Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Per Solla Aasaithan
Un Per Solla Aasaithan
Un Per Solla Aasaithan
Ebook121 pages42 minutes

Un Per Solla Aasaithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் குழந்தையுடன், மனைவியை இழந்த சோகத்தில் தவிக்கும் காந்தன். ஆனால் அவர் மனைவி, யோகேஷ் என்பவருடன் வேறு ஊரில் வாழ்ந்து வருகிறாள். தன் மனைவி இறந்ததாக நினைத்து சோகமாக வாழும் காந்தன் தன் மனைவியை, சந்திக்கிறார். எப்படி? என்ன ஆனது? அதன் பிறகு இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன என்பதை பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606460
Un Per Solla Aasaithan

Read more from R. Manimala

Related to Un Per Solla Aasaithan

Related ebooks

Related categories

Reviews for Un Per Solla Aasaithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Per Solla Aasaithan - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன் பேர் சொல்ல ஆசைதான்

    Un Per Solla Aasaithan

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    உறுத்தாத சப்தத்தில் அழகாய் கூக்குரலிட்டது அலாரம். தலை வரை தன்னை போர்வைக்குள் புகுத்தியிருந்த யோகேஷின் ஆழ்ந்த உறக்கத்தை உசுப்பிற்று.

    ஏஸி அணைக்கப்பட்டிருந்தது. மின் விசிறியும் ‘தேமே’ என்று கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனாலும் மார்கழியின் பனிக்காற்று, திறந்திருந்த ஒற்றை ஜன்னலின் வழியே உட்புகுந்து சில்மிஷம் பண்ணிக் கொண்டிருக்க… போர்வையை விலக்கவே பயந்தான் யோகேஷ்.

    ஸ்… ஸ்… என உதடுகள் நடுங்க மெல்ல விலக்கி அலாரத்தை தடவித் தட்டினான். அந்த ஸ்பரிசத்திற்கு திருப்தியுற்று வாயை மூடிக்கொண்டது.

    மணி நாலரை! திரும்பிப் பார்த்தான். ராதிகா சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். குறும்பு மிளிரும் கண்கள் மூடியிருக்க. புன்னகையை தேக்கி வைத்திருக்கும் இதழ்கள், மிக லேசாக பிளந்திருக்க, முதல் நாளிரவு அவன் தந்த முத்தம் சுமந்த கன்னங்கள் கும்மென்று சிவந்திருக்க… உறங்கும் போது கூட நளினமாய்… அழகாய் இருந்தாள் ராதிகா.

    நாலரை மணிக்கு அலாரம் வைத்தவளே அவள்தான். பாவம் நள்ளிரவு ஒரு மணி வரை அவன் தூங்கவே விடவில்லையே! எட்டு மணிக்கு டெல்லிக்கு அலுவலக நிமித்தமாய் போயாக வேண்டும். திரும்ப… நான்கைந்து நாட்கள் ஆகும் என்பதால்… தூங்க விடவில்லை.

    பல்பு வெளிச்சத்தில் பொன்னிறமாய் கன்னத்தோரம் மின்னி ஆடிய உதிரி கேசங்களை ஒற்றைவிரலால் ஒதுக்கிவிட்டான். அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் மிக லேசாக அசைந்து… கண நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு போய்விட்டாள்.

    குழந்தையைப் போன்ற அவள் முகத்தை ஆசையுடன் பார்த்தவன் வியப்புடன் சிரித்தான்.

    ‘இவளே ஒரு குழந்தை. இவளுக்கொரு குழந்தையா?’ அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு, ஒரு காலை மேலேப் போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் தேவேஷ். ஏழுவயது பையன். சாயலில் அப்பாவையும், நிறத்தில் அம்மாவையும் கொண்டிருந்தான்.

    ஏழு வயதுப் பிள்ளைக்கு அம்மா மாதிரியா இருக்கிறாள்? போன வருஷம்தான் சமைந்தவள் மாதிரி அப்படியொரு கட்டுக்குலையாத உடம்பு.

    நிச்சலனமாய் உறங்கும் மனைவியை எழுப்ப மனம் வரவில்லை. அவன் உறக்கமோ எங்கோ தொலைந்துப் போனது.

    மெல்ல கட்டிலைவிட்டு இறங்கினான். சப்திக்காமல் கதவைத் திறந்து சாத்தியவன் பாத்ரூம் சென்று பல் விளக்கி ஹீட்டரைப் போட்டான்.

    ‘ராதிகா எழுந்து பார்க்கும்போது அசந்துப் போக வேண்டும்’ என எண்ணியவன் குளிரையும் பொருட்படுத்தாது, லுங்கியை மடித்துக் கட்டினான். வாசல் கதவைத் திறந்தான். பளீர் என அறைந்தது பனிக்காற்று.

    தெருவில் இரண்டு மூன்று வீடுகளில் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

    நாமும் போட்டால் என்ன? துடைப்பத்தை எடுத்து இப்படியும் அப்படியுமாய் கூட்டிப் பெருக்கியவன், தண்ணீர் தெளித்தான்.

    ‘ஆமாம்… என்ன கோலம் போடுவது?’ ராதிகா கோலம் போடுவதில் எக்ஸ்பர்ட், எனக்கு கம்ப்யூட்டரில் ஜாலம் பண்ணத்தெரியும். மற்றப்படி கோலம்? எதையாவது போட்டாகணுமே. ராதிகாவை அசத்தணுமே! பேசாமல் வித்தியாசமாய் திருக்குறள் ஒன்றை எழுதி வைக்கலாமா? ம்… ம்ஹூம்… சரிவராது. என்னப் பண்ணலாம்?’

    நெடுநேரம் யோசித்து ஒரு ஸ்டார் மட்டும் வரைந்தான்.

    தெருப்பெண்கள் நமுட்டுச் சிரிப்புடன் இவனை வேடிக்கைப் பார்க்க… அவன் லட்சியமே செய்யவில்லை.

    உள்ளே வந்து அறைக்குள் எட்டிப்பார்த்தான். அசைவின்றி உறங்கிக் கொண்டிருந்தாள் ராதிகா.

    பில்டரில் காபித்தூளைப் போட்டு கொதிக்கவிட்டு, பாலை கொதிக்க வைத்து இறக்கினான். கடலை ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கப் பட்டிருந்தது.

    காலையில் சப்பாத்தியும், சென்னா குருமாவும் சமைக்கப் போவதாய் இரவு சொன்னது நினைவிற்கு வந்தது.

    கோதுமை மாவை எடுத்து உப்பு, தண்ணீர் விட்டுப் பிசைந்து வைத்தான்.

    வேறென்ன செய்யலாம்? சுற்று முற்றும் பார்த்தான்.

    அவன் செய்யும் அளவிற்கு வேலைகள் இருப்பதாய் தெரியவில்லை. குருமா வைக்கத் தெரியாது. காபி போடலாம். ஆனால், இவ்வளவு அதிகாலையில் குடிக்கத் தோன்றவில்லை. முதலில் ராதிகா எழுந்திருக்கட்டும்.

    குளித்துவிட்டு, மறுபடி ஒன்றும் தெரியாதவன்போல் கட்டிலில் போய் படுத்துக்கொண்டான்.

    நேரம் கடந்து மேலும் ஒண்ணரை மணி நேரத்தை விழுங்கியது.

    ஆறாகி விட்டது. தேவேஷ் தொப்பென்று இன்னொரு காலையும் அவள் மேல் போட விழித்துக் கொண்டாள். அவள் அசைவைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டான் யோகேஷ்.

    ஜன்னலில் தெரிந்த வெளிச்சம் வியப்பைத் தர… அலாரத்தைப் பார்த்தாள்.

    அடுத்த கணமே பதறினாள். ‘ஐயோ… மணி ஆறா? நாலரைக்கு டைம் செட் பண்ணி வைத்திருந்தேனே. எட்டு மணிக்கு அவர் டெல்லிக்குப் போக வேண்டுமே. கடவுளே!’

    அவசர அவசரமாய் பாத்ரூமிற்குள் சென்று பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டாள். எப்போதும் குளித்துவிட்டே கிச்சனிற்குள் நுழைவாள். இன்று அதற்கெல்லாம் நேரமில்லையே!

    துடைப்பமும், பக்கெட்டில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வாசலைத் திறந்தவள்… முகம் சுருக்கினாள்.

    ‘என்ன இது? யார் பெருக்கி, கோலம் போட்டது? கோலமாயிது? அலங்கோலமாயிருக்கிறதே!’ தெருவில் பார்வையை ஓடவிட்டாள்.

    காலை நேர பரபரப்பு இப்போது தான் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.

    நான்தான் வாசல் தெளிச்சி கோலம் போட்டேன் என்று சொல்லிக் கொண்டு யாரும் அவள் முன் வந்து நிற்கவில்லை.

    குழப்பத்துடன் சமையலறைக்கு வந்து காபி பில்டரைத் தொட… சுட்டது.

    பாலும் கொதிக்க வைத்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய… அதிர்ந்தாள்.

    பக்கத்திலேயே சப்பாத்தி மாவு பிசைந்து வைக்கப்பட்டிருந்தது தெரிய… சந்தேகத்துடன் பெட்ரூமில் எட்டிப்

    Enjoying the preview?
    Page 1 of 1