Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indre Nesiyungal
Indre Nesiyungal
Indre Nesiyungal
Ebook80 pages43 minutes

Indre Nesiyungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் கணவனை இழந்த நாயகியான லட்சுமி கணவனின் வேலை பார்த்த கம்பெனியில் வேலைக்கு சேர்கிறாள்.

அந்த நிர்வாகத்தினை எதிர்த்து தொழிலாளர்களுக்காக நியாயம் கேட்டு போராடுகிறாள்.

இந்நிலையில் அவளுக்கு ஒரு புது சினேகிதன் உண்டாகிறது.

அந்த சினேகிதத்தால் அவள் அடைவது நன்மையா? அல்லது தீமையா? அது அவளுக்கு எந்த வகையில் உதவியது? அந்த சினேகிதன் யார் என்பதை நம் கதையின் வாயிலாக காணலாம்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580125405855
Indre Nesiyungal

Read more from Vaasanthi

Related to Indre Nesiyungal

Related ebooks

Related categories

Reviews for Indre Nesiyungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indre Nesiyungal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    இன்றே நேசியுங்கள்

    Indre Nesiyungal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    லட்சுமி அந்த மேடைப் பேச்சாளனை சுவாரஸ்யத்துடன் பார்த்தாள். ஆள் வாட்டசாட்டமாக நல்ல நிறமும் விசாலமான கண்களுமாய் இருந்தான். குரலில் ஒரு குழைவைப் புகுத்தி சினேகிதம் காண்பித்தான். சீரான பல் வரிசை தெரிய சிரிக்கும் போது வசீகரமாக இருந்தது.

    பணத்துக்கு ஒரு அழகு இருக்கத்தான் செய்யுது என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். பாலும் பழமும் வெண்ணையுமாக தினம் சாப்பிடுபவனின் உடம்பு வேறு எப்படி இருக்கும்?

    முதலாளியோட மருமகன் என்கிறதினாலே எனக்கு உங்க குறைகள் புரியாதுன்னு நினைக்காதீங்க!

    அவளுக்குச் சிரிப்பு வந்தது. குளிர் பெட்டி வீட்டுக்குள்ளே பஞ்சணையிலே படுக்கிறவனுக்கு இங்கிருக்கிற குறைகள் புரியுதாமே!

    முதலாளிக்கும் தொழிலாளிக்கும் மனஸ்தாபம் இருந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லே. இரண்டுக்கும் பாலமா இருக்க நா தயாராயிருக்கேன். என்னை சினேகிதனா ஏத்துக்குங்க.

    கூட்டத்தில் சில பேர்கள் பலமாகக் கைத்தட்டினார்கள். பேச்சு முடிந்துவிட்டது என்கிறார் போல், அந்தப் பேச்சாளன் பாலகிருஷ்ணன், 'வணக்கம்' என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு மேடையை விட்டு இறங்கினான். அவனுடன் பவ்யமாக நடந்த கந்தசாமி லட்சுமி நின்றிருந்த இடத்திற்கு வந்ததும் நின்றான்.

    பாலகிருஷ்ணனும் லட்சுமியும் தீவிரமாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்கும்போது கந்தசாமி புன்னகையுடன் ஆரம்பித்தான்.

    இது யாரு, தெரியுமில்லே?

    பாலகிருஷ்ணன் கண்களில் சுவாரஸ்யம் பளிச்சிட மெல்ல நகைத்தான்.

    தெரியல்லியே? என்றான் தயாராகக் கைகளைக் கூப்பி வணக்கத்தைத் தெரிவித்தபடி.

    இதுதான் பழனியுடைய சம்சாரம்.

    பாலகிருஷ்ணனின் புருவம் சுருங்கிற்று.

    எந்தப் பழனி?

    அதான் போன வருஷம் லேபர் தகராறு நடந்தப்ப விபத்திலே இறந்து போனானே...!

    பாலகிருஷ்ணனின் முகம் சட்டென்று மாறிற்று. விசனமும் கரிசனமும் தெரிந்தன.

    ஓ! என்றான் அனுதாபத்துடன். நான் அதற்காக ரொம்ப வருத்தப்படறேன் அம்மா. அதற்கான காம்பன்ஸேஷன் பணம் எல்லாம் கிடைச்சுதா?

    முகத்தில் எந்தவித மாறுதலையும் வெளியிடாமல் லட்சுமி சிரித்தாள்.

    இந்த அம்மாதொம்மா எல்லாம் வேண்டாம். லட்சுமின்னே கூப்பிடுங்க!

    பாலகிருஷ்ணனின் பார்வையில் வியப்பு தெரிந்தது.

    அலட்சியமாக நின்றிருந்த அந்த மதர்த்த உடம்பை அவன் சுவாரஸ்யத்துடன் பார்த்தபடி மெலிதாகச் சிரித்துவிட்டுச் சொன்னான்.

    சரி. லட்சுமின்னே கூப்பிடறேன். காம்பன்ஸேஷன் பணம் கிடைச்சுதா?

    ஆ. கிடைச்சுதே! பழனி கண்ணை மூடறதுக்கு முந்தியே தயாராய் வெச்சிருந்த பணம் மாதிரி பொணம் கிடக்கும்போதே கிடைச்சுட்டுதே.

    பாலகிருஷ்ணன் சங்கடத்துடன் அவளைப் பார்த்தான்.

    உடனுக்குடனே உதவி செஞ்சாலும் தப்பா? முதலாளித்துவத்து மேல இருக்கற பகையினாலேதானே எல்லாத்தையும் தப்பா நினைக்கப் பழகியிருக்கீங்க?

    அவள் சுளீரென்று அவனைப் பார்த்தாள்.

    இந்தப் பகை காரணமில்லாம வரதில்லே! என்றாள். மறுவினாடி விருவிருவென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

    நாபியிலிருந்து ஒரு கோபம் பொங்கிப் பொங்கி எழுந்தது. நீரெல்லாம் வற்றிப் போன கண்களில் சூடேறி குத்தலெடுத்தது. தன்னுடைய ஒரு ரூம் குவார்ட்டர்ஸின் பூட்டைத் திறக்கும் போது பக்கத்து குவார்ட்டர்களிலெல்லாம் இரவு சமையலுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது நாசிக்கு எட்டிற்று.

    பழனி உயிரோடு இருக்கும்வரை அவளும் இப்படித்தான் இந்தக் கட்டிடத்து மற்ற வேலை பார்க்கும் பெண்களைப் போல மாலை ஆலை முடிந்து சங்கூதின கையோடு வீட்டுக்குத் திரும்பி அடுப்பைப் பற்ற வைப்பாள். பழனி வக்கணையான ஆள். நெருவிசாக சமைத்துப் போடவில்லையானால் பல்லை உடைத்து விடுவான்.

    பழனி போனவுடன் வக்கணையும் போயிற்று நெருவிசும் போயிற்று.

    Enjoying the preview?
    Page 1 of 1