Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal
Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal
Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal
Ebook203 pages24 minutes

Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலில் கனிந்து காதலில் கரைந்து காதலால் மலர்ந்து காதலால் மகிழ்ந்து காதலுக்குள் உறைந்து காதலுக்குள் உழன்று காதலைக் காதலித்து காதலையே கட்டியணைத்தேன் ஆதலால் வந்த ராகத்தால் ஆழப்பறித்த வரிகளை ஆரமாய்க் கோர்த்து அழகாய் உங்களுக்கு அணிவிக்கும் கவிச்சரம் இது காதலின் காமச் சலனமிது.

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580148407677
Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal

Read more from Yamuna

Related to Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal

Related ebooks

Reviews for Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal - Yamuna

    https://www.pustaka.co.in

    விழிகளில் வலுவிருந்தால் தைரியமாய் திறவுங்கள்

    Vizhigalil Valuvirunthal Thairiyamai Thiravungal

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மௌனம் பேசியதே

    என் மாலை நேர மயக்கத்தில்

    மலர் கொய்ய வேண்டி

    மலர்த் தோட்டத்தில் கால் வைத்தேன்!

    எனக்காகக் காத்திருந்தவைபோல்

    என்னை நோக்கிக் குனிந்தன மலர்கள்..

    என் கன்னத்தில் முத்தமிட!

    மாலை மதியோ,

    "மறந்துவிடாதே,

    இருள் உன்னை நெருக்காதிருக்க

    உத்திரவாதம் நான்" என்றது.

    நூறு நட்சத்திரங்கள் இறங்கி

    இழைகளாய் வழிந்து

    எனக்கும் மலர்களுக்கும் இடையில்

    பாய்ந்து பழிப்புக் காட்டியது!

    கன்னத்தில் கன்னமிட்ட மலர்கள்..

    காதோடு ஸ்பரிசம் பேசிக்கொண்டே

    காற்றோடு எனைக் கலந்துவிட்டது!

    காம்போடு உள்ள முட்களோ!

    ஒருபடி மேலேப் போய்

    என் கழுத்தோரம் கொஞ்சியது!

    இதழ்கள் இதழ் திறந்து பேசிற்று..

    "பெண்ணே! உன்னைத் தொட நினைக்கும்

    தோல்விகளைக் குழிதோண்டி புதைத்துவிடு...

    பாதங்களுக்குப் பஞ்சணையாய் உன்

    பாதைகளில் நானிருப்பேன்" என்றது.

    என் நாட்களை

    எப்படி செதுக்கவேண்டுமென

    பூக்களிடம் நான் கேட்க!

    "இடறிவிட முயலும்

    தயக்கங்களையும் சபலங்களையும்

    சல்லடைகொண்டு சலித்துவிடு"

    என்று கூறி,,,

    சன்னமாய் தன் மௌனம் கலைத்து!

    என் கண்ணோடும் இதழோடும்

    முத்தமிட்டு நிமிர்ந்தது!

    இருளில் கிடைத்த புத்தகம்

    எவரும் அறியா ஒன்று

    இருளின் மையிறகில்

    பயங்கரமாய்க் கொட்டிக் கிடக்கிறது!

    திரு திருவென்று

    விழிக்கும் வெண்விழிகள் பல

    திருட்டுத்தனமாய்

    மறைந்து நிற்கின்றது!

    அமைதியான அந்த

    நிச்சலன மோனத்திற்குள்

    அள்ள அள்ளத் தீராத மர்ம

    ஆனந்தம் ஒளிந்து கிடக்கின்றது!

    இதயத்தை மூடிக்கொண்டு

    அதன் துடிப்பை மட்டும்

    முன்னிறுத்திக் கேட்டுப் பாருங்கள்!

    அது ‘லப் டப்’ என்றல்ல

    ‘பும் பும்’ என்று பலமாய்க் கத்தும்!

    நரம்புகளெல்லாம் சேர்ந்து

    கூட்டுமேசை மாநாடு நடத்தும்!

    மாநாட்டில் தட்டப்படும் கைத்தட்டல்கள்

    மகா ரௌத்திரமாய் அதிர்ந்தொலிக்கும்!

    ஆனாலும் அது

    ஆன்மாவின்

    ஈரலுக்கு மட்டும் கேட்கும்

    இப்போது!

    கண்களைத் திறந்துகொண்டு

    செவிகளை மூடிவிடுங்கள்!

    சிறு சிறுத் துகளாய்

    பல துளைகள் தெரியும்!

    துளைகளுக்குள் ஊடுருவி

    உங்கள் கருவிழிகள்

    காலத்தின் கருமைக்குள்

    பயணம் செய்யட்டும்!

    அங்கே தூரத்தில்

    அதல பள்ளத்திற்குள்

    திறந்திருக்கும்

    தூங்காத ஒரு மாயப் புத்தகம்!

    புத்தகத்தின் முதல் பக்கத்தில்

    எழுத்துக்கள் எல்லாம்

    புதிதாய்ப் பூத்த ரோஜா இதழின்

    அதிசயமான மென்மையும்

    வித்தியாசமான மணமும்

    ஒருசேரக் கூத்திடும்!

    அது அடுத்தப் பக்கத்தைத்

    திறக்கச் சொல்லி

    மூளையைத் தூண்டும்!

    ஒரு கட்டத்தில்

    திறந்தும் விடுவோம்!

    நன்றாய் உற்றுப் பாருங்கள்!

    உள்ளே இருக்கும்

    ஓராயிரம் வரிகளில்

    கொள்ளை கொள்ளையாய்

    கிறக்கம் தரும் கனவுகள்!

    ஆஹா! அற்புதம்! ஆனந்தம்!

    நான் தேடிக் கிடைத்த புத்தகம்

    கனவுகளின் காந்த அலைகளுக்குள்

    நினைவுகளாய் என் இரவுகளுக்குள்!!

    அவள் குளியலின்போது தெறித்த?

    பெண்ணவளின்

    கார்கூந்தல் கலைத்து

    புருவத்தின் அடர்த்திக்குள்

    மெல்ல நுழைந்த

    மென்தென்றலை அதட்டிவிட்டு

    பொன்பரப்பி விடிந்த வைகறை

    பதுமையின் காதோரம் சொன்னது

    "பாராய்!

    உதிர்ந்து கிடக்கும் மலர்கள்

    உனக்காகத்தான் காத்திருக்கின்றன

    விடிந்த பின்னும் வாசத்தை

    வெளியேற்றாமல்

    மகரந்தக் கருவாசலுக்குள் அடைத்து

    உன் வருகையில் வீசத்தான்

    இதோ!

    வீதியில் பரவிக் கிடக்கின்றன!

    நீ குளிக்கும்போது

    தெறித்த பன்னீர்த் துளிகள்

    ஒன்று சேர்ந்து

    நதியாய்ப்

    பெருக்கெடுத்து ஓடுகையில்

    அது வசந்தத்தின் நீரோடை

    என்று நினைத்து!

    வீதி வீழ்ந்த அவ்வாச மலர்கள்

    தாங்கள் மோட்சம் செல்ல

    வழி கிடைத்ததென்று உன்

    நடு உச்சியின் கேசம்

    கழிந்தோடும் அந்

    நதியேறி ஓடிவிடக் கூடும்!

    அதற்கு முன்

    உன் வேட்கையின்

    வெட்கப் பொட்டுகளை

    எனக்கு

    விலைபேசித் தந்துவிட்டு

    அவைகளின்

    வாசத்தை வாங்கி உன்

    கூந்தலுக்குள் பூட்டிக்கொள்"

    என்றது!!

    நீயா பேசியது என் அன்பே

    இருளுக்குள் மறைந்தது அந்தி

    அங்கே முத்து முத்தாய்ப்

    பூத்துக்கொண்டிருந்தன

    மின்மினிகள்!

    உடைந்த கண்ணாடிக்குள்ளிருந்து

    வெளி வந்தவளாக நின்றாள்

    தெறித்த நட்சத்திரப் பூமகள்!

    அந்தகார மௌனத்தில்

    மின்மினிகளின் சத்தத்தில்

    நிலவொளி நடுங்கியது

    நிலவொளியின் நடுக்கத்தை

    இதழ் கொண்டு மூடி

    வெப்பமேற்றியது அல்லிமலர்!

    அல்லியின் மகரந்தம்

    அந்தத் தும்பியை மயக்க

    நிலவுக்குப் போர்த்திய

    இதழைப் பிரித்து தன்

    சூல்கொண்ட இறக்கையில்

    போர்த்திக்கொண்டது!

    இது நியாயமா உனக்கு

    என்று நிலவொளி கேட்க

    "நீ தரும் வெம்மைக்கு

    நான் மாண்டு போகாமலிருக்க

    இவள் இதழ் போர்வையாவது

    உனக்குப் பொறாமையா" என்றது!

    அவ்வழி வந்த பட்டாம்பூச்சி

    தான் எடுத்து வந்தத்

    தேனைத் இரவுக்குத் தந்து

    தென்றலின் வீதிக்குள்

    இரவை உறங்க வைக்க

    இறக்கை தூளியிலிட்டுத்

    தாலாட்டுப் பாடியது!

    உறக்கம் வராத நிலவோ

    வானப் பறவைகளின்

    வீணையைக் கையில் ஏந்தி

    அல்லியோடு சேர்ந்து

    காதல் ராகமிசைக்கத்

    தும்பியும் அல்லியை

    அணைத்துக் கொண்டு

    மெல்லிய முத்த சத்தங்களை

    மகரந்தத்திற்குள் பாய்ச்சியது!

    Enjoying the preview?
    Page 1 of 1