Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karai Seratha Odangal
Karai Seratha Odangal
Karai Seratha Odangal
Ebook74 pages26 minutes

Karai Seratha Odangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராமு, பல பெண்களை தன் பசிக்கு இரையாக்கி, பின்பு அவர்களை கொடூரமாக கொலை செய்து சிறையில் இருப்பவன். அவனை ஜோதி என்றவள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள். திருந்தி வாழ நினைக்கும் அவன் வாழ்க்கையில், இன்னல்களாக வரும் துன்பங்கள் என்ன? அதிலிருந்து தப்பித்து கொள்வதற்காக அவன் எடுக்கும் விபரீதமான முடிவு என்ன? இறுதியில் அந்த இருட்டான அறையில், யாரிடம் அவன் உறையாடினான்?. கரைசேராத ஓடமாய் இவன் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் என்ன? வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580125406876
Karai Seratha Odangal

Read more from Vaasanthi

Related to Karai Seratha Odangal

Related ebooks

Related categories

Reviews for Karai Seratha Odangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karai Seratha Odangal - Vaasanthi

    https://www.pustaka.co.in

    கரை சேராத ஓடங்கள்

    Karai Seratha Odangal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    ராமு, எங்கிட்ட நிஜத்தைச் சொல்ல உனக்கென்ன பயம்?

    ராமுவின் பார்வை, எங்கோ பதிந்திருந்தது. அவனுடைய மனசு அதைவிட எங்கோ தொலைவுக்குப் போயிருக்கவேண்டும் என்று ஜோதி நினைத்துக்கொண்டாள். அவள் அரைமணி நேரமாக அவனுடன் பேசியது எதையும் இவன் கிரகித்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

    அதற்குப்பிறகு சில விநாடிகள் அவள் எதையும் பேசாமல், தான் கொண்டுவந்திருந்த கூடையிலிருந்து இரண்டு முறுக்கையும், கடலை உருண்டைகளையும் ஒரு சின்ன ப்ளாஸ்டிக் தட்டில் வைத்து அவனிடம் நீட்டினாள்.

    சாப்பிடு ராமு! அம்மா செய்து கொடுத்தாங்க!

    அவள் அவன் தோளை மெல்ல அசைத்துச் சலனப்படுத்த அவன் சற்று அசைந்து தட்டை வாங்கிக்கொண்டு நிதானமாகச் சாப்பிட ஆரம்பித்தான்.

    அவன் வாய் திறந்து ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவன் சாப்பிடும் ஆர்வத்தில் தென்பட்ட ஏக்கத்தைப் பார்த்து அவள் கண்களில் நீர் மிக மெலிதாகத் திரையிட்டது.

    பிரும்மாண்ட காம்பவுண்டுச் சுவர் சுற்றிலும் அணையாய், தடுப்பாய் சூழ்ந்திருக்க, அந்தச் சிறிய பூங்கா போன்ற வெட்ட வெளியில் வழக்கத்திற்கு மாறான கலகலப்பு தெரிந்தது. அவனுடன் சேர்ந்து இங்கு ஆயுசுக்கோ, சொற்ப காலத்துக்கோ தண்டனையை அனுபவிக்க வந்திருக்கும் கைதிகள் முகத்தில் உற்சாகம் தெரிந்தது. பேச்சில் சிரிப்பு வெடித்தது.

    ஆரஞ்சை உரித்துக்கொண்டே லேசான சங்கடத்துடன் சொன்னாள்:

    இதப்பார் ராமு, மாசா மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமை எப்பவரும்னு நா ஆவலாக் காத்துக்கிட்டு, மாதம் முழுவதும் அதுக்காகப் பிளான் செய்துகிட்டு வரேன். வந்தா நீ பேசக்கூட மாட்டேங்கறே! நா வரது உனக்குப் பிடிக்கல்லியா?

    ராமு மெள்ள அவள் பக்கம் திரும்பினான். மிக மெல்லிய புன்னகைக்கோடு மலர்ந்தது.

    நானும் இந்த ஞாயிற்றுக்கிழமை எப்பவரும்னு காத்திருக்கேன் ஜோதி!

    அவளுள் சட்டென்று ஒரு பிரவாகம் பொங்கிற்று. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டுச் சிரித்தாள்.

    எதுக்காகக் காத்திருக்கியோ?

    உனக்காகத்தான் ஜோதி!

    அவள் கண்களில் அசட்டுத்தனமான கண்ணீர் நிரம்பிற்று.

    அவள் தலையை குனிந்து கொண்டாள்.

    பின்னே வந்தா எதையும் சொல்றதில்லே பேசறதில்லே நீ!

    எதுக்குப் பேசணும்?

    அவன் நிதானமான அழுத்தத்துடன் சொன்னான்.

    பேச்சு முக்கியமில்லே ஜோதி!

    அவன் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவளை உறுக்கிற்று. அவனுடைய மடியில் முகத்தை மறைத்துக்கொண்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்

    அவன் இயந்திர கதியில் அவள் முதுகைத் தட்டிக் கூந்தலை வருடினான்.

    உள் உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்தியும் அதனால் ஏதும் பிரத்யேக பாதிப்பு ஏற்படாதவன் போல் அவன் அதிக சலனமில்லாமல் உட்காந்திருப்பதும் அவளுள் ஒரு அவமான உணர்வை ஏற்படுத்திற்று.

    அவள் அவன் கையை விலக்கி நிமிர்ந்து உட்காந்து கொண்டாள். லேசான பரிதாபத்துடன் அவளைப் பார்த்துவிட்டு அவன் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான். ஜோதி சொன்னதுபோல் மற்ற கைதிகள் எல்லாம், அடுத்த மாதம் தூக்கில் தொங்கப்போகும் ஜோஸப் உள்பட, ஏதோ பிக்னிக் கொண்டாடுபவர்கள் போல தென்பட்டார்கள்.

    ஜோதி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். "நீ நிச்சயம் ஏதும் தப்பு பண்ணலேன்னு எனக்குத் தெரியும்

    Enjoying the preview?
    Page 1 of 1