Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Imaikkum Nerathil
Imaikkum Nerathil
Imaikkum Nerathil
Ebook227 pages1 hour

Imaikkum Nerathil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100905658
Imaikkum Nerathil

Read more from Pattukottai Prabakar

Related to Imaikkum Nerathil

Related ebooks

Related categories

Reviews for Imaikkum Nerathil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Imaikkum Nerathil - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இமைக்கும் நேரத்தில்

    Imaikkum Nerathil

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    சூரியன் இன்னும் கடலுக்குள் இருந்தாலும் வெளிச்சம் லேசாக தப்பித்து வந்திருந்தது. மீன் பிடி படகுகள் திரும்பிக் கொண்டிருந்தன. கடற்கரை நடைபாதைகளில் சகல வயதுகளிலும் மனிதர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு வேக நடையில் உலவிக் கொண்டிருந்தார்கள்.

    ஏஜெண்ட்டுகளின் சைக்கிள் பையன்கள் தினசரி கணக்கெழுதி எடுத்துக்கொண்டு திசைக்கொருவராய் விரைந்தார்கள்.

    மானசா, பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது காய்கறிக் கடையில் புதுக் கோணி பிரித்து உருளைக் கிழங்கு கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து நின்றாள்.

    வாங்கம்மா... உங்க கையால முதல் போணி பண்ணினீங்கன்னா அன்னிக்கு வியாபாரம் ஓகோன்னு இருக்குது. என்ன போடட்டும்? கோஸ் பாருங்க தளதளன்னு... என்றான், கடைக்காரன் தங்கப்பன்.

    புன்னகைத்த மானசா, இதே மாதிரிதானே எல்லார்கிட்டேயும் சொல்வீங்க? சரி, கோஸ் கால் கிலோ, உருளை கால், தக்காளி கால், பச்சை மொளகா போடுங்க என்றாள்.

    எல்லாம் கால் கிலோ போதுமா?

    எங்க ரெண்டு பேருக்கு அது போதும். அதிகமா வாங்கினா எடுத்து வைக்கிறதுக்கு ப்ரிட்ஜ் இல்லை.

    வாங்கிட வேண்டியதுதானே? அதான் தவணையில் தர்றானே...

    தவணைப் பணம் கட்றது யாரு தங்கப்பா?

    ஏம்மா... அதென்ன பெரிய விஷயமா? எவ்ளவோ பெரிய ஆபீசுல வேலை பார்க்கிறீங்க... சம்பளம் சரியா கொடுக்கறதில்லையா?

    அதெல்லாம் கொடுக்கிறாங்க... நான் எவ்வளவுக் கெவ்வளவு மிச்சம் பிடிச்சி ஊருக்கு அனுப்பினாலும், அதுக்கு மேலேயும் அங்க செலவு இருக்கு, தங்கப்பா.

    உங்க தம்பிக்கு இன்னும் வேலை கிடைச்சபாடில்லையா?

    இல்லையே... ஊர்லேர்ந்து வர்ற ஒவ்வொரு தபாலையும் அந்த நல்ல செய்தி வராதான்னுதான் நானும் எதிர்பார்க்கிறேன்.

    வரும்... வரும்... நேரம், காலம் கூடிவந்தா எல்லாம் வரும். இந்தாங்க... பிடிங்க...

    தங்கப்பன் காய்கறிகளை அவளுடைய பிளாஸ்டிக் கூடையில் கொட்டிவிட்டு கொசுறாக கொத்தமல்லி, கறிவேப்பிலையுடன் ஒரு எலுமிச்சைப் பழமும் போட்டான். கணக்குப் பார்த்துப் பணம் கொடுத்தாள்.

    எலுமிச்சை எதுக்கு வேணாம்...

    இருக்கட்டும். முதல் போணி பண்றீங்க... நான் முகஸ்துதிக்காக சொல்லலைங்கம்மா... நிஜமாவே நம்ம கடையில நீங்க முதல் போணி செஞ்சா அன்னிக்கு வியாபாரம் நல்லாருக்கு... ராசியான பொண்ணும்மா நீங்க... கண் நிறைஞ்ச கணவன் உங்களுக்கு அமைவாரும்மா...

    மானசா, புன்னகைத்துவிட்டு புறப்பட்டாள்.

    தூரத்தில் தரையில் ஒரு காலை ஊன்றி சைக்கிளில் அமர்ந்து, அதன் கண்ணாடி வழியாக தன்னை நோக்கி வரும் அவளைப் பார்த்தபடி சீப்பால் தலை வாரிக் கொண்டான், அந்த இளைஞன்.

    அவனைக் கவனித்த மானசாவுக்கு எரிச்சலாக இருந்தது.

    காரணம் - இது ஏழாவது நாளோ இல்லை எட்டாவது நாளோ!

    தினமும் இதே மாதிரி வழியில் காத்திருந்து, பிறகு அவள் தன் காலனிக்குச் சென்று சேரும்வரை நிழல் மாதிரி பின்னால் வருகிறான். லேசாக விசிலால் தமிழ் சினிமாவின் காதல் பாடல்களைக் கொச்சைப் படுத்துகிறான்.

    நின்று திரும்பிப் பார்த்தால் உடனே விசில் நின்றுவிடும். சைக்கிளும் நின்றுவிடும். இறங்கி டயரின் காற்றழுத்தத்தை சோதிப்பான். இல்லையென்றால் கழறாத சைக்கிள் செயினை போடுகிறவன்போல பெடலைச் சுற்றுவான். மறுபடி தொடர்வான். நடந்தால், மறுபடியும் வம்பைத் தொடர்வான்.

    அவள் தன் வீட்டுக்குள் வந்து சமைத்து குளித்து, உடுத்தி அலங்கரித்து அலுவலகத்திற்குப் புறப்பட்டுப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால், அங்கேயும் காத்திருப்பான். இப்போது அவனும் உடை மாறி முகத்தில் பவுடர் தடங்களுடன் இருப்பான். பேருந்தில் ஏறிப் போகிறவரை நிற்பான்.

    ஏதோ ஒரு நாள் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, கோணலாகச் சிரித்து, கவிதைகள் எல்லாம் உள்ளடக்கின ஒரு காதல் கடிதத்தை நீட்டப் போகிறான் என்று மானசாவுக்குத் தெளிவாகப் புரிந்தது.

    அவனைப் பற்றி கீர்த்தியிடம் சொன்னபோது, அவள் பலமாக சிரித்து, அந்த மாதிரி காதல் கடிதம் கொடுத்தா நீ என்ன சொல்லணும் தெரியுமா? என்றாள்.

    என்ன சொல்லணும்?

    இது வேணாம், உன் பாங்கிக் கணக்குப் புத்தகத்தைக் கொடு... அது எனக்கு திருப்தியா இருந்தா காதலிக்கிறேன்னு சொல்லணும்...

    கீர்த்தியோடு சேர்ந்து தானும் சிரித்தது நினைவுக்கு வந்தது. மானசா, காய்கறிக் கூடையுடன் அவனைக் கடந்ததும் அவனும் மெதுவாக சைக்கிளை மிதித்தபடி அவளைத் தொடர்ந்தான்.

    எங்கேயோ போகிற மேகம் இருக்குது, உன் பேரை, என் பேரை சொல்லி அழைக்குது... காதல் பண்ணு! என்று விசிலால் பாடத் தொடங்கினான்.

    இந்த அவஸ்தைக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்த மானசா, நடப்பதை நிறுத்தி, திரும்பிப் பார்த்தாள்.

    அவன் இதை எதிர்பார்க்காததால் தடுமாறி, அவசரமாக சைக்கிளை நிறுத்தி சுவரில் ஒட்டப்பட்டிருந்த புதிய சினிமா போஸ்டரைக் கவனிப்பவன் போல 'பாவ்லா' செய்தான்.

    மானசா, அவனை நெருங்கி வந்து நின்றாள்.

    ஹலோ சார், உங்களுக்கு என்ன வேணும்? என்றாள்.

    அந்த இளைஞனுக்கு லேசான நடுக்கம் வந்தது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு காதில் விழாதவன் போல நின்றான்.

    அவனுடைய சைக்கிளின் மணியை ஒலித்து, உங்களைத்தான் கேட்கிறேன்... தினமும் என் பின்னாடியே வர்றீங்களே... உங்க மனசில என்ன இருக்குன்னு சொல்லுங்க... பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றாள்.

    அவனுக்கு சற்றே தைரியம் வந்தது. கூடவே மரியாதையும் வந்தது.

    சைக்கிளை விட்டிறங்கி ‘ஸ்டாண்ட்' போட்டு நிறுத்தி, அவள் முகத்தைத் தயக்கமாகப் பார்த்து பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

    உம்... சொல்லுங்க... என்ன விஷயம்?

    வந்து... நீங்க... ரொம்ப... அழகா இருக்கீங்க... என்று தவணை முறையில் சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு வியர்த்துவிட்டது.

    சரி... என் அழகைப் பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி... அப்புறம்...?

    உங்களை... எனக்கு... ரொம்பப் பிடிக்கும்...

    ஓகோ... சரி... நீங்க என்ன பண்றீங்க...?

    ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளனா வேலை பார்த்தேன்... அந்த நிறுவனத்தை மூடிட்டாங்க... வேறு வேலைக்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன்...

    என்ன படிச்சிருக்கீங்க...?

    அது... வந்து... பிளஸ்-2 படிச்சிருக்கேன்.

    நான் அழகா இருக்கேன்னு சொன்னீங்க... அதைத் தவிர என்னைப் பத்தி என்ன தெரியும்?

    ஒரு தோழியோட சேர்ந்து வாடகை வீட்ல தங்கி, இருக்கீங்க... ஒரு நிறுவனத்துல கௌரவமான வேலையில இருக்கீங்க...

    சரி இதென்ன காதலா?

    நீங்க தப்பா நினைக்காதீங்க... உங்களைக் கல்யாணம் செய்துக்க நான் தயாரா இருக்கேன்...

    எனக்குச் சம்மதம் இருந்தாக்கூட இன்னொருத்தரோட சம்மதம் தேவைப்படுதே...

    உங்கப்பாதானே?

    இல்லை... என் கணவர்...!

    அவன் இமைப்பதை நிறுத்தி விட்டான்.

    உண்மையாதான் சொல்றேன்... அவர் இராணுவத்தில் இருக்கார்... அடுத்த மாதம் வருவார்... அப்ப நீங்களே வந்து கேக்கறீங்களா?

    வந்து... உங்க கழுத்துல...

    தாலியில எங்களுக்கு நம்பிக்கை இல்லை... பதிவுத் திருமணம் செய்துகிட்டோம். அவரோட தொலைபேசி எண் தர்றேன், பேசுறீங்களா சார்...?

    என்னை... மன்னிச்சிடுங்க... எனக்கு விபரம் தெரியாம... அவன் மேற்கொண்டு பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு எதிர்திசையில் விரைவாக மிதித்துச் சென்றான்.

    மானசா, தனது காலனிக்கு வந்து வாசலில் கிடந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு கதவைத் தட்டினாள்.

    திறந்துதான் இருக்கு என்று கீர்த்தியின் குரல் கேட்டது. கதவைத் தள்ளி உள்ளே வந்தாள்.

    கீர்த்தி இரவு உடையில் இருந்தாள். முதுகு முழுக்க தலை முடியை விரித்து விட்டுக்கொண்டு, முட்டை உடைத்து தம்ளரில் கொட்டி கரண்டியில் கலக்கி அடுப்பில் காய்ந்திருந்த கல்லில் ஊற்றினாள்.

    மானசா, உனக்கும் ஒரு ஆம்லெட் போடட்டுமா?

    போடு என்ற மானசா, அந்த இளைஞனிடம் சுற்றிய கதையைச் சொன்னபடி காய்கறியை எடுத்து வைத்தாள்.

    இனிமே உன் பின்னாடி மட்டுமில்லை, இந்தப் பக்கமே திரும்பமாட்டான் அவன்! என்று சிரித்தாள், கீர்த்தி.

    அப்புறம்... ராதா மாமி வந்தாங்க... நேத்து அவங்க வீட்டுக்கு தபால் வந்ததாம்... உனக்கு வந்த அந்த தபாலைக் கொடுத்துட்டுப் போனாங்க... மேசை மேல வெச்சிருக்கேன், பாரு...

    மேசை மேல் இருந்த கடிதத்தை மானசா, எடுத்தாள். முகவரியின் கையெழுத்தைப் பார்த்ததுமே ஊரிலிருந்து தங்கை சாதனா, எழுதியிருக்கிறாள் என்பது புரிந்தது.

    மானசா, கடிதத்தைப் பிரித்தாள். படித்தாள்.

    கீர்த்தி இரண்டு தட்டுகளில் ஆம்லெட்டுடன் வந்தவள், மானசாவின் முகத்தைப் பார்த்துப் பதறினாள்.

    என்னாச்சு மானசா? யார் எழுதியிருக்கிறாங்க...?

    என் தங்கை சாதனா!

    ஏன் உனக்கு இப்படி வியர்த்துக் கொட்டுது? அப்படி என்ன எழுதியிருக்கா? என்றாள், கீர்த்தி.

    *****

    2

    மானசாவின் தோளில் கை வைத்தாள், கீர்த்தி.

    என்ன, சொல்லுடி! கடிதத்தில் ஏதாவது கெட்ட செய்தியா?

    என் வீட்லேருந்து கடிதம் வந்தா எப்போ அதில் நல்ல செய்தி வந்திருக்கு?

    சலிப்போடு சொன்ன மானசா, நாற்காலியில் அமர்ந்தாள்.

    என்ன பிரச்சினை?

    உனக்கொரு அக்கா இருந்து அவ கல்யாணமானவளா இருந்தா எப்பயாவது அவ சீக்கிரத்துல விதவையாகணும்னு சாமிகிட்ட வேண்டிக்குவியா கீர்த்தி?

    சே! என்ன இது? பேத்தலா இருக்கே... யார்தான் அந்த மாதிரி வேண்டிக்குவாங்க?

    நான் தினமும் அப்படித்தானே வேண்டிக்கிட்டிருக்கேன் என்ற மானசாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள், கீர்த்தி.

    ஏன் மானசா? ஏன் அப்படி?

    அப்பதான் அவளுக்கு நரகத்திலேருந்து விடுதலை கிடைக்கும். கௌதம்னு ஒரு பொறுக்கி ராஸ்கல் கிட்ட அவளோட அழகான வாழ்க்கை சிக்கிக்கிட்டு தவிக்குது. இத்தனைக்கும் அந்தாளு விற்பனை வரி அலுவலகத்தில் நல்ல வேலையில இருக்கான். மேசைக்கு மேல, மேசைக்கு கீழேன்னு வாங்கிக் குவிக்கிறான். ஆனா உருப்படியா வீட்டுக்கு எதுவும் செய்யிறதில்லை. குடி, சீட்டாட்டம், தொடுப்பு எல்லாம் உண்டு. அந்த மைனருக்கு. பேசாம விவாகரத்து வாங்கிக்கிட்டு வந்துடுன்னு நானும் சொல்லிக்கிட்டிருக்கேன். அக்கா கேக்க மாட்டேங்கிறா...

    ஏன்?

    ஜாதகம் பார்த்தாளாம். அவ வீட்டுக்காரனுக்கு ஏழரைச் சனியாம். இன்னும் ஆறு மாசத்துல சரியாகி, அவர் திருந்தி, இவளைத் தங்கத் தாம்பாளத்துல வெச்சிக்கிட்டு ஆடுவாராம். இவளுக்கு தாஜ்மகால் கட்டுவாராம்.

    அது செத்ததுக்கப்புறம் கட்டின சமாதிடி!

    அதைத்தான் நானும் சொன்னேன். என் அக்கா ஒரு அசடு. சோகத்துல ஏதோ சுகமிருக்குன்னு சொல்வாங்களே, அதுக்கு இலக்கணம் வகுக்கறா.

    வெறுப்பாகப் பேசினாலும் மானசாவின் கண்கள் கலங்கின.

    சில பிறவிகளுக்கு வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்படணும்னு எழுதி இருக்கும் போலிருக்கு.

    அவள் தோளில் கை வைத்த கீர்த்தி, உங்கக்கா படிச்சிருக்காளா? என்றாள்.

    பிளஸ் 2 படிச்சிருக்கா...

    இந்தப் படிப்பை வெச்சிக்கிட்டு என்ன வேலைக்குப் போக முடியும்? ஏற்றுமதி நிறுவனத்துல துணி தைக்கத்தான் போக முடியும். எத்தனை குழந்தைங்க...?

    ரெண்டு!

    சரிதான்... நீ பாட்டுக்கு அவளை விவாகரத்து பண்ணிட்டு வான்னு யோசனை சொல்றியே, எப்படி நியாயம்? குழந்தைங்களோட அவ வந்துட்டா உங்கப்பா காப்பாத்துவாரா? அவரே இதய ஆபரேஷன் செஞ்சி உயிரைக் காப்பாத்திக்கிட்டு படுத்துக் கிடக்கார்.

    மௌனமாக அமர்ந்தாள், மானசா. கடிதத்தில் சில வரிகளை மறுபடி படித்துப் பார்த்தாள்.

    இப்ப என்ன பிரச்சினை மானசா?

    ஒரு மாசம் முன்னாடி எங்கப்பாவுக்கு இதய ஆபரேஷன் செய்றதுக்கு லட்சக் கணக்குல பணம் தேவைப்பட்டதால சொந்தமாக இருந்த ஒரே வீட்டையும் வித்தோம். அது உனக்குத் தெரியும். கொஞ்ச நஞ்சம் இருந்த நகைகளையும் வித்தோம்.

    Enjoying the preview?
    Page 1 of 1