Bothai Rajyam
()
About this ebook
‘போதை ராஜ்யம்’ கொலம்பியா நாட்டில் போதைப் பொருள் கடத்தும் மாஃபியா கும்பலின் ஆதிக்கத்தை, பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஒரு க்ரைம் நாவலுக்குரிய விறுவிறுப்போடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் எழுதி பிரமாதப்படுத்தியிருந்தார் ரா.கி.ர. இன்று வரை போதை மாஃபியாக்களின் பிடியில் தான் கொலம்பியா உள்ளது.
Read more from Ra. Ki. Rangarajan
Kudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/523 - m Padi Rating: 5 out of 5 stars5/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOre Vazhi Rating: 5 out of 5 stars5/5Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/5Thirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Viji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5Houseful Rating: 5 out of 5 stars5/5Jennifer Rating: 4 out of 5 stars4/5Mudhal Mottu Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Engirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Ungalukkaga! Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5
Related to Bothai Rajyam
Related ebooks
Lights On Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsAahayathil Aarambam Rating: 4 out of 5 stars4/5Ithu Thaanda Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Mazhai Naalil Rating: 5 out of 5 stars5/5Ennai Thavira Rating: 5 out of 5 stars5/5Thiyaga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsManasu Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Kutram Rating: 0 out of 5 stars0 ratingsYeri Kuthithida Oru Yezhadi Suvar Rating: 0 out of 5 stars0 ratingsArubathu Moovarul Aivar Rating: 0 out of 5 stars0 ratingsVeebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5Ithu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Amma Pillai Rating: 5 out of 5 stars5/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Iravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsMaya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsJaanu Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Sathamillamal Rathamillamal... Rating: 5 out of 5 stars5/5Oru abathu kan simittugirathu Rating: 4 out of 5 stars4/5Jhangiri Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholainthu Povai Rating: 5 out of 5 stars5/5Chinna Kamala Rating: 0 out of 5 stars0 ratingsThiruppumunai Nayagan M.G.R Rating: 0 out of 5 stars0 ratingsAthe Athe... Saba Pathe... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Deepam Ondru... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Bothai Rajyam
0 ratings0 reviews
Book preview
Bothai Rajyam - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
போதை ராஜ்யம்
Bothai Rajyam
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
ரா.கி.ரங்கராஜன். தமிழ் படைப்புலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. தமிழ்ப் பத்திரிகை உலகினர்
அனைவரும் அறிந்த புகழ் பெற்ற பெயர். 1927-ல் கும்பகோணத்தில் பிறந்து, தனது 16-ஆவது வயதில் சக்தி இலக்கிய இதழில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த அய்யா ரா.கி.ரங்கராஜன், 2012 ஆகஸ்ட் 18 அன்று தனது 85-ஆவது வயதில் இயற்கை எய்தினார். மரணிக்கும் சில நாட்களுக்கு முன்பு கூட இடைவிடாது எழுதிக் கொண்டே இருந்த ஆற்றலாளர். மொழி பெயர்ப்புக் கலையில் வல்லவரான அய்யா ரா.கிர., மூலக்கதையின் சாரம் குறையாமல், அவற்றை அதே விறுவிறுப்புடன் தமிழுக்குத் தருவதில் கை தேர்ந்தவர்.
- நக்கீரன் கோபால்
எழுத்தாளர்களின் பீஷ்மர்
ரா.கி.ரங்கராஜன். தமிழ் படைப்புலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. தமிழ்ப் பத்திரிகை உலகினர் அனைவரும் அறிந்த புகழ் பெற்ற பெயர். 1927-ல் கும்பகோணத்தில் பிறந்து, தனது 16-ஆவது வயதில் சக்தி இலக்கிய இதழில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த அய்யா ரா.கி.ரங்கராஜன், 2012 ஆகஸ்ட் 18 அன்று தனது 85-ஆவது வயதில் இயற்கை எய்தினார். மரணிக்கும் சில நாட்களுக்கு முன்பு கூட இடைவிடாது எழுதிக் கொண்டே இருந்த ஆற்றலாளர். மொழி பெயர்ப்புக் கலையில் வல்லவரான அய்யா ரா.கி.ர., மூலக்கதையின் சாரம் குறையாமல், அவற்றை அதே விறுவிறுப்புடன் தமிழுக்குத் தருவதில் கை தேர்ந்தவர். இதற்கு அவரின் பட்டாம்பூச்சியே சிறந்த சாட்சி.
மோகினி, துரைசாமி, சூர்யா, கிருஷ்ணகுமார், கே.மாலதி, வினோத், ஹம்ஸா போன்ற புனைப்பெயர்களில் 1500- க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி, சாதனை படைத்தவர். அதில் இன்றளவும் மங்காத புகழடைந்துள்ள ‘நான் கிருஷ்ண தேவராயன்’ வரலாற்று நாவல், அவருடைய எழுத்து வீதியில் தனித்துத் தெரியும் அற்புதச் சுடர்.
எப்படிக் கதை எழுதுவது? என்ற இவரது புத்தகம் அறிமுக எழுத்தாளர்களுக்கு, வளர்ந்து வரும் படைப்பாளிக்கு மிகச் சிறந்த வழிகாட்டி.
பாரம்பரியமிக்க பத்திரிகைகளின் ஆசிரியராக பணிபுரிந்து தானும் புகழ் பெற்று, அந்தப் பத்திரிகைகளுக்கும் புகழ் கிடைக்கச் செய்த அய்யா ரா.கி.ர.புலனாய்வு இதழியலில் தொடர் சாதனை புரிந்து வரும் நக்கீரனில் முதன் முதலாக ‘நீங்களும் முதல்வராகலாம்’ தொடரை எழுத வைத்து, நக்கீரன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர் தம்பி இணையாசிரியர் காமராஜ். நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை தனக்கேயுரிய எழுத்து நடையில் படைத்து, நக்கீரன் வாசகர்களை வசப்படுத்தியிருந்தார். அத்தொடர் தனிப் புத்தகமாகவும் வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு ‘நான் ஏன்?’ என்றதொடர்எழுதினார். அதுவும் தனிப் புத்தகமாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது.
இப்போது ‘போதை ராஜ்யம்’ என்கிற இந்த நூலும் 2001-ல் நக்கீரனில் தொடராக வெளிவந்தது. கொலம்பியா நாட்டில் போதைப் பொருள் கடத்தும் மாஃபியா கும்பலின் ஆதிக்கத்தை, பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஒரு க்ரைம் நாவலுக்குரிய விறுவிறுப்போடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் எழுதி பிரமாதப்படுத்தியிருந்தார் ரா.கி.ர. இன்று வரை போதை மாஃபியாக்களின் பிடியில் தான் கொலம்பியா உள்ளது.
எங்கள் மீதும் நக்கீரன் மீதும் பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட, தனது கடின உழைப்பால் எழுத்துத்துறையில் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பீஷ்மர் அய்யா ரா.கி.ரங்கராஜன் நினைவாக இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறோம். வழக்கம் போல் வாசகப்பெருமக்களின் பேராதரவை வேண்டுகிறோம்.
- என்றென்றும் உங்கள்
நக்கீரன் கோபால்
முன்னுரை!
தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நாடு, சர்வதேச போதைக் கடத்தல்காரர்களின் தலைநகரமாக, சொர்க்க பூமியாக விளங்கி வருகிறது.
இந்தக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்பவன் எஸ்கொபார். கொலம்பியாவின் தலைநகரமான பொகாட்டோவில் கொடிகட்டிப் பறந்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் இவன். பயங்கர போதைக் குற்றங்களுக்காக இவனைத் தங்களிடம் அனுப்பும்படி அமெரிக்கா கேட்க, கொலம்பியா அரசாங்கமும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
எஸ்கொபாரும் அவனுடைய போதைக் கும்பலும் கொலம்பியாவில் இருக்கும்வரை அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சட்டம் எஸ்கொபாரை ஒன்றும் செய்யாது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் சாகும்வரை சிறைவாசம் தான். ஆகவே, அமெரிக்காவுக்குத் தன்னை நாடு கடத்தாதிருக்கும்படி கொலம்பியா அரசாங்கத்தைப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் எஸ்கொபார். கூடவே ஒரு பயங்கர நடவடிக்கையும் மேற்கொள்கிறான். அது…
எஸ்கொபாரையும் அவன் கும்பலையும் நாடு கடத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்வது.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் ஆரம்பமாகிறது நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் மார்க்கிஸ் எழுதிய NEWS OF A KIDNAPPING-ஐ தழுவிய உண்மைத் தொடர்.
- அன்புடன்
ரா.கி.ரங்கராஜன்
(மே 2001)
போதை ராஜ்யம்!
1
காரில் ஏறுவதற்கு முன்னால் எச்சரிக்கையுடன் ஒருமுறை பின்புறம் பார்த்துக் கொண்டாள் மருஜா. யாரும் பின்தொடர்ந்து வருவதாகத் தெரியவில்லை.
மாலை ஏழு அடித்து ஐந்து நிமிடமாகியிருந்தது. ஒரு மணிநேரம் முன்பே இருட்டிவிட்டது. நேஷனல் பூங்கா பகுதியில் ஏற்கனவே விளக்குகள் போதாது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மரங்கள் செதுக்கிய சிலைகள் போல் காட்சி தந்தன. இலைகளில் அசைவு இல்லை.
பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று மருஜாவுக்குத் தோன்றியது. முன் ஸீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய பதவிக்கும் அந்தஸ்துக்கும் பின் ஸீட்டில் தான் உட்கார வேண்டும். ஆனால் இந்த ஸீட்தான் எப்போதும் அவளுக்குச் சௌகரியமாக இருந்தது.
அவளுடைய நாத்தியும், உதவியாளருமான பீட்ரிஸ் மறுபக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு காரில் ஏறிக் கொண்டாள்.