Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enathu Kavithai Neethan...
Enathu Kavithai Neethan...
Enathu Kavithai Neethan...
Ebook209 pages1 hour

Enathu Kavithai Neethan...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அபிநயா (பள்ளி ஆசிரியை), அழகானவள், ஆனால் மிகவும் அடம் பிடிப்பவள் சில விஷயங்களில் குறிப்பாக திருமணமே வேண்டாம் என்று விலகி நிற்பதற்கான காரணம் என்ன?

ரோஹன் பிரபல “திக்ளோப்” நாளிதழின் ஜெனர்லிஸ்ட். அபிநயாவின் வீட்டில் தங்கி இருப்பவன். அபிநயாவை பழி வாங்க வந்தவன்.

ஏன், அபிநயாவை பழி வாங்குகிறான்? அபிநயாவை பழி வாங்குவதற்காக அவன் செய்யும் வேலைகள் என்ன? ஆயுதமாக அவன் எதைக் கையாடுகிறான்? இறுதியில் என்ன நடந்தது? வாசிக்கலாமா... எனது கவிதையை…

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580140906962
Enathu Kavithai Neethan...

Read more from Lakshmi Sudha

Related to Enathu Kavithai Neethan...

Related ebooks

Reviews for Enathu Kavithai Neethan...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enathu Kavithai Neethan... - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    எனது கவிதை நீதான்...

    Enathu Kavithai Neethan...

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    மழைத் துளிகள்

    மண்ணை ஸ்பரிசிக்கும் பகல் பொழுது

    என்ன மொழி பேசும்?

    பூங்காற்று மலர்களை ஸ்பரிசிக்கும் பொழுது என்ன மொழி பேசும்?

    உன் கண்கள் என்னில் கலக்கும்போது… என்ன மொழி அது?

    ஒரு அழகான மார்கழிக் காலைப் பொழுது விடியலை எதிர்நோக்கி இருந்தது பிரபஞ்சம். கோவிலில் கௌசல்யா சுப்ரஜா பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று எம்.எஸ்.ஸின் குரலில் ஒலித்தது, சுப்ரபாதம்.

    அபிநயாவின் காதில் தேன்போல் பாய்ந்தது எம்.எஸ்.ஸின் குரல். என்ன ஒரு கருணை வழியும் குரல்! கம்பீரமாக, பக்தி பொங்க, இனிமை சொட்டச் சொட்ட, கேட்கக் கேட்க திகட்டாத என்ன ஒரு குரல் என்று படுக்கையை விட்டு எழுந்தாள்.

    சமையல் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது. வழக்கம் போல் அம்மாவின் ஃபில்டர் காப்பியின் வாசனை நாசியில் பரவியது.

    ஒரு நாள் தவறாமல் எப்படி அம்மாவால் இப்படி டாண் என்று அலாரம் வைக்காமல் சரியாக ஐந்து மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு பூஜை முடித்துவிட்டு சமையல் வேலையில் ஈடுபட முடிகிறது.

    அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அம்மா இதைத் தவறாமல் செய்து கொண்டிருக்கிறாள். எந்த சலிப்பும் இல்லாமல் சோர்வும் இல்லாமல் எப்படி இது முடிகிறது என யோசித்தபடியே குளியல் அறை நோக்கிச் சென்றாள் அபிநயா.

    அபி, காப்பி சூடா இருக்கு. வாடா வந்து குடி என்று அம்மாவின் குரல் பல் துலக்கிக் கொண்டிருந்த அபிநயாவின் காதில் விழுந்தது.

    இதோ... வந்துட்டேன் அம்மா என்று குரல் கொடுத்தபடி முகம் கழுவிவிட்டு, டவலால் முகத்தை துடைத்தபடியே கிச்சன் நோக்கிச் சென்றாள்.

    இந்தா அபி. காப்பி சர்க்கரை திட்டமா இருக்கா பார் என்று சொல்லியபடியே காப்பி டம்ளரை அவளிடம் நீட்டினார் ரேவதி.

    அம்மா... நீங்க போடற காப்பி எப்பவும் கரெக்டா, திட்டமா இருக்கும். உங்களை மாதிரி... என்று சிரித்த படியே காப்பியைக் குடிக்கத் தொடங்கினாள் அபிநயா.

    காலையில், இந்த அடுப்படியில சூடே தெரியலை அபி. உன்னோட ஐஸ் வார்த்தை அவ்வளவு ஜில் ஜில் என்றார் கிண்டலாக அம்மா. என்னோட பேசிப் பேசி உங்களுக்கும் வாய்ஜாலம் நல்லா டெவலப் ஆயிருக்கு. குட் ஒர்க். கீப் இட் அப்" என்றாள் சிரித்தபடி அபிநயா.

    ஏய், நீ பள்ளிக்கூடத்தில டீச்சரா இருக்கலாம். அதுக்காக என்னையும் ஸ்கூல் பெண்ணாட்டம், கொஞ்சம் ஏமாந்தாட்ரீட் செய்வ நீ. கதை அடிக்கறதை நிறுத்திட்டு, ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பார் என்றார்.

    ஒ.கே அம்மா. பேப்பர் வந்திடுச்சா? இன்னிக்கு என்ன நியூஸ்? என்றாள் ஆர்வமாக.

    ம்...ம்.... வேற என்னயிருக்கும். எப்பப் பார் சண்டை, கொலை, கொள்ளை, லஞ்சம்… இதைத் தவிர வேற என்ன புதுசா இருக்கப் போகுது என்றார், சலிப்பாக.

    அம்மா சொன்னதை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டவாறே பேப்பரைப் படிக்கத் தொடங்கினாள் அபிநயா.

    அம்மா சொன்னது போலவே பேப்பரில் முதல் பகுதியில் எல்லாமே நெகடிவ் செய்திகள். மும்பாயில் நடந்த விமான விபத்து, இலங்கையில் யாழ்பாணத்தில் வெடித்த வன்முறை, ஏ.டி.எமில் நடந்த நூதனத் திருட்டு... என்று எல்லாமே நெகடிவ். எப்பவுமே இந்தப் பத்திரிகைகளுக்கும், நாளிதழ்களுக்கும் இதே வேலை. சமூகத்தில் இருக்கிற தீயதைத் தட்டிக் கேட்கத் துணிவு கிடையாது.

    வதந்திகளைப் பரப்புவதே வேலை. சினிமா நடிகர், நடிகையரின் அந்தரங்கம். இல்லை அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களைப் பற்றி வெளியிடுவது. அதுவும் இல்லையேல் விளையாட்டு வீரர்களின் கேளிக்கைகள் இதெல்லாம் தான் அவர்களின் குறிக்கோள்.

    ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு செய்தி முதல் பக்கத்தில் வருகிறதா? இல்லவே இல்லை. ஏதாவது ஒரு மூலையில் தான் அந்த மாதிரிச் செய்திகள் வரும்.

    சமீபத்தில் ஐ.ஏ.எஸ் ரேங்க் எடுத்த ஒரு பெண்ணின் பேட்டி ஒரு நாளிதழின் மூலையில் படித்தது நினைவுக்கு வந்தது.

    அந்தப் பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பாவிற்கு ஒரு நிறுவனத்தில் பியூன் வேலை. நாளிதழ் வாங்குவதற்கு அந்தப் பெண் இருபது கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டும்.

    அவள் இருக்கும் இடத்திற்குப் பேப்பர் வராது. அதனால் அவள் தினந்தோறும் பஸ்ஸில் பயணம் செய்து, நகரத்திற்குச் சென்று பேப்பர் வாங்குவது வழக்கமாயிற்று.

    சில நாள் கடும் மழை, பனி பெய்தால் பஸ் வராது. அப்பொழுது அந்த நாளிதழ் ஏஜெண்ட் அவள் படிப்பதற்காகவே பேப்பரைப் பத்திரப்படுத்தி வைத்து, மழை முடிந்து அவள் வரும்பொழுது, அவளிடம் அளிப்பாராம்.

    அந்தப் பெட்டிச் செய்தியைப் படித்த பொழுது ஏனோ அபிநயாவிற்குக் கண்கள் கலங்கின. விடாமுயற்சி, சுறுசுறுப்பு, அயராத உழைப்பு, இதெல்லாம் தான் வாழ்க்கையில் முன்னேறியவர்களின் முகவரி.

    இதற்கு எல்லாம் குறுக்கு வழி ஏதும் கிடையாது. எல்லாம் உழைப்பால் வரும் பலன் என்று நினைத்தபடி குளிப்பதற்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

    குளித்துவிட்டு துர்க்கை ஸ்லோகம் சொல்லி முடித்து விட்டுச் சாப்பிடுவதற்காகச் சமையல் அறை நோக்கி விரைந்தாள்.

    வா... அபி... இந்தா இன்னிக்கு இட்லிக்கு மிளகாய்ப் பொடிதான். மிக்ஸி வேலை செய்யலை. அப்புறம் போய் என்ன ரிப்பேர் அப்படின்னு பார்த்துச் செய்யணும் என்றார் தட்டை நீட்டியபடி ரேவதி.

    அம்மா. அந்த மிக்ஸியைப் போட்டுட்டு வேற வாங்குங்க. அப்படின்னா, கேக்க மாட்டேங்கறீங்க. அடம் பிடிக்கிறீங்க என்றாள் இட்லியை வாயில் போட்டபடி…

    இருக்கற செலவெல்லாம் பத்தாதா அபி. இது வேற எதுக்கு. இன்னும் உன் கல்யாணத்திற்குச் சரியா சேக்கலை... அதனால என்று அவள் முடிக்கும் முன் அபிநயா குறுக்கிட்டாள்.

    அம்மா, இந்த மாதிரி அறுக்காதே. அதே பல்லவியைத் திருப்பிப் பாடிகிட்டு. சே... நான் கிளம்பறேன் என்று கோபமாகவும் சலிப்போடும் சொல்லிவிட்டுச் சட்டென பாதி சாப்பாட்டில் கையைக் கழுவிக்கொண்டு வேகமாக செருப்பைப் போட்டுக்கொண்டு கேட் அருகே சென்றாள் அபி.

    கோபத்தோடு செல்லும் மகளைப் பார்க்கும் பொழுது ஏனோ ரேவதிக்குக் கவலையாகவும், பயமாகவும் இருந்தது.

    ‘இது என்ன இந்தப் பெண் இப்படி பிடி கொடுக்காமல் பேசிவிட்டு ஓடுகிறாளே. இன்று மட்டும் இல்லை எப்பவுமே இப்படித்தான் இருக்கிறாள்.’

    தனக்குள்ளே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு யாரையும், அதில் உள்ளே அனுமதிக்காமல்... என்ன அபி இது. சே... இன்னும் எவ்வளவு நாள் பழசையே போட்டு யோசித்து யோசித்து உடம்பையும் மனசையும் கெடுத்துக் கொள்ளப் போகிறாய்?

    ‘உனக்கு எப்ப விடிவு காலம் வரும் என்று எனக்குத் தெரியவில்லை… அபி? அந்த துர்க்கை அம்மன் தான் உனக்கு நல்ல புத்தி தர வேண்டும்’ என்று வேண்டியபடி பெருமூச்சு விட்டாள் ரேவதி.

    அபிநயா சென்ற பின் வீடு வெறிச்சோடியது போல் தோன்றியது அவருக்கு.

    ஸ்கூலில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் பொழுது தன் கவலை எல்லாம் அதில் மறந்தாள் அபிநயா.

    அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும் பொழுது, கள்ளம் கபடமில்லாத மழலைப் பேச்சைக் கேட்கும் பொழுது, எல்லாவற்றையும் மறந்து விடுவாள், அவள்.

    மிஸ். என் ஃபிராக் நல்லா இருக்கா மிஸ்? என்று ஷாலினி கொஞ்சியபடியே அவளை நோக்கி தளிர் நடை நடந்து வந்தாள்.

    ம்... ம்... வெரி ஃபிரெடி ஷாலு. ரொம்ப அழகா இருக்கு இந்த டிரெஸ் உனக்கு என்று சிரித்துக் கொண்டே அபிநயா சொல்லவும், ஷாலினியின் முகம் மேலும் பிரகாசமானது.

    அவள் வெட்கப்பட்டுக் கொண்டு சிரிப்பதை ரசித்தாள் அபிநயா.

    அவள் ஷாலுவைப் பார்த்து சிரிப்பதைக் கண்டு பொறாமை ஏற்பட்டு, ப்ரணவ் அவள் அருகே ஓடி வந்தான்.

    மிஸ் என் ஷர்ட் புதுசு. நல்லாயிருக்கா? என்று கேட்டபடி அவள் அருகே ஓடி வந்தான் பரணவ்.

    அபிநயாவிற்குக் குழந்தைகளைப் பற்றித் தெரியும். மிஸ்ஸின் பெட்டாக இருக்க வேண்டும் என்று எல்லாக் குழந்தைகளுமே போட்டி போடும். அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளும் என்று தெரியும்.

    அதனால் சிரித்தபடி அவர்களைத் திட்டாமல், ஆனால் சிறு கண்டிப்புடன் நடந்து கொள்வது அவளது குணம்.

    சிறு குழந்தைகளின் மனம் களிமண்ணிற்கு ஒப்பானது. அதை நம்மிஷ்டபடி எந்த பொம்மையாக வேண்டுமானாலும் செய்யலாம்.

    அவர்களை நல்ல வழியில் நடத்துவதற்கு எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதை நான் எப்பொழுதுமே நல்லமுறையில் பயன்படுத்துவேன்.

    அவர்கள் நல்ல சுதந்திரமான எண்ணம் உடையவர்களாக, வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி தோல்வியை எல்லாம் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளும் குணம் உடையவர்களாகத் தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக... நல்ல ஜீவன்களாக உருவாக்க என்னால் முடிந்த சின்ன உதவி இது என்று நினைத்தபடியே அடுத்த செஷனுக்குச் செல்லத் தயாரானாள்.

    ஏய் அபி. இன்னும் ஒரு வாரத்தில் ஸ்கூல் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு, லீவ் விட்டுடுவாங்க. அப்ப என்ன ப்ளான் உனக்கு? லீவுக்கு எங்கேயாவது டூர் போறியா என்றாள் சீதா.

    இல்லை சீதா. அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லை. நீ என்ன செய்யப் போற? போன தடவை ஆக்ரா, டெல்லி அப்படின்னு ஒரு ரவுண்ட் போன... இந்த தடவை எங்க போகப் போற? என்றாள் அபிநயா.

    ம்... ம்... இந்தத் தடவை ஊட்டி, கொடைக்கானல் போகற ப்ளான் இருக்கு. இந்தக் கோடைக்கு ஏத்த இடம். ஏன்டி டீச்சர்ஸ் எல்லாம் சேர்ந்து ஜாலியா போய்ட்டு வரலாம், அப்படின்னு நினைக்கறோம்.

    கெர்பபைட் பால் இந்தத் தடவையாவது வாடி. ஒவ்வொரு தடவையும் சாக்கு போக்குச் சொல்லித் தப்பிச்சுக்கற... என்றாள் சீதா சற்றே கோபமாக.

    சீதா... ப்ளீஸ் நீங்க எல்லாரும் போங்க. எனக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை. அதனால நீங்க போங்க என்றாள் மெல்லிய குரலில் அபிநயா.

    போடி... சரியான அமுக்குனி நீ. உன்கிட்ட பேசறதுக்கு ஒரு பாறைகிட்ட பேசினா, அதுவாவது கரையும் என்றாள் சலிப்போடு சீதா.

    கவலையை தன்னுடைய தோழி கோபமாகச் செல்வதை அபிநயா உணர்ந்தாள். சாரி சீதா என்று அவள் உதடுகள் அவளையறியாமல் முணுமுணுத்தன.

    ஏனோ தன் மேலேயே கோபம் வந்தது அவளுக்கு. நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். அடுத்தவர்களுடைய எண்ணங்களுக்கு, உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் ஏன் இப்படி அவர்களைக் காயப்படுத்துகிறேன்? எனக் குமைந்தாள்

    வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று விளையாடுபவர்களுக்குத் தெரியாது என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. அது எவ்வளவு உண்மை என்று பெருமூச்சு விட்டால் அபிநயா.

    2

    நிலவின் அமுத ஒளி உன்னை தீண்டிய பின் மேலும் மெருகேறிவிட்டது!

    சந்தனக் காற்று உன்னோடு கொஞ்சி விளையாடிப் பின் தென்றலாக மாறிவிட்டது!

    மழைத் துளி உன்னை ஸ்பரிசித்தபின் மனமின்றி மண்ணில் கரைகிறது! மௌனமே காதலாக நான் உன்னோடு சேர்வது எப்போது?

    அபி, பிடிவாதம் பிடிக்காமச் சொல்றதை நல்லா யோசிச்சு பார். உனக்கே, அது எவ்வளவு சரி, அப்படின்னு புரியும் என்றார் ரேவதி.

    அம்மா, எனக்கு இதில் துளிகூட இஷ்டம் இல்லை. வத்சலா உங்க சிநேகிதியா இருக்கலாம். அதுக்காக இப்படி எல்லாம் செய்யறது எனக்குப் பிடிக்கலை என்றாள் அபிநயா.

    "அபி, வத்சலாவோட மகன் இங்க வந்து நம்ம வீட்டில பேயிங் கெஸ்டாத் தானே இருக்கப்போறான். மாடியில இருக்கற ரூம் சும்மாதான் பூட்டி வெச்சிருக்கோம். அதைக் கொஞ்சம் ஒதுங்க வைச்சிட்டாப் போதும். மேலேயே பாத்ரூம் இருக்கு. அதனால எந்த அசௌகரியமும் இருக்காது.

    Enjoying the preview?
    Page 1 of 1