Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kaadhal Kanmani
En Kaadhal Kanmani
En Kaadhal Kanmani
Ebook124 pages51 minutes

En Kaadhal Kanmani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுயநலமுடன் இருக்கும் அண்ணனால் குடும்ப பொறுப்பை ஏற்கும், விதுபாலா. தன் தாய், தந்தையை காப்பற்றி வருகிறாள். கதையின் நாயகனான சுரேந்திரன், அவன் அண்ணணின் வருமானம் குறைவாக இருப்பதால், அவனது குடும்பத்தையும் சேர்த்து சுமந்து கொண்டிருக்கிறான். பல வரங்கள் வந்தும் ஒன்றும் அமையவில்லை. அதற்கு காரணம் என்ன? இந்நிலையில் சுரேந்திரன் விதுபாலாவை பார்க்கிறான். அவனுக்குள் ஏதோ செய்தது. அவன் பெண் பார்க்க சென்ற வீடுகளுக்கு மொட்டை கடிதம் போட்டது யார்? இவன் காதலை விதுபாலாவிடம் கூறினானா? இல்லையா? என்பதை காண்போம் என் காதல் கண்மணியில்…

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580140606459
En Kaadhal Kanmani

Read more from R. Manimala

Related to En Kaadhal Kanmani

Related ebooks

Related categories

Reviews for En Kaadhal Kanmani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kaadhal Kanmani - R. Manimala

    https://www.pustaka.co.in

    என் காதல் கண்மணி

    En Kaadhal Kanmani

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    மல்லிகைப்பூக்களின் வாசமும், சென்ட்டின் நறுமணமும் கலந்த கலவையாக... அந்த திருமண மண்டபம் முழுக்க ரம்மியமாக இருந்தது.

    அடடே... வாங்க... வாங்க... நேத்தே உங்களை எதிர்பார்த்தேன்...

    முக்கியமான வேலை... ஆபீஸ்லே பர்மிஷன் கூட போட முடியாத சூழ்நிலை... அதான் முகூர்த்தத்துக்கு டாண்னு வந்துட்டேனே... மச்சான்...

    இந்தாங்கோ... இதை, பொண்ணை கட்டிட்டு வரச் சொல்லுங்கோ...

    சமையல் ஆச்சா... முகூர்த்தத்துக்கு முன்னாடியே பந்திய ஆரம்பிச்சிடணும்...

    நீ பாட்டுக்கு வாயப் பார்த்துட்டு இருக்காதே... அப்பப்ப... கழுத்துல கைய வச்சு செக் பண்ணிட்டிரு... தங்கம் விக்கிற விலைக்கு... பறிகுடுத்துட்டு வந்துடாதே... சொல்லிப்புட்டேன்...

    கலவையான பல வசனங்கள், விதவிதமான மனிதர்கள். வகைவகையான கவலைகள் என சூழ்நிலை சுவாரசியமாக இருந்ததை வேடிக்கையுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் விதுபாலா.

    ஏய்... விது தோளில் ஒரு கை வந்து விழ... சட்டென திரும்பினாள்.

    காயத்ரி!"

    அட... நீ எங்கே இங்கே?"

    என் வீட்டுக்காரரோட பெரியம்மா பொண்ணோட கல்யாணம்... நான் வராம? சரி... நீ?

    மாப்பிள்ளை வீடு... எங்க அத்தை வீட்டு சொந்தக்காரங்க...

    எல்லாரும் வந்திருக்காங்களா?

    ம்... சொந்தக்காரங்களோட ஐக்கியமாய்ட்டாங்க. எப்படி இருக்கே காயத்ரி? எத்தனை குழந்தைங்க?

    ம்... இருக்கேன்ப்பா... அதோ... சிவப்பு கலர் பாவாடை சட்டை போட்ருக்காளே... அவ பெரிய பொண்ணு அஸ்வினி... ஆறுவயசு! நாலு வயசுல பிரியங்கான்னு இன்னொரு பொண்ணு! ஆமா நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறே? நம்ம கூட படிச்சவங்க அத்தனை பேருக்கும் கல்யாணம் ஆயாச்சு... தெரியுமில்லே?

    போட்டுட்டாப் போச்சு! என்றாள் விதுபாலா புன்னகை மாறாமல்.

    மாப்பிள்ளை பார்த்தாச்சா?

    அம்மா... உன்னை அப்பா கூப்பிடறார்... அஸ்வினி அழைக்க...இங்கேயே நில்லு... என்னன்னு கேட்டுட்டு உடனே வந்திடறேன் என்று காயத்ரி அவசரமாய் அகல... விதுபாலா தனக்குத்தானே சிரித்தபடி நடந்தாள்.

    ***

    நேத்து வராமப் போய்ட்டியே சுரேந்தர். நம்ம சேகர் ஏகப்பட்ட மப்புல... கச்சேரியில... சட்டையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு ஆடுனா பாரு... ஒரு ஆட்டம்... ஜென்மத்துக்கும் மறக்க முடியாது! என்றான் வேணு.

    இவன்தான்டா... சரக்குல எதையோ கலந்து குடுத்துட்டான் மச்சான்... நானெல்லாம் அப்படி ஆடறவனா... நீயே சொல்லு... என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சுது... அவ்ளோ தான்... அவ ஆடிடுவா! விளையாட்டுப் போல... எந்த பவுடரையோ கலந்துக் குடுத்துட்டான்டா...

    ஏன்டா... தப்பில்லையா? ஒண்ணு கெடக்க... ஒண்ணு ஆச்சுன்னா... இதிலே எல்லாமா விளையாடறது?

    நீ வேற சுரேந்தர்! நடிக்கிறான்... கஞ்சா பழக்கத்தை விட்டுட்டேன்னு தானே சொன்னான்? அது பொய்... சாருக்கு இப்பவும் அந்த பழக்கமிருக்கு... அந்த சண்டையில போனவாரம் இவன் பொண்டாட்டி... திருவண்ணாமலைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு கோவிச்சுக்கிட்டு போய்ட்டா... இல்லன்னு சொல்ல சொல்லு பார்ப்போம்! குமார் கிண்டலும், கேலியுமாய் சொல்ல...

    புருஷன், பொண்டாட்டிக்குள்ளே ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் ஏன்டா சபையில பேசறீங்க? என்றான் சேகர்... சற்றே கோபமாக. கண்களில் சிவப்பு இன்னும் மிச்சமிருந்தது.

    சரி... சரி... கூல்டா மச்சான்... எனக்காக... நான் ஒண்ணு சொன்னா கேப்பியா? நல்லத்தனமாக இடைபுகுந்தான் பாஸ்கரன்.

    என்னடா?

    பார்த்தியா... அதைக் கூட கோவமாதான் கேக்கறே?

    சரி... சொல்லு...!

    இது நம்ம... ப்ரண்டோட தங்கச்சி கல்யாணம்...

    ஆமாம்...!

    ஏகப்பட்ட லேடீஸ் வந்திருக்காங்க...

    அதுக்கு...?

    மானம் போவுது... முதல்ல ஜிப்பை போடுடா... டேய்!

    அடுத்த கணம்... அந்த இளைஞர் பட்டாளத்தில் குபீரென்ற சிரிப்பலை எழுந்தது.

    சுரேந்திரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    "இதுக்கு... இத்தனை பில்டப்பா?

    வச்சுக்கறேன்டா உனக்கு!" வெட்கத்தில் முகமும் சிவக்க... சுவர் பக்கமாய் திரும்பி பேண்ட்டை சரி செய்தான் சேகர்.

    டேய் மச்சான்... மாப்பிள்ளை மாதிரி ஜம்முன்னு வந்திருக்கே... நீ எப்படா உன் சுதந்திரத்தை இழக்கறதா உத்தேசம்?

    வீட்ல பார்த்துட்டுதான் இருக்காங்க! என்றான் சுரேந்தர்.

    உனக்கென்னடா குறைச்சல்? சொந்தமா நாலஞ்சு கம்ப்யூட்டரை வாங்கிப் போட்டு... நல்லா சம்பாதிக்கிறே! நம்ம செட்லேயே பார்க்க லட்சணமா இருக்கே... அப்புறம் எப்படி எல்லா வரனும் தட்டிப் போகுது?

    ப்ச்... நல்ல விஷயத்தை பேசுவோமே... வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

    நான் தாடி வச்சிருக்கறதை பார்த்தாலே தெரியலே? அங்கே எல்லாரும் சுகம். 'பேச்சை மாத்தாதேடா. சரி... அதை விடு. நம்ம ரகு வீட்ல யாருமில்லையாம். திருச்சிக்கு' போயிருக்காங்களாம். மதியம் டேரா போட்ரலாமா? சூப்பரா ஒரு கேஸட் வச்சிருக்கானாம்.

    ஆளை விடுப்பா... எனக்கு வேலையிருக்கு

    ஏன்டா சுரேன்... சாமியார் மாதிரியிருக்கே? இதெல்லாம் ஒரு ஜாலிதானே?

    முதல்ல பிழைக்கற வழியைப் பார்ப்போம். உழைக்கிற நேரத்தை ஜாலிக்காக சாகடிப்பீங்களா?

    வந்துட்டார்யா சாக்ரடீஸ்! அவனை விடுங்கடா... தெரிஞ்ச கதைதானே? நாமெல்லாம் போகலாம்... என்று முன்னே வந்து நின்றான் சேகர்.

    "பார்த்தியா... இவன் எவ்ளோ நல்லவன்னு? என்றான் வேணு.

    சுரேந்திரன் கை மணிக்கட்டில் வாட்ச்சை பார்த்தபடி சிரித்தான்.

    என்ன மச்சான் டைமை பார்க்கறே?

    முகூர்த்தம் முடிஞ்சதும் ஓடணும்ப்பா! முடிச்சுக் குடுக்க வேண்டிய வேலை இருக்கு. பிரஸ்லேர்ந்து வந்திடுவாங்க!

    2

    "எப்பப் பார்த்தாலும் வேலை ஞாபகம்தானா? அப்பப்ப லைபை ஜாலியா என்ஜாய் பண்ணவும் டைம் ஒதுக்கணும். மனசுக்கும்,

    Enjoying the preview?
    Page 1 of 1