Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Priyangaludan Naane
Priyangaludan Naane
Priyangaludan Naane
Ebook202 pages1 hour

Priyangaludan Naane

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு,

காரைக்குடி ஜேசீஸ் நண்பர்கள் அமைத்திருந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒரு அன்பர் 'நீங்கள் காதல் அனுபவத்தை நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் பிரியங்களுடன், நானே நாவலை எழுதியிருக்க முடியாது' தாங்கள் மறுத்தால் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம் என்று முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டுக் கொண்டு மேஜையைக் குத்தி வாதிட்டார்.

அவருக்கு பதில் சொல்ல சிரமமாயிருந்தது. ஏனென்றால்... நான் உண்மையைச் சொன்னாலும் - அவர் அதை பொய் சொல்கிறேன் என்பார். அவர் பொய் என்று சொல்வாரே என்பதற்காக நான் உண்மையைச் சொல்லாமல் பொய்யைச் சொன்னால் அவர் அதைத்தான் உண்மை என்று எடுத்துக் கொள்ளப் போய்... பொய்யை ஏற்றுக் கொண்டு உண்மையான உண்மையை அறிந்து கொள்ள மாட்டாரே... (டைரக்டர் விசு தன் பாணியை விரைவில் ரெஜிஸ்ட்டர் செய்து கொள்ள வேண்டும்).

எனக்கு-காதல் அனுபவம் உண்டு, உண்டு, உண்டு

ஆனால்... அன்று இல்லை; இன்று

ஆக... பிரியங்களுடன் நானே, ஒரு காதல் கதை என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டது தப்பு… காதலும் உண்டு, கதை - ஒரு இளைஞனின் பாதிக்கப்பட்ட மன நிலையைப் பற்றியும் - அதன் விளைவாக அவனே அறியாமல் அவன் செய்த ஒரு... மிச்சக் கதையை வருகிற பக்கங்களில் காண்க.

- பட்டுக்கோட்டை பிரபாகர்

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100905547
Priyangaludan Naane

Read more from Pattukottai Prabakar

Related to Priyangaludan Naane

Related ebooks

Related categories

Reviews for Priyangaludan Naane

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Priyangaludan Naane - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    பிரியங்களுடன் நானே...

    Priyangaludan Naane…

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    என்னுரை

    அன்புள்ள உங்களுக்கு,

    காரைக்குடி ஜேசீஸ் நண்பர்கள் அமைத்திருந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒரு அன்பர் 'நீங்கள் காதல் அனுபவத்தை நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் பிரியங்களுடன், நானே நாவலை எழுதியிருக்க முடியாது' தாங்கள் மறுத்தால் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம் என்று முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டுக் கொண்டு மேஜையைக் குத்தி வாதிட்டார்.

    அவருக்கு பதில் சொல்ல சிரமமாயிருந்தது. ஏனென்றால்... நான் உண்மையைச் சொன்னாலும் - அவர் அதை பொய் சொல்கிறேன் என்பார். அவர் பொய் என்று சொல்வாரே என்பதற்காக நான் உண்மையைச் சொல்லாமல் பொய்யைச் சொன்னால் அவர் அதைத்தான் உண்மை என்று எடுத்துக் கொள்ளப் போய்... பொய்யை ஏற்றுக் கொண்டு உண்மையான உண்மையை அறிந்து கொள்ள மாட்டாரே... (டைரக்டர் விசு தன் பாணியை விரைவில் ரெஜிஸ்ட்டர் செய்து கொள்ள வேண்டும்).

    எனக்கு-காதல் அனுபவம் உண்டு, உண்டு, உண்டு

    ஆனால்... அன்று இல்லை; இன்று

    ஆக... பிரியங்களுடன் நானே, ஒரு காதல் கதை என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டது தப்பு… காதலும் உண்டு, கதை - ஒரு இளைஞனின் பாதிக்கப்பட்ட மன நிலையைப் பற்றியும் - அதன் விளைவாக அவனே அறியாமல் அவன் செய்த ஒரு... மிச்சக் கதையை வருகிற பக்கங்களில் காண்க.

    இந்த நாவலுக்கு அழகான தலைப்பைத் தந்தவர் என் தோழி திருமதி விமலா. தஞ்சையில் பணிபுரியும் மன நோய் மருத்துவர் திரு கோவர்த்தனம் அவர்கள் இந்த நாவல் தொடர்பாக நிறைய தகவல்கள் தந்து... படிப்பதற்கு புத்தகங்களையும் சிபாரிசு செய்து பெரிதும் உதவினார்.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    *****

    1

    பிரியமான நீயே, இன்று நிச்சயம் நான் இருப்பேன் உன் அருகினிலே உன் மூச்சுக் காற்று என் இதழ்களில் இடறும் அருகினிலே. உன் செவியணிகள் என் மார்போடு சேதி பேசும் அருகினிலே தவறாமல் நீ கனவுக்கு வந்து விடு.

    பிரியங்களுடன்,

    நானே.

    விடிந்து கொண்டிருந்தது.

    இன்னும் நிலா இருந்தது ஊர் திரும்பிப் போய்விட்ட நட்சத்திரக் கூட்டங்களில் வழி தவறியவை மட்டும் விழித்துக் கொண்டிருந்தன. கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது சூரியக் குழந்தை நீர் நிலைகள் தத்தளித்து தகதகத்தன. சேவல்கள் கொண்டை சிலிர்த்தன. தென்னை ஓலைகள் பச்சை நிறத்துக்கு வராமல் கறுப்பாய் பிசிறடித்தன. ப்ளூ பிரிண்ட் போடாமல் தாங்கள் கட்டும் வீடுகளுக்கு சுள்ளி சுமக்கப் பயணப்பட்டுக் கொண்டிருந்தன பறவைகள்.

    தடக்... தடக்... தடக்... தடக்...

    விழிப்பு ஏற்பட்ட உடனேயே சுப்புவிற்கு ராத்திரி தோன்றிய சந்தேகம் மறுபடியும் தோன்றியது

    பஸ்சில் செய்வது மாதிரி இதிலேயும் டிரைவர் ஸ்டியரிங்கைப் பிடித்து தண்டவாளத்தின் வளைவுக்குத் தக்க படி திருப்ப வேண்டுமா, இல்லை தானாகவே ரயில் வளைந்து கொள்ளுமா?

    எழுந்து உட்கார்ந்து, அம்மா என்றான்.

    அம்மா ஏர்-பில்லோவை முழங்கைகளால் அமுக்கி காற்று நீக்கிக் கொண்டிருந்தாள். தலை கலைந்திருந்தாள். முகத்தில் எண்ணெய். புடவை கசங்கியிருந்தது மடியில் அசௌகரியமாக பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.

    என்ன சுப்பு எழுந்திரிச்சிட்டியா? என்றாள்.

    அதற்குள் புவனா அசையவே...

    புவனா, முழிச்சுட்டியா? ஹைய்!

    சுப்பு, அவளை எழுப்பாதே தூங்கட்டும்.

    அப்பா எங்கேம்மா?

    இதோ வந்துட்டாரே

    அப்பா தோளில் துண்டோடு வந்து உட்கார்ந்தார். முகம் ஈரமாயிருந்தது. நெற்றியில் ஆரம்பித்துத் துடைத்துக் கொண்டார்.

    கூட்டமில்லை சரோஜா இப்ப பாத்ரூம் காலியா இருக்கு நீ போய்ட்டு வந்துடு

    அம்மா எழுந்து குழந்தையின் தலையை ஜாக்கிரதையாக அப்பாவின் தொடை மேல் வைத்து விட்டு, சோப்புப் பெட்டி எடுத்துக் கொண்டு சென்றாள்.

    சுப்பு, டவுசர் பட்டனை ஒழுங்கா போட்டுக்கோ. பார், அவுந்திருக்கு என்றார் அப்பா.

    போட்டுக் கொண்டான் சுப்பு, மறுபடி தன் சந்தேகம் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்பாவிடம் கேட்க இஷ்டமில்லை. சிடுசிடுப்பார். பொறுமையாய்ச் சொல்ல மாட்டார். அம்மாவிடம் அப்புறம் கேட்டுக்கலாம் என்று ஜன்னல் வழியாகப் பார்க்கத் தொடங்கினான்.

    நிலங்களில் வெளிச்சம் சற்று அதிகரித்திருந்தது. மரங்கள் தூரத்தில் மௌனமாய் ஜன்னலை விட்டு வெளியேறின. இந்தப் பக்கம் புது மரங்கள் நுழைந்தன கிணறுகளில் ஏற்றம் வேலை-செய் காட்சி தப்பிவிட்டது. இரண்டு ஆட்டுக் குட்டிகள் தாவி மேட்டில் ஏறின. சுப்பு தலையை நீட்டிப் பார்த்தபோது புள்ளி, புள்ளி ஆகின.

    தலையை வெளியே நீட்டாதே சுப்பு.

    சரி. திருச்சி வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்ப்பா?

    அப்பாவுக்குத் தெரியவில்லை.

    இப்ப வந்திடும். போய் அம்மாகிட்டே பல்பொடி வாங்கி பல் தேய்ச்சுக்கிட்டு வா. தலை சீவி விடறேன்.

    என் இடத்திலே யாரும் உட்காரக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டு சுப்பு எழுந்து கம்பார்ட்மெண்ட் கடைசிக்கு நடந்தான்.

    பாத்ரூம் கதவில் தட்டி அம்மா என்றான். உள்ளே தாழிடப்பட்டிருந்தது ரயிலின் சத்தத்தில் அவனுக்கே கேட்கவில்லை. காத்திருந்தான். காலுக்குக்கீழே நெருப்புக் குச்சி நெருடியது.

    உன் பேரென்ன? என்றார் அருகாமை பெஞ்ச் தாத்தா.

    சுப்பிரமணியன்.

    கதவுப் பக்கம் நிக்காதே. இப்படி வந்து உக்காரு. அம்மா வரட்டும்.

    வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டான். தாத்தாவுக்குப் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது தம்பதிகள். எதிரே ஒருவர் புதுப் பேப்பரை விரித்திருக்க... பக்கத்திலிருந்தவர் கண்ணுக்குத் தெரிந்தவரை படித்துக் கொண்டிருந்தார்.

    எதிர் வரிசையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவன் ஒரு இளைஞன். உறங்கிக் கொண்டிருந்தான். தலையில் கைக்குட்டையை முடிச்சுப் போட்டு முடி பறக்காமல் கட்டியிருந்தான். மூன்று சட்டை பட்டன்கள் கழன்றிருந்தன.

    சுப்புவிற்கு தானும் ஒரு கர்ச்சீப் எடுத்து அது மாதிரி கட்டிக்கொள்ள வேண்டும் போல ஆசையாய் இருந்தது.

    எந்த ஊரு? என்றார் தாத்தா.

    திருச்சி. எப்போ வரும்?

    இப்போ போனது தொண்டமான் பட்டி அடுத்தது திருவெறும்பூர், எப்படியும் ஒரு மணி நேரத்திலே போய்டும் என்ன பண்றார் உங்கப்பா?

    சரியா சொல்ல வராது எனக்கு, உடம்பு சரியில்லாதவங்களுக்கு படம் எடுத்துக் கொடுப்பாரு கறுப்பா.

    எக்ஸ்ரே கிளினிக் வச்சிருக்காரா?

    தலையாட்டினான். இப்போது அந்த இளைஞன் விழித்துக் கொண்டான் கண்கள் சிவந்திருந்தன அவசரமாக இமைகளை உதறிக் கொண்டான் தலையிலிருந்து கர்ச்சீப்பை அவிழ்த்து அழுத்தமாய் முகத்தைத் துடைத்துக் கொண்டான். உடன் பாத்ரூம் நோக்கி நடந்தான்.

    எங்கம்மா இருக்காங்க சார் உள்ளே.

    சுப்புவின் கன்னத்தில் தட்டிவிட்டு நின்றான். ஒரு காலை மடக்கி ரயிலின் கதவில் உதைத்துக் கொண்டு நின்று சிகரெட் பெட்டி எடுத்து சிகரெட் எடுத்தான்.

    அவன் வீசின காலிப் பெட்டியைக் குனிந்து பொறுக்கிக் கொண்டு அதில் இருந்த பெயரை எழுத்துக் கூட்டினான் சுப்பு.

    டி...ஹெச்...யு...என்...

    இதற்குள் அம்மா வந்து விட்டாள் வெளியே-முகமெல்லாம் நனைந்து, பொட்டு இல்லாமல், காதோரத்தில் துளி சோப்பு நுரையோடு

    சுப்பு, என்ன இங்கே உக்காந்திருக்கே?

    அப்பா பல் விளக்கிட்டு வரச் சொன்னாரு. வந்தேன். நீதான் பூட்டிக்கிட்டியே...

    வேற ஆள் உள்ளே போய்ட்டாங்க வா, கொஞ்சம் கழிச்சு வரலாம் இதென்ன சிகரெட் பெட்டியெல்லாம் பொறுக்கிக்கிட்டு... கீழே போடு.

    அழகா தங்கம் மாதிரி இருக்கும்மா. குச்சி போட்டு வச்சிக்கிறேன்.

    தங்கள் பகுதிக்கு வந்ததும் அம்மா பவுடர் பூசி, பொட்டு வைத்துக் கொண்டாள். ராத்திரி எடுத்து வைத்த பூவை வைத்துக் கொண்டாள். வலைக்கூடையிலிருந்து அமுல் டின்னை எடுத்து புவனாவுக்கு பால் கரைக்க ஆரம்பித்தாள்.

    ஜன்னலுக்கு வெளியே... ஆஸ்பெட்டாஸ் டாப் போட்ட சின்ன, பெரிய இண்டஸ்ட்ரிகள் தெரிந்தன காக்கி, காக்கியாய் தொழிலாளர்கள் கடைசி ஷிப்ட்டில் பெல்ட் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

    யய்! யய்யய்யே. இங்கே பாரு இங்கே குழந்தையைப் பாரு. பிடி இவளை என்று புவனாவை மூக்கைச் சுளித்துக் கொண்டு தூக்கிப் பிடித்தார் அப்பா.

    சுப்புவுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புவனாவையும் பிடிக்காது. கை, கால்களில் அவள் அப்பிக் கொண்டதை அம்மா துடைப்பதைப் பார்க்கவும் பிடிக்காது.

    அம்மா குழந்தையை வாங்கிக் கொண்டதும், அப்பா பாதிப்புக்கு உட்பட்ட வேஷ்டியின் பகுதியைத் தூக்கிப் பிடித்தபடி பாத்ரூமுக்கு நடக்க...

    அப்பா கூடப் போய் பல்லு விளக்கிட்டு வந்துடறேன்ம்மா என்று பின்னால் ஓடினான்.

    அப்பா பாத்ரூமுக்குள் நுழைந்ததும், உள்ளே போய், அப்பா பல்லு என்றான்.

    இர்றா. வெளியிலே நில்டா நான் முதல்ல அலம்பிக்கிறேன்.

    வெளியே வந்து நின்றான் சுப்பு.

    அந்த இளைஞன் நின்று கொண்டு, லக்கேஜ் வைக்கும் பலகை மேலிருந்த அவன் சூட்கேஸை சாவி போட்டுத் திறந்து கொண்டிருந்தான்

    இப்போது திடீரென்று ரயில் வேகமாய்க் குலுங்கி கரகரவென்று வெட்டி படக் என்று நின்றுவிட... சுப்பு நிலை தடுமாறி சப்பென்று தரையில் உட்கார்ந்து விட்டான். அந்த இளைஞனின் சூட்கேஸ், தலைகுப்புறக் கவிழ்ந்து விழுந்தது.

    சட்டை, பேண்டுகளும் புஸ்தகங்களும் சிதறின. அவன் ஒவ்வொன்றாய் எடுத்து பழையபடி அடுக்கினான். பாண்ட்ஸ் பவுடர் டப்பா உருண்டு சுப்புவின் அருகில் வந்திருந்தது. எடுத்துச் சென்று அவனிடம் நீட்டினான்.

    தாங்க்ஸ் என்றான் தன் பழைய சட்டையைக் கழற்றி விட்டு, புதிய சட்டை ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டான். அதில் பாக்கெட் பகுதியில் 'Smart’ என்று இருந்தது.

    அதுதான் உங்க பேரா?

    இல்லை. என் பேரு விஜி

    அய்யய்யே, பொம்பளை பேரு

    சுப்பு... டேய் சுப்பு எங்கேடா போய்ட்டே? என்றார் அப்பா.

    சுப்பு பாத்ரூம் ஓடிப்போனான். பல் விளக்கி விட்டு வந்தபோது புவனா வேறு சட்டை ஜட்டி போட்டுக் கொண்டு, முகமெல்லாம் திப்பி திப்பியாய் பவுடருடன் பாட்டிலில் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து சுப்பு, திருச்சி வந்திடுச்சிடா என்று அப்பா சொன்ன போது, அவனுக்கு இன்னும் கொஞ்ச தூரம் ரயிலில் போய்க்கொண்டிருக்க வேண்டும் போல் போல் இருந்தது.

    ரயில் நின்றது.

    ரெண்டு சூட்கேஸ் ஒரு ஹாண்ட் பாக், ஒரு கூடை அவ்ளவுதானே? என்றார் அப்பா.

    அவ்வளவு தான் கொஞ்சம் இவளைப் பிடிங்க. செருப்பைத் தேடிப் போட்டுக்கறேன்

    அம்மாவுக்கு உடனடியாய் ஒரு செருப்பு தான் கிடைத்தது.

    இன்னொரு செருப்பு அந்தப் பக்கம் கிடக்குதா பாருங்க.

    கையிலே குழந்தையை வச்சிக்கிட்டு எப்படிக் குனியறது? சுப்பு கீழே குனிஞ்சு பாருடா. அடியிலே நகர்ந்து போயிருக்கும். எடுத்துக் கொடு

    சுப்பு குனிந்து பார்த்தான் கைக்கு எட்டாமல் சற்றுத் தொலைவில் கிடந்தது உள்ளே நாலு காலில் நுழைந்து செருப்பை எடுத்தான்.

    எடுத்த போது, இன்னும் சற்றுத் தள்ளி

    Enjoying the preview?
    Page 1 of 1