Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravugal Kanavukkaga...
Iravugal Kanavukkaga...
Iravugal Kanavukkaga...
Ebook88 pages31 minutes

Iravugal Kanavukkaga...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தன் நண்பனே தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தியதால் வேறு வேலை தேடி இன்னொரு நண்பன் சிவாவை சந்திக்க சென்னை வருகிறார் ஜெகன். எதிர்பாராத விதமாக சிவா வீட்டு ஓனர் வெங்கியுடன் நட்பு கொள்கிறார்கள். இந்த நட்பு சிவாவுடன் தங்குவதற்கு ஏதுவாக அமைகிறது. வெங்கியின் மகள் ஸ்வாதியின் மீது ஒருதலை பட்சமாக காதல் கொள்கிறான் ஜெகன். காதலை தெரிவிக்க முடியாமல் ஸ்வாதியை பெண் பார்க்க வருபவர்களின் வீட்டிற்கு ரகசிய கடிதம் எழுதுகிறான். இந்த ஏமாற்றம் தெரியாமல் ஸ்வாதியும் காதலில் விழுகிறாள். உண்மை தெரியும் நேரத்தில் ஜெகனின் காதலை ஏற்பாளா? ஜாதகத்தை நம்பும் ஸ்வாதியின் குடும்பத்தில் ஜெகனை ஏற்பார்களா? காதலை மையமாகக் கொண்ட இரவுகள் கனவுக்காக காத்திருப்போம்…
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100906506
Iravugal Kanavukkaga...

Read more from Pattukottai Prabakar

Related to Iravugal Kanavukkaga...

Related ebooks

Reviews for Iravugal Kanavukkaga...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravugal Kanavukkaga... - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    இரவுகள் கனவுக்காக...

    Iravugal Kanavukkaga...

    Author:

    பட்டுகோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அதிகாலை 5.30க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாடின மலர்களாக பயணம் முடித்தவர்கள் ரயில்களிலிருந்து இறங்கி லக்கேஜ் எண்ணிக் கொண்டிருக்க, பது மலர்களாக பயணம் துவக்குபவர்கள் ரயில்களில் லக்கேஜ் அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

    வானத்தில் விடியலுக்கான ஆயத்தங்கள் இருந்தன. முன்னிரவு மழையின் தடயங்கள் தரையிலும், காற்றிலும் தென்பட்டன. சக்கர வண்டிகளில் இட்லி, வடை, மினரல் வாட்டர், காலை பத்திரிகைகள் விற்றுக் கொண்டிருக்க, உயரத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வாஷிங் பவுடருக்கு விளம்பரம் கூவியது.

    ஜெகன் தோளில் லெதர்பேக், கையில் சூட்கேஸ் சகிதம் கலைந்த தலையுடன் நடந்துவந்து காகிதக் கோப்பையில் நெஸ் காபி அருந்தி முதல் பருகலில் நாக்கைச் சுட்டுக் கொண்டான்.

    தொங்கின செய்தித்தாள்களில் பில் போஸ்டர்களில் தலைப்புச் செய்திகளை வாசித்தான்.

    ஜெயின் கமிஷன் அறிக்கை குறித்து தமிழக முதல்வர் சிறப்புப் பேட்டி - உ. பி. யில் தற்போதைய அரசியல் நிலவரம் - வீரப்பனைப் பிடித்தே தீருவேன் - போலீஸ் உயரதிகாரி ஆவேசப் பேட்டி - படைப்பாளிகள் சங்கத்துடன் சமரசமா? - மீண்டும் ஒரு போலிச் சாமியார் கைது - மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி. தீபாவளி படங்கள் - ஒரு பார்வை.

    ஜெகன் ஏராளமான நாற்காலிகளில் ஒரு காலி நாற்காலி தேடிச் சென்று அமர்ந்து கால்களுக்கிடையில் சூட் கேசையும், பேகையும் வைத்துக் கொண்டான்.

    சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான். பக்கத்துப் பெரியவர் இருமியதும் புகையை மாற்று திசையில் ஊதினான். நேரம் பார்த்தான்.

    இங்கேயிருந்து பத்து நிமிடத்தில் சிவாவின் அறைக்குச் சென்றுவிடலாம். சிவா ஏழு மணிக்கு முன்பாக எழுந்திருக்க மாட்டான். இப்போது புறப்பட்டுப் போய் நின்றால் அநியாயத்திற்கு அவனுடைய ஒரு மணி நேரத் தூக்கம் கெட்டுப் போய்விடும்.

    ஒரு மணி நேரம் இங்கேயே உட்கார்ந்து விட்டுப் பிறகு அவன் அறைக்குப் போகலாம். அது வரை?

    தன் பேகிலிருந்து பாதி படித்து வைத்திருந்த ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்தான். விண்ட்சன் சர்ச்சிலின் வாழ்க்கை வரலாறு!

    சில பக்கங்கள் படித்ததும் மனம் ஒத்துழைக்கவில்லை.

    நேற்று இரவு ரயில் ஏறியதிலிருந்து மனசாட்சியின் சுட்டு விரல் ஒன்று 'நீ செய்தது சரிதானா?' என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

    வாழ்க்கை என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான். இன்னும் ஒரு நாள் கண்டிப்பாக நாம் உயிருடன் இருப்போம் என்கிற நம்பிக்கையில்தான் நாளைக்கும் சேர்த்து காய்கறி வாங்குகிறோம். இன்னும் ஒரு வருடம் நாம் இருப்போம் என்கிற நம்பிக்கையில் தான் அடுத்த வருடம் முடிவடைகிற மாதிரி கட்டடம் கட்டுகிறோம். இன்னும் ஐந்து வருடம் நாம் இருப்போம் என்கிற நம்பிக்கையில்தான் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கில் பணம் போடுகிறோம்.

    அப்படியிருக்க ஜோதிராமன் என்மேல் நம்பிக்கை இல்லாமல் எப்படி அந்தக் கேள்வியைக் கேட்கலாம்?

    இவனிடம் நான் போய் வேலை கொடு என்று கெஞ்சினேனா?

    ஜெகன், படிச்சுட்டு சும்மாத்தானே இருக்கே? இப்போ நான் மூணு பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திட்டு இருக்கேன். ப்ராஜெக்ட் சூபர்வைசரா என்கூட சேர்ந்து வேலை பாரேன். உனக்கும் ஒரு அனுபவமா இருக்கும். ஆயிரத்தைந்நூறு தரேன்.

    அழைத்தது யார்? நீ தானே? என் படிப்புக்கேற்ற, தகுதிக்கேற்ற ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக சம்பளம் கிடைக்கிற பல வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோது, நேரத்தை செலவு செய்ய வேண்டாமே என்று நினைத்துத்தானே உன்னிடம் சேர்ந்தேன்.

    உன்னோடு படித்தவன் என்கிற உரிமை, நட்பு வேண்டாம், ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1