Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Raathiri Neram
Ithu Raathiri Neram
Ithu Raathiri Neram
Ebook106 pages57 minutes

Ithu Raathiri Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
தாய் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த நாவல் இது. முடிவுற்றதும் கீழ்கண்டபடி கருத்து (8-7-84 இதழில்) எழுதி இருந்தார்கள்.
1. ராத்திரி நேரம் போவதே தெரியாது. ‘இது ராத்திரி நேரம்’ கதையும் அப்படித்தான்.
- செ. குணசேகரன், விஜயபுரம்.
2. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் என்றாலே எனக்கு அல்வா சாப்பிடுவது போல! ‘இது ராத்திரி நேரம்’ அட்டகாசமான நாவல். - ஆர். அமுதா, வடுகவிருட்சியூர்.
3. ப. கோ. பிரபாகரின்,‘இது ராத்திரி நேரம்’தொடர்கதை அவருடைய மற்ற தொடர்கதைகளை விட சிறப்பாக இருந்தது. - மா. வடிவேல், சிதம்பரம்.
4. விறுவிறுப்பாகக் கதை எழுதி பன்னிரண்டு வாரங்கள் எங்களைப் பரபரப்பில் ஆழ்த்திவிட்டார் பட்டுக்கோட்டை பிரபாகர். - கோ. சு. சுரேஷ், கோயம்புத்தூர்.
5. பட்டுக்கோட்டை பிரபாகரின்‘இது ராத்திரி நேரம்’சஸ்பென்ஸ், கொலை, விறுவிறுப்பு அத்தனையையும் கலந்த ஒரு துப்பறியும் படத்தைப் பார்த்ததைப் போல இருந்தது. இத்தனை சீக்கிரம் கதை முடிந்துவிட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை. -கோ. பாபு, சின்னச்சேலம்.
6. பட்டுக்கோட்டை பிரபாகரின்‘இது ராத்திரி நேரம்’வழக்கமான கதைகளை விட சற்று வித்தியாசமான கதையாக இருந்தது. - துரை. முருகன் திருப்பாச்சேத்தி.
7.‘இது ராத்திரி நேரம்’- பன்னிரண்டு வாரங்கள் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருந்தது. - மு. மதிவாணன், அரூர்.
மேற்கண்ட வாசகர்களின் கருத்துக்களைப் படித்ததும் ஜில்லாகிப் போன பட்டுக்கோட்டை பிரபாகரை - வாசகன் பிரபாகர் மண்டையில் தட்டி... இரு, நான் படித்துவிட்டு சொல்கிறேன் என்றான்.
படித்து விட்டு கருத்தெழுதினான்.
‘இது ராத்திரி நேரம்’- பிரபாகரின் மற்றும் ஒரு துப்பறியும் நாவல். வழக்கத்திலிருந்து மாறுபட்ட கதை, அடடா... அதற்குள் முடித்துவிட்டாரே... பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார் - போன்ற வுடான்ஸ்களை எழுத நான் தயாராய் இல்லை.
ஆர். பிரபாகர், பட்டுக்கோட்டை.
பாவி! இனி அவன் கருத்து கேட்பதில்லை என்று தீர்மானம்.
நீங்கள் படிக்கலாம். நன்றி. ம்... இப்போது படிக்கலாம்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100905538
Ithu Raathiri Neram

Read more from Pattukottai Prabakar

Related to Ithu Raathiri Neram

Related ebooks

Related categories

Reviews for Ithu Raathiri Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Raathiri Neram - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இது ராத்திரி நேரம்

    Ithu Raathiri Neram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    என்னுரை

    அன்புள்ள உங்களுக்கு,

    வணக்கம்.

    தாய் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த நாவல் இது. முடிவுற்றதும் கீழ்கண்டபடி கருத்து (8-7-84 இதழில்) எழுதி இருந்தார்கள்.

    1. ராத்திரி நேரம் போவதே தெரியாது. ‘இது ராத்திரி நேரம்’ கதையும் அப்படித்தான்.

    - செ. குணசேகரன், விஜயபுரம்.

    2. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் என்றாலே எனக்கு அல்வா சாப்பிடுவது போல! ‘இது ராத்திரி நேரம்’ அட்டகாசமான நாவல். - ஆர். அமுதா, வடுகவிருட்சியூர்.

    3. ப. கோ. பிரபாகரின்,‘இது ராத்திரி நேரம்’தொடர்கதை அவருடைய மற்ற தொடர்கதைகளை விட சிறப்பாக இருந்தது. - மா. வடிவேல், சிதம்பரம்.

    4. விறுவிறுப்பாகக் கதை எழுதி பன்னிரண்டு வாரங்கள் எங்களைப் பரபரப்பில் ஆழ்த்திவிட்டார் பட்டுக்கோட்டை பிரபாகர். - கோ. சு. சுரேஷ், கோயம்புத்தூர்.

    5. பட்டுக்கோட்டை பிரபாகரின்‘இது ராத்திரி நேரம்’சஸ்பென்ஸ், கொலை, விறுவிறுப்பு அத்தனையையும் கலந்த ஒரு துப்பறியும் படத்தைப் பார்த்ததைப் போல இருந்தது. இத்தனை சீக்கிரம் கதை முடிந்துவிட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை. -கோ. பாபு, சின்னச்சேலம்.

    6. பட்டுக்கோட்டை பிரபாகரின்‘இது ராத்திரி நேரம்’வழக்கமான கதைகளை விட சற்று வித்தியாசமான கதையாக இருந்தது. - துரை. முருகன் திருப்பாச்சேத்தி.

    7.‘இது ராத்திரி நேரம்’- பன்னிரண்டு வாரங்கள் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருந்தது. - மு. மதிவாணன், அரூர்.

    மேற்கண்ட வாசகர்களின் கருத்துக்களைப் படித்ததும் ஜில்லாகிப் போன பட்டுக்கோட்டை பிரபாகரை - வாசகன் பிரபாகர் மண்டையில் தட்டி... இரு, நான் படித்துவிட்டு சொல்கிறேன் என்றான்.

    படித்து விட்டு கருத்தெழுதினான்.

    ‘இது ராத்திரி நேரம்’- பிரபாகரின் மற்றும் ஒரு துப்பறியும் நாவல். வழக்கத்திலிருந்து மாறுபட்ட கதை, அடடா... அதற்குள் முடித்துவிட்டாரே... பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார் - போன்ற வுடான்ஸ்களை எழுத நான் தயாராய் இல்லை.

    ஆர். பிரபாகர், பட்டுக்கோட்டை.

    பாவி! இனி அவன் கருத்து கேட்பதில்லை என்று தீர்மானம்.

    நீங்கள் படிக்கலாம். நன்றி. ம்... இப்போது படிக்கலாம்.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    ***

    1

    ஊட்டி தெரியும் உங்களுக்கு. பிரியமானவளோடு கைகோர்த்து நடந்திருக்கிறீர்கள். துடுப்பு தள்ளி வியர்த்திருக்கிறீர்கள். குழந்தைகளைக் குதிரையில் ஏற்றிவிட்டுப் பதறியிருக்கிறீர்கள். கைப் பிடித்து சரிவில் இறங்கியிருக்கிறீர்கள். திருட்டுத்தனமாய் பூ பறித்திருக்கிறீர்கள். புகைக்கிற டீ குடித்து உதடு சுட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

    அங்கே போகவில்லை நாம்.

    வழியில் கேத்தியிலேயே இறங்கிக் கொள்கிறோம். ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு பஸ்சிற்காகக் காத்திருக் கிறோம். அவரவருக்குப் பிடித்த நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கிறோம், சுமார் நூற்று நாற்பதே பக்கங்கள் படித்திருக்கும்போது பஸ் வந்து விடுகிறது. ஏறி ஜன்னலோரமாய் உட்கார்ந்து கொள்கிறோம்.

    முகத்தில் அடிக்கிற குளிர்ச்சியை ககமாக உள் வாங்கிக் கொள்கிறோம். கைகளைத் தேய்த்து சூடு பண்ணிக் கொள்கிறோம். மனைவியோடு வந்திருப்பவர்கள் வேறு விதத்தில் வெப்பம் பெற்றுக் கொள்கிறோம். மறக்காமல் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் தாள்களை நீட்டி கண்டக்டரை சில்லறைக்குத் தவிக்க விட்டு‘பாலாடா’வுக்கு டிக்கெட் வாங்கிக் கொள்கிறோம்.

    பாலாடா வந்ததும் இறங்கிக் கொள்கிறாம். கைகளை உதறிக்கொண்டு லக்கேஜ்களை எடுத்துக் கொள்கிறோம். சிலர் பாக்கி காசு வாங்க மறந்து போகிறோம். நடக்கிறோம். எட்டு திசையும் பச்சை படுத்திருப்பதைப் பார்க்கிறோம்.

    ஒரு ஏற்றமிகு கிளை மண்பாதை பிரிகிற இடத்தில் சைக்கிளுடன் எதிர்படுகிற தொப்பி வைத்தவனை மறியல் செய்து நிறுத்தி தீர விசாரிக்கிறோம்.

    இந்த நாவலுக்காக சிருஷ்டிக்கப் பெற்றுள்ள‘களவூர்’எங்கே இருக்கிறது தம்பி?

    தம்பி வழி சொல்கிறான்.இங்கிருந்து ஒன்றறை கிலோ மீட்டர் நடந்து போங்கள்.

    நடக்கத் தொடங்குகிறோம். நிற்கிறோம். நம்மோடு வந்தவர்கள் எல்லோரும் வந்தாச்சா; தலைகளை எண்ணுகிறோம். ஒருவனைக் காணோம். திரும்பிப் பார்க்கிறோம். மிக தூரத்தில் நிற்கிறான் அவன்.

    அவனை கவனிக்கிறோம்.

    அரக்கு நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருந்தான். ஒல்லியாக ஒரு சூட்கேஸ் வைத்திருந்தான். இடது தோளில் காமிரா தொங்கியது. நிதானமாக நடந்தான்.

    சாலையோரமாக நின்று அந்தப் பக்கம் உடனடியாக சரிந்திருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தான். அத்தனை மரத்தையும் அழித்தால் எத்தனை டன் விறகு சேறும்? கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனின் விரல்களை மிதித்து தள்ளிவிட்டு வானத்தைச் சுட்டுக்கொண்டு வருகிற போலீஸிடம் கைகளை நீட்டலாம். படுத்துக்கொண்டு, நின்றுகொண்டு, சாய்ந்துகொண்டு போட்டோ எடுத்து சிவகாசிக்காரர்களுக்கு விற்றுவிடலாம். கார்டின் மூலையில் கறுப்பு முக்கோணம் வைத்து வைகுண்ட பதவியடைந்தார் என்று அச்சடிக்கிற வேலையெல்லாம் இல்லாமல் சுத்தமாக தற்கொலை செய்து கொள்ளலாம். எலும்பு உடையும் போது சத்தத்தைக் கேட்கிற சான்ஸ்கூட இருக்காது.

    அவன் சிகரெட் ஒன்றை எடுத்துக் கொளுத்திக்கொண்டான்.

    சாலையோரமாய் ஒரு வட்டப் பாறையில் வெள்ளையடித்து‘கருடன் சோப் சலவைக்குச் சிறந்தது.’

    இவன் நெருங்கி சலவையை தைத்துக்கொண்டு நின்றான். அருகாக ஒரு தனிப்பறவை சடசட என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வட்டமிட்டுச் சென்றது.

    ஸ்வெட்டருக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1