Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjukkul Neethan
Nenjukkul Neethan
Nenjukkul Neethan
Ebook77 pages22 minutes

Nenjukkul Neethan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466824
Nenjukkul Neethan

Read more from Rajeshkumar

Related to Nenjukkul Neethan

Related ebooks

Related categories

Reviews for Nenjukkul Neethan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjukkul Neethan - Rajeshkumar

    1

    கல்யாண மண்டபம் விடியப்போகிற வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்தது.

    பெரிய மண்டபம். பெண்கள் தூக்கக் கலக்கம் இல்லாமல் எட்டாயிரம், பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவைகளை அநாயசமாய் கட்டிக்கொண்டு மண்டபத்தின் குறுக்கேயும் நெடுக்கேயும் நடைபோட்டுக் கொண்டு இருந்தார்கள். கல்யாண வயதில் தளும்பிக் கொண்டிருந்த பெண்கள் தாவணிகளை காரணம் இல்லாமல் சரி செய்து கொண்டு சிரித்தார்கள். வாத்திய கோஷ்டி தன் வாத்திய சமாச்சாரங்களை காவி நிற உறைகளுக்குள் திணித்துவிட்டு - தூங்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தார்கள். மண்டப வாசலில் போட்டிருந்த சீரியல்லைட் அவசர அவசரமாய் ‘வெல்கம்’ சொல்லி கண் சிமிட்டியது. மணவறை ஜோடனையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ராம சுப்ரமணியன் அந்தப் பக்கமாய் பாத்திரம் ஒன்றை தூக்கியபடி போய்க்கொண்டிருந்த தன் மனைவி அன்னபூர்ணியை கூப்பிட்டார்.

    அன்னம்! ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டு போ...

    வந்தாள்.

    பெண்ணுக்குக் கல்யாணம் நடக்கப்போகிற சந்தோஷம் முகத்தில் ஒட்டியிருந்தது. மூக்கில் - காதுகளில் வைரதுணுக்குகள்.

    என்னங்க...?

    இப்படி வந்து உட்கார்...

    பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.

    சரியாப் போச்சு...! மாப்பிள்ளையோட அப்பா மாடிப்பக்கமா இருந்து இங்கேயே பார்த்துட்டிருக்கார். நீங்களும் நானும் ஜோடியா உட்கார்ந்து பேசிகிட்டிருக்க இதுவா நேரம்...?

    அன்னபூர்ணி படபடவென பொரிந்துவிட்டு போய்விட்டாள்.

    ராமசுப்ரமணியன் டம்ளரில் இருந்த மிச்சக் காப்பியை தொண்டையில் சரித்துக்கொண்டு காலி டம்ளரை கீழே வைத்த விநாடி -

    ஹலோ... அங்கிள்...

    முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டது.

    திரும்பினார்.

    அந்த இளைஞன் நின்றிருந்தான். களையான முகம், சிலும்பின மாதிரியான சுருண்ட க்ராப். அழகான பல் வரிசையில் புன்னகை. கையில் ஒரு சூட்கேஸ்.

    என்ன அங்கிள் அப்படி பார்க்கறீங்க...? நான் உங்க சிநேகிதர் சேஷகோபாலனோட சன். ரவீந்திரன்.

    ராமசுப்ரமண்யன் மலர்ந்தார்.

    சேஷகோபலனோட பையனா... நீ...? என்னமா வளர்ந்துட்டே... உங்கப்பா காலமானப்ப உன்னைப் பார்த்தது... அப்ப நீ பி.ஈ. பண்ணிட்டிருந்தே... இல்லை...

    ஆமா அங்கிள்...

    உட்கார்...

    உட்கார்ந்தான்.

    நான் சண்டிகரிலிருந்து ரெண்டு நாளைக்கு முந்திதான் மெட்ராஸ் வந்தேன் அம்மாவுக்கு நீங்க அனுப்பியிருந்த உங்க பொண்ணு சௌம்யா கல்யாண அழைப்பிதழைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமாயிருந்தது. நேத்தே புறப்பட்டு வரணும்ன்னு நினைச்சேன். முடியலை...

    அம்மா வரலையா...?

    அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை... கோயமுத்தூர் கிளைமேட் ஜில்லாயிருக்கும். கூட்டிட்டு வந்தா அம்மாவுக்கு ஈஸ்னோபீலியா அதிகமாயிடும். அதான் கூட்டிட்டு வரலை...

    கொஞ்ச நேரத்துக்கு முந்திகூட உங்கப்பாவைப் பத்தி நினைத்தேன். அவன் உயிரோடு இருந்திருந்தா... ஒரு வாரத்துக்கு முந்தியே கல்யாணத்துக்கு வந்திருந்து - எல்லாத்தையும் தூக்கிக் கட்டிட்டு பண்ணியிருப்பான்... அவனை மாதிரி ஒரு ஃப்ரண்ட் யாருக்குமே அமையமாட்டான்.

    அங்கிள்...! சௌம்யா எப்படியிருக்கா...?

    கல்யாண சந்தோஷத்துல மிதந்துட்டு இருக்கா. வா... பார்க்கலாம்...

    கூட்டிப் போனார்.

    ரவீந்திரன் தொடர்ந்தான்.

    "நான் ஒரு அறுவை ஜோக் சொல்லட்டுமா...?"

    ப்யூட்டி பார்லர் பெண்கள் மணப்பெண் சௌம்யாவின் கொண்டை அலங்காரத்தில் மும்முரமாய் இருக்க - சௌம்யாவின் கல்லூரிகால சினேகிதிகள் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு வம்பளப்பில் இருந்தார்கள்.

    சிரிப்பலைகள் பரவிக் கொண்டிருக்க - ராமசுப்ரமணியனும் ரவீந்திரனும் அந்த அறைக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.

    அம்மா... சௌம்யா...

    கண்ணாடியினின்றும் திரும்பிய

    Enjoying the preview?
    Page 1 of 1