Thooran Endra Kalanjiyam
()
About this ebook
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Read more from Ra. Ki. Rangarajan
Aangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsOre Vazhi Rating: 5 out of 5 stars5/523 - m Padi Rating: 5 out of 5 stars5/5Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi Rating: 0 out of 5 stars0 ratingsKudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Marubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5Raathiri Varum Rating: 5 out of 5 stars5/5Ennai Thavira Rating: 5 out of 5 stars5/5Houseful Rating: 5 out of 5 stars5/5Thirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPadagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Kai Illatha Bommai Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Jennifer Rating: 4 out of 5 stars4/5Mudhal Mottu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kathaigal Rating: 5 out of 5 stars5/5
Related to Thooran Endra Kalanjiyam
Related ebooks
Sakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsPanuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Sankara Rating: 5 out of 5 stars5/5C. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Mudhal Kural Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Saagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Ithu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Thiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsIshwara Allah Tere Naam Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsOh, America! Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Ival Oru Paapathi! Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsKaru Rating: 0 out of 5 stars0 ratingsAppuvukku Appa Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSuya Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsSri Paramacharya Swamigal Aruliya Arputha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nadikai Naadakam Parkiral Rating: 2 out of 5 stars2/5Pugai Naduvinile... Rating: 0 out of 5 stars0 ratingsVallalar Pillaithamizh Rating: 0 out of 5 stars0 ratingsPattinapaalai Rating: 0 out of 5 stars0 ratingsCinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsUthayam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thooran Endra Kalanjiyam
0 ratings0 reviews
Book preview
Thooran Endra Kalanjiyam - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
தூரன் என்ற களஞ்சியம்
Thooran Endra Kalanjiyam
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://www.pustaka.co.in/home/author//ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அறிமுகவுரை
மூவரில் ஒருவர்
தூரனின் தோழன்
வாழ்க்கைச் சிறப்பு
எழுத்துலக வாழ்க்கை
தந்தையைப் பற்றி மகன்
தமிழ் இசையும் தூரனும்
தூரனின் பாடல்களில் சில...
தூரனின் கவிதைகள்
நாட்டுப் பாடலில் நாட்டம்
சிறுகதையில் தூரன்
குழந்தைகளுக்காக
தூரனின் கட்டுரைகள்
தூரன் எழுதிய நாடகங்கள்
கலைக் களஞ்சியம் - தலைசிறந்த பணி
தூரனின் சீரிய வாழ்க்கை
அறிமுகவுரை
பள்ளி ஆசிரியர், கவிஞர், சிறுகதைகளின் ஆசிரியர், நாடகங்கள், இசைப்பாடல்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியப் பணி மற்றும் பாரதி தமிழ் - என்று பன்முகங்கள் அல்ல பத்து முகங்கள் கொண்ட ஒருவர், மானுடனாகவும் வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் பெயர் திரு. ம.ப. பெரியசாமித் தூரன்.
79 ஆண்டுகள் வாழ்ந்தவர். தமிழில் எந்தத் துறையையும் உன்னிப்பாகக் கவனிப்பவர். அவர் எதிலும் சிறப்பை மட்டுமே காண்பவர் போல் நமக்குத் தோன்றும். இந்தச் சிறப்பை மட்டுமே தெரிந்து கொள்ள, எடுத்துக் கொள்ள நினைக்கும் பண்பு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா
என்று - கூறிய மகாகவியின் சீடர் அவர் என அறிவுறுத்துகிறது.
இது ஆய்வு நூல் வரிசையில் 18ஆவது நூல். இந்தப் பணியைத் திரு. ரா.கி. ரங்கராஜன் செய்திருக்கிறார். அவர் பத்திரிகை ஆசிரியர், சிறுகதை, புதினம் என்று பல வகைகளில் இலக்கியம் படைத்தவர். 1995ஆம் ஆண்டு சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவர். சுமார் 70 நூல்களை (பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியவை) எழுதிய தூரன் அவர்கள் பற்றிய ஆய்வை ஆர்வத்துடன் செய்துள்ளார்.
வாசகர்கள் தரும் ஆதரவு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதுவே ஊக்கம் தருகிறது. அவர்களுக்கும் எங்கள் நன்றி.
அறங்காவலர்கள்
இலக்கியச் சிந்தனை
*****
மூவரில் ஒருவர்
இறைவன் கருணையால், மூன்று பெருந்தகையாளரின் கீழே பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் கிட்டியது.
முதன் முதலாக எனக்குப் பத்திரிகை உலகில் வேலை கொடுத்த சக்தி வை.கோவிந்தனை முதலில் குறிப்பிட வேண்டும். தற்சமயம் மியூசிக் அகாடமி விளங்கும் விஸ்தாரமான இடத்தில் 'சக்தி' என்ற மாதப்பத்திரிகையை நடத்தி வந்த அவரிடம் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் என்னை அழைத்துச் சென்று வேலை வாங்கித் தந்தார். அந்த 1946-48ஆம் வருடங்களில், புத்தகங்களை நேசிக்க வை.கோ.விடம் தான் கற்றுக் கொண்டேன். அந்த நாளில் பேரும் புகழுமாக விளங்கிய தமிழ் அறிஞர்களின் புத்தகங்களோடுகூட, பிற நாட்டு நல்லறிஞர்களின் சாத்திரங்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் அவர். அந்தத் துறையில் ஈடுபட்டதன் மூலம் இன்பங்களைத் துறந்து துன்பங்களை அனுபவித்தவர். தன்னலம் அறியாத தியாகி.
அடுத்த இரண்டாண்டுக் காலம் என்னை வளர்த்து ஆளாக்கியவர் ம.ப. பெரியசாமி தூரன். கோவையில் 'காலச் சக்கரம்' என்ற வார இதழை ஆரம்பிக்கப் போவதாக விளம்பரம் செய்து, என்னை வரவழைத்துப் பேட்டி கண்டு உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டவர். பெரியநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயத்தில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்து, கூடவே 'காலச் சக்கரம்' இதழையும் வெளிக்கொணர்ந்தவர். ஜனரஞ்சக பத்திரிகைகளுக்கு மட்டுமே மவுசு இருந்த அந்த நாளில், அமெரிக்க 'டைம்' இதழைப் போல உலக நடப்பையும் அறிவுத்துறை வளர்ச்சிகளையும் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே பத்திரிகையின் கடமை என்ற துணிச்சலான கொள்கையைக் கடைப்பிடித்தவர். அதற்கு உட்பட்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எனக்குப் பூரண சுதந்திரம் தந்திருந்தார்.
ம. ப. பெரியசாமி தூரனிடம் இரண்டு வருட காலம் பயிற்சி பெற்ற பின்னர், 1950 முதல் 1992 வரை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் கீழே பணியாற்றியது சமீபகால சரித்திரமாகையால் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
சக்தி வை. கோவிந்தன், பெரியசாமி தூரன், எஸ்.ஏ.பி. ஆகிய மூவருக்கும் பொதுவான நற்பண்புகள் ஏராளம். குறிப்பாக, மூன்று பேரும் தூய்மையான காந்தியவாதிகள். அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். கதரைத் தவிர வேறெந்தத் துணியையும் கண்ணெடுத்தும் பாராதவர்கள். ஒழுக்க சீலர்கள். விளம்பரம் விரும்பாதவர்கள். தங்கள் கீழே பணியாற்றுகிறவருக்குத் தனக்குத் தெரிந்ததையெல்லாம் வஞ்சனையில்லாமல் சொல்லித் தர வேண்டுமென்ற பெருந்தன்மை கொண்டவர்கள்.
மூவரில், வை. கோவிந்தனைப் பற்றி வெளியுலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. அவர் கீழே பணிபுரிந்த கண்ணதாசன், கு. அழகிரிசாமி, சிதம்பர ரகுநாதன், தமிழ்வாணன், வலம்புரி சோமனாதன், ம.ரா.போ. குருசாமி முதலியவர்களில் யாருக்குமே அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதத் தோன்றவில்லை. (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.)
எஸ்.ஏ.பி.யின் பெயர் சொல்ல அவர் ஆரம்பித்த பத்திரிகை இருக்கிறது. அவ்வப்போது அவரைக் குறித்த கட்டுரைகளும் வெளிவருகின்றன என்று நினைக்கிறேன். தவிர அவர் எழுதிய நாவல்களும் 'அரசு' என்ற பெயரில் எழுதிய கேள்வி-பதில் கட்டுரைகளும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
ம.ப. பெரியசாமி தூரனைப் பற்றித்தான் முழுமையாக, பெரிய அளவில் வாழ்க்கை வரலாறு வெளிவரவில்லை என்று நான் சொன்னால் அது தவறாக இருக்காது.
எண்ணற்ற கவிதைகளும், கீர்த்தனைகளும் சிறுகதைகளும் நாடகங்களும் குழந்தைக் கதைகளும், மனத்தத்துவ நூல்களும் அவர் எழுதி, தனித்தனிப் புத்தகங்களாகப் வெளியிட்டார் என்பது உண்மையே.
அவருக்குப் 'பத்மபூஷண்' விருது அளிக்கப்பட்ட சமயம், பல அறிஞர்களின் பாராட்டைக் கொண்ட ஒரு சிறப்புத் தொகுப்பு வெளிவந்தது. அதில் அவரது இலக்கியப் பணி, கல்விப் பணி, இசைப் பணி, கலைக் களஞ்சியப் பணி முதலான சிறப்புக்களைச் சொல்லும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தூரனின் படைப்புக்களைப் பற்றி ஆய்வுகள் செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களின் ஜெராக்ஸ் பிரதிகளும் கிடைக்கின்றன.
இருந்தாலும் கூட, இவற்றை எல்லாவற்றையும் சேர்த்துத் தொகுத்த புத்தகம் இதுவரை வெளியாகவில்லை. அந்தக் குறையை நீக்கும் பொறுப்பை இலக்கியச் சிந்தனை அமைப்பு என்னிடம் கொடுத்துள்ளது. எல்லாக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் படித்துப் பார்த்து, ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் மேற்கோள் காட்டியிருக்கிறேனாகையால் இந்தப் புத்தகம் 'எழுதியதில்' நான் பெருமைப்பட எதுவுமில்லை. அவரது படைப்புக்களை ஆய்வு செய்யவோ, குற்றம் குறை கண்டுபிடிக்கவோ எனக்குத் தகுதியும் கிடையாது. இருந்தாலும் என் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திய மூன்று குருமார்களில் ஒருவருக்கு நன்றி செலுத்த இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
ரா. கி. ரங்கராஜன்
சென்னை-40.
15.03.2004
*****
தூரனின் தோழன்
பெரியசாமி தூரனின் சிறுபிராயம்