Puthithaai Piranthen
()
About this ebook
Read more from N.C.Mohandass
Kuttram Azhaikkirathu Rating: 5 out of 5 stars5/5Siththi Rating: 0 out of 5 stars0 ratingsAnitha Akila Agalya Rating: 5 out of 5 stars5/5Kanavodu Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Po Naalai Varaathe Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Kuttram Muttrum Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsPon Anthi Maalaip Pozhuthu Rating: 0 out of 5 stars0 ratingsSuttramum Natpum Rating: 0 out of 5 stars0 ratingsAmmavai Kaappattru Rating: 0 out of 5 stars0 ratingsPani Vizhum Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Iruppen Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum Paarkkalaam Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Virpanaikku Rating: 0 out of 5 stars0 ratingsAagayap Panthalile Rating: 0 out of 5 stars0 ratingsPesu Vizhiye Pesu Rating: 0 out of 5 stars0 ratingsEnnaruge Nee Rating: 0 out of 5 stars0 ratingsSuvaasam Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Sugam Rating: 0 out of 5 stars0 ratingsPanithuli Ondru Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Ondre Pothume Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Paththirikai Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha NIlavu Rating: 0 out of 5 stars0 ratingsNila Kaayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsYetho Yetho Ondru Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsOotyvarai Ulavu Rating: 0 out of 5 stars0 ratingsNere Vaa Nere Po Rating: 0 out of 5 stars0 ratingsThayangaathey Thakku Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puthithaai Piranthen
Related ebooks
Uyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Paaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kadivalam Rating: 0 out of 5 stars0 ratingsபிருந்தாவனமும் நந்தகுமாரனும்... Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Mayangukirean Rating: 5 out of 5 stars5/5Inaintha Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் சுவடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsAbaaya Arivippu! Rating: 4 out of 5 stars4/5Enakkoru Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsPanneerai Thoovum Mazhai! Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsAruke Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsOdi Va, Omana...! Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal Rating: 2 out of 5 stars2/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsEn Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Kaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsSoozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsNeeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsThavaminri Kidaitha Varame Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Puthithaai Piranthen
0 ratings0 reviews
Book preview
Puthithaai Piranthen - N.C.Mohandass
1
சந்துக்குள், வழிந்தோடும் குழாயடி நீரை நசுக்கிக்கொண்டு கார் ஒன்று அதுவும் புது ஹூண்டாய் வருவதென்பது அந்தப் பகுதிக்கு அபூர்வமான விஷயம். கார்கள் வருகின்றனவென்றால் ஒன்று, மந்திரி வரவேண்டும் அல்லது தேர்தல்!
வண்டி யோசனையுடன் நின்றதும் தெருப் பசங்கள், என்னவோ தாங்களே அதை வாங்கிவிட்ட தோரணையில் சுற்றிச் சுற்றி வந்தனர். தடவிப் பார்த்தனர்.
டிரைவர் இருள் பரவின கண்ணாடியை கீழே இறக்க, அண்ணே! இது என்ன விலை?
பொடியன் ஒரு ரவுசுவிட, ஏன் - நோட்டிருக்கா போடா! முதல்ல போய் உன் தபால்பெட்டி டவுசரை மாத்து!
என்று விரட்டினான்.
அருகில் அமர்ந்திருந்த விநாயகம் கண்காட்ட, டிரைவர், இறங்கிப் போய், அரைமணி நேரமாய் பைப்படித்து அரைக்குடம் கூட நிரப்ப முடியாமல் மூச்சு வாங்கின பெண்ணிடம், ஹரிதாங்கிறது...?
அதோ... அந்த வீடு!
ரொம்ப நன்றி
என்று அவளது முந்தானை விலகின நெஞ்சுக்கு சொல்லிவிட்டு நடந்தான்.
யார் டீ இவுக...? ஹரிதாவை பொண்ணு பாக்க வந்தவகளா...?
இத்தனை காலையிலேயா...?
அந்தவீடு பூவரசமரம்- வாழைமரம்- மல்லிகைபந்தல்- வேப்பமரம் என்று சமத்துவமரமாயிருந்தது. முன் பகுதியில் டிராக்டர் ஒன்று பழுப்பேறி ‘துரு துரு’வென நின்றிருந்தது. பின் பகுதி சுவர்களில் பாசி. ஊசி ஊசியாய் ஒட்டடைகள்! கேட்டிடம் பின்னிப் பிணைந்தபடி சாக்கடை சொதப்பிற்று.
விநாயகம், கூலிங்கிளாஸை சரி பண்ணிக்கொண்டு, வெற்றிலைப் பெட்டியுடன் இறங்கினார்.
நானும் வரட்டுமாய்யா...?
வேணாம். வண்டியைப் பாத்துக்க - வானரங்கள் ஏதாச்சும் பண்ணிடப் போகுது!
அவர், வெற்றிலையை புளிச்செய்து, மிடுக்குடன் நுழையும் முன்பே பையன் ஒருவன் பைக் ஓட்டிப் போய் நிறுத்தி, உள்ளே ஓடி அக்கா! உன்னைப் பார்க்க யாரோ கார்ல வந்திருக்காங்க!
என்று தந்தியடித்தான்.
யார்ரா?
தெரியல, கேட்க பயமாயிருக்கு, இவ்ளோ பெரிய மீசை! ஒருவேளை பொண்ணு பாக்க வந்திருப்பாங்களோ?
என்று அவன் கண் சிமிட்ட, சீ. உதைப்பேன்
என்று விரட்டினாள்.
ஹரிதா சற்று முன்புதான் குளித்து இன்னும் அந்த ஆவி அடங்காமல் வியர்த்து, தலைமுடியை, கொஞ்சநேரம் உலாத்திட்டு வாங்க என்று முதுகில் போட்டிருந்தாள். இடுப்பில் செருகியிருந்த பாவாடை நுனியை அதட்டி, சரி பண்ணிக்கொண்டு ஆர்வத்துடன் வெளியே வந்தாள்.
யாராயிருக்கும்?
ஒருவேளை... ஆபீஸிலிருந்து எம்.டி...?
அவளைப் பார்த்ததும், விநாயகம் தோள்பட்டையிலிருந்த துண்டை தட்டிக் கொடுத்து, நான் செந்திலோட அப்பா!
அவளுக்கு குப்பென வியர்த்துப் போயிற்று.
உடன் கைகால் வராமல், நாணம் மட்டும் முன்னால் வர, வாங்க சார்!
என்று நாற்காலி தேடினாள்.
தட்ஸ் ஓக்கே! நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!
உட்காருங்க. காபி...
நோ ஃபார்மாலிடீஸ்!
என்று மல்லிகைப் பந்தலிடம் போய் நின்றார். ஹரிதாவும் சரடு கட்டி இழுத்தது போல அவரைத் தொடர்ந்தாள்.
அதற்குள் பைப்படியும், அக்கம் பக்கத்து வீட்டு ஜன்னல்களும் கண் திறந்திருந்தன. விநாயகம் கையை நீட்டி நீட்டி ஏதோ சொல்ல, ஹரிதாவின் முகம் வாடிப் போவதும், சிவப்பதும், அனைவருக்கும் பளிச்செனத் தெரிந்தது. ஆனால் விஷயம் என்னவென்றுதான் புரியவில்லை.
புரியாததால் அவர்களின் ஆர்வம் அதிகமாயிற்று. ஹரிதா ஏதாவது தப்பு பண்ணியிருப்பாளோ? ஆபீஸில் ஏதும் கையாடல்...? என்று ஆளுக்காள் கிசுகிசுத்தனர்.
அவர் கோபிப்பதும், அதட்டுவதும், அவள் தலைகுனிவதும் தெரிய,
அவர்களுக்கு சுவாரஸ்யமாயிற்று. நிச்சயம் என்னவோ நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இந்த வாரு வாருவாரா?
பத்துநிமிட அடைமழைக்குப்பின் விநாயகம், அவளை எச்சரித்த மாதிரி கை காட்டிவிட்டு விறுவிறுவென வெளியேறி எடுடா வண்டியை!
என்று கத்தினார்.
ஹரிதாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது.
பசங்கள் என்னக்கா விஷயம்?
என்று கேட்டபடி ஓடிவர, கதவைச் சாத்திவிட்டு படுக்கையில் போய் விழுந்தாள்.
கதவில் டாக்டர் பிரசாத்- IN என்கிற பலகை தொங்கிற்று. அதைப் பார்த்ததும் காலிங்பெல் அடிக்கப்பட்டது.
பிரசாத், நெற்றியில் விபூதியுடனும், தொப்புள் தெரியும் வேட்டியுடனும், யார்ன்னு போய் பாரேம்மா!
என்று விரட்டினான்.
வேறு யார் - பேஷன்டா தானிருக்கும். நீ சீக்கிரம் டிபனை முடிச்சுட்டு வா!
பேஷன்டுக்கு இங்கே என்ன வேலை...? நான் என்ன கிளினிக்கா வச்சிருக்கேன்?
அதற்கு அவள் பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தி, வாசலுக்கு நடந்தாள். அம்மாவுக்குப் பேராசை. மகன் டாக்டர் என்று தெருமுழுக்க சொல்லி வைத்து, எல்லோரும் தன்னை டாக்டரோட அம்மா என்று அழைப்பதை விரும்புபவள்.
பாம்பு கடி, தேள் கடியில் ஆரம்பித்து, குழந்தைக்கு மாந்தம் வரை அவன் பார்த்தாகணும், அம்மா! நான் ஜெனரல் பிஸிஷியனில்லை. காஸ்மெடிக் சர்ஜன்! இந்த மாதிரி சில்லரை கேஸ்களை பார்க்கறதுக்கா எம்.எஸ் பண்ணி வெளிநாட்டுல போய் காஸ்மெடிக் படிச்சேன்?
பரவாயில்லைப்பா. டாக்டர் மருந்து கொடுக்கும் போது அவங்களுக்கு ஆசுவாசம். ஏதோ நம்மாலான உதவி!
இது தப்பும்மா!
எது தப்பு? உன்னைப் படிக்க வச்சதா. இல்லை, வளர்த்து ஆளாக்கினதா...?
என்று புசுபுசுவென அழ ஆரம்பித்துவிடுவாள். மெடிக்கல் ஷாப்காரன் மருந்து தரான். உனக்கென்னவாம்?
அப்போ அவன்டயே போக வேண்டியதுதானே!
எல்லாம் ஒரு நம்பிக்கை தானே! டாக்டர் எனும் போது நிச்சயம் சரியாயிருக்கும் என்கிற தைர்யம். நோய், மருந்தில் பாதி மனோ தைரியத்தில் பாதி குணமாகும்னு நீ தானே சொல்லியிருக்காய்!
அவன் எப்போதோ, எதற்கோ சொன்னதையெல்லாம் ரொம்ப பத்திரமாய் ஞாபகம் வைத்து மடக்கிப் போடுவாள். தெருவில் உனக்கு எவ்வளவு பெயர் தெரியுமா...? இந்த ஏரியாவுல டாக்டரே இல்லை! இருக்கிறது நீ ஒருத்தன் தான். அப்புறம் உங்கிட்ட வராம, வேறு எங்கே போவாங்களாம்?
இது சரிப்பட்டு வராது? ம்ஹூம் பேசாம பேட்டையை மாத்திட வேண்டியது தான்!
நீ வேணுமானாப் போ. நான் வரலை!
வசதி வந்த பின்பும் எதுக்கும்மா வாடகை வீடு? நம் சொந்த வீட்டுக்குப் போயிடுவோமே!
"இல்லை. எக்காரணம் கொண்டும் இந்த வீட்டை விட்டு நான் வர்றதா இல்லை. இது அப்பா வாழ்ந்த வீடு. அவரோட பேச்சு-மூச்சு- நடவடிக்கை எல்லாம் இங்கேயிருக்கு. இது அவர் முதல் முதல்ல பார்த்து குடி வந்தவீடு. ராசியானதும் கூட. இங்கேதான் எங்களோட குடித்தனமே ஆரம்பம்.
உன்னை வளர்த்து, படிக்கவெச்சு, அவர் பெரிய ஆபீசரானது, அவரது பெரிய குடும்பத்தைக் கரை சேர்த்தது எல்லாம் இங்கிருந்து தான். அதனாலதான் ஓனர் எவ்ளோ வாடகை கேட்டாலும் மறுக்காம கொடுத்துகிட்டிருக்கேன். அவருக்கும் என் உணர்வுகள் தெரியும்... புரியும்." என்று அழ ஆரம்பித்துவிடுவாள்.
அதனால், பிரசாத் கப்சிப்!
அம்மாவின் குணம் - மனம் - காரம் - சாரம் அறிந்திருந்ததால் அவன், அவளிடம் விவாதத்திற்குப் போவதில்லை.