீது விழுந்து இவரை மாபெரும் இலக்கியவாதியாய் மாற்றின. ராயல்டி குவியத் துவங்கியது.

    சிவபாக்கியமே ஆரம்பத்தில் தான் அவருக்கு எதிராக கொடி பிடித்தது கூட முட்டாள்தனமோ என்று உள்ளுக்குள் எண்ணினாள்.

    அவருடைய படைப்புக்களுக்காய் பப்ளிகேஷன்ஸ்காரர்கள் தவமிருந்தனர். மாநில அளவிலான விருதுகள் அவரது மகுடத்தில் ஏறிக் கொண்டே போக, தேசிய அளவிலான விருதுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏறின.

    கணவர் குறித்த மலரும் நினைவுகள் சிவபாக்கியத்தின் மனதில் மகிழ்ச்சித் தந்தாலும், தொடர்ந்து வந்த அவரது மரணம் பற்றிய நினைவு அவளைச் சோகப் படுத்தி விட, விழியோரம் ஈரம் வாங்கினாள்.

    எழுத்து... எழுத்து... எழுத்து... என்று வெறி பிடித்து, உண் உறக்கம் மறந்து... உற்றார் உறவினரை மறந்து, தவம் செய்வது போல் எழுத்தில் மூழ்கி... என்னத்தைச் சாதித்தார் மனுஷன்! பணம்... புகழ் மட்டும் வாழ்க்கை ஆகி விடுமா? அதையும் தாண்டி எத்தனை சந்தோஷங்கள் இருக்கு? அதெல்லாம் ஏன் புகழ் பெற்ற எழுத்தாளருக்குப் புரியவில்லை!"

    யோசனையில் ஆழ்ந்தபடியே மேஜைக்குக் கீழே குனிந்து சுத்தம் செய்து கொண்டிருந்த சிவபாக்கியத்தின் கண்களில் அப்போதுதான் அது பட்டது. மேஜைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1