Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engey Enathu Kavithai?
Engey Enathu Kavithai?
Engey Enathu Kavithai?
Ebook115 pages54 minutes

Engey Enathu Kavithai?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580126005732
Engey Enathu Kavithai?

Read more from Rajashyamala

Related to Engey Enathu Kavithai?

Related ebooks

Reviews for Engey Enathu Kavithai?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engey Enathu Kavithai? - Rajashyamala

    http://www.pustaka.co.in

    எங்கே எனது கவிதை?

    Engey Enathu Kavithai?

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    *****

    அத்தியாயம் 1

    எலக்ட்ரிக் டிரெய்ன் வந்த அசதி தீர பெருமூச்சி விட்டு நிலையத்தில் நின்றது. கும்பலிலிருந்து உதிர்ந்தான் சேகர். கும்பல் காரணமாய் உடல் வியர்வையில் நசநசத்தது. கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொண்டு கசங்கிய சட்டையை இழுத்து விட்டுக் கொண்டான். ஒரு டீ சூடாய் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மணி பார்த்தான். ஐயோ, இன்னும் ஐந்தே நிமிடத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும். டீயாவது மற்றொன்றாவது. அலுவலகத்தில் பதினொரு மணிக்கு டீ என்ற பெயரில் சூடாய் வரும் கலர்தண்ணீரே போதும் என்று வேகமாய் அலுவலகம் நோக்கி நடந்தான்.

    அலுவலகம் ரயில் நிலையத்திலிருந்து நாலு தெரு தள்ளி இருந்தது. வழக்கமான ரயில் பயணம், வழக்கமான நடை தான் என்றாலும் இன்று ஏனோ சேகருக்கு மனம் சலித்தது. போதாத குறைக்கு, இவன் அலுவலகத்தை நெருங்கும் போது இவன் கீழ் வேலை செய்யும் ஆறுமுகம் ஜம்மென்று மொப்பெட்டில் வந்து இறங்கினான். இவனைப் பார்த்தவுடன் சிரித்தபடி, குட்மார்னிங், சார் என்றான். வண்டியைப் பூட்டி விட்டு புத்துணர்வோடு உள்ளே நுழைந்த ஆறுமுகத்தை லேசான பொறாமையோடு பார்த்தான் சேகர். அவன் சிரிப்பில் சற்றே கேலி இருந்ததோ என்று கூட தோன்றியது. 'இவன் கெட்டகேடு வண்டி வைத்திருக்கிறான். தன்னால் வாங்க முடியவில்லையே.' இந்த முறையாவது எப்படியாவது அம்மாவை சம்மதிக்க வைத்து தவணை முறையில் ஒரு வண்டி வாங்கிவிட வேண்டும். முடியுமா? அம்மா சம்மதிப்பாளா?

    ஆறாயிரம் சம்பளம் வாங்கும் தனக்கு இதைக் கூட கேட்கும் உரிமை கிடையாதா? ஆனால் அம்மா என்ன வேண்டுமென்றேவா பிடிவாதம் பிடித்து மறுக்கப் போகிறாள்? பெருமூச்சு தான் விட முடிந்தது அவனால்.

    அப்பா இல்லாத குடும்பம். வீட்டு நிர்வாகம் எப்போதுமே அம்மா சுசீலா தான். அப்பா இருந்த வரை வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அம்மா எப்படியோ ஒரு வீட்டைக் கட்டி விட்டாள். அவர் போன பிறகு மூன்று குழந்தைகளை வளர்க்க அந்த வீட்டு வாடகைப் பணம் தான் அவளுக்குப் பெரிதும் உதவியது.

    சேகர் பிளஸ் டூ படிக்கும் போது அம்மா ஆயிரம் கனவு கண்டாள்.

    சேகர் நீதான்ப்பா மூத்த பிள்ளை. உன் தங்கைகள் ரெண்டு பேர் வாழ்க்கை சுமையும் உன் தோள்ல தான் விழுந்திருக்கு. நல்லாப் படி. நல்ல மார்க் வாங்கு. டாக்டர் இன்ஜினீயர்னு எது வேணும்னாலும் படி....

    அவன் கடகடவென்று சிரித்தான்.

    அம்மா அந்த படிப்புக்கெல்லாம் என்ன செலவாகும் தெரியுமா?

    நல்ல மார்க் வாங்கினா மெரிட்ல சீட் கிடைக்கும் கண்ணா. மேல் செலவுக்கு என் நகை, ஊர்ல இருக்கற கொஞ்ச நிலம் எல்லாத்தையும் வித்து பணம் புரட்டிக்கலாம். நீ நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சா, உன் தங்கைகள் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்காதா?

    தாயின் கண்களில் ஏராளமான கனவுகளைக் கண்டான். தன் தோளில் அழுந்தும் பொறுப்பு என்ற பாரம் பயத்தைக் கொடுத்தது. வயதுக்கே உரிய நட்பு வட்டமும் உல்லாசமும் வேறு கவனத்தை திருப்பியது. பொறுப்பு நினைவுக்கு வர வர மனதில் பயம் அதிகரித்தது. பயம் அதிகரிக்க அதிகரிக்க சிந்தனை மாற்றம் தேடியது. நண்பர்களுடன் கேளிக்கை உல்லாசம் என்று பொழுது போக்குவது பயத்தைக் குறைப்பதாய் மாயம் செய்தது. பலன்? பயம் குறைந்ததோ இல்லையோ மார்க் குறைந்தது.

    அம்மா குலைந்து போனாள்.

    காமர்ஸ் எடுத்திருந்தா பி.காம். சேர்ந்து ஒரு பேங்க் வேலைக்காவது முயற்சி செஞ்சிருக்கலாம். இப்ப?...

    டொனேஷன் கொடுத்து வெய்ட்டிங் லிஸ்ட்டில் காத்திருந்து கடைசியில் பி.எஸ்சி. பாட்டணியில் சேர்ந்தான். படித்து முடித்து இரண்டு வருடங்கள் வேலை இல்லாமல் சுற்றினான். கடைசியில் இந்த தனியார் நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தான். லூக்கஸ் ஆஸ்பரா, சொலேனேஸி, ஹெர்பேரியம் என்றெல்லாம் படித்ததற்குத் துளியும் சம்பந்தமில்லாமல் பெரிய பெரிய லெட்ஜர்களில் தொலைந்து போனான்.

    தத்திக் கொத்தி ஏழு வருடங்களில் ஆறாயிரம் சம்பள உயர்வு. பிடித்தம் போக நாலாயிரத்து ஐநூறு... வீட்டில் நாலு ஜீவன்கள் தாராளமாய் உண்ண, உடுக்க இவன் பணம் வாடகைப் பணத்தோடு பேருதவியாய் இருந்தது. ஆனால் இரண்டு தங்கைகளின் படிப்பு, கல்யாணம் என்றெல்லாம் இருக்கிறதே!

    சும்மா சொல்லக் கூடாது. சேகரின் தங்கைகள் படிப்பில் படு சுட்டியாய் இருந்தார்கள். பெரிய தங்கை உஷா பிளஸ் டூவில் தொன்னூற்றெட்டு சதவிகித மதிப்பெண் பெற்றாள். கல்லூரிகள் அவளை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தன. எம்.ஸி.ஏ. முடித்து விட்டு இன்று ஒரு நிறுவனத்தில் அதிகாரியாய் முப்பதாயிரம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள். இவனை விட நாலு வயது சிறியவள்!

    சின்ன தங்கை ஆஷா டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள். மெரிட்டில் சீட் கிடைத்தாலும் ஊரிலிருந்த நிலத்தை விற்று அம்மா மேல் செலவை சமாளித்து விட்டாள். அமெரிக்கா போய் மேல் படிப்பு படிக்க இப்போதே கடினமாய் உழைக்கிறாள், ஆஷா.

    தங்கைகள் தலை எடுக்க எடுக்க, சேகரால் தலை நிமிர முடியாமல் போனது. ஆரம்பத்தில் அவன் மட்டும் ஆண்மகனாய் சம்பாதித்ததை வீட்டில் பெருமையாய் நீட்டினான். அப்போது உஷாவும் மாணவி தான். ஒரு பாடப் புத்தகம் வேண்டும் என்றாலும் அம்மா, அவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லேண்டி என்பாள்.

    சேகரும், அவங்க எது கேட்டாலும் வாங்கிக் கொடேன்மா. என்னை என்ன கேட்கறது? என்பான்.

    ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் ஆடம்பரத்தை அறியாத மனம் ஆர்ப்பரிக்காமல் அடங்கி இருந்த காலம். எளிமையான வீடு. சின்ன சம்பாத்தியம். அன்பால் பிணைக்கப்பட்ட உள்ளங்கள்.. நிறைவாக இருந்தது.

    உஷாவிற்கு வேலை கிடைத்த

    Enjoying the preview?
    Page 1 of 1