Yethiril Ethiri
By Rajesh Kumar
()
About this ebook
நாட்டை அழிக்க நினைக்கும் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் திட்டம். அதனை தடுக்க முயலும் நேர்மையான போலீஸ் அதிகாரி.
விரோதிகளின் கும்பலில் ஒவ்வொருவனுக்கும் ஏற்படும் கொடூர மரணம். அதனை நிகழ்த்தியது யார்?
தீவிரவாத கும்பலின் எதிரில் இருந்த எதிரி யார்? என்பதை ராஜேஷ்குமாருக்கு உரிய த்ரில் நிறைந்த பாணியில்......எதிரில் எதிரி.......
Read more from Rajesh Kumar
Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Sindhu Ratham Sindhu Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Namruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yethiril Ethiri
Related ebooks
Violet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum Aaru Thottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Ini Avan Iranthavan Rating: 0 out of 5 stars0 ratingsAnjathe Anju Rating: 5 out of 5 stars5/5காதல் தேசத்துக்கு ஒரு விசா! Rating: 0 out of 5 stars0 ratingsKathal Thesathukku Oru Visa Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Thenkizhakku Minnal Rating: 5 out of 5 stars5/5Uchi Nila! Rating: 0 out of 5 stars0 ratingsஜமுனா! ஜாக்கிரதை! Rating: 0 out of 5 stars0 ratingsJamuna Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsயாரோ பாடிய பாடல் Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paadiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Sangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsதிகில் காலம் Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsமண்டே மர்டர் டே! Rating: 0 out of 5 stars0 ratingsSathamillatha Samuthiram! Rating: 0 out of 5 stars0 ratingsKonal Nizhalai Thurathi! Rating: 0 out of 5 stars0 ratingsDinasari Moondru Kolaigal Rating: 5 out of 5 stars5/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5விவேக் vs விவேக் Rating: 0 out of 5 stars0 ratingsKodai Kaala Kolaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondralum Kuttramillai Rating: 5 out of 5 stars5/5வெல்வெட் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kutram Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Yethiril Ethiri
0 ratings0 reviews
Book preview
Yethiril Ethiri - Rajesh Kumar
https://www.pustaka.co.in
எதிரில் எதிரி
Yethiril Ethiri
Author:
ராஜேஷ்குமார்
Rajesh Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
டெலிபோன் குரைப்பதை லட்சியம் செய்யாமல் ஃபைல் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்த டி.எஸ்.பி. ராஜபாண்டியன் வெளியே நின்றிருந்த தன் உதவியாளரைக் கூப்பிட்டு 'ரிஸீவரை எடுத்து யாருன்னு கேளு... பேசறது முக்கியமான ஆளாயிருந்தா என் கையில குடு... இல்லேன்னா... நீயே எதையாவது சொல்லி வைச்சுடு... இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல இந்த ஃபைலை பார்த்துட்டு நான் வீட்டுக்கு போயாகணும்’என்றார்.
‘எஸ் ஸார்' தலையாட்டிய உதவியாளர் ரிஸீவரை எடுத்து காதுக்கு கொடுத்து எதிர்முனை பேச்சை கிரகித்ததுமே பதட்டமாகி ரிஸீவரை விரல்களால் மூடி ராஜபாண்டியனிடம் ரகசியம் மாதிரி கிசுகிசுத்தார்.
'ஸார்! கலெக்டரோட பி.ஏ...
ராஜபாண்டியனும் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை ஒரு அவசர உணர்வோடு தள்ளி வைத்துவிட்டு ரிஸீவரை வாங்கிக் கொண்டு குரலில் மென்மையோட பேசினார். 'குட்ஈவினிங் ஸார்.’
'குட்ஈவினிங்...’
'எனிதிங் ஸ்பெஷல் ஸார்..’
மறுமுனை ரிஸீவரில் குரல் சிரித்தது. ‘என்னா... டி.எஸ்.பி. ஸார்! உங்களை போன்ல பிடிக்கிறதே பெரும்பாடா இருக்கு... என்ன மாதிரியான சாதாரண குடிமகன்கள்கிட்டயெல்லாம் பேச மாட்டீங்களா...? கலெக்டரோட பிஏ.ன்னு சொன்னாத்தான் பேசுவீங்களா...?’
'யாரய்யா நீ.?’
'பார்த்தீங்களா...? கலெக்டரோட பி.ஏ’ இல்லேன்னு தெரிஞ்சதுமே மருவாதை சடசடன்னு எறங்கிடுச்சு..
‘ராஸ்கல் யார்ரா நீ...
இந்த கோயமுத்தூர்ல இருக்கற சாதாரண குடிமகன்... பேரு பொன்னுசாமின்னு வெச்சுங்கோங்களேன்... உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணுமே. டி.எஸ்.பி. ஸார். கேக்க நேரம் இருக்குமா?
'என்ன தகவல்?’
'கொச்சியிலிருந்து டெல்லிக்குப் போற எக்ஸ்பிரஸ் கோயமுத்தூர் ஸ்டேஷனுக்கு எத்தினி மணிக்கு வருது தெரியுமா ஸார்...?’
‘நாலு அம்பதுக்கு...’
‘எத்தினி மணிக்கு புறப்படுது?’
அஞ்சு மணிக்கு...
'இன்னிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின் அஞ்சு மணிக்கு புறப்பட்டு போகாது’
‘ஏன்?’
‘அதுதான் வெடிக்கப் போகுதே...
‘ராஜபாண்டியன் நிமிர்ந்து உட்கார்ந்தார். டேய் என்னடா சொல்றே...?’
'என்னிக்கோ செத்துப்போன என்னோட ஆத்தா மேல சத்தியமா சொல்றேன் ஸார். அந்த எக்ஸ்பிரஸ் வெடிக்கப் போகுது. என்னோட கணக்குக்கு நூறு பேராவது சாகப் போறாங்க’...
ராஜபாண்டியன் பதறினார். இதோ பார்... உம் பேரென்ன பொன்னுசாமியா...? நீ இப்போது எங்கிருந்து பேசறே...?’
'டோக்கியோவிலிருந்து...’
‘என்ன?’
'டி.எஸ்.பி. ஸார் ‘நான் இப்போ எங்கிருந்து பேசறேன்ங்கிறதா முக்கியம்? கோயமுத்தூர்ல எத்தின டெலிபோன் பூத் இல்லை...? இப்ப என்னோட வாட்ச்ல மணி நாலு பத்து. ட்ரெயின் வர்றதுக்கு இன்னும் சரியா நாப்பது நிமிஷம் இருக்கு... ட்ரெயின்ல வெச்சிருக்கிற வெடிகுண்டு ஒரு பிரளயத்தை உண்டு பண்றதுக்கு முந்தி ஸ்டெப்ஸ் எடுத்து ஜனங்களை காப்பாத்துங்க ஸார். இந்நாட்டு மன்னர்களையும், அரசிகளையும், இளவரசர்களையும், இளவரசிகளையும் காப்பாத்த வேண்டியது உங்க பொறுப்பு இல்லையா...?'.
‘இதோ... பார் நீ... நீ’ ராஜபாண்டியன் பேசிக் கொண்டிருக்கும் போதே ‘த்தட்'டென்று மறுமுனையில் ரிஸீவர் சாத்தப்பட்டது.
'என்ன ஸார்?’ உதவியாளர் கேட்டார்.
ராஜபாண்டியன் ரிஸீவரை வைத்து விட்டு வியர்வை முகமாய் நாற்காலியில் தளர்ந்து உட்கார்ந்தார்.
'நாலு அம்பதுக்கு வர்ற கொச்சி டில்லி ட்ரெய்ன்ல வெடிகுண்டு இருக்காம்...’
உதவியாளர் புன்னகைத்தார்.
‘வழக்கம்மா வர்ற புரளி ஸார்.’
நோ....! இது புரளியில்லை... பேசினவன் பேச்சுல விஷமம் இருந்தது. ஒரு அழுத்தம் இருந்தது. இந்த போன் காலை வி கான்ட் இக்னோர்.
சொல்லச் சொல்லவே மறுபடியும் டெலிபோன் கூப்பிட்டது.
ராஜபாண்டியனே ரிஸீவரை எடுத்தார்.
‘ஹலோ...’
‘என்னங்க நான் லட்சுமி பேசறேன் மனைவியின் குரல்.
'என்ன லட்சுமி?’
‘என்னது என்ன லட்சுமியா...? இன்னிக்கு நாம எங்கே போகப் போறோம்ன்னு தெரியாதா?’
'ம்...ம்....’
'என்ன ம்... ம்...? இன்னிக்கு உங்க பையனுக்கு. பொண்ணு பார்க்கப் போறோம்...அஞ்சு மணிக்கெல்லாம் பொண்ணு வீட்ல இருக்கணும். மறந்துட்டீங்களா?’
'ஓ...!’
‘என்ன ஓ...?’
‘லட்சுமி...!’
‘ம்...’
‘நீயும் மதுவும் போய்ப் பொண்ணு பார்த்துட்டு வந்துடுங்க’
'ஏன் உங்களுக்கென்னவாம்?’
‘ஒரு அவசர வேலை வந்துடுச்சு. ரயில்ல எவனோ வெடிகுண்டு வெச்சிருக்கிறதா தகவல்... நான் ஸ்டேஷனுக்கு போயாகணும்...’
'வெடிகுண்டு வெச்சிருக்கிறதா... என்னிக்குமே வர்ற தகவல்தானே? உங்களுக்கு கீழே இருக்கிற யாரையாவது அனுப்பிட்டு நீங்க வீட்டுக்கு வந்து சேருங்க...’
‘இப்ப லட்சுமி. நான் ஸ்பாட்டுக்கு போயாகணும். நீயும் மதுவும் பொண்ணு வீட்டுக்கு போய்ட்டு வந்துடுங்க... நான்தான் பொண்ணை கோயில்ல வெச்சு பார்த்திருக்கேனே...
‘போலீஸ்காரனுக்கு குடும்பம் இருக்கக் கூடாதுன்னு சொல்றது நியாயம்தான்’...
‘என்ன முனகறே...?’
‘ஒண்ணுமில்லை... உங்களுக்கு எப்போ இஷ்டமோ அப்ப வீட்டுக்கு வாங்க போதும்...’
மறுமுனையில் ரிஸீவர் கோபமாய் வைக்கப்பட்டது.
***
நேரம் 4.30
ஸ்டேஷன் அமளிப்பட்டது
இரண்டாவது பிளாட்பாரம் நெடுக காக்கி யூனிபார்ம்கள் தெரிந்தார்கள். கண்ணில் பட்டவர்களை விரட்டினார்கள். எல்லா கூட்ஸ் ரெயின்களும் அவுட்டரிலேயே நின்றிருந்தன.
எஸ்.பி. ராவும், ராஜபாண்டியனும் ஸ்டேஷன் மாஸ்டர் அறையிலிருந்து பதட்ட உடம்புகளோடு வெளிப்பட்டார்கள்.
‘தகவல் கொடுத்திட்டீங்களா?’
‘ம்....’
‘இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு எந்த ட்ரெயினும் ஜங்ஷனுக்கு வராதே....’
‘வராது...’
வெளியே காத்திருந்த டைனமெட் டிடெக்டர்ஸ் அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.
'மிஸ்டர் புருஷோத்தமன்.
’ஸார்...'
‘உங்க க்ரூப்ல எத்தனை பேர்?’
'பதினோரு பேர்...’
‘கைவசம் எத்தனை டிடெக்டர்ஸ் இருக்கு?’
‘அஞ்சு...’
‘எஸ்.எம். ரிப்போர்ட்படி ட்ரெய்ன்ல மொத்தம் பதினாறு கம்பார்ட்மெண்ட்ஸ். ஒரு ஏ.ஸி. அஞ்சு ஃபர்ஸ்ட் கிளாஸ்... ஒரு கிச்சன் கார்... ஏழு செகண்ட் க்ளாஸ் ஸ்லீப்பர்ஸ்...’
எஸ்.பி. ராவ் தன் நரை கிருதாவைக் கீறினார். 'மிஸ்டர் ராஜபாண்டியன்! இது வெறும் புரளியா இருக்கும்னு என் மனசுக்குப்படுது.’
போன்ல பேசினவன் குரல்ல ஒரு வக்ரம் இருந்தது ஸார். எல்லாத்துக்கும் மேலா முடிஞ்சா சமாளிங்கிற ஒரு திமிர் இருந்தது.
'டயம் எவ்வளவு?’
‘நாலு முப்பத்தஞ்சு.’
‘அஞ்சு நிமிஷத்துல ட்ரெயின் வந்துடும்...’
‘ட்ரெயின் வந்ததும் ப்ரைமரி ஸ்டெப்ஸ்’ என்ன ஸார்...?’
'எல்லா பாசஞ்சர்ஸுக்கும் விஷயத்தை இன்ஃபார்ம் பண்ணி மூணாவது நாலாவது பிளாட்பாரங்களுக்கு கூட்டிட்டு போய் பாதுகாப்பா இருக்க வைக்கணும். வெளியே போகிற பாஸஞ்சர்ஸ் யாரையும் வெளியே விடாமே அவங்களை தரேவா செக் பண்ணனும்... சந்தேகப்படறவங்களை இம்மீடியட்டா ஸ்டேஷனுக்கு கொண்டு போயிடணும்...'
எல்லோரும் ஒரு தற்காலிக கவலையோடு ஷுக்கள் சப்தம் செய்ய நடந்தார்கள். ஸ்டேஷன் கடிகாரத்தில் நிமிஷ முள் தத்தியது.
4.36
4.37
4.38
4.39...4.40...4.42...4.45...4.47...4.50.
எக்ஸ்பிரஸ் ட்ரெயினின் பிளிறல் சத்தம் கேட்டது. கான்ஸ்டபிள்கள் அலர்ட்டானார்கள். எஞ்சினின் நீல நிற டீஸல் முகம் தெரிந்தது.
சரியாய் 4.51-க்கு
'ஜக ஜக’ வென்று ஸ்டேஷனே அதிரும்படி கொச்சி - டில்லி எக்ஸ்பிரஸ் உள்ளே நுழைந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
ஸ்டேஷன் ஒலிபெருக்கிகளில் விஷயம் இந்தி ஆங்கிலம், தமிழ், மலையாளம் நான்கு மொழிகளிலும் ஒரே மாதிரியாய் சொல்லப்பட்டது.
'பிரயாணிகள் ஒத்துழைக்க கோரப்படுகிறார்கள். ரயிலில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதாக தகவல். இத்தகவல் பொய்த் தகவலாய் இருக்கலாம். இருப்பினும் பிரயாணிகளின் பாதுகாப்பைக் கருதி போலீஸார் சோதனைக்கு வருகிறார்கள்... உங்கள் உடமைப் பொருள்களை கம்பார்ட்மெண்ட்களிலேயே விட்டு விட்டு மூன்றாவது, நான்காவது பிளாட்பாரங்களுக்கு சென்று பாதுகாப்பாய் இருக்கும்படி ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.’
பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்க. கான்ஸ்டபிள்கள் உள்ளே தாவினார்கள். டைனமைட் டிடெக்டர்கள் எஞ்சினிலிருந்து தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.
ராஜபாண்டியனும், எஸ்.பி. ராவும் ரயிலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த பிரயாணிகளில் சந்தேக முகங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாமே மலையாளம் பேசும் கேரள முகங்கள் நடு நடுவே டால்டா நிற வடநாட்டு முகங்கள் கோபமான பேச்சுக்கள்.
'பொறுப்பில்லாத போலீஸ்.’
‘எவனோ... டெலிபோன் பூத்துக்குள்ளே பூந்துகிட்டு வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டா அதை நம்பிட்டு வந்துடுவாங்க...’
'மூணு மணி நேரத்தை பாழ் பண்ணிடுவாங்க...’
‘ராஜபாண்டியனும், எஸ்.பி. ராவும் கும்பலில் நகர்ந்து முன்னோக்கி போனார்கள். தாடியும் பரட்டைத் தலையுமாய் இருந்த நான்கைந்து பேர்களை நிறுத்தி விசாரித்து அனுப்பினார்கள்.
பத்தே நிமிஷம்.
எல்லா கம்பார்ட்மெண்ட்களும் காலி.
போலீஸார் வியர்த்த முகங்களோடு ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஏறி சூட்கேஸ்களையும் பெட்டிகளையும் நகர்த்தி வைத்து அலசினார்கள்.
ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பின் எஞ்சினிலிருந்து எட்டாவது போகி ஒன்பதாவது போகிகளுக்கு மத்தியில் வெஸ்ட் ட்யூபிலுக்கு கீழே டிடெக்டரைக் கொண்டு