Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounam Kalaigirathu!
Mounam Kalaigirathu!
Mounam Kalaigirathu!
Ebook97 pages29 minutes

Mounam Kalaigirathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யஷ்வந்த் மற்றும் யமுனா என்பவர்கள் கல்லூரியில் ஒன்றாக பயில்கின்றனர்.

இவர்களிடையே காதல் மலர்ந்து விடுகிறது. இதில் யஷ்வந்த் யமுனாவை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்தான். யமுனாவை திருமணம் செய்தானா? அல்லது என்ன நேர்ந்தது? மிதிலா என்பவள் யார்?

யஷ்வந்த் மற்றும் மிதிலாவிற்கு என்ன உறவு முறை காண்போம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580130707685
Mounam Kalaigirathu!

Read more from Indira Nandhan

Related to Mounam Kalaigirathu!

Related ebooks

Reviews for Mounam Kalaigirathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounam Kalaigirathu! - Indira Nandhan

    https://www.pustaka.co.in

    மௌனம் கலைகிறது!

    Mounam Kalaigirathu!

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தாள் மிதுலா.

    தொட்டபெட்டாவின் உறைந்து போகிற குளிரிலும் யஷ்வந்த்தின் மூச்சுக்காற்று அவளுடைய கன்னக்கதுப்புகளில் உஷ்ணமாய்ப் பரவியது.

    யஷ்வந்த்தின் கைகளை இறுக்கமாய்ப் பற்றி விரல்களோடு தன்னுடைய விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

    அங்கே வந்திருந்த அத்தனை பேரும் மலையையும், பள்ளத்தாக்கையும், பசுமையையும், பூக்களையும், குளிரையும், வெண்மேகங்களையும் வியப்பாய் விழிகள் விரிய ரசித்துக் கொண்டிருக்க, மிதிலாவோ அவனை ரசித்தாள்.

    அவனை மட்டுமே ரசித்தாள்.

    கலைந்திருந்த கேசம், கன்னத்திலும் முகவாயிலும் படர்ந்திருந்த ரோமக்காடு, சற்றே சதைப் பிடிப்பான நாசி, கம்பளிப்பூச்சியாய் மீசை, வரிசை பிறளாத அழகான பல் வரிசை... நாணயம் ஒன்றை வைத்து மறைக்கிற அளவுக்கு குழி விழுந்த முகவாய்...

    யஷ்வந்த் அழகன்.

    வசீகரமான அழகன்.

    இந்தக்கணம் அவளுக்கு மட்டுமே சொந்தமானவன். மிதிலாவின் கழுத்தில் யஷ்வந்த் தாலிகட்டி இன்றோடு முப்பது நாட்கள் முடிந்துவிட்டன.

    இப்போது தேனிலவிற்காகத்தான் ஊட்டிக்கு வந்திருக்கிறார்கள்.

    மிதிலா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்.

    அவளுடைய தந்தை கோகுலகண்ணன் மிகப்பெரிய தொழிலதிபர். கும்பகோணம் பகுதியில் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது.

    மிதிலா பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பெண்.

    பெற்றோரின் விருப்பப்படி நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்துதான் அவளுடைய கல்யாணம் நடந்தது. ஊரும் உறவுகளும் பிரமிக்கும்படியாய் வெகு விமரிசையாய் நடந்திருந்தது.

    இவ்வளவு அழகான, கம்பீரமான ஒருவன் தன்னுடைய கணவனாய் வருவான் என மிதிலா கனவிலும் நினைக்கவில்லை.

    யஷ்வந்த் தன் கழுத்தில் தாலி கட்டியது முதல், இந்த உலகத்திலேயே தான்தான் அதிர்ஷ்டசாலி என பெருமிதப்பட்டாள். பூரிப்பில் கன்னங்கள் சிவந்து போயிருந்தாள்.

    அன்றிரவு வெட்கத்தோடும், அளவில்லாத எதிர்பார்ப்போடும் தான் முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வைத்தாள்.

    வெண்ணிலவு போல விடிய விடிய யஷ்வந்த் என்னும் வானத்தில் ஊர்வலம் போகத் துடியாய்த் துடித்தாள். பாதாமும், பிஸ்தாவும் கலக்கப்பட்ட சுண்டக் காய்ச்சிய பசும்பால் வெள்ளிச் சொம்பு நிறைய ததும்பி வழிந்தது.

    மை பூசிய கண்களில் கனவுகள் படர்ந்திருந்தது.

    பதுமையாய், உயிர்க் கவிதையாய் அவனுடைய வாசிப்பிற்காகக் காத்து நின்றாள்.

    யஷ்வந்த் அவளை அள்ளவும் இல்லை. ஆசையாய் அணைக்கவும் இல்லை. மொத்தத்தில் மிதிலாவைக் கண்டுகொள்ளவே இல்லை.

    மலர்கள் தூவப்பட்டிருந்த மலர் மஞ்சத்தில் பாறையாய் அமர்ந்திருந்தான்.

    மிதிலா செருமினாள். கை வளையல்களைக் குலுக்கி இனிமையான இரைச்சலை எழுப்பி அவனுடைய கவனத்தைக் கவர முயன்றாள்.

    பாதங்களை மெதுவாய் அசைத்தாள்.

    வெள்ளிக் கொலுசுகள் சிணுங்கின. என்னைக் கொஞ்சமாட்டாயா என ஏங்கின. மிதிலா நெருங்கி நின்றாள்.

    ஏன்... உடம்பு முடியவில்லையா?

    அசையாமல் அமர்ந்திருந்தான்.

    பட்டு வேஷ்டி, சட்டையில் மணமேடையில் அமர்ந்திருந்ததைவிட இப்போது இன்னும் வசீகரமாய்த் தெரிந்தான். நெற்றியில் இரு புருவங்களுக்கிடையே சின்னக்கீற்றாய் குங்குமத் திலகம் பூசியிருந்ததுகூட அவன் முக அழகைக் கூட்டியது.

    என்னோடு பேச மாட்டீர்களா?

    பேச ஒன்றுமில்லை...

    நான் உங்கள் மனைவி...

    தெரியும்...

    தெரிந்துமா பேச ஒன்றுமில்லை என்கிறீர்கள்... உங்களுக்கு என்ன பிரச்சினை? என்னைப் பிடிக்கலையா?

    உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்ல நான் குருடன் கிடையாது...

    நிம்மதியாக இருந்தது.

    நல்லவேளை ‘பிடிக்கவில்லை’ என்ற வார்த்தையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் மிதிலாவால் தாங்கவே முடியாது.

    தேங்க்ஸ்ங்க...

    எதுக்குத் தேங்க்ஸ்...?

    என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு...

    நான் எப்போ சொன்னேன்?

    இப்பத்தானே சொன்னீங்க. உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்ல நான் ஒன்றும் குருடன் கிடையாது என்று...

    "நான் சொன்னது

    Enjoying the preview?
    Page 1 of 1