Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranathin Niram Manjal
Maranathin Niram Manjal
Maranathin Niram Manjal
Ebook80 pages58 minutes

Maranathin Niram Manjal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தன் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப காதலனை ஏமாற்றி வேறு ஒருவரை மணந்து கொள்ளும் ப்ரதீபா. ப்ரதீபாவை மிரட்டும் காதலன் ஜானி. பின் ஜானிக்கு ஏற்பட்ட கொடூரம். ஜானிக்கு என்ன நடந்தது? ப்ரதீபாவை ஏற்றுக் கொண்டாரா அவளது கணவர் அருண்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606641
Maranathin Niram Manjal

Read more from Devibala

Related authors

Related to Maranathin Niram Manjal

Related ebooks

Related categories

Reviews for Maranathin Niram Manjal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranathin Niram Manjal - Devibala

    https://www.pustaka.co.in

    மரணத்தின் நிறம் மஞ்சள்

    Maranathin Niram Manjal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அப்பாவின் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளில், அதிர்ச்சியின் உச்சிக்குப் போனாள் ப்ரதிபா.

    அரை நாள் லீவு போட்ரு. ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துரலாம் இல்லை?

    .............

    வரப்போற அருண், சமீபத்துல நம்ம ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கற க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர். ஜாதகம் பிரமாதமாப் பொருந்தியிருக்கு. உன்னோட போட்டோ அருணுக்கும், அவங்க அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. எந்த டிமாண்டும் இல்லை. இன்னிக்கு ஒரு தடவை, நேர்ல ரெண்டு பேரும் பார்த்திட்டா, மேல போக வேண்டியதுதான். நீ வேலையைக்கூட விட வேண்டியிருக்கும்!

    அப்பா நீளமாக பேசிக் கொண்டே போனார்.

    அப்பா, தயவு செஞ்சு நிறுத்த மாட்டீங்களா? என்னோட மனசு, விருப்பம் எதுவுமே இதுல இல்லையா? என்னைக் கொஞ்சம் பேசவிட மாட்டீங்களா?

    பேச விடவில்லைதான்.

    தயாராகச் சொல்லிவிட்டு, அவர் போயே விட்டார்.

    ப்ரதிபா, சாப்பிட வர்றியா?

    பசிக்கலைமா. கைப்பையை எடுத்துக் கொண்டு அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டாள்.

    ஏண்டீ சீக்கிரமா ஆபீஸ் போற?

    பதில் சொல்லாமல் நகர்ந்தாள்.

    வர்ற வழில நூறு கிராம் முந்திரிப்பருப்பு வாங்கி வா. கேசரிக்குப் போடணும்!

    தெருமுனை திரும்பியதும், மளிகைக் கடை அப்போதுதான் திறக்க ஆரம்பித்தது. கல்லாவுக்குப் பக்கத்திலிருந்த டெலி போனைத் துடைத்துக் கொண்டிருந்தார் நாடார்.

    "ஒரு போன் பண்ணிக்கலாமா?

    ஒண்ணர் ரூவா..... நகர்த்தி வைத்தார்.

    எண்களைச் சுழற்றிக் காத்திருந்தாள். எதிர்முனை உயிர்த்ததும் மிஸ்டர் ஜானியை லைன்ல கூப்பிடுங்க

    என்ன ப்ரதிபா? இவள் குரலைக் கேட்டதுமே உற்சாகமாக வந்தது ஜானியின் குரல்.

    ஆபீசுக்கு லீவு போட்டுட்டு ‘நேப்பியர் பார்க்'குக்கு உடனே வா ஜானி!

    என்ன விசேஷம்?

    வாயேன் ஜானி. அங்கே பேசிக்கலாமே ப்ளீஸ்!

    டெலிபோனை வைத்து, தாண்டிய ஆட்டோவை, கைதட்டி அழைத்து ஏறிக் கொண்டாள்.

    இவள் நேப்பியரில் காத்திருந்த பதினைந்தாவது நிமிடம் ராஜ்தூத் கதறியது.

    இறங்கி ஹெல்மெட்டை கையில் எடுத்தபடி வந்தான் ஜானி.

    இந்த 'டீ' ஷர்ட் நல்லாருக்கா ப்ரதி? நேத்து ராத்திரி அன்வர் கொண்டு வந்தான்!

    …………………..

    ஏம்மா, கண்ணு கலங்கியிருக்கு? ஏதாவது பிரச்னையா?

    இன்னிக்கு மத்யானம் என்னை பொண்ணு பார்க்கவர்றாங்க ஜானி. கிட்டத்தட்ட இது செட்டில் ஆகும் போல இருக்கு. பயம்மா இருக்கு ஜானி!

    பாக்குப் பொட்டலம் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்ட ஜானி, காகிதத்தை தூர எறிந்தான்.

    என்ன பயம்? எதுக்கு பயம்?

    இப்படி கேட்டா, என்னப்பா அர்த்தம்?

    இருக்கு ப்ரதி. சொல்லவேண்டிய நேரம் வந்தாச்சுனு சந்தோஷப்படேன். மத்தியானம் வழக்கம் போல நடந்துக்கோ. ரெண்டு பேரும் சம்மதிக்காம கல்யாணம் நடக்காது. நீ பிடிக்கலைனு சொல்லிரு.

    அப்பா கோபப்படுவாரு ஜானி. அவரைப் பத்தி உனக்குத் தெரியாதுப்பா!

    "கோவம் ஒரு ஆரம்பம்டா. நம்ம விஷயத்தை எடுத்துவிட சரியான சந்தர்ப்பம் அதுதான். சொல்லு..... ‘ஆய்...ஊய்'னு ஆரம்பத்துல கூச்சல் வரத்தான் செய்யும். வரலேன்னா அப்பாவுக்கு என்ன மரியாதை? உன் பேச்சுல, கருத்துல திடமா நில்லு. ஒரு நாளோ, ஒரு வாரமோ போராடி ஜெயிக்கத்தான் பாக்கணும், நாளைக்கு இதே எடத்துல சந்திப்போம். நேரா ஆபீஸ் போயிட்டு, மத்தியானம் வீட்டுக்குப் போ. தைரியமா இரு. வரட்டுமா?

    ராஜ்தூத் உதைபட்டு, தட் தட்டென ஒலியெழுப்பி, சீறி சாலையில் கலந்தது.

    ப்ரதிபா கலக்கத்தோடு வெளியே வந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1