Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopura Vaasal
Gopura Vaasal
Gopura Vaasal
Ebook107 pages48 minutes

Gopura Vaasal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352857340
Gopura Vaasal

Read more from Vidya Subramaniam

Related to Gopura Vaasal

Related ebooks

Related categories

Reviews for Gopura Vaasal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopura Vaasal - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    கோபுர வாசல்

    Gopura Vaasal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    பால் பொங்கி வழிந்து கேஸ் பர்னர் அணைந்து, தீய்ந்த நாற்றமும், கேஸ் நாற்றமும் கலந்து வீச, பவானி சமையற்கட்டுக்குள் எட்டிப் பார்த்தாள். அடுப்பணைந்தது கூடத் தெரியாமல் சிந்தனையில் மூழ்கிப் போய் நின்றிருந்தாள் ஷைலஜா. பவானி விறுவிறுவென்று வந்து அடுப்பை அணைத்தாள். பால் பாத்திரத்தை இறக்கி வைத்து பர்னரை சுத்தம் செய்வதற்காக தனியே எடுத்தாள்.

    சாரி மன்னி, பால் பொங்கிடுத்தா என்ன… ஷைலஜா பதறியபடி அடுப்பையும், இறக்கி வைத்திருந்த பால் பாத்திரத்தையும் பார்த்தாள்.

    பவானி, மனசு நிறைய எரிச்சல் ததும்பினாலும் மெளனமாய் நகர்ந்தாள். அந்த மெளனம் கோபத்தைக் காட்டிலும் கடுமையாக இருந்தது.

    ஷைலஜா குற்ற உணர்வை மறைத்தபடி காபி கலந்து அனைவருக்கும் கொடுத்தாள்.

    சமையலுக்கு என்ன காய் நறுக்கட்டும் மன்னி?

    ப்ரிஜ்ஜூல என்ன இருக்கோ அதான் மன்னி அவளைப் பார்க்காமல் பதில் சொன்னாள்.

    ப்ரிஜ்ஜில் நாலைந்து தோல் சுருங்கிய கத்திரிக்காயும், முற்றிய பீன்ஸும் கொஞ்சம் இருந்தன.

    எல்லார்க்கும் இது காணுமா?

    உனக்கும் உம் பசங்களுக்கும் போதுமே இது.

    உங்களுக்கெல்லாம்?

    நாங்க வெளில போறோம், கல்யாணத்துக்கு. ராத்திரிதான் வருவோம். வேஸ்ட் பண்ணாம சாதம் வடிச்சு சாப்ட்டுக்கோங்க. குழந்தைகள் மேல ஒரு கண் இருக்கட்டும். நேத்திக்கே உங்கண்ணாவோட டேபிள் மேல ரெண்டு சாமானை உடைச்சாச்சு. ராஜஸ்தான்லேர்ந்து அவர் ஆசை ஆசையா வாங்கிண்டு வந்த கண்ணாடி பொம்மைகள்! குழந்தைகளுக்கு அதோட விலையும் அருமையும் தெரியுமான்ன…? நாமதான் பாத்துக்கணும்

    மன்னி குளிக்கப் போய்விட்டாள். ஷைலஜா உதட்டைக் கடித்து துக்கத்தை விழுங்க முயன்றாள்.

    இதை விட விலை உயர்ந்த சாமான்களுக்கெல்லாம் அவளும் சொந்தக்காரியாகத்தான் இருந்தாள். பத்து நாட்கள் முன்பு வரை. கம்ப்யூட்டர் என்ன, விலை உயர்ந்த சோபாக்கள் என்ன, கட்டில் என்ன, அலங்கார சமான்கள் என்ன, நகைகள் என்ன, கார் என்ன… ஏஸி என்ன, சொந்தமாய் பிளாட் என்ன, என்று சகல வசதிகளோடும்தான் இருந்தாள். கண்மூடிக் கண் திறப்பதற்குள் வாழ்க்கையே தலைகீழாய்ப் புரண்டுவிடும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்? இந்த உலகில் எதுவும் உத்தரவாதமில்லை. நேற்றிலிருந்தது இன்றில்லை. எல்லாம் போனது பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை. கடவுள் தன்னையும் குழந்தைகளையும் உயிரோடு விட்டானே என்று நன்றி சொன்னாள். ஊஞ்சலாட்டம் போல கிடுகிடு வென்று வீடே ஆடிய போது சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அதோடு தலைசுற்றி வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. வெளியில் குழப்பமும் கூச்சலுமாக சப்தங்கள் தடதடவென்று மனிதர்கள் பெரும் அலறலோடு மாடிப்படியில் இறங்கி ஓட, என்ன ஏது என்று புரியாத நிலையில் அவளும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடினாள். போட்டது போட்டபடி அனைத்தும் துறந்து, குழந்தைகளுடன் அவள் தெருவுக்கு வந்த இரண்டு நிமிடங்களில் ஏழு மாடிகளைக் கொண்ட அந்த அபார்ட்மெண்ட் ஒரு அப்பளம் மாதிரி நொறுங்கி விழுந்து மண் குவியலாயிற்று. இன்னும் வெளியேறாத பல பேரின் மரண ஒலங்கள் கான்கிரீட் சப்தத்தில் கரைந்து அடங்கியது.

    கண்மூடித் திறப்பதற்குள் தன் முன் நடந்த கோரக் காட்சிகளை நம்ப முடியாமல் நடு நடுங்கிய தேகத்தோடு குழந்தைகளை இறுக அணைத்துக் கொண்டாள். சுற்றிலும் கூச்சலும் குழப்பமுமாயிருந்தது. நடப்பது எதுவும் மனதில் பதியவில்லை. பிரமை பிடித்தவள் போல குழந்தைகளைத் தழுவிக்கொண்டு வெட்டவெளியில் வெறித்த பார்வையோடு தன்நிலை புரியாது அமர்ந்திருந்தாள். அவள் மட்டுமல்ல. அங்கே ஆயிரக்கணக்கானோர் அப்படித்தான் பைத்தியம் பிடிக்காத குறையாய் தலையில் கைவைத்தபடி குளிரில் விறைத்துப் போய் அனைத்துமிழந்து அமர்ந்திருந்தனர். எல்லாம் போய் விட்டது என்று உணரவே வெகுநேரமாயிற்று.

    மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

    வெகு நேரம் கழித்துத் தான் பிரமையிலிருந்து மீண்டாள் ஷைலஜா. சற்று முன்பு வரை அரைக் கோடிக்கு அதிபதியாயிருந்த தன்னிடம் தற்போது அரைக்காசு கூட இல்லை என்பதும், அடுத்த வேளை உணவுக்கும் உடைக்கும் கூட வழியில்லை என்பதும் உறைத்தபோது அவள் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து போனாள். தன் வீடு இருந்த பகுதியைப் பார்த்தாள். முழுக் கட்டிடமும் தகர்ந்து மண் மேடாகியிருந்தது. தங்கள் உயிர்மட்டுமே மிச்சம். இதற்காக ஆண்டவனுக்கே நன்றி சொல்லிய அதே நேரம் ஏன்…? ஏன் இப்படி சோதனை...? எதனால் இப்படி அனைத்தும் பறிக்கப் பட்டது என்ற கேள்வி எழத்தான் செய்தது. இந்தக் கேள்வி அவளுக்குள் மட்டுமா? எல்லோருமே அங்கு இந்த கேள்வியோடுதான் வெட்டவெளியில் முகத்தில் அறைந்தபடி அழுது கொண்டிருந்தனர். ஏன்? ஏன்? ஏன்?

    ம்மா... மடியிலிருந்த பிள்ளை அவள் கன்னத்தைத் தொட்டு அவள் கவனத்தைத் திருப்பியது.

    ம்மா…

    பசிக்குதும்மா… முனகியது.

    ஷைலஜா அழுகையை அடக்கிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறப்பிலிருந்து நேற்று வரை பசி பற்றிய கவலையோ பயமோ இல்லாதிருந்த நிலை இன்று தலைகீழாகியிருந்தது. என்ன செய்ய...? இந்த கான்கிரீட் புழுதியில் உணவுக்கு எங்கு செல்ல? யாரிடம் கேட்க…? இனி என்ன செய்யப் போகிறேன்?

    யோசிக்கக் கூட வலுவின்றி பூகம்பம் அனைவரையும் புரட்டிப் போட்டிருந்தது. மின்சாரமில்லை, தகவல் தொடர்பு இல்லை. தண்ணீரில்லை. வீடில்லை, உணவில்லை, உடையில்லை இனி என்ன என்ற கேள்வி மட்டுமே அனைவர் மனதிலும்.

    ராணுவத்தினரும், தனியார் தொண்டு நிறுவனங்களும் வேக வேகமாக கூடாரங்களை அமைத்துக் கொடுக்க, அங்கே இடம் பிடிக்க மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு சென்றனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1