Nilavodu Vaa Thendraley
By GA Prabha
()
About this ebook
காதல் என்பது உண்மையாய் இருப்பது. அப்பழுக்கில்லாத அன்பு மட்டுமே.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Vaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Veppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Maya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nilavodu Vaa Thendraley
Related ebooks
Vennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsபிரசாதப் பொட்டலம் Rating: 0 out of 5 stars0 ratingsIru Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsKankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Aazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsMazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Koodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Pavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Venpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratingsVaira Oosi Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kodi Rating: 0 out of 5 stars0 ratingsதாலேலோ! Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsMannin Mathagu Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Vaangiya Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nila Sudum Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsNaal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Malarum Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Nilavodu Vaa Thendraley
0 ratings0 reviews
Book preview
Nilavodu Vaa Thendraley - GA Prabha
http://www.pustaka.co.in
நிலவோடு வா தென்றலே
Nilavodu Vaa Thendraley
Author:
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
உமா மெதுவாக மலை உச்சியை நோக்கி ஏறினாள்.
இன்னும் சிறிது தொலைவுதான். உச்சியை அடைந்து விட்டால் சிறிது ரெஸ்ட் எடுத்துவிட்டு உச்சியிலிருந்து குதித்து விட்டால் நிரந்தர ஒய்வு.
சிரிப்பு வந்தது.
நிரந்தர ஓய்வை நோக்கிய பயணத்தில் இது என்ன ரெஸ்ட்?
உமா சிறிது நிதானித்தாள். மூச்சு இரைத்தது. மலை நெட்டுக் குத்துதான். சிறிது தூரம் ஏறுவதற்குள் மூச்சு இரைத்தது. சாவதற்கு வேறு வழி தேர்ந்தேடுத்திருக்கலாமா? புத்தி இப்போது யோசித்தது.
ஆனால் தினேஷ்தான் இந்த வழியைச் சொன்னான்.
அதெல்லாம் ஏதானும் தப்பா போனா சாவ முடியாது. நாம உடனே சாகனும். ரெண்டு பெரும் சேர்ந்து போயிடனும். மலையிலிருந்து குதிச்சிடலாம்.
அவன்தான் ஊட்டியில் இந்த இடத்தை தேர்ந்து எடுத்தான்.
குன்னூர் தாண்டி தனியாக இந்த மலைச் சிகரம் நின்றது. கோவையிலிருந்து வரும் வழியில் ரோடில் இறங்கி உள்ளே சிறிது நடந்தால் சரேல் என்று மலை ஏற ஆரம்பித்தது. உமா மெதுவாக ஏறினாள்.
மழை பெய்து மண் ஈரம் வழுக்கியது. அழுத்தி கால் ஊனி ஏற வேண்டி இருந்தது. மேலே தினேஷ் காத்திருப்பான். அவனை சந்திக்கப் போவதே மனதுக்கு குஷியாக இருந்தது.
அவனைச் சந்திப்பது எப்போதுமே குஷியாக இருக்கும். கண் முழுதும் பிரியமும் காதலும் வழிய கண்ணம்மா என்ற அழைப்பில் உள்ளம் உருகி விடும். எத்தனை வேதனை இருந்தாலும் அவன் குரல் கேட்டால் போதும். அனைத்தும் மறந்து விடும்.
"எல்லா வேதனைகளையும் தூக்கி ஓரமா வை. மனசுல சுமந்துண்டு திரிஞ்சா நம்ம பாரம்தான் அதிகமாகும். அதுவா தன்னை சால்வ் பண்ணிக்கும். விட்ரு’ என்பான்.
எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்க முடிந்தது. காதலை மட்டும் முடியவில்லை.
எவ்வளவு பணம் கேட்கறே?
அவன் அப்பா.
நாங்க வேணுமா? அவன் வேணுமா?
- - உமாவின் அப்பா.
உமாவின் அப்பா, பரந்த மனசுக்காரர். வாழ்வின் யதார்த்தம் புரிந்தவர். பெண்கள் தைரியமாக, துணிச்சலாக நடக்க வேண்டும் என்பார். அவளிடமும், அண்ணாவிடமும் நண்பர் போலவே பழகுவார். அண்ணாவின் காதலை அங்கீகரித்த அவர் அவளுக்கு மட்டும் சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டார்.
அம்மாடி, அண்ணாவோட காதல்ல அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வருது. ஆனா நீ அங்க போறவ. நான் நாலையும் யோசிக்கணும். எனக்கு என்னவோ அந்தக் குடும்பம் நல்லதா தெரியலை.
என்றார்.
அப்பா சொன்னது எல்லாமே சரி என்பது அம்மாவின் சித்தாந்தம்.
வீட்டின் முழு நிர்வாகமும் அப்பாதான். ஒரு சின்ன குண்டூசி வாங்குவது முதல் வீடு கட்டுவது வரை அவரின் முடிவுதான்.
அதில் என்ன தப்பு. அவர் செஞ்சதெல்லாம் நல்லாத்தானே இருக்கு.
- அம்மா.
அவரின் தங்கைகள், தம்பி அம்மாவின் வீடு வரை எல்லாருக்கும் அப்பாதான் மதிமந்திரி.
உமாவின் விஷயத்திலும் அவர்தான் முடிவெடுத்தார்.
இத்தனைக்கு தினேஷ் இரண்டு குடும்பத்துக்கும் தெரிந்தவன். உமாவின் தாத்தா வழியில் உறவு. இதே அபார்ட்மெண்ட்டில்தான் அவனும் குடி இருக்கிறான்.
அடிக்கடி பார்த்து பழக்கம். ஒரே கல்லூரி. அவன் ஐடி. உமா சிவில் கடைசி வருடம். தினேஷ் முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலைக்கான உத்தரவுக்காக காத்திருக்கிறான்.
ஆனால் இரண்டு பக்கமும் எதிர்ப்பு. சம்மதம் கிடைக்கவில்லை.
எல்லோர் எதிர்ப்பும் நம்மை வாழ விடாது. செத்துரலாம் என்று தினேஷ் நேற்று கூறினான். உமா உடனே சம்மதித்தாள். இதோ இன்று காலையில் கல்லூரிக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு ஊட்டி வந்து விட்டாள். தினேஷ் அவளுக்கும் முன்பே வந்து விட்டான். மலையிலிருந்து குதிக்கலாமா? விஷம் குடிக்கலாமா என்று இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
உமா மெதுவாக மலை உச்சியை அடைந்தாள்.
உமா ஏன் லேட்?
- தினேஷ் பரபரப்புடன் முன்னாடி ஓடி வந்தான்.
பஸ் பிரேக் டவுன் ஆயிருச்சி. ரொம்ப நாழியாயிருச்சா?
அரைமணி நேரம் ஆகிருச்சு. எனக்கு பயமாகிருச்சு. நீ மனசு மாறிட்டியோன்னு
என்ன சந்தேகம்? நான் மனசு மாறுவேனா?
எல்லாமே பயமா இருக்குல்ல?
நீயும், நானும் சேர்ந்து எடுத்த முடிவுதானே இது.
தினேஷ் புன்னகையோடு அருகில் இருந்த பாறை மீது அமர்ந்தான்.
உமா அவன் அருகில் அமர்ந்தாள்.
சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்து அவனுக்குச் சிறிதும், தனக்குச் சிறிதும் எடுத்துக் கொண்டாள். மெதுவாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள். முடியவில்லை. மனம் முழுதும் வேதனை, வருத்தம் என்று தொண்டை அடைத்துக் கொண்டது. வாயில் வைத்தபடி கண்ணீர் பெருக தினேஷ் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ஏன் தினேஷ் ரெண்டு பேர் ஆசைப் பட்டா, அதற்கு பெற்றவர்கள் அங்கீகாரம் கிடைக்காதா? இவர்களின் கௌரவம், அந்தஸ்துக்காக நம்ம காதலைப் பலி வாங்கனுமா?
நம்மை பறி கொடுத்துவிட்டு இவர்கள் எந்தக் கௌரவத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்?
நாம சாகறதுனால காதல் நிறைவேறிடப் போகுதா? நம்ம நினைவு சில நாள் இருக்கும். அப்புறம் அவங்கவங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போகப் போறாங்க.
-தினேஷ் வெறுப்போடு பேசினான்.
அவங்களைப் பழி வாங்கணும் உமா. வா நான் உனக்கு தாலி கட்டறேன். கணவன் மனைவியா வாழ்ந்துட்டு செத்துடலாம்.
- ஆவேசம் வந்தவன் போல் பேசினான்.
கணவன் மனைவியா வாழ்ந்தாட்டு எதுக்குச் சாகனும்
?
தினேஷ் பதில் சொல்லவில்லை. அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. உணர்ச்சியின் வேகம், தற்கொலையின் மீதான பயம் அவனை கோழை ஆக்கி விட்டது என்று உமாவுக்குப் புரிந்தது.
‘தினேஷ், உண்மையில் நாமதான் வீரர்கள். வாழ்வதற்கு அதிகம் துணிவு தேவையில்லை. சாகத்தான் அசாத்திய துணிச்சல் வேண்டும்."
க்கும். நாம செத்தாட்டு துணிவு இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?
வெறுப்போடு பேசினான் தினேஷ். உமா ஆதரவுடன் அவன் விரல்களை நீவி விட்டாள். தினேஷ் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
உமா நான் உன்னை ரொம்ப விரும்பினேன். உன்கூட ஒரு கனவு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டேன். எத்தனை கனவுகள் தெரியுமா? உண்மையான அன்பை ஏன் புரிஞ்சுக்கலை நம்ம பெற்றோர்கள்?
குரலில் வேதனை தளும்பப் பேசினான் தினேஷ்.
அவனை கனிவுடன் ஏறிட்டாள் உமா.
அவங்க இஷ்டப் படி நாம நடக்கனும்னு இல்லை. நம் வாழ்க்கை குறித்து நமக்குச் சில கனவுகள் இருக்கும்னு ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க? நாம எப்பவும் அவங்களுக்காவே வாழணுமா? நமக்குன்னு வாழறது எப்போ?. திருமணம்கறது அந்தஸ்துக்காக இல்லை. இனிமையான இல்லறம்கறது இரண்டு மனம் ஒன்றையொன்று புரிந்து கொண்டு அன்போடு இணைவதில் இருக்கிறது. இதை எல்லாம் புரிஞ்சுக்காம நம்மை சாவை நோக்கி துரத்திட்டாங்க
இல்லை தினேஷ். நாம புரிய வைக்க முயற்சி செய்யலை.
- நிதானமாகப் பேசினாள் உமா.
நம் காதலைச் சொன்னோம். எதிர்த்தாங்க. நாம உடனே செத்துடலாம்னு முடிவு எடுத்துட்டோம். அவங்களுக்கு நம்ம அன்பை, ஆழமான காதலை புரிஞ்சுக்க நாம முயற்சி செய்யலை. புரிய வைக்கலை. எடுத்தோம், கவிழ்த்தோம்னு வந்துட்டோம்.
உமா கீழே கிடந்த ஒரு புழுவைக் காட்டினாள். பாறைக்கு அடியிலிருந்து மண்ணைத் துளைத்து வெளி வர முயன்று கொண்டிருந்தது. துருவித் துருவி மண்ணை உதறி மேலே வரும் அதன் முயற்சி.
?ஒரு புழு கூட மண்ணைத் துளைத்து மேலே வரப் பாக்குது. வந்துருவோம்கிற நம்பிக்கைல அது தன் முயற்சியை நிறுத்தலை. ஆனா நாம? கொஞ்சம் எதிர்ப்பு வந்ததும் மனசு தளர்ந்து சாகலாம்னு முடிவு எடுத்துட்டோம்."
ஏன் சாகனும்?
தினேஷ் திடீரென்று கேட்டான். சாகறதால நம்ம காதல் நிறைவேறப் போகுதா? அதுக்குப் பதிலா ஏன் வாழ்ந்து காட்டக் கூடாது?
வெரிகுட்
கை தட்டினாள் உமா.
உண்மைதான் தினேஷ். சாகறதுக்கே நமக்கு இத்தனை துணிச்சல்னா, அதை ஏன் வாழறதுல காட்டக் கூடாது? வாழ்ந்து காட்டலாம் தினேஷ். நம்ம காதலை நம்ம பெத்தவங்களுக்குப் புரிய வைக்கலாம். நாம புழு இல்லை. தைரியமும், துணிச்சலும் உள்ள மனுஷங்க. கஷ்டங்கள் வலிமையானது. ஆனால் வாழ்க்கை அதைவிட வலிமையானது. வாழ்ந்து பாத்துடலாமே.
இந்த நிமிஷம் உன்மேல என் காதல் அபரிதமா பொங்குது உமா
-தினேஷ் முகம் முழுதும் புளகாங்கிதம் பொங்க உமாவை எட்டி தன்னிடம் இழுத்துக் கொண்டான்.
நோ’-உமா எச்சரித்தாள்.
இனிதான் நாம ரொம்ப கட்டுப்பாடா இருக்கணும். நம்ம வீடு நம்ம காதலை ஒத்துக்கற வரைக்கும் நாம அதிகம் சந்திக்கக் கூடாது. எல்லை மீறக் கூடாது தினேஷ். நம்ம காதல் இனக் கவர்ச்சி இல்லை. ஆத்மார்த்தமானது நமக்கு நாமே நிரூபிக்கணும்."
சே! நீ ரொம்ப மோசம்
- தினேஷ்.
"நான் சொல்றது இப்போ கசக்கும் தினேஷ். ஆனா பின்னாடி பார்த்தா எவ்வளவு நல்லதுன்னு புரியும். எங்கே போயிடப் போறோம். சீக்கிரம் நம்ப காதலை ஊர் அறியப் புரிய வச்சு, உலகறிய கல்யாணம் செஞ்சுண்டு