Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal
Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal
Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal
Ebook87 pages31 minutes

Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர். அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.

அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.

இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.

பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார். ‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!

அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.

அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151007957
Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal

Read more from S. Nagarajan

Related to Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal

Related ebooks

Reviews for Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பகவான் ரமணரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்

    Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. சிவனே திருவண்ணாமலை தான்!

    2. ப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்

    3. அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!

    4. ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!

    5. ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?

    6. பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!

    7. பகவான் ரமணர் முன்னுரை மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!

    8. சூரி நாகம்மா!

    9. பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!

    10. சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!

    11. நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல!

    12. பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!

    13. இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளால் பயன் உண்டா? சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ளாஞ்செட்டில் பேசுவாரா? ரமண மஹரிஷியின் பதில்!

    14. பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை!

    15. ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை!

    16. ரமண மஹரிஷி பற்றி அரவிந்தர்!

    17. காந்திஜி ஆசிரமத்திலும் ரமணாஸ்ரமத்திலும் திருட வந்தவர்கள்!

    18. சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!

    19. பகவான் ரமணரின் வாழ்க்கை: சில முக்கிய குறிப்புகள்!

    என்னுரை

    E:\Priya\re-gen\2-min.jpg

    இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர்.

    அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.

    அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.

    இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.

    பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார்.

    ‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!

    அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.

    அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

    இந்த நூலை அழகுற மின் நூலாக வெளியிட முன் வந்த ‘Pustaka Digital Media’ உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமணர் காட்டிய பாதையில் நடப்போம்! உயர்வோம்!!

    நன்றி

    26-12-2021

    ச. நாகராஜன்

    பங்களூர்

    1. சிவனே திருவண்ணாமலை தான்!

    அபூர்வமான ஏதோ ஒரு சக்தி

    ஏதோ ஒரு சக்தி ஞானியின் தேகத்தின் மூலமாக வேலை செய்கிறது. அவனது சரீரத்தை உபயோகித்து வேலையை முடிக்கிறது என்று அணுக்க பக்தர் தேவராஜ முதலியாரிடம் (5-5-1946 அருளுரை) கூறிய பகவான் ரமண மஹரிஷி ஒரு போதும் ‘தான் தான் அந்த மஹாசக்தி’ என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டதில்லை.

    ஏதோ ஒரு சக்தி அனைவரையும் இங்கு இழுக்கிறது என்று அவர் குறிப்பிட்ட போது அந்த சக்தியால் இழுக்கப்பட்ட பாக்கியவான்களில் மஹாராஜாக்கள், மஹாராணிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், யோகிகள், சாமான்யர்கள் ஆண்டிகள் உள்ளிட்டோர் இருப்பதைப் பார்த்து பிரமிக்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்; ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1