Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Vaithu Kaathirunthean!
Kaadhal Vaithu Kaathirunthean!
Kaadhal Vaithu Kaathirunthean!
Ebook125 pages50 minutes

Kaadhal Vaithu Kaathirunthean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓர் அழகிய, மென்மையான பாரம்பரியமான குணநலங்களோடு வாழ்ந்து வரும் மிதுனாவின் வாழ்வில் அவள் நேசித்த காதலனோடு திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ நினைத்தவளின் எண்ணம் அவளின் பெற்றோரின் தீய செயல்களினால் எரிந்து சாம்பலாகி போக, தான் யாரோடு இறுதிவரை வாழ நினைத்தாலோ அந்த உன்னதமானவரை பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் துறந்து அவளுடைய வாழ்வே இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்த அவள் காதல் வெளிச்சத்திற்கு வருமா?...

சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக மலருவாளா?... காதல் வைத்து காத்திருந்தேன்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580140606468
Kaadhal Vaithu Kaathirunthean!

Read more from R. Manimala

Related to Kaadhal Vaithu Kaathirunthean!

Related ebooks

Related categories

Reviews for Kaadhal Vaithu Kaathirunthean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Vaithu Kaathirunthean! - R. Manimala

    https://www.pustaka.co.in

    காதல் வைத்துக் காத்திருந்தேன்!

    Kaadhal Vaithu Kaathirunthean!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ஓங்கி அறைந்தது காற்று!

    வலி தானமாட்டாமல் இலை நுனிகளில் திரண்டிருந்த கண்ணீர் துளிகள் தொப், தொப்பென கீழே விழுந்து சிதறியது.

    விடிய விடிய பெய்த மழையில் மரங்கள் பளிச்சென குளித்திருந்தன. காற்றில் குளிர்ச்சி மிகுந்திருந்தது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருந்தன. வாகனங்கள் பாரபட்சமில்லாமல் எல்லோர் மீதும் இருபக்கமும் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி சென்றன.

    திரைச்சீலையை விலக்கி, கண்ணாடி ஜன்னல்களைத் திறந்த மிதுனாவின் இளந்தளிர் மேனியை குளிர்த்தென்றல் ஒரு உலுக்கு உலுக்கியது.

    பரபரவென கைகளைத் தேய்த்து கன்னங்களில் வைத்துக் கொண்ட மிதுனா அன்றைய மழைக்கால நேரத்தை ரசித்தாள். ஊசித்தூறலாய் விழுந்த சாரல் மழையை கண் கொட்டாமல் பார்த்தாள்.

    சூடாய் மிளகும், சுக்கும், ஏலக்காயும் தட்டிப் போட்ட டீயை குடிக்கவேண்டும் போல் இருந்தது.

    பாத்ரூம் சென்று பல் விலக்கி, முகம் கழுவிக் கொண்டவள் படியிறங்கி கீழே வந்தாள்.

    மிதுனாவுக்கு இருபத்தி மூன்று வயது. உடைந்த கோதுமை நிறத்தில் பாந்தமாய், அழகாயிருந்தாள். சிரிக்கும் போது சினேகாவை நினைவுபடுத்துவாள்.

    ஹாலின் மூலையில் அம்மா சாரங்கி ட்ரெட் மில்லில் அந்தக் குளிரிலும் வியர்க்க விறுவிறுக்க ஓடிக் கொண்டிருந்தாள்.

    தொடையை கவ்விப்பிடித்த ட்ரவுசரும், டைட் பனியனுமாய் இருந்த சாரங்கி மிக மிக இளமையாய், மிதுனாவிற்கு அக்கா போலிருந்தாள். தாழ்வாய் இறங்கியிருந்த கழுத்துப் பகுதியில் மேல் அழகு வஞ்சனையின்றி தெரிந்தது. தோள்பட்டைத் தாண்டி வளரவிடாத கூந்தலை ஒரு கிளிப்பில் அடக்கி இருந்தாள்.

    சமையல்காரப் பெண்மணி எஸ்தர் அவளை கூச்சத்துடன் பார்த்தபடி கீரையை சுத்தம் செய்து கொண்டிருந்ததை மிதுனா பார்த்து விட்டாள்.

    நிஜம் தான்! அம்மாவின் அழகும், உடையும் மற்றவர்களை கூசச் செய்பவைதான்!

    எஸ்தர்!

    என்னம்மா?

    டீ வேணும்!

    இதோ கொண்டு வர்றேம்மா!

    சுக்கும், மிளகும் போட்டு...

    சரிங்கம்மா!

    ஹாய் மிதுனா... குட்மார்னிங்! குரல் கேட்டுத் திரும்பினாள் சாரங்கி.

    குட்மார்னிங் மம்மி!

    என்ன டார்லிங் டீ குடிக்க உட்கார்ந்துட்டே... வயிறு நிறைய தண்ணிய குடிச்சிட்டு சைக்ளிங் பண்ணு!

    ப்ச்... மூடு இல்லை மம்மி!

    நோ... நோ... நேத்தும் நீ எக்சர்சைஸ் பண்ணலே... கமான்.

    என்னை விட்ருங்க மம்மி... நாளைக்குப் பண்ணிக்கறேன்.

    ட்ரெட் மில்லை ஆஃப் பண்ணி விட்டு பெண்மணி இவளை நோக்கி வந்தாள்.

    என்னாச்சுடா உனக்கு? கொஞ்ச நாளா உன்கிட்ட சில மாற்றங்கள் தெரியுது. உன் டிரஸ், ஆக்டிவிடிஸ் எல்லாத்திலேயும்! லைட்டா வெய்ட் போட்டிருக்கே... வாரத் திலே மூணு நாள் எக்சர்சைஸ் பண்றதுக்கு லீவு போட்டுடறே... ஏன் மிதுன்?

    நோ மம்மி... எதுவுமே இல்லே. ஆபீஸ்ல ஒர்க் அதிகம். அப்படி வேலையிலே மூழ்கிப் போறது பிடிச்சிருக்கு. பட், டயர்டாகறதை அவாய்ட் பண்ண முடியாதே!

    சரி... ஓக்கே... ஆனா, இப்பல்லாம் நீ வெறும் சல்வார், சுடிதார்னுதான் போடறே? என்னாச்சு உன் ஜீன்ஸும், காக்ராச் சோளியும்?

    போரடிச்சுப் போச்சு மம்மி!

    அட!

    அம்மா... டீ! சுக்கு வாசனை மூக்கை துளைத்தது. எஸ்தர் மேஜை மீது வைத்தாள்.

    காலையிலே டீ சாப்பிடாதேன்னு எத்தனை முறை சொல்லியிருப்பேன்? பித்தம்டா. டயட்டை ஃபாலோப் பண்ணு!

    மம்மி... ப்ளீஸ்... இன்னைக்கு ஒரு நாள்! என்றபடி டீ கப்புடன் மாடிப்படியேறினாள். மகளை வியப்புடன் பார்த்தாள் சாரங்கி.

    ***

    கண்ணாடி முன் நின்றாள் மிதுனா.

    'கொஞ்சநாளா உன்கிட்ட சில மாற்றங்கள் தெரியுது' என்றது அம்மாவின் குரல்.

    'ஆமாம் மம்மி... மாறித்தான் போய்ட்டேன். காரணம்... அர்விந்த்!'

    'அவரைப் பார்த்தபின் இந்த ஆறுமாத மாகத்தான், இப்படியும் சந்தோஷமாய் வாழலாம் என்று புரிந்து கொண்டேன். இந்த மாற்றம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது மம்மி.'

    குளித்து முடித்து, நைட்டியின் மேல் டவலைப் போட்டுக் கொண்டவள், வார்ட் ரோபைத் திறந்தாள்.

    விதவிதமான உடைகள். அத்தனை கலரிலும் ஜீன்ஸ், மிடி, டாப்ஸ்! சாரங்கி மகளுக்காக வாங்கிக் குவித்திருந்தாள்.

    கல்லூரிப் படிப்பு முடியும் வரை மிதுனாவின் தேசிய உடையே, ஜீன்ஸும், மிடியும் தான்! பார்பி பொம்மை மாதிரி கழுத்து வரை ஹேர் கட் பண்ணிக் கொண்டு, அம்மாவின் வழித்தடத்தில் நடந்து கொண்டிருந்தவள் தான் மிதுனா!

    எம்.பி.ஏ. முடித்ததும் உடனடியாக ஒரு பிரைவேட் கம்பெனியில் பிஸினஸ் அனலிஸ்ட்டாக, கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்து விட்டது. அன்று மாறிய வாழ்க்கை தான்! நாட்களை சுவாரஸ்யப்படுத்தி விட்டது.

    சாரங்கியும் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிப்பவள். அரை லட்சம் சம்பளம். மேலை நாட்டு கலாசாரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவள். திறமைசாலி. யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தனக்கென வாழ்பவள். சாரங்கி மகா அழகி. இந்த வயதிலும் வயது வித்தியாசம் பார்க்காமல், அவளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ஆண்கள் உண்டு. அதனாலேயே தன் அழகு மீது கர்வம் உண்டு. அதைப் பேணிக் காக்க தினசரி உடற்பயிற்சி செய்வாள்.

    காலிங்பெல் அலறியது.

    மிதுனா படியிறங்கி வந்தாள். அதற்குள் அம்மா கதவைத் திறந்து விட்டிருந்தாள்.

    ஹலோ... என்றாள் விழிகள் விரிய சாரங்கி.

    ஹாய்...

    அப்பாவின் நண்பர் லெனின் வந்திருந்தார்.

    விஷ்ணு இல்லையா மேடம்?

    வாட் மேடம்? கால் மீ சாரங்கி. நானும் உங்க ஃபிரண்ட் தானே மிஸ்டர் லெனின்?

    ஹி...ஹி... ஆமா சாரங்கி!

    ப்ளீஸ் கம்!

    சாரங்கி இன்னும் அதே உடையில் தான் இருந்தாள். லெனினின் பார்வை அவள் மீது ரோடு ரோலர் போல் உருண்டது.

    மிதுனாவுக்கு எரிந்தது.

    காபி ஆர் டீ?

    நோ தாங்க்ஸ் சாரங்கி. இப்பதான் குடிச்சேன். விஷ்ணு எங்கே?

    Enjoying the preview?
    Page 1 of 1