Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Naal Punnagai
Kadaisi Naal Punnagai
Kadaisi Naal Punnagai
Ebook90 pages30 minutes

Kadaisi Naal Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மந்திரமூர்த்தி என்பவர் தன் இளமை காலத்தில் செய்த தவறால், தன்னுடய மூன்று பெண்குழந்தைகளின் வாழ்க்கை, மிகப்பெரிய கேள்வி குறியாக மாறுகிறது. அப்படி அவர் செய்த குற்றம் என்ன? அதனால் எப்படியெல்லாம் பிரச்சனைகள் அவருக்கு வருகிறது. யார்? இவற்றை எல்லாம் செய்கிறான். கடைசி நாள் புன்னகை யாருக்கு? புரியாத குழப்பத்தில், மந்திரமூர்த்தியின் குடும்பமும், அவரின் சம்மந்தி குடும்பத்தாரும். நாமும், குழப்பத்திற்கான காரணங்களை, வாசித்து தெரிந்து கொள்வோம்…

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580100606638
Kadaisi Naal Punnagai

Read more from Devibala

Related authors

Related to Kadaisi Naal Punnagai

Related ebooks

Related categories

Reviews for Kadaisi Naal Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Naal Punnagai - Devibala

    https://www.pustaka.co.in

    கடைசி நாள் புன்னகை

    Kadaisi Naal Punnagai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved.  This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    பரபரப்பாக இருந்தார் மந்திர மூர்த்தி. டைனிங் ஹாலுக்குள் நுழைந்து சமையல்காரர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.

    டிபனெல்லாம் ரெடியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாச்சு!

    கிட்டத்தட்ட எல்லாம் ஆயிடுச்சுங்க!

    பெரிய பெரிய பாத்திரங்களில் இலை கொண்டு மூடி வைக்கப்பட்டிருக்க திறந்து பார்த்தார்.

    பாதாம் அல்வா... சேமியாக் கிச்சடி... மைசூர் போண்டா, ரவா இட்லி... என்று மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

    கல்யாண சத்திரம் ஓசையுடன் களை கட்டிக்கொண்டிருந்தது.

    அவர் மனைவி பட்டு சரசரக்க ஓடி வந்தாள்.

    என்னங்க போட்டோ கிராபர் வரலையே இன்னும்!

    என்ன செய்யறான் அவன்? சரியா ரெண்டு மணிக்கு வரச் சொன்னேன் நான். மணி மூணாகப் போகுது. இவனுங்களுக்கெல்லாம் காசைக் கொடுத்து... தா... வந்துட்டான் பாரு... ஆடி அசைஞ்சு நுழையறான்!

    அவரது இரண்டாவது மகள் யாமினி ஓடி வந்தாள்.

    அப்பா உங்களுக்கு போன்!

    வந்துட்டேன்!

    தொலைபேசிக்கு அவர் போகும் நேரம் மந்திர மூர்த்தி பற்றி சுருக்கமாகக் கொஞ்சம்.

    நகரின் பிரபல தொழிலதிபர்களில் மந்திர மூர்த்தி, ஒருவர்.

    புது பணக்காரர் என்பதால் அவரது பூர்வீகம் பற்றி கசமுசாவென பல பேச்சுக்கள் தொழில் வட்டாரத்தில் உண்டு. எது சரியென்று யாருக்கும் தெரியாது.

    மூன்று பெண்கள்,

    மூத்தவள் பத்மினிக்குத் தான் நாளைக்கு கல்யாணம்.

    அடுத்தவள் யாமினி. மூன்றாமவள் காமினி!

    நகரில் ஒரு பிரபலமான கண் டாக்டருக்குத்தான் பத்மினியை பேசி முடித்திருக்கிறார் மந்திர மூர்த்தி.

    இதோ வந்து விட்டார், வீடியோக்காரர் பின் தொடர, வாசலில் ஹாரன் சப்தம் கேட்டது.

    அவங்க வந்துட்டாங்கய்யா! சிவகாமி ஆரத்தி எடுத்துட்டு சீக்கிரம் வா!

    வீடியோக்காரர் வேகமாக செயல்பட, வாசலில் இரண்டு வேன்களும், நாலைந்து கார்களும் வரிசையாக நின்றன.

    சிவகாமி தன் பருத்த தேகத்தை ஆரத்தித் தட்டுடன் சுமந்து கொண்டு மூச்சிரைக்க வாசலுக்கு வந்தாள்.

    மாப்பிள்ளை பூமியில் கால் வைத்ததுமே வீடியோ வெளிச்சம், புகைப்பட வெளிச்சம் என மாறி மாறி அவரை விழுங்கித் தொடங்கியது.

    அவரது பின்னால் ஒரு பெரிய பரிவாரமே இருந்தது மந்திர மூர்த்தி அனைவரையும் பவ்யமாக வரவேற்றார்.

    அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அழைத்துச் சென்றார். பணியாளர்களால் பெட்டிகள் எடுத்து வரப்பட்டன.

    எல்லோரும் டிபன் சாப்பிட வாங்க. அப்புறமா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, மாப்பிள்ளை அழைப்புக்குத் தயாராகலாம்!

    மாப்பிள்ளையின் அம்மா முன்னால் வந்தார்.

    பத்மினியை இன்னமும் பார்க்காத உங்க நிறைய பேர் இருக்காங்க.

    கூட்டிட்டுப் போ சிவகாமி!

    அவர்கள் கலைந்து விலக, இலைக்கட்டு, காய்கறிகளுடன் உள்ளே நுழைந்தான் திவாகர்.

    ஏன் இவ்ளோ லேட்டு?

    என்ன மாமா நீங்க? எத்தனை அயிட்டம் வாங்கனும். ஆள் நான் ஒருத்தன் தான் முடிய வேண்டாம்?

    சரி திவாகர்! நீ போய் ராத்திரி சமையலுக்கு அவங்களை விரட்டு, ஸ்டோரை சரியாய் பார்த்துக்கோ!

    அவரது தொழிற்சாலையில் ஓர் சூபர்வைசராகச் சேர்ந்தான் இந்த திவாகர். தன் உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இன்று அவரத அந்தரங்கச் செயலாளர். அலடென் மிகவும் நெருங்கி விட்டபடியால் அலுவலகம் தவிர மற்ற இடங்களில் வரை ‘மாமா’ என்று தான் அழைப்பான். யாருமில்லாத அனாதை. அவயன பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். பத்மினியை பார்த்து விட்டு அந்தக் கூட்டம் விலக, பின் மாலைப் பொழுதில் மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

    பத்மினியைப் பெண்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம், பேண்ட், வீடியோ அகலமும் விழிப்புடன் செயல்பட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1