Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Devathai!
Innoru Devathai!
Innoru Devathai!
Ebook125 pages1 hour

Innoru Devathai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580100606052
Innoru Devathai!

Read more from Devibala

Related to Innoru Devathai!

Related ebooks

Related categories

Reviews for Innoru Devathai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Devathai! - Devibala

    http://www.pustaka.co.in

    இன்னொரு தேவதை!

    Innoru Devathai!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    *****

    அத்தியாயம் 1

    இருபது நாள் ஆபிஸ் சுற்றுப்பயணம் முடித்து அப்போதுதான் திரும்பிருந்தான் மதன்!

    உள்ளே நுழைந்ததுமே,

    விசாலி எங்கே? முதல் கேள்வியே இதுதான்!

    ஏழெட்டு பேரின் கண்கள் ஏறி இறங்கியது! உதடுகள் லேசாக அசைந்தன. உள் பனியன் பொறாமையால் கருகியது!

    வந்ததும் சொல்லு! இருபது நாளும் விசாலி நினைவாகவே வெளியூர்ல இருந்தானா? இனி ஆபீஸில் அட்டகாசம் தாங்காது!

    ஜீவிதா அருகில் வந்தாள்.

    விசாலி சேர்மன் கூட மீட்டிங்ல இருக்கா! எங்கிட்டச் சொல்லு மதன்! நானும் பொம்பளைதான்!

    நீ பொம்பளையா? சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்! பாவம்!ஒரு சிரிப்பொலி ஏழ,

    ஜீவிதா அவமானத்தில் சுருங்கிப் போக, மதன் தன் இடத்தில் வந்து அமர்ந்து கணிப்பொறியை இயக்கினான்!

    இருபது நாட்கள் வெளியூரில் முடித்த வேலைகளை, கிடைத்த வசூலை என சகலத்தையும் அதில் ஏற்றினான்!

    மதன் அழகான இளைஞன்! முதுகலை பட்டதாரி! கலகலப்பாக பழகுவான்! பெண்களை தன் பின்னால் நடக்கவிட்டு ஆட்டம் காட்டுவான்! அதே நேரம் பிறருக்கு உதவுவதில் அவனை மிஞ்ச ஒருவர் இல்லை!

    ஒருவிதவைத் தாய் - ஒரு தங்கை - அவள் கல்லூரிப்படிப்பு! குடும்பப் பற்றும் பாசமும் உள்ளவன் மதன்!

    ஒருமணி நேரத்தில் மதன் வேலை முடித்து, சோம்பல் முறிக்க, மீட்டிங் முடிந்து விசாலி வெளியே வந்தாள்!

    ஹாய் விசாலி!

    எப்ப வந்தீங்க?

    ஜீவிதா குறுக்கிட்டு, வந்து ஒரு மணி நேரமாச்சு! உன்னைப் பாக்காம கூட்டுல உசிரு இல்லை!

    விசாலி பொருட்படுத்தவில்லை!

    மதன் எழுந்து வந்தான்!

    மிஸ் இண்டியா அழகிப் போட்டிக்கு விளம்பரம் வந்திருக்கு விசாலி!

    வரட்டும்

    நான் அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்துட்டேன். நீ நிரப்பிக்குடு! மற்றதை நான் பாத்துக்கறேன்!

    வேண்டாம் மதன்! நானும் மூணு வருஷங்களா சொல்லிட்டே இருக்கேன்! நீயும் விடறதில்லை!

    "விசாலி! எல்லா அழகும் நிறைஞ்ச ஒரு அம்சமான பெண் நீ!

    அது நாலு சுவருக்குள்ளே முடங்கணுமா! நாடு அறியட்டுமே! புரிஞ்சிக்க மாட்டியா?"

    விசாலி அழகாக சிரித்தாள்!

    மதன்! நாலு சுவருக்குள்ளே இருக்கற வரைக்கும் தான் ஒரு பெண்ணுக்கு மதிப்பும், பாதுகாப்பும், நாடறிய வெளியே வந்துட்டா நிறைய விபரீதங்களை சந்திக்கணும்! உனக்கிது புரியாதா?

    ஏன் அப்படி சொல்ற? நாடு, உலகம், மாநிலம்னு போற்றப்படற பெண்கள் தப்பானவங்களா?

    கடவுளே! ஒருக்காலும் நான் அப்படி சொல்லலை அவங்களையெல்லாம் நான் மதிக்கறேன் அவங்க உழைப்புக்கும், இந்த உயரத்துக்கு வர, அவங்க பட்ட அவமானங்களுக்கும் நான் தலை வணங்கறேன்! ஆனா மதன், பட்டம் மேலே பறக்கும் போது, நூல் நம்ம கைல இருக்கற வரைக்கும் தான் பட்டம் பாதுகாப்பா தரை இறங்க முடியும்! நூலை நாம் விட்டுடோம்னா பாதுகாப்பா தரை இறங்க முடியுமா! நூலை நாம விட்டுட்டோம்னா, சில பட்டங்கள் கோபுரத்துல போயும் உட்காரும். சிலது தந்திக் கம்பத்துல பட்டு, தாறுமாறா கிழியவும் செய்யும்! எனக்கு வேண்டாம்!

    "ஓகே! நான் விட்டுர்றேன் விசாலி! ஆனா போராட வேண்டிய சூழ்நிலை பெண்களுக்கு வந்துட்டா, ஒதுங்கி வாழ முடியாது! புரியுதா?

    மதன்! ‘நீந்தும் நேரம் வந்தால், உடன் நீச்சல் அங்கே வரும்'னு கவியரசு எழுதியிருக்கார்! மறக்கலை!

    திரும்பவும் சேர்மன் அழைப்பு! விசாலி உள்ளே போனாள். கம்பெனி சேர்மன் பி.ஏ. விசாலி!

    கடந்த நாலு வருஷங்களாக இங்கு வேலை ஏறத்தாழ நாற்பதாயிரம் சம்பளம், கடுமையான உழைப்பு! அசாத்திய புத்திசாலி! மதிய உணவு நேரம் வர, விசாலி தன் டிபன்பாக்ஸை பிரித்தபடி உட்கார, மதன் வந்து விட்டான்!

    அடடா! இட்லி-மிளகாய் பொடியா?

    உரிமையோடு ஒன்றை எடுத்துச் சாப்பிட்டான்!

    விசாலி அதற்கும் சிரித்தாள்!

    புடிச்சிருந்தா, நாலு இட்லியையும் சாப்பிடுங்க மதன்! நான் கேன்டீன்லேருந்து ஆர்டர் பண்ணிக்கறேன்!

    வேண்டாம் போதும் உங்க வீட்டுக்கே வர்றேன்! அப்ப நீ பண்ணிப் போடு!

    இதை நான் பண்ணலை! ஆயாம்மா செய்த இட்லி!

    உங்க ஆயாம்மாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

    வயது நாப்பத்தி எட்டு. பரவாயில்லையா?

    வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்கும் போது, வயசா பெரிசு?

    அடப்பாவி!

    செல்போன் அடிக்க, விசாலி எடுத்தாள்!

    ஆயாம்மாதான் ஆயுசு நூறு! சொல்லுங்க ஆயாம்மா!

    கண்ணு விசாலி! உங்கப்பா நெஞ்சு வலினு துடிக்கறார்!

    எப்ப முதல்? விசாலி அலற,

    இப்ப அஞ்சு நிமிஷமா! நீ உடனே வா!

    விசாலி பதறியபடி விவரம் சொல்ல,

    உடனே புறப்படு விசாலி! சேர்மன்கிட்ட சொல்லிட்டு வந்துரு! நான் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி உங்க வீட்டுக்கு ஆம்புலன்சை வரவழைக்கறேன்! அது வர்றதுக்குள்ளே நாம போயிடலாம்!

    மதன் வேகமாச் செயல்பட,

    சேர்மனிடம் போய் விசாலி சொல்ல,

    நீ உடனே போ! பணத்தோட நம்ம ஆட்களை நான் அனுப்பி வைக்கறேன். தைரியமா இரும்மா!

    வெளியே வர, மதன் பைக்கை இயக்கினான்.

    ஒக்காரு விசாலி!

    அவள் உட்கார, பைக் புறப்பட்டது! அசுர வேகத்தில் சாலையில் பாய்ந்தது!

    மதன்! இத்தனை வேகமா ஓட்டாதே! பயம்மா இருக்கு!

    இப்ப அவசரம் விசாலி! நீ பயமேபடாதே! கெட்டியா என்னைப் புடிச்சுக்கோ.

    அவனது இடுப்பை அவளது கைகள் சுற்றி வளைக்க இவர்கள் வீட்டு வாசலை அடைய, விசாலி இறங்கி ஓடினாள்! அப்பா கைலாசம் துடித்துக் கொண்டிருந்தார்.

    ஆயாம்மா அழுகை!

    சரக்கென ஆம்புலன்ஸ் வந்து நிற்க, ஆட்கள் ஸ்ட்ரெச்சருடன் இறங்கி ஓடி வந்தார்கள்!

    அவர் ஏற்றப்பட்டார்!

    ஆயாம்மா! நீங்க வீட்ல இருங்க! நான் போன் பண்றேன்!

    ஆம்புலன்சில் விசாலி ஏற, மதன் பைக்கில் பின் தொடர்ந்தான்!

    அடுத்த அரைமணியில் அவசர சிகிச்சைப் பிரிவில்

    Enjoying the preview?
    Page 1 of 1