Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathai Sonnavar Kathai
Kathai Sonnavar Kathai
Kathai Sonnavar Kathai
Ebook174 pages1 hour

Kathai Sonnavar Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘கதை’ என்று சொன்னதுமே, சிறுவர்களின் மலர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இனிக்க இனிக்க அவர்களுக்குக் கதை சொல்லி இன்பம் பெற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கைக்குத்தான் கணக்குண்டா? பரம்பரை பரம்பரையாக வந்த கதைகளைத்தான் காது வழியாகக் கேட்டு, வாய் வழியாகப் பேரக் குழந்தைகளுக்குப் பாட்டிமார் கூறிவந்தார்கள்.

இங்கனம் கூறப்பட்டு வந்த கதைகளை, ‘அழிந்து போகாமால் காப்பாற்ற வேண்டுமே' என்ற ஆசையில் அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்தார்கள் சிலர். தாங்களாகவே சில கதைகளைக் கற்பனை செய்து, அவற்றைக் குழந்தைகளிடத்திலே கூறிவந்தார்கள் வேறு சிலர். இன்னும் சிலர் அவ்வப்போது பல கதைகளை நாட்டு மக்களிடம் கூறி, அவர்களை நல்வழிப்படுத்தி வந்தார்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580123106488
Kathai Sonnavar Kathai

Read more from Kulandai Kavignar Al. Valliappa

Related to Kathai Sonnavar Kathai

Related ebooks

Reviews for Kathai Sonnavar Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathai Sonnavar Kathai - Kulandai Kavignar AL. Valliappa

    https://www.pustaka.co.in

    கதை சொன்னவர் கதை

    Kathai Sonnavar Kathai

    Author:

    அழ. வள்ளியப்பா

    AL. Valliappa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kulandai-kavignar-al-valliappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. புகழ் தேடிப் புறப்பட்டவர்

    2. குட்டிக் கதைகள் கூறியவர்

    3. தேசீய கீதம் பாடியவர்

    4. எழுபது வயதில் இனிய கதை தந்தவர்

    5. கதாசிரியரான கணித ஆசிரியர்!

    6. பேரப்பிள்ளைகளுக்குப் பிரியமாய்க் கதை சொன்னவர்

    7. இலக்கியம் திரட்டிய இரட்டையர்

    8. கடிதத்திலே கதை சொன்னவர்

    9. குதிரைச் சவாரியில் கதை சொன்னவர்

    10. புத்தகம் எழுதிய போர்வீரர்!

    11. புதையல் தீவுக் கதையைத் தந்தவர்!

    12. வானொலியில் கதை சொன்னவர்

    ஆசிரியர் கூறுகிறார்

    ‘கதை’ என்று சொன்னதுமே, சிறுவர்களின் மலர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இனிக்க இனிக்க அவர்களுக்குக் கதை சொல்லி இன்பம் பெற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கைக்குத்தான் கணக்குண்டா? பரம்பரை பரம்பரையாக வந்த கதைகளைத்தான் காது வழியாகக் கேட்டு, வாய் வழியாகப் பேரக் குழந்தைகளுக்குப் பாட்டிமார் கூறிவந்தார்கள்,

    இங்கனம் கூறப்பட்டு வந்த கதைகளை, ‘அழிந்து போகாமால் காப்பாற்ற வேண்டுமே' என்ற ஆசையில் அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்தார்கள் சிலர். தாங்களாகவே சில கதைகளைக் கற்பனை செய்து, அவற்றைக் குழந்தைகளிடத்திலே கூறிவந்தார்கள் வேறு சிலர். இன்னும் சிலர் அவ்வப்போது பல கதைகளை நாட்டு மக்களிடம் கூறி, அவர்களை நல்வழிப்படுத்தி வந்தார்கள்.

    இவ்வாறு கூறப்பட்டுவந்த கதைகள் அந்தந்த நாட்டு எல்லைகளைக் கடந்து, மலைகளைக் கடந்து. கடல்களைக் கடந்து உலகமெங்கும் பரவி, ஆங்காங்கேயுள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டி வருவதை இன்று நாம் காண்கின்றோம். சாகா வரம் பெற்ற அக்கதைகளைத் தந்த ஆசிரியர்களைப் பற்றிக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இந்த நோக்கத்துடனே குழந்தைகள் விரும்பும் கதைகளைச் சொல்லிய பன்னிரண்டு கதாசிரியர்களைப் பற்றி எழுத நினைத்தேன். ‘கங்கை' இதழில் தொடர்ந்து எழுதினேன். ஒவ்வொரு கதாசிரியரின் வாழ்க்கையும் அவர் சொல்லிய ஒரு கதையுடன் தொடங்குகிறது. அவர்களது கதைகளைப் போலவே, அவர்களது வாழ்க்கை வரலாறுகளும் சுவையாக இருக்கின்றன.

    நல்ல நல்ல கதைகளைக் குழந்தைகளுக்குக் கூறி அவர்களுக்கு இன்பம் ஊட்டி, தாமும் இன்பம் பெற்ற அப்பெரியார்களைப் பற்றிக் கூறுவதிலே நானும் இன்பம் பெறுகின்றேன். குழந்தைகளும் இவற்றைப் படித்து இன்பம் பெற வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.

    சென்னை - 7

    30 – 5 - 61

    1. புகழ் தேடிப் புறப்பட்டவர்

    வெகு காலத்திற்கு முன்பு ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவர் அடிக்கடி உடை மாற்றுவார். ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு விதமான உடை அணிவார். துணி வாங்குவதிலும், துணி தைப்பதிலுமே பணத்தையெல்லாம் செலவிட்டு வந்தார்.

    அந்தச் சக்கரவர்த்தியிடம் ஒருநாள் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். ஆனால், பார்ப்பதற்கு நல்லவர்கள் போல நடித்தார்கள். அவர்கள் சக்கரவர்த்தியைப் பார்த்து, நாங்கள் நெசவாளர்கள். நாங்கள் தயார் செய்யும் துணி மிகமிக மெல்லியதாயிருக்கும்; வண்ணங்கள் கண்ணைக் கவரும். இன்னொரு அதிசய சக்தியும் அதற்கு உண்டு. புத்திசாலிகளின் கண்களுக்குத்தான் அந்தத் துணி தெரியும்; முட்டாள்களின் கண்களுக்குத் தெரியவே தெரியாது! என்றார்கள்.

    சக்கரவர்த்தி அவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பிவிட்டார். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனேயே, சரி, உங்களுக்குத் தனியாக ஒரு வீடும், வேண்டிய பணமும் தரச் சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம் என்றார்.

    அவர்களுக்குத் தனியாக ஒரு வீடும், ஏராளமான பணமும் தரப்பட்டன. அவர்கள் அந்த வீட்டிலே இரண்டு தறிகளைக் கொண்டுவந்து வைத்தனர். ஆனால் துணி நெய்யவில்லை; நெய்வது போல் பாசாங்கு செய்தனர்.

    சில நாட்கள் சென்றன. சக்கரவர்த்தி தம்முடைய முதல் மந்திரியை அழைத்து, துணிகள் எப்படித் தயாராகின்றன என்று பார்த்து வரச் சொன்னார். முதல் மந்திரி அந்த இரண்டு பேர்வழிகளும் இருந்த வீட்டுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இருவரும் துணி நெய்வதுபோல் நடித்தனர்.

    மந்திரியின் கண்களுக்குத் துணி எதுவும் தெரியவில்லை. ஆனாலும், அவர் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. துணி தெரியவில்லையே, என்று சொன்னால் ‘முட்டாள் பட்டம்' கிடைத்து விடுமே! ஆகையால், அவர், ஆஹா! எவ்வளவு மெல்லிய துணி! அற்புதமான வர்ணங்கள்! என்று புகழ்ந்து கூறிவிட்டு, சக்கரவர்த்தியிடம் திரும்பி வந்தார். அவரிடமும் அதிசயத் துணியைப் பற்றி ஒரேயடியாக வர்ணிக்கத் தொடங்கி விட்டார்.

    இரண்டு நாள் கழித்து, சக்கரவர்த்தி இன்னொரு பெரிய உத்தியோகஸ்தரை அனுப்பி வைத்தார். அவரும் அங்கே சென்று பார்த்தார். அவருடைய கண்ணுக்கும் துணி எதுவும் தெரியவில்லை. ஆனாலும், அவர் விட்டுக் கொடுக்கவில்லை. சக்கரவர்த்தியிடம் திரும்பிவந்து, பார்க்காத துணியைப் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசினார்.

    சக்கரவர்த்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி. உடனே துணியைப் பார்ப்பதற்கு அவரே நேராகப் புறப்பட்டுச் சென்றார். அவரைக் கண்டதும், மிகவும் மும்முரமாகத் துணி நெய்வதுபோல் இருவரும் நடித்தார்கள். சக்கரவர்த்தி எவ்வளவுதான் கூர்ந்து பார்த்தும், துணி தெரியவில்லை. அங்கே இருந்தாலல்லவா தெரிவதற்கு? ஆனாலும், உண்மையைக் கூற அவருக்குத் துணிச்சல் இல்லை. ஆஹா! அற்புதம்! அபாரம்! பிரமாதம்! துணி என்றால் இதுவல்லவா துணி! என்று வாய் விட்டுக் கூறினார்.

    இந்தத் துணியிலே தங்களுக்கு அழகான ஆடை தைக்கப் போகிறோம். ஆடை தயாரானதும் அதைத் தாங்கள் அணிந்து இந்த நகரில் ஊர்வலம் வரவேண்டும் என்றார்கள் அந்தப் பொல்லாதவர்கள்.

    சக்கரவர்த்தியும் சரி என்றார். ஒரு நல்ல நாள் பார்த்து அன்று ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்தார்கள்.

    குறித்த நாளில் சக்கரவர்த்தி துணி தயாராகும் வீட்டுக்கு வந்தார். நெசவாளராய் நடித்த இருவரும் சக்கரவர்த்தி அணிந்திருந்த உடைகளைக் கழற்றினார்கள். பிறகு அவர்களில் ஒருவன் கால்சட்டையைப் போட்டுவிடுவது போல் பாசாங்கு செய்தான்; மற்றொருவன் மேல்சட்டையைப் போட்டுவிடுவது போல் நடித்தான். சிறிது நேரத்தில், ஆஹா! எவ்வளவு அழகாயிருக்கிறது! சக்கரவர்த்திக்கு மிகவும் பொருத்தமான உடை! என்று அவர்கள் கூறினார்கள். பிறகு ஊர்வலம் புறப்பட்டது.

    சக்கரவர்த்தி ஊர்வலமாக வருவதை தெருவில் எல்லோரும் பார்த்தார்கள். ஐயோ! ஆடையின்றி வருகிறாரே என்று ஒருவராவது சொல்ல வேண்டுமே! அதுதான் இல்லை. ஏன்? அந்த ஆடை யார் யார் கண்களுக்குத் தெரியவில்லையோ அவர்களெல்லாம் முட்டாள்கள் என்ற செய்திதான் ஏற்கெனவே நகர் முழுவதும் பரவி விட்டதே! அதனால் சில ‘புத்திசாலிகள்', அடடா! அடடா! துணியென்றால் இதுவல்லவா துணி! எவ்வளவு அற்புதமாயிருக்கிறது! என்று புகழவும் ஆரம்பித்து விட்டனர்.

    இப்படி எல்லோரும் புத்திசாலிகளாக நடித்துக் கொண்டிருந்த அச் சமயத்தில் திடீரென்று ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

    ஐயையோ! சக்கரவர்த்தி உடுப்பு இல்லாமல் போகிறாரே!

    குரல் வந்த திசையில் எல்லோரும் பார்த்தார்கள். ஒரு சின்னஞ்சிறு பெண் தான் அப்படிக் கத்தினாள். அவள் கூறியதைக் கேட்டதும், எனக்குக் கூட அப்படித்தான் தோன்றுகிறது என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். இன்னொருவரும் அதே மாதிரி சொன்னார். சில வினாடிகளில், எல்லோரும் சேர்ந்து, சக்கரவர்த்திக்கு உடுப்பே இல்லையே! என்று ஒரே குரலில் கூவினர்!

    சக்கரவர்த்தி அப்போதுதான் உண்மையை உணர்ந்தார். வெட்கத்தால் தலை குனிந்தார். அத்துடன் ஊர்வலமும் முடிந்தது.

    - இது குழந்தைகளுக்காகக் கூறப்பட்ட கதை. குழந்தைகளுக்கு இது வேடிக்கையாக இருக்கும். ஆனால், பெரியவர்களுக்கோ உயர்ந்த கருத்தைப் போதிக்கும்.

    இதைப் போல் ஒன்றல்ல; இரண்டல்ல; நூற்றுக் கணக்கான கதைகளைக் கூறினார் ஒருவர். அவர் பெயர்தான் ஆண்டர்சன். ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்' என்பது அவருடைய முழுப் பெயர். ஆண்டர்சன் எங்கே போனாலும், குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு கதை சொல்லத் தொடங்கி விடுவார். இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவருடைய கதைகளை அவர் வாயாலே கேட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் அவருடைய கதைகளைப் படித்துப் படித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறார்கள்.

    ஆனால், அவருடைய சொந்தக் குழந்தைகள் அவரிடம் கதை கேட்டதும் இல்லை; அவருடைய கதைகளைப் படித்ததும் இல்லை. காரணம், அவருக்குக் குழந்தையே கிடையாது! ஆமாம், அவருக்கு மனைவியும் இல்லை; மக்களும் இல்லை. அவர்தான் திருமணமே செய்து கொள்ளவில்லையே!

    ஆண்டர்சன், டென்மார்க் தேசத்திலுள்ள ஓடென்ஸ் என்ற ஊரில் 1805-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவள். தங்களுடைய பிள்ளை பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகப் போய்ப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1