Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suriyan Theyumo?
Suriyan Theyumo?
Suriyan Theyumo?
Ebook74 pages31 minutes

Suriyan Theyumo?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580126005734
Suriyan Theyumo?

Read more from Rajashyamala

Related to Suriyan Theyumo?

Related ebooks

Related categories

Reviews for Suriyan Theyumo?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suriyan Theyumo? - Rajashyamala

    http://www.pustaka.co.in

    சூரியன் தேயுமோ?

    Suriyan Theyumo?

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    *****

    அத்தியாயம் 1

    மாவிலைத் தோரணம், பூக்கள், சரிகை இழைகள் என்று மணமேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பட்டும் பூவும் நகையுமாய் மகளிரும், வேட்டி சட்டையும் சூட்டுமாய் ஆண்களும் குழுமி சிரிப்பும் பேச்சுமாய் சலசலத்தார்கள்.

    ஏற்கெனவே அழகியான மணமகள் துளசியின் முகத்தை நாணம் மேலும் எழிலாக்கியது. அவள் அப்படி நாணத்தோடு தலைகுனிந்து நின்றபோது, முகம் அரை நிலவாய் ஒளிர்ந்தது. அந்த அழகை அவ்வப்போது திருட்டுத்தனமாய் மணமகன் ஆனந்த் ரசித்துக் கொண்டிருந்தான்.

    திடீரென்று சூழலில் பரபரப்பு ஏற்பட்டது.

    மந்திரங்கள் வேகமாய் ஒலித்தன.

    கெட்டிமேளம், கெட்டிமேளம் - குரல் வர மேளம் முழங்கியது.

    பெரியோர் ஆசிர்வதிக்க, இளசுகள் குதூகலிக்க, துளசி கழுத்தில் ஆனந்த் தாலி கட்டினான். பூவும் அட்சதையுமாய் அவர்கள் தலையில் பொழிந்தனர்.

    பட்பட்டென்று கையில் மென்மையாய்த் தட்டினான்.

    சட்டென்று விழிப்பு வந்தது துளசிக்கு. தம்பி கோபிதான் அவள் கையைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். சே, அத்தனையும் கனவா?

    கனவு கலைந்து விட்டாலும் அது தந்த சந்தோஷ சுகம் மனதில் நின்றது. மெல்ல சோம்பல் முறித்தபடி எழுந்தாள். மனம் உல்லாசத்தில் மிதந்தது.

    நீ எப்படா எழுந்தே?

    அது சரி. நான் மூணு மணியிலிருந்து படிச்சுக்கிட்டு இருக்கேன்.

    படி கோபி. இன்ஜினீயரிங் ஃபைனல் இல்லையா. பரீட்சை சமயம் வேற...

    அம்மாதான் உன்னை எழுப்பச் சொன்னாங்க. வெள்ளிக் கிழமை. வாசல்ல கோலம் போடச் சொல்லுன்னாங்க.

    துளசி பரபரவென்று எழுந்தாள். பல்தேய்த்து முகம் கழுவி வாசல் தெளித்துக் கோலமிட்டாள். காபி குடித்தபடி நேரம் பார்த்தாள்.

    கையில் பையோடு, சில்லறையைச் சரி பார்த்துக் கொண்டு வந்த அம்மா நாராயணி, நான் போய் காய் ஏதாவது வாங்கி வரேன் துளசிம்மா. அடுப்பில் இட்லி சூடா இருக்கு. நான் திரும்பி வர்றதுக்குள்ள அப்பா பூஜையை முடிச்சுட்டார்னா, டிபன் எடுத்து வச்சுடறியா? அம்மா பையோடு நடக்க, வாசல் வரை அவளைத் தொடர்ந்தபடி, சரி, நான் பார்த்துக்கறேன்ம்மா, ஆமா, அப்பா இன்னைக்கு லீவு போட்டிருக்காராம்மா?

    ஆமாம்மா. உன்னோட டெல்லி சித்தப்பாவுக்காக வீடு பார்த்துக்கிட்டு இருக்கோம் இல்லையா? எக்ஸ்டென்ஷன் ஏரியாவுல ஒரு நல்ல இடம் வந்திருக்காம். போய்ப் பார்த்துட்டு வந்துடலாமேன்னுதான்.

    - நாராயணி வேகமாய் வெளியேறினாள். அம்மாவுடன் வாசல் வரை போனவள், அப்படியே தோட்டத்தைப் பார்த்தபடி, ஈரத் தலையை விரலால் கோதிக் கொண்டு நின்றாள். சின்னக் குருவி ஒன்று வாலை ஆட்டி 'சிர்க்’ 'சிர்க்' என்றபடி பறந்து போனது. சூழலின் சுகம், மீண்டும் காலையில் கண்ட கனவை நினைவில் மோதச் செய்து சிலிர்ப்பைத் தந்தது.

    ஆனந்தைச் சந்தித்த முதல் சந்திப்பு மனதில் சுழன்றது.

    *****

    அத்தியாயம் 2

    நான்கு தெருக்களைக் கொண்ட சின்ன காலனி அது. இவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது ஆனந்தின் வீடு. இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் புதிதாய் வீடு கட்டி வந்த நேரம் அது.

    Enjoying the preview?
    Page 1 of 1