Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mee Yaazh
Mee Yaazh
Mee Yaazh
Ebook103 pages42 minutes

Mee Yaazh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதர்களுக்கிடையே உள்ள பலவிதமான உறவுகளில் உணர்வுகளின் தேடல்களின் தொகுப்பே இச்சிறுகதை "மீயாழ்"

தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள.... josephaasir3@gmail.com

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148707684
Mee Yaazh

Read more from Shyam

Related to Mee Yaazh

Related ebooks

Related categories

Reviews for Mee Yaazh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mee Yaazh - Shyam

    https://www.pustaka.co.in

    மீயாழ்

    Mee Yaazh

    Author:

    ஷ்யாம்

    Shyam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    யாஞ்சி

    கனவுகள் இலவசம்...

    முதல் தீட்டு...

    எதுவரை வாழ்க்கை பயணம் அழைகிறதோ...

    பொன்மாலை பொழுது...

    மீயாழ்

    நிலவே என்னிடம் நெருங்காதே...

    நடுநிசி நாயகன்...

    கனவுகள் விற்பனைக்கு...

    ஊமத்தம் பூக்கள்

    யாஞ்சி

    அவர் முன்னே அப்படி நிற்பது... இது இரண்டாவது தடவை...

    மூர்த்தி... வயது 55... எடை செஞ்சுரியை கடந்திருந்தது... சிவந்த கண்கள்... அதில் கொப்பளித்த கோபம் அவனை தலை நிமிர விடவில்லை...

    விக்ரம்... உன்னை தான்... பதில் சொல்லு... எவ்ளோ நேரம் தான் இப்படியே நிற்க போகிறாய்...?

    விக்ரம் பேசவில்லை... அவனிடம் பதில் இல்லை.

    தோ... பாரு விக்ரம்...! நீயே... முடிக்கிறேன்னு சொன்ன ஒரே காரணத்திற்காக இந்த வேலையை உனக்கு தந்தேன்... நீ என்ன நினைக்கிறே...? இந்த வேலையை முடிக்க என்கிட்ட வேற புள்ளைங்க இல்லன்னு நினைக்கிறியா...?

    "அப்படியெல்லாம் இல்லை ஸார்... கொஞ்சம் ப்ராப்ளம்... ஸோ...

    பாரு விக்ரம்... உன் பர்சனல் உன்னோடு... அதை தொழிலில் கொண்டு வராதே...

    நானே முடிக்கிறேன் ஸார்... என்றான் விக்ரம்... சற்று ஆத்திரத்தில்...

    உறுதியா சொல்லு விக்ரம்... இன்றைக்கு விட்டுவிட்டால்... பார்ட்டி வெளிநாடு போய்டும்... அப்புறம் கெட்ட பெயர் யாருக்கு எனக்கு தான்...?

    இன்றைக்கு முடிக்கிறேன் ஸார்...

    சரி... என்றவர்... அதே இறுகிய முகத்துடன்... அவர் மேசைக்கு அடியில் இருந்து அந்த பேக்ஐ எடுத்தார்... அது வரை பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அரவிந்திடம் அதை நீட்ட அவன் வாங்கி கொண்டான்...

    டேய்... விக்ரமை நீயே ஸ்பார்ட்டில் கொண்டு விட்டு விட்டு வா...

    சரி ஸார்... என்றவன்... அங்கிருந்து நகர...

    விக்ரம் மூர்த்தியை பார்த்தான்... அவர் புன்னகைத்தார்...

    முடிச்சிட்டு வாங்க... பேசிக்கலாம்... ம்ம்ம்

    இஷ்டமே இல்லாமல் சிரித்தவன்... அந்த அறையை விட்டு வெளியே வந்தான்... சற்று ஆசுவாசமாய் இருந்தது...

    இருள் சூழ்ந்திருந்தது... ஆள் நடமாட்டம் இல்லை... லேசான காற்று வீசியது அதில் சற்று குளிர் புரிந்தது... எதிரில் தெரிந்த மின்கம்பத்தில் விளக்கு விட்டு விட்டு எரிந்தது... மணிக்கட்டில் அப்பியிருந்த கடிகாரத்தை பார்த்தான்... 8.23ஐ காட்டியது... அரவிந்த்... காரை ஸ்டார்ட் செய்து விட்டு காத்திருந்தான்... காரின் முன் கதவை திறந்து... அதில் இருந்த பேக்ஐ கையில் எடுத்து கொண்டு இருக்கையில் அமர்ந்தான்...

    கார் நகர்ந்தது... சாலை பணி முழுவதும் முடியாத அவஸ்தையில்... மேடு பள்ளத்தில் குலுங்கியவாறு ஊர்ந்து சென்றது... 10 நிமிடத்தில் தார்சாலையை... தொட்டு வேகம் எடுக்க தொடங்கியது... இளையராஜா பாடல் ஒன்று மெல்ல கசிந்தது... மனம் அதில் லயிக்க வில்லை... தலை வலிப்பது போலிருந்தது... இனம்புரியா ஆத்திரம்... பாடிக்கொண்டிருந்த பாடலை அணைத்தான்... அரவிந்த் அவனை பார்த்தான்...

    என்னடா... பார்க்கிற...?

    அவன் ஒன்றும் இல்லை என்பது போல் தோள் உயர்த்தினான்

    நேரா பார்த்து வண்டியை ஒட்டு...

    அவன் பேசவில்லை...

    விக்ரம்... மடியில் இருந்த பேக்ஐ திறந்தான்... தேவையான இரும்பு ஆயுதங்கள்... அதில் ஒன்றை எடுத்தான்... அதன் கூர்மையை விரலால் தடவிப்பார்த்தான்...

    லாஸ்ட் டைம் இது சரி இல்லை... அதனால் வேலை முடியாமல் திரும்பி விட்டேன்... என்ற விக்ரம்... அரவிந்தை நோக்கி அதை நீட்டினான் அரவிந்த் அவனை முறைத்தான்

    நீ மட்டும் இன்றைக்கு இதை செய்யாமல் விட்டால்... உன் கதை அவ்வளவு தான்... அந்த பாட்ஷா பாய் காத்திட்டுருக்கிறார்... அப்புறம் எப்போவுமே அவருக்கு தான் வேலை... நீ லிஸ்டிலேயே இருக்கமாட்டாய்...

    இன்றைக்கு முடிச்சிடுறேன்டா...

    எவ்ளோ டைம் இருந்துச்சி அப்போ விட்டுட்டு இப்போ கடைசி நேரத்துல கஷ்டபடுறது நீ தானே...?

    ம்ம்ம்...

    கார் சீறி பாய்ந்தது... மிதமான அமைதி நிலவியது...

    அரவிந்த்... உன் கல்யாணம் முடிந்து எவ்ளோ நாள் ஆகுது...?

    2 மாசம்...

    எப்படி போகுது உன் கல்யாண வாழ்க்கை...?

    தோ... இப்படித்தான்...

    புரியல...? என்ன சொல்றே நீ...?"

    அதான் பார்க்கிறாயே...? நடு ஜாமத்தில் கதவை தட்டுறது அவளுக்கு பிடிக்க வில்லை... ப்ச்... இதுல அந்த ஏரியா ரொம்ப மோசம் வேற... அவன் அலுத்து கொண்டான்...

    விக்ரம் பதில் எதும் பேசாது... பேண்ட் பாக்கெட்டில் உர் உர் உருமிக்கொண்டிருந்த போனை எடுத்தான்... 4 வரி செய்திகள்... கண்கள் சிவந்தது... ஆத்திரம் தலைக்கு ஏறியது...

    என்ன விக்ரம்... கம்பெனி மெஸஸேஜா...? அது அடிக்கடி வரும் நேரம் கெட்ட நேரத்தில்... கடுப்பாகும்...

    திரும்பாமல் பேசினான் எதிரில் தெரிந்த சாலையில் அவன் கண்கள் லயித்திருந்தது... காரின் வெளிச்சம் இருளை இரண்டாய் கிழித்து கொண்டு போனது... விக்ரம் அரவிந்தயே பார்த்து கொண்டிருந்தான்.

    என்ன விக்ரம் ஏதோ யோசிக்கிறே போல...?

    அரவிந்த்... அதோ தெரிகிறதே... அது என்ன வெளிச்சம்...?

    அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே காரின் வேகம் அந்த வெளிச்சத்தின் அருகே வந்தது...

    பஸ் ஸ்டாண்ட் டா... விக்ரம்... ஏன்...? என்றவன் காரை நிறுத்தி அவனை எறிட்டான்...

    ஒன்னுமில்லை...

    ஏதோ இருக்கு... யோசிக்காதே சொல்லு... விக்ரம்...

    விக்ரம் யோசித்து சொல்வதென்று முடிவெடுத்தான்...

    டேய்... இங்கே நீ இறங்கிக்கோ...

    என்னடா சொல்றே...?

    ஆமாடா இங்கே இறங்கி... பஸ்ஸோ இல்ல ஏதாவது டாக்சி பிடிச்சி நேரத்தில் வீட்டுக்கு போ...

    நீ வேற ஏண்டா... கடுப்பேத்துறே...?

    ஏண்டா...?

    லூசாடா நீ... அந்த ஆளுக்கு யார்டா பதில் சொல்றது...?

    "அதான் நான் இப்போ போய்ட்டு... வேலையை முடிச்சிட போறேன்... அப்புறம்

    Enjoying the preview?
    Page 1 of 1