Kangal Mayangiya Pothu...
()
About this ebook
ரதிலா, அர்ச்சனா, கல்யாணி இவர்கள் மூவரும் இணைபிரியா கல்லூரி தோழிகளாக இருந்தனர். இதில் ரதிலா கொஞ்சம் திமிர் பிடித்த பெண்ணாக இருந்தாள். இவளின் பிடிவாத குணத்தால் பெரிய விபரீதத்தில் மாட்டிக்கொள்கிறாள். பின் அவள் வாழ்வில் சந்திக்கிற போராட்டங்களையும், அதனால் அவள் படும் துன்பங்களையும், அந்த துயரத்தில் இருந்து மீண்டாலா ரதிலா பார்ப்போம் N.C.மோகன்தாஸ்ஸின் நடையில்.
Read more from Nc. Mohandoss
Kolai Magal Rating: 5 out of 5 stars5/5Minnuvathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Indru Rokkam Naalai Kolai Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Thanga Thaamarai Penney! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Innoru Mugam Rating: 0 out of 5 stars0 ratingsVanathai Yaar Vella Koodum Rating: 0 out of 5 stars0 ratingsEnnavale... Ennavale... Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum Paarkalam! Rating: 0 out of 5 stars0 ratingsVibareetha Parisu Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Un Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Sol Kiliye! Rating: 5 out of 5 stars5/5Enakkoru Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Vandhanam...! Rating: 0 out of 5 stars0 ratingsKaakka Kadi Rating: 0 out of 5 stars0 ratingsAtho Therigirathu Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsArabic Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsVaanathai Thottavan Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Rating: 0 out of 5 stars0 ratingsUllathai Kollathey! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkey Enakkai Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Eeram Illai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vizhi Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsKanmani Karthi Rating: 0 out of 5 stars0 ratingsMala Ennai Mannippaya? Rating: 0 out of 5 stars0 ratingsEnna Valam Illai Nam Thirunattil? Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Mithappom Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kangal Mayangiya Pothu...
Related ebooks
Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsKan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthe... Rating: 0 out of 5 stars0 ratingsValarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsManakkum Varai Pookadai Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5கண்களுக்குச் சொந்தமில்லை Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Thoorangal Nagarkindrana Rating: 5 out of 5 stars5/5Pallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsNaanthan Kolai Seithean Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsNenjathai Alli Konjam Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Nee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Enakkoru Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsUchithanai Muharnthal Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Kangal Mayangiya Pothu...
0 ratings0 reviews
Book preview
Kangal Mayangiya Pothu... - NC. Mohandoss
https://www.pustaka.co.in
கண்கள் மயங்கிய போது…
Kangal Mayangiya Pothu...
Author:
என்.சி. மோகன் தாஸ்
Nc. Mohandoss
For more books
https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
நீண்ட மணி ஒலித்ததும், அந்த பெண்கள் கல்லூரியில் இரைச்சல் எழுந்தது. எப்போது மணியடிக்கும் என்று அது வரை வாட்ச்சையும், வாசலையும் பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்கள் சட்சட்டென்று புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு வகுப்புகளை விட்டு வெளியேறின.
வெளியேறியவர்களின் முகங்களில் எண்ணெய் வழிந்திருந்தது. தலை வாடியிருந்தது. ஏழு கிளாஸ்கள் அறு பட்டதின் சோர்வு அவர்கள் கண்களில் தெரிந்தது.
கசகசவென இவர்கள் பஸ்ஸைப் பிடிக்கவும், ரெயிலைப் பிடிக்கவும் நடந்தனர். அவசரப்பட்டனர்.
அத்தனை சிட்டு - மொட்டுக்களில் மரத்தடியில் நின்று சிரித்துக் கொண்டிருந்த ரதிலா, கல்யாணி, அர்ச்சனா மூவரையும் கொஞ்சம் கவனிப்போம்.
அவர்கள் மூவருமே பி. எஸ்சி. மூன்றாம் வருடம். ரதிலா பெயருக்கேற்றபடி ரதி மாதிரி இருந்தாள். சிகப்பு என்பதற்கு புது உதாரணம் சொன்னாள். சுடிதார் உடுத்தி, முடியை சிக்கலில் பின்னியிருந்தாள்.
அவள் பணக்கார வீட்டுப்பெண். அதுவும் ஒரே பெண் செல்லத்திற்கும் குறும்பிற்கும் அவளிடம் குறைவில்லை. கல்லூரிக்கு காரில் போ என்று பெற்றோர்கள் சொன்னால் கூட கேட்காமல் பஸ்ஸிலும், நடந்தும்தான் வருகிறாள்.
அதற்குக் காரணம் கல்யாணியும் அர்ச்சனாவும் தான், அவர்கள் வீட்டில் அத்தனை வசதியில்லா விட்டால் கூட அவர்களுடன் இவளுக்கு நெருக்கம் அதிகம்.
தோழிகளுக்காக ரதிலா எதுவும் செய்வாள். பணத்தை விட நட்பிற்கு அவள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தாள்.
இன்னும் நான்கு நாட்களுக்கு ஜாலிதான்டி!
கல்யாணி சொல்லிவிட்டு தன் சந்தோஷத்தை முகத்தில் பிரதிபலித்தாள்.
என்ன ஜாலி...?
.
டூர் போகப் போறோமே!
.
ரதிலா, டூரா, நான் வரலே!
என்றாள்.
ஏண்டி...?
காலேஜில அரேஞ்ச் பண்ணுகிற டூர் யாருக்கு வேணும். நம்ம மிஸ்களோட போறதும் குரங்குகளோட போறதும் ஒண்ணுதான்! நமக்கு சுதந்திரம் இருக்காது. நச்சு நச்சும்பாங்க. இல்லாதது பொல்லாததுக்கெல்லாம் கண்டிஷன் போடுவாங்க. அங்கே போகாதே, இங்கே போகாதேன்னும், அதை செய்யாதே, இதை செய்யாதேன்னும் சிடுசிடுப்பாங்க. நமக்கென்ன தலையெழுத்து!
அப்புறம்...?
டூர்ன்னு சொன்னா ஜாலியா போய் வரணும். அதிகாரம் பண்றதுக்கோ, கட்டளை இடறதுக்கோ யாரும் இருக்கக் கூடாது. நம்ம ப்ரோகிராமை நாமதான் தீர்மானிக்கணும். நமக்கு நினைச்ச நேரத்துல சாப்பிடணும். நினைச்சப்போ குளிக்கணும், நினைச்சப்போ சுத்தணும்.
சுருக்கமாச் சொன்னா ஆம்பளை பசங்களாட்டம் திரியணும்ங்கறே...?
அர்ச்சனா கேட்டுவிட்டு ரதிலாவின் கோபத்திற்கு ஆளானாள்.
என்னடி பெரிய ஆம்பளை பசங்கள்...? பசங்கன்னா மட்டும் என்ன உசத்தி... நாம அவனுங்களை விட எந்த விதத்துல குறைச்சல்? அவனுங்க செய்யற எந்த காரியத்தை நம்மால செய்ய முடியாது...?
அவனுங்க செய்றதுல ஒண்ணே ஒண்ணுதான் நம்மால முடியாது!"
அது என்னடியம்மா…?
அவசியம் தெரிஞ்சுக்கணுமா... சரி சொல்றேன். நின்னுகிட்டே மூத்திரம்...
சீ. உன் அல்ப புத்தி போகாதுடி!
என்று கல்யாணி தன் காதுகளை பொத்திக் கொண்டாள். நேரமாகுதில்லே... நடங்க!
அவர்கள் காண்டீனில் காபி குடித்து காம்பஸை விட்டு வெளியே வந்தனர். அங்கிருந்து பார்த்தால் மலைக் கோட்டையின் வியூ தெரிந்தது. நாலரை மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சி பிள்ளையார் கோவிலின் பாறைகளில் ஜனத் தலைகள் தெரிந்தன. (கதை நடப்பது திருச்சி என அறிக) மெயின் கார்டு வரை டவுன் பஸ்கள் இரைந்து கொண்டு பறந்தன. ரோடோரங்களில் பாய் கடைகள்! ஈ மொய்த்த தின்பண்டங்கள். வேகவைத்த முத்துச் சோளங்கள்.
ரதி! டூர் போகாம எப்படி...? நாமதான் முன்னயே பணம் கட்டிட்டோமே! வீட்லேயும் சொல்லிட்டமே!"
சொல்லிட்டா என்ன? இப்போ டூர் போகலேன்னு யார் சொன்னது? காலேஜ் டூர் வேணாம்னுதான் சொன்னேன், நாம தனியா போகக் கூடாதுன்னு சொல்லலியே!
அர்ச்சனா, புரியலியே!
என்று தன் ஸ்பெக்ஸை கழற்றி துடைத்துப் போட்டுக் கொண்டாள்.
உனக்கு எது தான் புரிஞ்சிருக்கு... மரமண்டை! நாம தனியா கொடைக்கானல் போகப் போறோம்.
கொடைக்கானலா...?
சை! ஏண்டி வாயை பிளக்கறே? உன் ஸ்பெக்ஸ் இடம் மாறி போச்சு! பேசாம கழட்டி வாயில போட்டுக்கோ!
கல்யாணி தன் ஆவலை அடக்க முடியாமல், உன் திட்டம் என்னன்னு விரிவாதான் சொல்லேன் ரதி?
சொல்றேன் கேட்டுக்குங்க. காலேஜ்ல டூர் போறோம்ங்கிற பெயர்ல நாம மூணு பேரும் ஜாலியாய் கொடைக்கானல் போகிறோம். நான்கு நாட்கள் உல்லாசமாய் சுற்றுகிறோம்.
அப்படியே பழனி, மதுரை, குருவாயூர்னு போவமா...
என்று கேட்டாள் கல்யாணி.
எதுக்கு...?
சாமி கும்பிடதான்!
ஆமா சாமி கும்பிட! நாம இப்ப புனித யாத்திரை தானே போறோம்... வாயை மூடுடி!
அர்ச்சனா, இதுக்கெல்லாம் பணம் நிறைய ஆகுமே!
என்றாள்.
யாமிருக்க பயமேன்!
ரதிலா. முருகன் ஸ்டைலில் போஸ் கொடுத்தாள். பணத்திற்கெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.
வீட்டுக்குத் தெரிஞ்சா வம்புடி!
தெரிஞ்சாத்தானே... எப்படித் தெரியும்? நாமதான் காலேஜ் டூர்ன்னு சொல்லிட்டோமே! பணமும் கட்டியாச்சு. பணம் கட்டிட்டு டூர் வரலேன்னு சொல்லி யாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறதில்லை. நம்மகிட்டே ஏன் வரலேன்னு கேட்டா உடம்பு சரியில்லே இல்லேன்னா மூலைல உக்காண்டிருந்தேன்னு சொல்லிக்கலாம். நாளைக்கு காலைல எல்லோரும் ரெடியா இருங்க! டூர் பஸ் கிளம்பிப் போனதும் நாம் வேற ரூட்ல பாய்ஞ்சிருவோம்.
அர்ச்சனா, எனக்கென்னவோ பயமாருக்கு டி!
என்றாள்.
என்ன பயம்?
நாம தனியா எப்படி...?
மூணு பேர் இருக்கோம் தனிங்கிறே...?
அதுக்கில்லை ஆண் துணையில்லாம...
ஆண் துணையா... அவசியம் வேணுமா...?
இருந்தா பயமில்லாம...
கூட படுத்துக்கவா...?
ரதிலா கேட்டு விட்டு சிரித்தாள். சரி விடுங்க, உங்களுக்கு பயமாருக்குன்னா என் சேகரையும் வரச் சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன். நீங்க யாரும் அவனை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது - ஏன்னா அவன் என் காதலன்! என்னை கட்டிக்கப் போறவன்!
ரதிலா சொன்னதும் அர்ச்சனா, 'சீ" என்று வெட்கப்பட்டாள்.
கட்டிக்கப் போறது நான் நீ ஏன் வெட்கப்படறே...?
அதுக்கில்லை. கல்யாணம்கிறதை இத்தனை சுலபமா சொல்றே!
ஏன் நீ பண்ணிக்கப் போறதில்லையா...? பண்ணி வச்சா நாலாம் மாசம் வயித்தை பந்து பண்ணிக்கிட்டு வருவாய்! இப்போ மட்டும் வெட்கத்தைப் பார்!
2
அன்று இரவு.
டி.வி.யில் கச்சேரி நடந்துக் கொண்டிருக்க, ரதிலா தன் உடைகளை எடுத்து சூட்கேஸில் அடுக்கினாள். சினிமா பாடலை ஹம் பண்ணிக் கொண்டு போனை அணுகினாள்.
சேகரின் நம்பரை பட்டனில் தட்டி அவனிடம் விவரம் சொன்னாள். அவன் திடீர்ன்னு சொன்னால் எப்படி... எனக்கு வேலை இருக்கிறது
என்று பிகு பண்ணினான்.
அருமையான சான்ஸ்! போனா வராது. பேசாம வந்து சேருங்க.
"சான்ஸ் பற்றி பேசுகிறாய் ரதி! என் தர்ம சங்கடத்தை கொஞ்சம் யோசித்துப் பார். எனக்கு லீவ் இல்லை. அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற