Kanavaana Kanavugal
()
About this ebook
தங்கள் வீட்டு மாடிப் போர்ஷனுக்கு புதிதாக வாடகைக்கு வந்திருக்கும் இளைஞர்தான் தன்னுடைய அபிமான எழுத்தாளர் கோகுலன் என்பது தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைகிறாள் காயத்ரி.
தினமும் மாடிக்குச் சென்று அவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் தொடர்கதையின் அடுத்த நகர்வைத் தெரிந்து கொண்டு அதைத் தன் தோழிகளிடம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் அவள்.
அந்தக் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு கோகுலன் தீர்மானித்திருந்த கிளைமாக்ஸ் முடிவு அவளுக்குப் பிடிக்காததால் மாற்றச் சொல்கிறாள். ஆனால் அவரோ மறுக்கிறார்.
அதனால, அவருக்குத் தெரியாமல், அவர் கொரியருக்காக தயார் செய்து வைத்திருந்த கவரை எடுத்து, அதிலுள்ள காகிதங்களை எடுத்து விட்டு, தான் எழுதிய கிளைமாக்ஸை வைத்து அனுப்பி விடுகிறாள்.
தான் எழுதிய கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதை அறிந்த கோகுலன் பத்திரிக்கை ஆசிரியரிடம் சண்டையிடுகிறார். ஆனால், அந்தக் கிளைமாக்ஸ் முடிவிற்காகவே அந்த நாவல் பெரும் பாராட்டைப் பெற, கோகுலன் குழப்பமாகிறார்.
அதை மாற்றியது யார் என்பதை அறிந்து கொண்டாரா?
அறிந்ததும் என்ன செய்தார்?
அதுதான் இந்த நாவலின் உயிர் நாடியே…கதையை வாசியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Athu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalukku Illai Thooram Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsMullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Enum Thean Kalanthu! Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5
Related to Kanavaana Kanavugal
Related ebooks
Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Uyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsAabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsThaa! Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Kallana Mullai..! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkey Enakkai Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Thanneriley Thaamarai Poo Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe... Rating: 0 out of 5 stars0 ratingsVillan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsகண்களுக்குச் சொந்தமில்லை Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Kaaval Deivam Rating: 0 out of 5 stars0 ratingsCocktail Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Pallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsI Am Tired! Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsKanal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theevu Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Yaathreegan Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kanavaana Kanavugal
0 ratings0 reviews
Book preview
Kanavaana Kanavugal - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
கனவான கனவுகள்
Kanavaana Kanavugal
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் -7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் -10
அத்தியாயம் -11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் -17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம் -20
அத்தியாயம் -21
அத்தியாயம் -22
அத்தியாயம் -23
அத்தியாயம் -24
அத்தியாயம் -25
அத்தியாயம் -26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 1
சோம்பல் முறிக்கும் ஞாயிற்றுக்கிழமை.
காலை பதினோரு மணி.
அந்தப் பாதையில் செல்வோர்களையெல்லாம் டிராபிக் கான்ஸ்டபிள் தடுத்து நிறுத்தி, வேறு பாதைக்குத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.
தன் பைக்கில் மித வேகத்தில் வந்து கொண்டிருந்த கோகுலன் கான்ஸ்டபிள் தடுக்கும் முன் தானே நின்று, என்ன சார் விஷயம்?... ஏன் ரூட்டை மாத்தி விடறீங்க?... ரோடு ரிப்பேர் வொர்க்கா?
இல்ல சார்... இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ரோட்டுல வினாயகர் சதூர்த்தி ஊர்வலம் போகப் போகுது... அதனால இப்பவே இதுல போக முடியாது!... அதோ அந்தக் கட் ரோட்டுல போங்க!
ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு குறுஞ்சிரிப்புடன் வண்டியைத் திருப்பி, கான்ஸ்டபிள் காட்டிய கட் ரோட்டுக்குள் புகுந்தார் கோகுலன். நடுத்தர வர்க்கத்து மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து சென்ற அந்த ரோட்டின் இருமருங்கிலும் அதிக படோடோபமில்லாத மினி பங்களாக்கள் போன்ற வீடுகள் வரிசையாக இருக்க, வேடிக்கை பார்த்தபடியே வண்டியைச் செலுத்தினார்.
வலது புறமிருந்த ஒரு வீட்டின் மாடிப்பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த வீடு வாடகைக்கு!
என்ற போர்டு அவர் கண்களில் பட, அட... இந்த வீட்டுல மாடிப்போர்ஷன் காலியாய் இருக்கும் போலிருக்கே!... நாம கேட்டுப் பார்த்தா... என்ன?
வண்டியை அந்த வீட்டின் கேட் முன் நிறுத்தி, இறங்கி, சுற்றும் முற்றும் நோட்டம் விட்டார். ஆஹா... ஏரியா நல்லா டீஸண்ட்டாத்தான் இருக்கு... இங்க வீடு கெடைச்சா... அதிர்ஷ்டந்தான்
யோசனையுடன் கேட்டின் கொக்கியை நீக்கிக் கொண்டு, சிறிய போர்ட்டிக்கோவைத் தாண்டிச் சென்று காலிங் பெல்லை அழுத்தினார் கோகுலன்.
உள்ளே ஒரு குயில் கூவி யாரோ வந்திருப்பதாய் தகவல் சொல்லியது.
அடுத்த இரண்டாம் நிமிடம் பாதி மட்டும் திறக்கப்பட்ட கதவுக்குப் பின் ஒரு மூத்த பெண்மணி, முகத்தில் பெரிய கேள்விக் குறியோடு தோன்றினாள்.
மேல் போர்ஷன்... வாடகைக்கு...?
ம்... ஒரு நிமிஷம்!
என்றவள் கதவை முழுவதுமாய்த் திறக்காமல், வீட்டிற்குள் திரும்பி, காயத்ரி... மாடிப் போர்ஷன் பார்க்க வந்திருக்காங்க!
என்று கத்தலாய்ச் சொல்லி விட்டு, அதோ... அந்தச் சேரில் உட்காருங்க... என் பொண்ணு இப்ப வருவா
என்று பார்வையால் என் பின்னாலிருந்த ப்ளாஸ்டிக் சேரைக் காட்டினாள்.
நகரத்தில் சமீப காலமாய் மலிந்து விட்ட வீடு புகுந்து திருட்டு... கொலை... கொள்ளை போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்டிருந்த ஜாக்கிரதை உணர்வு இன்னமும் அந்தப் பெண்மணியை முழுக்கதவையும் திறக்க விடாமல் செய்திருந்தது.
அப்போதுதான் குளித்து முடித்திருந்த ஈரத் தலையில் கொண்டையாய் சுற்றப்பட்டிருந்த துண்டுடன், யாரும்மா?
என்று கேட்டவாறே வெளியே வந்தாள் ஒரு இளம்பெண். நிச்சயம் அவள் அந்த மூத்த பெண்மணியின் மகள்தான் என்பதை கோகுலன் சட்டென யூகித்தார். அதே முக ஜாடை... அதே குரல்.
அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து, வணக்கம்மா... நான் ஈஸ்வரன் கோயில் வீதில ரூம் எடுத்துத் தங்கியிருக்கேன்!... உங்க வீட்டு மாடியில
வீடு வாடகைக்கு போர்டு பார்த்தேன்... அதான்... அதைப் பற்றி விசாரிச்சிட்டுப் போகலாம்னு...
அவருடைய மரியாதையான தோற்றமும், பவ்யமான பேச்சும் அவளுக்கு அவர் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த, உட்காருங்க சார்... நான் சின்னப் பொண்ணு... நீங்க பாட்டுக்கு எழுந்து நின்னு என்னைப் பெரிய மனுஷியாக்கிடாதீங்க!
சிரித்தபடி சொன்னவள் போர்ட்டிகோவில் தொங்கிக் கொண்டிருந்த பிரம்புக் கூடையில் அமர்ந்தாள்.
புன்னகைத்தவாறே மீண்டும் அமர்ந்த கோகுலனின் நாசி அவள் மீதிருந்து வரும் சோப்பு வாசனையை ரசித்தது.
என் பேர் காயத்ரி... அது அம்மா!... எங்க வீட்டுல நாங்க ரெண்டு பேர்தான்!... நீங்க எங்க வேலை பார்க்கறீங்க?... தனி ஆளா?... இல்லை ஃபேமிலியா?... சொந்த ஊர் இதேதானா?... வெளியூரா?...
அவள் ‘மள... மள’ வென்று கேள்விகளை அடுக்கிய விதத்தில் அவள்தான் அந்த வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாகி என்பது பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது.
நான்... ஒரு தனியார் கம்பெனில அக்கவுண்ட்ஸ் ஆபீஸரா இருக்கேன்!... இன்னும் கல்யாணம் ஆகலை!... பேச்சிலர்!... சொந்த ஊர்... திருச்சி...!
என்று சொன்னவர், ஒரு வேளை வெளியூர்... மற்றும் பேச்சிலர் என்கிற காரணத்திற்காக தனக்கு வீடு மறுக்கப்படுமோ?... என்கிற பயம் வந்துவிட, ஆனா... இந்தக் கோயமுத்தூர்க்கு வந்து கிட்டத்தட்ட எட்டு வருசத்துக்கு மேல ஆச்சு!... கல்யாணத்துக்கு பொண்ணு கூடப் பார்த்திட்டிருக்காங்க!... கூடிய சீக்கிரம் கல்யாணத்தை எதிர்பார்க்கலாம்!
அவசரமாய்ச் சொன்னார்.
அந்த காயத்ரி மெல்லத் தலையைத் திருப்பி, கதவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த தாயாரைப் பார்த்தாள். என்னம்மா... சார் பேச்சிலராம்... என்ன பண்ணலாம்?... நோ சொல்லிடலாமா?
அப்பெண்மணியோ பதிலேதும் கூறாமல், தலையை ஆட்டி மகளை அருகில் அழைக்க, இவளும் எழுந்து சென்றாள்.
போச்சு...
வீடும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை... எழுந்து போடா!ன்னு சொல்லப்போறாங்க!
தனக்குள் சொல்லிக் கொண்டார் கோகுலன்.
சில நிமிடங்களுக்குப் பின், மறுபடியும் வந்து பிரம்புக் கூடையில் அமர்ந்த காயத்ரி, சார்... உங்க அம்மாவுக்கு நீங்க நன்றி சொல்லிக்கங்க!
என்றாள்.
எங்க அம்மாவுக்கா?... நானா?... எதுக்கு?
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டார் கோகுலன்.
பின்னே?... உங்க முகத்தைப் பார்த்தா... ரொம்ப நல்லவரா... மரியாதைப்பட்டவராத் தெரியுதாம்... அதனால உங்களுக்கு மாடிப் போர்ஷன் குடுக்கலாம்னு எங்கம்மா சொல்லிட்டாங்க
அப்ப... உங்க அம்மாவுக்கல்ல நான் நன்றி சொல்லனும்?
ம்ஹும்... அப்படிப்பட்ட முகத்தை உங்களுக்கு குடுத்தது உங்க அம்மா அல்லவா? அதனால்தான் அவங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னேன்!
சொல்லி விட்டு, கல... கல...
வெனச் சிரித்தாள் அந்த காயத்ரி. அவளின் அந்த கள்ளமில்லாத பேச்சும்... கபடமில்லாத வெளிர்
சிரிப்பும் கோகுலனுக்குள் அவள் பால் ஒரு தனி ஈர்ப்பையே ஏற்படுத்தி