Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Max Muller Marmam!
Max Muller Marmam!
Max Muller Marmam!
Ebook88 pages33 minutes

Max Muller Marmam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் புகழ்ந்து கூறுவதைப் படித்து வந்த போது அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியதைப் பார்த்து மகிழ முடிந்தது.

ஆனால் அதே சமயம் ஆரியர் பற்றிய ஒரு கொள்கையை உருவாக்கி அது இந்தியாவின் பாரம்பரியப் பின்னணியையே தாக்கியதைக் கண்ட போது திகைக்க வேண்டி இருந்தது. ஆகவே முழுமையான ஆய்வில் இறங்க மனம் துடித்தது. ஆராய ஆரம்பித்தேன். அந்த ஆய்வில் கண்ட உண்மைகளே இவை.

வாழ்வின் தொடக்கம், வாழ்வின் மத்திய கால கட்டத்தில் அவர் பணி, இறுதிக் கட்டத்தில் அவர் உணர்ந்த உண்மை என அவர் வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்க வேண்டி இருக்கிறது. அதை இந்த நூலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580151008243
Max Muller Marmam!

Read more from S. Nagarajan

Related to Max Muller Marmam!

Related ebooks

Related categories

Reviews for Max Muller Marmam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Max Muller Marmam! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாக்ஸ்முல்லர் மர்மம்!

    Max Muller Marmam!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. இருவேறு கருத்துக்கள்

    2. மாக்ஸ்முல்லரின் புகழுரை

    3. மாக்ஸ்முல்லர் - ஒரு கால அட்டவணை

    4. மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ்?

    5. லார்ட் மெக்காலேயின் திட்டம்

    6. மெக்காலே கொள்கை

    7. மிஷனரிகளின் நோக்கம்

    8. ஒரு கப் சாக்லட்

    9. மாக்ஸ்முல்லரின் கடிதங்கள்

    10. அன்புள்ள அம்மா!

    11. மாக்ஸ்முல்லர் சம்ஸ்கிருதம் கற்றாரா?

    12. 25 ஆண்டுகள் செய்த பணி

    13. மாக்ஸ்முல்லர் மீதான குற்றச்சாட்டு

    14. பணியில் திருப்தி இல்லை

    15. பிரம்ம சமாஜத்தின் தோற்றம்

    16. தேர்தலில் தோல்வி

    17. பேராசிரியர் பதவி

    18. இந்தியாவிற்குப் புகழாரம்

    19. ஸ்வாமி விவேகானந்தருடன் சந்திப்பு

    20. சாயணரே மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார்!

    21. மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர்

    22. மாக்ஸ்முல்லர் மர்மம்

    23. ஆராய்ச்சி விளைவித்த சேதம்

    24. தள்ளுவன தள்ளி கொள்வன கொள்வோம்

    என்னுரை

    மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் புகழ்ந்து கூறுவதைப் படித்து வந்த போது அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியதைப் பார்த்து மகிழ முடிந்தது.

    ஆனால் அதே சமயம் ஆரியர் பற்றிய ஒரு கொள்கையை உருவாக்கி அது இந்தியாவின் பாரம்பரியப் பின்னணியையே தாக்கியதைக் கண்ட போது திகைக்க வேண்டி இருந்தது.

    ஆகவே முழுமையான ஆய்வில் இறங்க மனம் துடித்தது. ஆராய ஆரம்பித்தேன்.

    அந்த ஆய்வில் கண்ட உண்மைகளே இவை.

    வாழ்வின் தொடக்கம், வாழ்வின் மத்திய கால கட்டத்தில் அவர் பணி, இறுதிக் கட்டத்தில் அவர் உணர்ந்த உண்மை என அவர் வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்க வேண்டி இருக்கிறது.

    அதை இந்த நூலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

    அன்பர்கள் அவரது ஆரியர் சம்பந்தமான கொள்கைகளைத் தள்ளி அவர் இந்தியாவைப் புகழாரம் சூட்டிப் போற்றுவதை மனதில் கொள்ள வேண்டும்.

    மாக்ஸ்முல்லர் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்த திருப்தியில் என்னுடன் இணைய உங்களை இந்த நூல் வாயிலாக அழைக்கிறேன்.

    இந்தக் கட்டுரைகளை இணையதளத்தில் ஒரு தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    பங்களூர்

    ச. நாகராஜன்

    மார்ச் 2022

    ###

    1. இருவேறு கருத்துக்கள்

    மாக்ஸ்முல்லர்!

    வேதங்களை மொழி பெயர்த்தவர்; ஹிந்து மதத்தின் பால், - ஹிந்து நாகரிகத்தின் பால், பெரு மதிப்புக் கொண்டிருந்தவர் என்ற புகழுரைகள் ஒரு புறம்!

    ஹிந்து மதத்திற்கு எதிராக சதி வேலை செய்தவர், பிரிட்டிஷாரின் கைக்கூலி; கிறிஸ்தவ பாதிரிகளின் கைப்பாவை - என்று இப்படி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்னொரு புறம்!

    ‘சாயனரே மறு அவதாரம் எடுத்து வந்திருப்பதாகக் கருதுகிறேன். எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறார்; அவருக்கு ஹிந்து மதத்தின் மீது தான் எவ்வளவு அன்பு’ என்று ஸ்வாமி விவேகானந்தரின் புகழுரைகள் இன்னொரு புறம்!

    எந்த ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது தோன்றிய நாடு என்று என் கை சுட்டிக் காட்டுவது இந்தியாவைத் தான் என்று அடித்துச் சொல்லி (எழுதி) இந்தியாவை புகழேணியில் உச்சியில் ஏற்றும் மாக்ஸ்முல்லரின் எழுத்துக்கள் (அச்சிலே வந்து விட்ட நூல்கள்) இன்னொரு புறம்.

    மலைக்கிறோம்.

    திகைக்கிறோம்.

    அவரது அன்னைக்கு எழுதிய கடிதத்தில் வேதம் பற்றிய அவரது கருத்தைக் கண்டு மயங்குகிறோம்.

    India – what it can teach us என்ற நூலில் அவர் இந்தியா பற்றி எழுதிய புகழாரம் கண்டு மகிழ்கிறோம்.

    அவர் என்ன முரண்பாடுகளின் மூட்டையா?

    அல்லது முதலில் ஹிந்து மதத்திற்கு எதிராகச் சதி செய்த சதிகாரப் பாதிரிகளுக்கு கைக் கூலியாக இருந்து மனம் மாறிய

    Enjoying the preview?
    Page 1 of 1