Nalla Manam Vazhga!
()
About this ebook
தன்னைத் துரத்தித் துரத்திக் காதலித்த திவாகரின் காதலை ஏற்க பிரியதர்ஷினி போட்ட கண்டிஷன், “சிறு வயதிலேயே தந்தையை இழந்த என்னை தனி ஆளாய் இருந்து வளர்த்து…ஆளாக்கியவள் என் தாய்!...நான் உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டு உங்க கூட வந்திட்டா…அவங்க மறுபடியும் தனியாயிடுவாங்க…அதனால….நான் புகுந்த விட்டிற்கு வரும் போது என் கூடவே என் தாயையும் கூட்டிக்கிட்டு வருவேன்.,…அதுக்குச் சம்மதம்ன்னா…உங்க காதலை ஏத்துக்கறேன்” என்கிறாள்.
காதல் மோகத்தில் திவாகரும் சம்மதிக்கிறான். அதை தன் தாய் தந்தையரிடமும் சொல்கிறான். தந்தை அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டாலும் அவன் தாய் மல்லிகாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மகனிடம் சம்மதம் தெரிவித்து விட்டு, தனியாய்ச் சென்று பிரியதர்ஷினியின் தாயைச் சந்தித்து மிரட்டுகிறாள்.
அந்த மிரட்டலுக்கு பயந்து அவள் தாயாரும் வர மறுக்கிறாள்.
திவாகர் - பிரியதர்ஷினி திருமணம் நடந்ததா?
நாவலுக்குள் உள்ளது விடை…வாசித்துப் பாருங்கள்.
Read more from Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Athu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalukku Illai Thooram Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsMullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Enum Thean Kalanthu! Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5
Related to Nalla Manam Vazhga!
Related ebooks
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Chittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalal Valarnthean! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Manathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Endrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsPriyasagaa Rating: 5 out of 5 stars5/5Makeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Unnidam Mayangukirean Rating: 5 out of 5 stars5/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Karaiyai Thedum Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsUyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Vedhamadi Neeenakku! Rating: 5 out of 5 stars5/5Unnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratingsTholainthu Pona Thozhikku... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Paattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nalla Manam Vazhga!
0 ratings0 reviews
Book preview
Nalla Manam Vazhga! - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
நல்ல மனம் வாழ்க!
Nalla Manam Vazhga!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
மாலை நேரம். மேற்குச் சூரியன் உஷ்ணம் குறைந்து சிவப்பு பூசியிருந்தான்.
வழக்கத்தை விட அன்று வா.உ.சி.பூங்காவில் கூட்டம் சற்று அதிகமாயிருந்தது.
வாக்கிங் போய்க் கொண்டிருந்த பெரிசுகளை நக்கலடித்தவாறே பைக்கின் மீது அமர்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம்.
கேர்ள் ஃப்ரெண்டுக்கு ஆக்டிவா ஓட்டிப் பழக்கி விடும் சாக்கில் தாராளமாய் விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு ஜீன்ஸ்காரன்.
சுண்டல் வண்டிக்காரன் படு பிஸியாயிருந்தான். கரும்புச் சாறு வண்டியை மொய்த்திருந்தன மனித ஈக்கள்.
மித மிஞ்சிய ஜனத்திரள் காரணமாய், உட்கார்ந்து பேச தோதான இடம் அமையாத காதல் ஜோடிகள் முணுமுணுத்தவாறே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
இன்னும் சில ஜோடிகளோ கூட்டத்தைப் பற்றி இம்மியும் கவலைப்படாமல், தாங்களுண்டு தங்கள் வேலையுண்டு, என்கிற ரீதியில் கூட்டத்தின் மத்தியிலேயே உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர். தங்கள் காதலர்கள் அவிழ்த்து விடும் மொக்கை ஜோக்குகளுக்கும் விழுந்து விழுந்து சிரித்தனர் காதலிகள். காதலிகளின் சாதாரணமான அசைவுகளையும் வாவ்
என்று சொல்லி போலியாய் ரசித்தனர் காதலர்கள்.
பூங்காவின் மெயின் கேட்டருகே, நகத்தைக் கடித்தவாறு நின்று கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. ஆறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் கடும் உழைப்பில் படித்து, இன்று ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக அமர்ந்திருப்பவள். ஏழ்மையில் இருந்தாலும் அழகில் பணக்காரி. குணத்தில் தங்கம். கல்லூரிக்காலம் தொட்டு இன்று வரை ஏறக்குறைய நாற்பத்தி ஆறு பேர் அவளிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திய போதும், யார் வலையிலும் வீழாமல் வஜ்ரப் பிடிப்பாய் நின்றிருந்தவள், கடந்த ஆறு மாதமாய் அந்தப் பிடிப்பிலிருந்து விலகி, திவாகர் என்னும் இளைஞனிடம் தோற்றுப் போயிருந்தாள்.
ப்ச்... மணி ஆறே காலுக்கும் மேலாச்சு... இந்த திவாகர் குரங்கை இன்னும் காணோம்!
தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தவளின் முதுகிற்குப் பின் புறம் பூனை போல் வந்து நின்று, மியாவ்
என்று கத்தினான் திவாகர்.
விருட்
டெனத் திரும்பிப் பார்த்து முறைத்தவள்,
இதான் ஆறு மணிக்கு வர்ற லட்சணமா?
ரொம்ப நேரமாத் தனியா நிக்கற என்னைய பார்த்து அம்பது வயசுக்காரனுக கூட ஹி... ஹி
ன்னு இளிச்சு அழைப்பு விடறானுக! இதெல்லாம் எனக்குத் தேவையா திவா?"
ஸாரி டியர்! வர்ற வழில ஹெவி டிராபிக்... ஒவ்வொரு சிக்னலிலும் கிட்டத்தட்ட நூறு வண்டிக நிக்குது... நான் என்ன பண்ணுவேன்?
என் காதலி வெய்ட் பண்ணிட்டு இருக்கா... அதனால என்னைய சீக்கிரம் போக விடுங்கடா?ன்னு சைரனும்... அறிவிப்பும் போட்டுட்டா வர முடியும்?
சொல்லி விட்டுக் கண்களால் கெஞ்சினான்.
க்கும்... இப்படி பரிதாபமாய்ப் பார்த்துப் பார்த்தே என் கோபத்தையெல்லாம் கரைச்சிடு!
என்று புன்னகையோடு முணுமுணுத்த பிரியதர்ஷினி, சரி... வாங்க பார்க்குக்கு உள்ளார போயிடுவோம்!..இங்க நின்னா யார் கண்ணிலாவது பட்டுடுவோம்!
இருவரும் பூங்காவினுள் நுழைந்து அமர இடம் தேடினர்.
என்னது... இன்னிக்குக் கூட்டம் எக்கச்சக்கமா இருக்கு? உட்காரக் கூட இடம் கிடைக்க மாட்டேங்குது!
திவாகர் நாலாப்புறமும் பார்வையை ஓட்டியபடியே சொன்னான்.
அதோ அங்க பாரு திவா... அந்த பூட் ஹவுஸ் பக்கத்துல ஒரு பெஞ்சு காலியாயிருக்கு!
கை காட்டினாள் பிரியதர்ஷினி.
அவர்களுக்கு முன் வேறு யாராவது வந்து அந்த பெஞ்சினை ஆக்கிரமித்து விடுவதற்கு முன் தாங்கள் கைப்பற்றியே தீர வேண்டும், என்கிற முனைப்பில் இருவரும் அவசர அவசரமாய் ஓடிப் போய் அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.
ப்ரியா... ஒரு முக்கியமான விஷயம் பேசி... முக்கியமான முடிவை நாம இன்னிக்கு... இங்க... எடுத்தே தீரணும்!
ஆணித்தரமாய்ச் சொல்லி ஆரம்பித்தான் திவாகர்.
புருவங்களை நெரித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் பிரியதர்ஷினி.
நேத்திக்கு ஊரிலிருந்து மாமாவும்... அத்தையும் வந்திருந்தாங்க! அவங்க திடீர்னு வந்ததோட நோக்கம் என்ன தெரியுமா?
என்ன? அவங்க வீட்டுல ஒரு அருக்காணியோ... அன்னக்கிளியோ இருப்பாங்க... அதை உனக்குப் பேசி முடிக்க வந்திருப்பாங்க! அதானே?
சிரித்துக் கொண்டே சொன்னாள் பிரியதர்ஷினி.
அடிப்பாவி! நான் எத்தனை சீரியஸாய்ப் பேசிட்டிருக்கேன்... நீ பாட்டுக்கு சிரிக்கறியே?
த பாரு திவா... நாம ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சு..ஆறு மாசமாச்சு! நாம நம்ம லவ்வைத் துவங்கினப்பவே நான் சொல்லிட்டேன்..
எங்க வீட்ல எனக்கு அம்மா மட்டும்தான்! அவங்க நிச்சயம் என் காதலுக்குத் தடை சொல்ல மாட்டாங்க! ஏன்னா அவங்க நான் எடுக்கற எல்லா முடிவுகளுமே தெளிவாகவும்... தீர்க்கமாகவும் இருக்கும்னு நம்பறவங்கன்னு! ஸோ... இப்ப முடிவு சொல்ல வேண்டியது உங்க பேரண்ட்ஸ்தான்!
நோ டவுட்! எங்க பேரண்ட்ஸும் என்னோட காதலுக்கு தடை சொல்ல மாட்டாங்க! பிகாஸ்? அவங்க ரெண்டு பேருமே அந்தக் காலத்திலேயே லவ் மேரெஜ் பண்ணிக்கிட்டவங்க!
சந்தோஷமாய்ச் சொன்னான் திவாகர்.
அப்புறமென்ன திவா? உடனே நம்ம காதலைப் பத்தி அவங்க காதுல போட்டு... சம்மதத்தை வாங்கிடு! முக்கியமா என்னோட நிபந்தனையை மறக்காமச் சொல்லிடு! இல்லேன்னா பின்னாடி தேவையில்லாத பிரச்சினைகள் வந்திடும்!
என்றாள் பிரியதர்ஷினி.
நிபந்தனை? வாட் நிபந்தனை?
புதிதாய்க் கேட்டான் திவாகர்.
என்ன திவா? புதுசாய்க் கேட்கறீங்க? நான் ஆரம்பத்திலேயே உங்க கிட்ட சொல்லியிருந்தேனே? நீங்க கூட
சரின்னு ஒத்துக்கிட்டீங்களே?
அது... வந்து... ஹி... ஹி...
என்று தன் தலையைச் சொறிந்த திவாகர், ஸாரி ப்ரியா... நான் மறந்திட்டேன்... அந்தச் சமயத்துல எப்படியாவது என் காதலுக்கு உன் கிட்டேயிருந்து சம்மதம் வாங்கினாப் போதும் என்கிற மனநிலையில் நீ சொன்ன எல்லாத்துக்குமே
ஆமாம் போட்டுட்டேன்! அதுல இப்ப நீ எந்த நிபந்தனையைச் சொல்லுறே?ன்னு புரியலை!
அசடு வழிந்தான்.
ப்ச்... என்ன திவா? எவ்வளவு பெரிய விஷயம் அது? ஆக்சுவலா சொல்லணும்னா... அந்த கண்டிஷனுக்கு நீங்க ஓ.கே. சொன்னதினால்தான் நான் உங்க காதலுக்கே ஓ.கே.சொன்னேன்! நீங்க என்னடான்னா... அதை மறந்திட்டு... இப்ப என்னையே கேட்கறீங்க!
ஒரு சிறிய கோபத்தைக் காட்டினாள் பிரியதர்ஷினி.
நோ ப்ராப்ளம் ப்ரியா! நீ எனக்கு வேணும்! அதுக்காக நீ என்ன கண்டிஷன் போட்டாலும் நான்
சரின்னுதான் சொல்லப் போறேன்! இப்ப சொல்லு அந்த கண்டிஷனை!
அவனுடைய அந்தப் பேச்சில் லேசான நம்பிக்கை துளிர்க்க பிரியதர்ஷினி தன் நிபந்தனையைச் சொன்னாள். திவா... நான் ஆறு வயதாய் இருக்கும் போதே அப்பாவை ஒரு விபத்தில் இழந்திட்டேன்... அதுக்குப் பிறகு முழுக்க முழுக்க என் அம்மாவின் ஆதரவில்தான் வளர்ந்தேன்! எங்கம்மா எனக்காக தன் இளமையை... வாழ்க்கையை... மொத்தமாய் தியாகம் செய்து... படாதபாடு பட்டு... என்னைப் படிக்க வெச்சாங்க! ராத்திரி... பகல்... ன்னு பார்க்காம கடுமையா உழைச்சு... தன் ஆரோக்கியத்தைப் பற்றிக் கூடக் கவலைப்படாம என்னை ஒரு பொச்ஸனுக்கு கொண்டு வந்தாங்க! இப்ப வயசான காலத்துல மொத்தமா ஆரோக்கியத்தை இழந்து... ஸிக்கா நடமாடிட்டிருக்காங்க!
வாவ்... கிரேட் லேட் மை மதர் இன் லா!
சொல்லி விட்டுத் தோள்களைக் குலுக்கினான் திவாகர்.
உங்களுக்கு ஒரு மாபெரும் உண்மையைச் சொல்லட்டுமா? எனக்கும் எங்கம்மாவுக்கு இடையில் எந்த ஆண் மகனும் வந்திடக் கூடாது, என்பதற்காக வாழ்க்கைல கல்யாணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை
என்கிற கொள்கையோடு... இந்த ஜென்மம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்திடறது! என்று இருந்தவ நான்! அதுக்குக்