Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiraipadangalil Raamar Paadalgal!
Thiraipadangalil Raamar Paadalgal!
Thiraipadangalil Raamar Paadalgal!
Ebook108 pages34 minutes

Thiraipadangalil Raamar Paadalgal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற எனது நூலைத் தொடர்ந்து இந்த நூல் எழுதப்பட்டது.

காலம் காலமாக பாரத தேச மக்கள் வழிபட்டு வரும் ராமரைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான ஸ்லோகங்கள், துதிகள், நூல்கள் எழுந்துள்ளன.

நவீன தொழில்நுட்பத்தின் ஒரு கண்டுபிடிப்பாக அமைந்துள்ள திரைத்துறையிலும் இதன் தாக்கம் இருப்பது இயல்பே. திரைப்பாடல்களில் ராமர், சீதை என்று சொல்லும் போதே அதற்கென இருக்கும் ஒரு பெரும் பாரம்பரியத்தையும் அந்தச் சொற்கள் கொண்டு வந்து தருகின்றன; ஆகவே பாடலாசிரியர் சொல்ல வேண்டியதை அர்த்தத்துடனும் ஆழத்துடனும் சொல்கிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் இந்தப் பாடல்கள் பெறுகின்றன; பெறும். இப்படிப்பட்ட பாடல்களைத் தொகுத்து பாடலாசிரியர், படம் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுக்க எண்ணம் உண்டாயிற்று, அதன் வெளிப்பாடே இந்த நூல்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151008013
Thiraipadangalil Raamar Paadalgal!

Read more from S. Nagarajan

Related to Thiraipadangalil Raamar Paadalgal!

Related ebooks

Reviews for Thiraipadangalil Raamar Paadalgal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiraipadangalil Raamar Paadalgal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திரைப்படங்களில் ராமர் பாடல்கள்!

    Thiraipadangalil Raamar Paadalgal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. ராமன் எத்தனை ராமனடி!

    2. வசந்தத்தில் ஓர் நாள்!

    3. ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்!

    4. வீணைக் கொடியுடைய வேந்தனே!

    5. ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே!

    6. ஸ்ரீ ராம பக்த ஹனுமான்

    7. ஸ்ரீ ராமராஜ்யம்!

    8. ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ!

    9. யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

    10. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

    ராமாயணம் பாராயணம்

    11. ராம நாமம் ஒரு வேதமே!

    12. ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே அனுமான் உன்னைக் காக்க!

    13. ராமன் கதை கேளுங்கள்!

    14. லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!

    15. ராகவனே ரமணா ரகுநாதா!

    16. வைதேகி ராமன் கை சேரும் காலம்!

    17. ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!

    முடிவுரை

    இந்த நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பற்றிய குறிப்புகள்

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    என்னுரை

    ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற எனது நூலைத் தொடர்ந்து இந்த நூல் எழுதப்பட்டது.

    காலம் காலமாக பாரத தேச மக்கள் வழிபட்டு வரும் ராமரைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான ஸ்லோகங்கள், துதிகள், நூல்கள் எழுந்துள்ளன.

    இமயம் முதல் குமரி வரை மக்கள் ராமரின் மீது கொண்டுள்ள பக்தியையும் சீதையைத் தாயாக மதிக்கும் பாங்கையும் கண்டு அனைவரும் மகிழ்வது இயல்பே. பாரத தேசம் ஒரே பண்பாடு உடையது என்பதற்குச் சான்றாக இலங்குவது வேதம், புராணங்கள், இதிஹாஸம் ஆகியவையே.

    நவீன தொழில்நுட்பத்தின் ஒரு கண்டுபிடிப்பாக அமைந்துள்ள திரைத்துறையிலும் இதன் தாக்கம் இருப்பது இயல்பே.

    திரைப்பாடல்களில் ராமர், சீதை என்று சொல்லும்போதே அதற்கென இருக்கும் ஒரு பெரும் பாரம்பரியத்தையும் அந்தச் சொற்கள் கொண்டு வந்து தருகின்றன; ஆகவே பாடலாசிரியர் சொல்ல வேண்டியதை அர்த்தத்துடனும் ஆழத்துடனும் சொல்கிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் இந்தப் பாடல்கள் பெறுகின்றன; பெறும்.

    இப்படிப்பட்ட பாடல்களைத் தொகுத்து பாடலாசிரியர், படம் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுக்க எண்ணம் உண்டாயிற்று, அதன் வெளிப்பாடே இந்த நூல்.

    லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடராக வெளிவந்த போது இதைப் படித்து உற்சாகத்துடன் அனைவரும் வரவேற்ற ஆர்வத்தின் அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

    தமிழ் உலகம் இந்த நூலை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    இந்தப் புவி வாழ் அனைத்து மக்களும் நலமுடன் வாழ ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்கிறேன்.

    நன்றி

    பங்களூர்

    ச. நாகராஜன்

    13-1-2022

    1. ராமன் எத்தனை ராமனடி!

    பாரதத்தின் தேசீய வீரனாகவும் தெய்வமாகவும் திகழ்பவர் ஸ்ரீ ராமர்.

    தமிழ் திரைப்படங்கள் பாரதப் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தமிழ்த் திரையுலகில் ராமர் சித்தரிக்கப்பட்டிருப்பதை ஏராளமான படங்களும் பாடல்களும் சுட்டிக் காட்டுகின்றன.

    வால்மீகி முனிவர் ராமரின் சரித்திரத்தை 24,000 ஸ்லோகங்களில் விவரித்து ராமாயணமாகப் படைத்தார். அதை பாரதம் தேசீய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளது. ராமரின் வரலாறை அன்றாடம் கேட்பதே ஒரு பாக்கியம் என்பது தான் ஒரு சாதாரண இந்தியனின் மனோபாவமாக இருந்து

    வருகிறது.

    ‘ஏகைகம் அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்’ - அதில் ஒரு எழுத்தைச் சொன்னாலும் கூட அது மஹா பாதகத்தையும் போக்கி விடும் என்பதே வால்மீகி முனிவரின் வாக்கு. அதுவே நம் அனைவரது நம்பிக்கையும் கூட.

    ஒரு ஸ்லோகம் என்பது நான்கு பாதங்களைக் கொண்டிருக்கும். இப்படி அமைக்கப்பட்டுள்ள 24,000 ஸ்லோகங்களில் ஒரு பாதத்தையும் கூட மாற்ற முடியாது, இடைச் செருகல் செய்ய முடியாது என்பதை அதில் ஊறி அனுபவித்த மஹாகவி கம்பன் கூறுகிறான் இப்படி:

    "வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

    தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்

    ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும்நறவம் மாந்தி

    மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்"

    மாற்ற முடியாதபடி சொற்கள் உள்ள வால்மீகியின் பாதங்கள் அமைந்த ராமாயணத்தை அவன் இனிய கவிதைகளால் தேவரும் பருகும்படி செய்தான். அப்படிப்பட்ட மஹாமுனி புகழ்ந்த கோசல நாட்டை அன்பெனும் கள்ளைக் குடித்து விட்டு ஊமை உளறுவது போல மொழிய ஆரம்பித்துவிட்டேன் என்பது

    Enjoying the preview?
    Page 1 of 1