Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Oru Seethai
Meendum Oru Seethai
Meendum Oru Seethai
Ebook158 pages1 hour

Meendum Oru Seethai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலித்து திருமணம் செய்த மனைவி லாவண்யா. லாவண்யாவை சந்தோஷமாக வாழ வைத்தானா மகேந்திரன்? ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டு இறந்த இளைஞன் யார்? இறந்தவனுக்கும், கனகம்மாளின் மருமகளுக்கும் இடையே என்ன தொடர்பு? ஊரார் வைத்த சோதனையிலிருந்து மீண்டு வருவாளா இன்றைய சீதை?.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155608540
Meendum Oru Seethai

Read more from Lakshmi

Related to Meendum Oru Seethai

Related ebooks

Related categories

Reviews for Meendum Oru Seethai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Oru Seethai - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மீண்டும் ஒரு சீதை

    Meendum Oru Seethai

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வானம் பொத்துக் கொண்டு விட்டது போன்று மூன்று நாளாக ஓயாது மழை.

    வடவாறு கரைபுரண்டு ஓடுகிறது என்று தெருவே பேசியது. நான்காவது நாள் பளிச்சென்று சூரியன் புறப்பட்டு விட்டதும் தெருவில் ஆறாக ஓடிய தண்ணீர் எங்கேயோ நொடிப்பொழுதில் மாயமாகிவிட்டிருந்தது.

    காகிதக் கப்பல் செய்து ஓடவிட்டு மழையில் நனைந்து கொண்டு உற்சாகத்துடன் கத்திக் கொண்டிருந்த தெருப் பிள்ளைகள் அன்று பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டனர்.

    தண்ணியிலே ஆடாதேன்னு சொன்னேன் கேட்டியா? மூக்கு ஒழுகுது, தலையை வலிக்குது, வயித்தை வலிக்குதுன்னு வம்பு செய்துகிட்டு பள்ளிக்கூடம் போகாம வீட்டில் உட்கார்ந்தியோ பலி போட்டுடுவேன். இந்தக் காலத்திலே படிச்சாதான் நாலு காசைப் பார்க்க முடியும். உங்கப்பனாட்டம் நீயும் உழைச்சு ஓடாக வேணாம் தன் ஐந்து வயது மகனை பரபரவென்று இழுத்துக் குளிப்பாட்டி உடை அணிவித்து, இட்டலியைப் பிட்டு கட்டி பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டிருந்தாள் செங்கமலம்.

    இந்த மூன்று நாளாக அவள் வீட்டோடு மகனை வைத்துக் கொண்டு பட்டபாடு போதும்.

    அப்பாடா என்று பெருமூச்சுடன் நிம்மதியாக நடையில் வந்து உட்கார்ந்து கொண்டு சமையலுக்கு முருங்கைக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள். யுகமாகி விட்டது போன்ற பிரமிப்பு. நேரம் இப்பொழுது என்னவாக இருக்கும்? கவலையுடன் எழுந்து வீட்டுப் பின்பக்கத்தில் இரு மூங்கிலிடையே கட்டப்பட்டிருந்த கொடியில் ஈரத்துணிகளைக் காயப்போட்டு விட்டு வந்தாள்.

    இன்று ஒருநாள் நல்லா சூரியன் காஞ்சா போதும், அடுத்த நாள் குழந்தைக்குப் பள்ளிக்கூடம் போட்டனுப்ப சீருடை, அவளது மாற்றுப் புடவை, கணவனது வேட்டி சட்டை எல்லாம் நன்றாகக் காய்ந்துவிடும் என்று எண்ணியபடி அவள் பரபரப்பாக மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். விடாது மழை கொட்டிக் கொண்டிருந்த போதிலும் அவள் கணவன் கந்தசாமி பெரியதனக்காரர் வீட்டு வேலைக்குப்போய் வரவேண்டியிருந்தது. குடைக் கம்பி ஒடிந்து மூலையில் சாத்தப்பட்டுக் கிடந்தது. அதைப் பழுது பார்த்துவர ஒரு நடை கடைத் தெருவுக்குப் போகக்கூட கந்தசாமிக்குப் பொழுது இருக்கவில்லை.

    பக்கத்து டவுன் காய்கறி மண்டிக்குப் போகும் போதாவது எடுத்துப் போய் வாங்கோ… எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டிருந்தாள். அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    பரணில் கிடந்த தாழங்குடையைத்தான் அவன் எடுத்துக்கொண்டு வேலைக்குப் போய் வந்தான்.

    மழை பெய்கிறது. பொழுதோட வீட்டுக்குப்போ கந்தசாமி என்று பெரியதனக்காரர் மனைவி கனகம்மா ஒரு நாளாவது அவனை வீட்டுக்குச் சீக்கிரம் அனுப்பியதில்லை.

    குடையை மீறிய சாரலில் நனைந்து கொண்டு உரித்த கோழிபோல் அவன் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு இரவு ஒன்பது மணிக்கு வந்து நின்றபோது, செங்கமலத்திற்கு மிகவும் கோபமும் மனவேதனையுமாகத்தானிருந்தது.

    ‘பிறருக்கு கைகட்டி சேவகம் செய்யும் பிழைப்பும் ஒரு பிழைப்பா?’ உள்ளூரக் குமைந்தாள்.

    பெரியதனக்காரர் நாகலிங்கம் இருந்தபோது நிலைமை வேறு. அவர் மிகவும் தாராள மனமுடையவராக இருந்தார். ஆட்படைகளுக்கு தமது நிலத்தில் விளைந்த நெல்லிலிருந்து ஆளுக்கு ஒரு மூட்டை விகிதம்… பண்டிகைகளின் போது தந்து உதவினார். தோட்டத்துக் காய்கறிகள் அத்தனையையும் மண்டியில் விற்றுக் காசாக்கிக் கொள்ளவில்லை.

    கந்தசாமி உன் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போ என்று மிகவும் கனிவோடு ஒரு கூடை காய்களையும்… சீப்பு வாழை பழத்தையும் தந்து உதவினார்.

    அவர் போன பின்பு, கனகம்மா ஆட்களை பாதியாகக் குறைத்ததுடன் அவர்களுக்கு வழங்கிய அதிகப்படி சலுகைகளையும் அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டாள்.

    அப்படி பணத்தை யாருக்குச் சேர்த்து வைக்கிறாளோ தெரியவில்லை. போதாததிற்கு அந்த வீட்டில் சில மாதங்களாக ஒரு கலவரம். பட்டணத்து மருத்துவமனையொன்றில் கால் எலும்பு முறிவுக்குச் சிகிச்சை செய்து படுத்துக் கொண்டிருந்த நர்ஸ் லாவண்யாவைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு விட்டான்.

    வேண்டாத மருமகள் என்பதால் கனகம்மாள் தன் வெறுப்பை நெருப்பாக எல்லார் மேலும் உமிழ்ந்து கொண்டிருந்தாள். பாவம் அந்தப் பெண்… அவளிடம் என்ன பாடுபடுகிறதோ? வாசலில் காலடி ஓசை கேட்டது. அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கொஞ்சம் கிளறிவிட்டு வேகமாக வந்து கதவை திறந்தாள். உன் காரக் குழம்பு தெருவையே தூக்குதே… சிரித்தபடி நடையில் செருப்புகளை விட்டுவிட்டு உள்ளே வந்தான் கந்தசாமி.

    அப்பாடி! இன்னிக்காச்சும் நேரத்துக்கு சாப்பிட உங்களை வீட்டுக்கு அனுப்பினாங்களே, அந்த மகராசி?

    தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள். செங்கமலம்.

    இந்தா! இதுகளை எடுத்து வை. பெரியம்மா எனக்குக் கொடுத்தனுப்பினாங்க சுமந்து வந்த சிறு துணிப்பையைத் தரைமீது கவிழ்த்தான். முற்றிப்போன வெண்டைக்காய்கள். சொத்தை விழுந்த கத்திரிப் பிஞ்சு, ஒரு சிறு கூடைப் புடலங்காய்… முதலியவை தரைமீது விழுந்தன.

    இது வேணும்னு யார் கேட்டா? அலுத்துக் கொண்டு அவைகளை வாரி ஒரு கூடையில் போட்டு ஒதுக்குப்புறமாக வைத்தாள்.

    கைகால் கழுவிட்டு வாங்க… சாப்பிடுவீங்களாம்… என்றபடி மேடை ஓரம் கவிழ்த்து வைத்திருந்த அலுமினியத் தட்டை எடுத்து கழுவித் துடைத்து அடுப்பருகே தரைமீது வைத்தாள்.

    இடுப்பில் இரண்டு கைகளையும் ஊனிக்கிட்டு தோட்டத்திலே வந்து கத்திகிட்டிருந்திருப்பாங்களே? எரிச்சலுடன் கேட்டபடி சோற்றுப் பானையை இறக்கி தட்டருகே வைத்தாள்.

    என்னை அதட்டி வேலை வாங்கிறதைப் பத்தி நான் கவலைப்படறதில்லை. அவங்க குணம்தான் தெரிஞ்ச கதையாச்சே, மகன் டவுன் கடையை கவனிக்கப் புறப்பட்டதும் ஆரம்பிக்கிறாங்க பார்… அந்தப் பொண்ணை சித்த நேரம் நிக்கவிடறதில்லை.

    நர்ஸ் வேலைக்குப் படிச்ச பொண்ணுதானே, சம்பாதிச்சு வாழக்கூடிய திறமை இருக்கிற பொண்ணு இவங்ககிட்ட வந்து மொத்துப் படணுமா? கேட்க வேதனையா இருக்கு.

    காதல் கல்யாணம் செய்துகிட்டோம். மாமியாரைப் பத்தி புருஷன்கிட்டே மூட்டிக் கொடுத்து கலகம் செய்யக் கூடாதுன்னு அது பொறுமையா இருக்கு.

    இன்னிக்கு எஜமானியம்மா என் முன்னாடி அந்தப் பொண்ணைப் பார்த்து கத்தினாங்க பாரு… நானே அதிர்ந்திட்டேன்.

    அது என்ன தப்பு செய்தது. அப்படிக் கத்திட்டாங்க?

    புதுசா நாலு நாள் முன்னாடிதானே ஐயா கார் வாங்கியிருக்கார். முன்னெல்லாம் கடைக்கு ஸ்கூட்டரில் தானே போவார். காரைக் கோயிலுக்கு எடுத்திட்டுப் போய்… ஒரு அர்ச்சனை செய்திட்டு அப்படியே கடைக்குப் போய்ட்டார். அதுக்கு பிறகுதான் மூணுநாளா ஒரே மழை, பெண்ஜாதியை அதிலே கூட்டிகிட்டு தமாசா வெளியிலே போக முடியலை இல்லையா?

    இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே. நம்ப துர்க்கையம்மன் கோயிலில் ரொம்ப விசேஷமான பூஜை உண்டே. கடைக்குப் போறத்துக்கு முந்தி பெண்ஜாதியை கோயிலுக்குக் கிளம்பும்படி அய்யா கூப்பிட்டார். அது படிச்ச பொண்ணுதான். ரொம்ப அடக்கமா நடந்துக்கிற குணம். புருஷன் சொன்னதும் சட்டுனு தேங்காய், பழம், பூவை எடுத்து கூடையிலே வச்சுகிட்டு ஒரு பட்டுச் சேலையை எடுத்து உடுத்திகிட்டு தலையிலே பூவும், நெத்தியிலே குங்குமமுமா… கிளம்பிடுச்சு. மாமியாருக்கு ஒரே பொறாமை. தன்னை முதலில் காரில் ஏத்திக்கிட்டு கோயிலுக்குப் போகாம மகன் பெண்டாட்டியைக் கூட்டிகிட்டு போரானேன்னு ஆத்திரம்.

    வீட்டுக்கு விளக்கேத்த வந்த அந்தப் பொண்ண புது காரோட கோயிலுக்குப் போய் சாமியைக் கும்பிட்டுட்டு வந்தா என்னவாம்? இந்தம்மா புருஷனோட வாழ்ந்த காலத்திலே வைர அட்டிகையும், இடுப்பிலே ஒட்டியாணமும், தகதகப் பட்டுச்சேலையுமா அவரோட ஜோடி போட்டுகிட்டு கிளம்பினது மறந்து போச்சா? கோபத்துடன் கேட்டபடி கரண்டியால் சோற்றை அள்ளி தட்டில் வைத்துக் குழம்பை ஊற்றினாள்.

    காரசாரமா குழம்பு நல்லா வச்சிருக்கே. ஒரு பிடி பிடிக்கப் போறேன், ஆமாம். கடிச்சுக்க என்ன வச்சிருக்கே?

    முருங்கைக்கீரை புரட்டி வச்சிருக்கேன். நம்பதோட்டத்துக் கீரை, மறந்துட்டேனே என்று எழுந்து மேடையில் ஒரு பக்கம் வைத்திருந்த அலுமினியக் கிண்ணத்தை எடுத்து வந்து பரிமாறினாள்.

    அப்புறம்! மகன் கடைக்குக் கிளம்பினதும் மாமியார்காரி கத்தி ரகளை செய்தாங்களாக்கும்?

    "கார் தெருவை விட்டு நகர்ந்ததும் எஜமானியம்மா ஆரம்பிச்சுட்டாங்க. உனக்கு என்ன துணிச்சல்? கல்லு பிள்ளையாராட்டம் நான் பெத்தவ இருக்கேன்… என் புருஷன் சம்பாதிச்ச பணத்திலேதான் கடை, கார் எல்லா வாழ்வும் கிடைச்சிருக்குங்கிற ஞாபகம் அவனுக்குத்தான் இல்லே… உனக்குப் புத்தியிருக்க வாணாம்? அத்தை நீங்க பெரியவங்க முதல்லே கோயிலுக்கு போயிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1