Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Atharkaga Alai Paaigirean
Atharkaga Alai Paaigirean
Atharkaga Alai Paaigirean
Ebook105 pages37 minutes

Atharkaga Alai Paaigirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரதராஜன், சுந்தரி இருவரும் தம்பதிகள். சுந்தரிக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்சனையால் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.

இச்சமயத்தில் அவர்கள் வீட்டில் காயத்ரி என்ற பெண் குழந்தை பிறக்கிறது. எப்படி? காயத்ரியின் வரவால் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

காயத்ரியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? வாசிக்கலாம் அதற்காக அலை பாய்ந்து....

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580100606629
Atharkaga Alai Paaigirean

Read more from Devibala

Related authors

Related to Atharkaga Alai Paaigirean

Related ebooks

Related categories

Reviews for Atharkaga Alai Paaigirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Atharkaga Alai Paaigirean - Devibala

    https://www.pustaka.co.in

    அதற்காக அலைபாய்கிறேன்.

    Atharkaga Alai Paaigirean

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    இது கர்ப்பம்தான்மா!

    டாக்டர் சொன்னதும் வேதாவின் முகத்தில் வேதனை ரேகைகள் பரவலாக ஜனித்தது.

    பலவீனமா இருக்கீங்க! சத்துள்ள ஆகாரமா சாப்பிடணும். நிறைய ஓய்வு எடுக்கணும்! மருந்துகளை எழுதித் தர்றேன். எச்சரிக்கையா இருங்க!

    அவர் எழுதித் தந்த மருந்துகளை வாங்கிக் கொண்டாள். வெளியே வந்தாள். உலகமே இருட்டிப் போனதைப் போலிருந்தது.

    கழுத்தில் தாலி இல்லை! ஆனால் வயிற்றில் பிள்ளை வந்துவிட்டது. எப்படி? எப்படி இதற்கு நான் இடம் கொடுத்தேன்?"

    நான் கொடுத்த இடம் அல்ல! என்னையும் மீறி நடந்துவிட்டது சம்பவம்!

    இது சதி!

    அவரிடம் பேச வேண்டும்!

    நியாயம் கேட்க வேண்டும்!

    வீட்டை நோக்கி நடந்தாள் வேதா.

    இந்த நேரத்தில் வேதா பற்றிய விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்!

    சிறு வயதிலேயே தாய், தகப்பனை இழந்த வேதா எப்படி வளர்ந்து பெரிய பெண் ஆனாள் என்பது அவளுக்கே அதிசயமான ஒன்று. யார் யார் ஆதரவிலோ வளர்ந்தாள். அதிகபட்சக் கல்வி மூன்றாம் வகுப்பு!

    பதினெட்டு வயதில், தெரிந்த ஒருவரின் சிபாரிசு மூலமாக வக்கீல் வரதராஜனின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். முதலில் பாத்திரம் தேய்த்து, துணி தேய்த்து வீடு பெருக்கும் வேலைக்காரியாகத்தான் சேர்ந்தாள். அவளது கடுமையான உழைப்பு அந்த வீட்டுக்கு அவசியமாகிப்போக, அவளும் வேறு யாரும் இல்லாத அனாதைப் பெண்ணாக இருக்க, அந்த வீட்டிலேயே தங்கிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. மெல்ல மெல்ல சமையல் கட்டுக்குள்ளும் அவளது கால்கள் பதியத் தொடங்கின.

    வாய்க்கு ருசியாக சமைக்கத் தொடங்கினாள்.

    அந்த வீட்டில் எல்லாருக்கும் அது பிடித்துப் போய்விட, நிரந்தர சமையல்காரியும் ஆனாள்.

    வேதா தன் பதினெட்டாவது வயதில் அந்த வீட்டுக்குள் நுழையும் போது வக்கீல் வரதராஜனுக்கு இருபத்தியெட்டு வயது முடிந்திருந்தது. திருமணம் நடந்திருக்கவில்லை! அப்பா இல்லை! வயதான அம்மா மட்டும்தான் இருந்தார்கள்.

    அம்மாவின் உதவிக்காகத்தான் வேதாவை வேலைக்குச் சேர்த்திருந்தார்கள். அம்மாவுக்கு ஒரு மகள் போல வேதா மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டாள். அவள் இல்லாவிட்டால் ஒரு நிமிடம் கூட அம்மாவால் முடியாது. நாலு வருடங்களில் வேதா அந்த வீட்டில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டாள்.

    வரதராஜனுக்கு முப்பத்திரெண்டு!

    வக்கீல் பயிற்சி நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. தீவிரமாக வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜாதகம் நல்லபடியாகக் குதிர்ந்தது. பணக்கார இடம்தான். ஆடிட்டர் ஒருவரின் பெண். ஒரே மகள். ஆனால் சுந்தரி பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருந்தாள்.

    முதலில் வரது வேண்டாமென்று சொல்லிவிட, அம்மாதான் விடவில்லை!

    அவளுக்கு என்னடா குறைச்சல்? பத்துப் பொருத்தமும் அம்சமா பொருந்தியிருக்கு. வசதியான இடம்!

    அழகா இல்லையேம்மா!

    எதுடா அழகு? சினிமால நடிக்கப் போறாளா?

    அப்படி இல்லைம்மா

    குடும்பப் பொம்மனாட்டிக்கு அந்த அழகு போதும். வீட்டுக்கு வரப் போற லட்சுமிக்கு குணம்தான் முக்கியம்!

    அம்மா நான்....!

    சரி வேண்டாம். நான் கண்ணை மூடறதுக்குள்ளே உனக்கொரு கல்யாணம் செஞ்சு பார்க்க ஆசைப்படறேன். நடக்குமோ, நடக்காதோ? அம்மாவின் குரலில் விரக்தி!

    அடுத்து வந்த நாட்களில் அம்மாவுக்கு ரத்த அழுத்தம் ஏறி, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்தது. வேதாதான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள். உயிர் பயம் இல்லை! ஆனால் படுக்கையை விட்டு நகரக் கூடாது, என டாக்டர்கள் கட்டளையிட, வரதுவுக்குக் கவலையாகிவிட்டது.

    அம்மா வீட்டுக்கு வந்த மறுநாள் காலை வரதராஜன் சாப்பிட உட்கார, வேதா பரிமாறத் தொடங்கினாள்.

    அம்மாவுக்கு ஆபத்து எதுவும் இல்லையே வேதா?

    இல்லைதான். ஆனா.. மனசுல உள்ள ஏக்கம், தப்பா முடிஞ்சிரக் கூடாது இல்லையா?

    நீ என்ன சொல்ற?

    அவங்க காலம் முடிஞ்ச பின்னால, உங்களுக்குக் கல்யாணம் நடந்தா, உங்களையே அது உறுத்தாதா?

    நான் சமையல்காரிதான். சொல்லக்கூடாதுதான். ஆனா அம்மா தயவால ஒரு பிடி சோறும், உடுத்தத் துணியும் கிடைக்குது! அந்த மகராசி இன்னும் சிலகாலம் வாழணும். அது உங்க கையில் இருக்கு. வரதராஜன் அந்த வாரக் கடைசியில் கல்யாணத்துக்கு சம்மதித்துவிட்டான்.

    சுந்தரியே தீர்மானிக்கப்பட்டாள்.

    அம்மா அந்த சந்தோஷத்தில் எழுந்து உட்கார்ந்தாள். அடுத்த மாதத் தொடக்கத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டது. அம்மா! வேதாவை வேலைக்காரினு நினைக்காதே! என்னைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுதே அவதான்!

    அவ என் பொண்ணுடா! என் மனசைப் புரிஞ்சுகிட்டவ!

    கல்யாணம் தடபுடலாக நடந்தது. சுந்தரியின் அப்பா சீரும், செனத்தியுமாக குவித்துவிட்டார். ஒரே மகள் என்பதால் பணத்தைக் கொட்டிக் கொட்டி செலவு செய்திருந்தார்.

    "சம்பந்தியம்மா! எங்க

    Enjoying the preview?
    Page 1 of 1