Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kallana Mullai..!
Kallana Mullai..!
Kallana Mullai..!
Ebook77 pages42 minutes

Kallana Mullai..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அபிராமி ஒரு இளம் விதவை. கௌதம் ஒரு கம்பெனியில் மிகப் பெரிய பதவி வகிப்பவர். கோகிலா அவரின் மாமன் மகள்.
அபிராமிக்கு உதவி செய்வதால் கௌதம் பல இன்னல்களுக்கு ஆளாகிறான்.
இறுதியில் அந்த இன்னல்களில் இருந்து அவன் எவ்வாறு மீண்டான் அதற்கு உதவி செய்தவர் யார்? கோகிலா கௌதம் திருமணம் நடந்ததா? அபிராமி என்ன ஆனாள்? வர போகும் திருப்பங்கள் என்ன என்ன என்பதை நாம் கல்லான முல்லை நாவலில் காணலாம்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606536
Kallana Mullai..!

Read more from Devibala

Related to Kallana Mullai..!

Related ebooks

Related categories

Reviews for Kallana Mullai..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kallana Mullai..! - Devibala

    https://www.pustaka.co.in

    கல்லான முல்லை...!

    Kallana Mullai…!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    கல்லான முல்லை...!

    தேவிபாலா

    பாலம்

    பாசமான வாசகரே!

    அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துக்கள்! அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றோம். தவறான போக்கை தவிர்ப்போம் என சபதம் எடுத்தோம்.

    ஆனால் குற்றமும், குருதியும் பெருகிக் கிடக்கும் நாட்கள் இது. எங்கு பார்த்தாலும் துப்பாக்கிக் கலாச்சாரம், வெடிகுண்டு விபரீதங்கள்...

    சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு வாசகர் கேட்டார்: வன்முறையும், தப்பான சிந்தனையும் பெருக, உங்களைப் போன்ற எழுத்தாளர்களும் ஒரு காரணமல்லவா?

    நல்ல கேள்விதான்!

    ‘உடனே, கடைசியில் சட்டம் தண்டிக்கிறதே, குற்றவாளி பிடிபடுகிறானே' என்ற அபத்தமான ஒரு பதிலைச் சொல்ல நான் விரும்பவில்லை.

    'நிச்சயம் நாங்களும் காரணம்தான்!'

    ‘ஆனால் நீங்களும் காரணம் என்பதை மறுக்கக்கூடாது!'

    ‘நல்ல குடும்பச் சிக்கல்களை, சமூகப் பிரச்சனைகளை, பொது வாழ்க்கையை கதை மூலம் சித்தரிக்க முயன்றால் எங்களுக்கு க்ரைம் தான் வேண்டும் என்ற கூப்பாடு கேட்கிறது.'

    அவ்வளவு ஏன்?

    பத்திரிக்கைகளே இது போன்ற நாவல்களுக்குத் தானே வால் பிடிக்கின்றன.

    கோழியை அறுத்துப் போட்டு பருப்பு சாம்பாரா செய்ய முடியும்? ருசிக்கத்தான் செய்யுமா?

    'காரணம்' நாவல்கள் என்று வந்து விட்டால் அதற்கு உரிய திகிலும், வன்முறையும், திருப்பங்களும் தந்து தானே எழுத வேண்டியிருக்கிறது. அதுதானே நியாயமும் கூட.

    பிறகு ஏன் எங்களைக் குற்றம் சொல்கிறீர்கள்?

    சைவமா?

    அசைவமா?

    என்பதில் உங்களுக்கு திடமான கருத்து இருக்குமேயானால், அதை எங்களுக்குத் தெரிவித்தால், உங்கள் ருசிக்குத் தக்க சமைத்துப் போடுகிறோம்.

    சிந்திப்பீர்களா?

    நேசமுடன்

    தேவிபாலா

    ஆகஸ்ட் 1991

    1

    செக் புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான் கௌதம். முக்கியக் கடிதங்களைப் பார்வையிட்டான்.

    செக்ரட்டரி உள்ளே நுழைந்தாள்.

    யெஸ்...!

    சார் பத்தரைக்கு கன்னிமரால டெலிகேட்ஸை பார்க்கணும்.

    ஞாபகமிருக்கு. நான் வர அரைமணி நேரம் லேட்டாகும். அதுவரைக்கும் ஜியெம் அவங்க கூட ஆரம்ப கட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்தட்டும். அந்த டெண்டர் ஃபைலை எடுத்துட்டு வாங்க!

    சார் அது...!

    என்ன பிரச்னை?

    அது கோகிலா டேபிள்ள இருக்கு. உள்ள வச்சு பூட்டியிருக்காங்க போலிருக்கு!

    சரி! கோகிலாவை வரச் சொல்லுங்க

    அவங்க இன்னும் வரலை!

    வாட் நான்சென்ஸ்? ஆபீஸ் தொடங்கி ஒரு மணி நேரம் ஆச்சு, போன் ஏதாவது வந்ததா?

    இல்லை சார்!

    அந்த ஃபைல் இப்ப முக்கியம். கோகிலா ட்ராவை உடைச்சு அதை எடுக்க வேண்டி வரும்

    யாரையாவது அவங்க வீட்டுக்கு அனுப்பி கீப்போர்ட் ‘கீ’யை வாங்கிட்டு வரட்டுமா சார்.

    சீக்கிரம் செய்ங்க, அரைமணி நேரத்துல வரணும்!

    இன்டர்காம் சிணுங்கியது

    என்னம்மா?

    மிஸ்டர் நாயகம் வந்திருக்கார்!

    உடனே அனுப்புங்க!

    எரிச்சலுடன் ரிசீவரைச் சாத்தினான்.

    சுழல் நாற்காலியில் ஒரு முறை சுழன்று திரும்பினான்.

    கதவு ஓசைப்பட்டது.

    கம் இன்!

    நாயகம் தங்க ஃப்ரேமிட்ட கண்ணாடி

    Enjoying the preview?
    Page 1 of 1