Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalavadinean Kanapozhuthil!
Kalavadinean Kanapozhuthil!
Kalavadinean Kanapozhuthil!
Ebook105 pages41 minutes

Kalavadinean Kanapozhuthil!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எளிமை அழகின் மறு உருவமான தாமோதிரியும், கணவன் நந்தனும் அழகான குடும்ப வாழ்வை நடத்தி வருகின்றனர். தாமோதரியின் வலக்கை தழும்பு அவள் வாழ்வை மாற்ற போகும் எனவும்... அவள் கனவிலும் நினைக்காத பல அசம்பாவிதங்களும், ஆச்சசரியங்களும் தன் வாழ்வில் நடக்கவிருப்பதையும் அறியாத பட்டாம்பூச்சியாய் தாமோதரி. அவளின் அத்தகைய அழகு கணப்பொழுதில் அவளின் வாழ்க்கையை களவாட இருக்கும் நிகழ்வை நாமும் காண்போம் வாருங்கள்....

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580140608561
Kalavadinean Kanapozhuthil!

Read more from R. Manimala

Related to Kalavadinean Kanapozhuthil!

Related ebooks

Reviews for Kalavadinean Kanapozhuthil!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalavadinean Kanapozhuthil! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    களவாடினேன் கணப்பொழுதில்!

    Kalavadinean Kanapozhuthil!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    குக்கூ... கொஞ்சம் நடுங்கும் குரலோடு, மூடியிருந்த ஜன்னல்களைத் தாண்டி தேய்ந்து வந்தது குரல். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நந்தன் கண்கள் மெல்லத் திறக்க முற்பட்டாலும், இப்போது வேண்டாமே என்று இமைக்கதவுகள் மறுபடி சார்த்திக்கொண்டன. பத்து வினாடிகளுக்கொருமுறை அதுவும் விடாமல் கூவியது. முதல் நாளிரவெல்லாம் மழைப் பெய்ததால், பாவம் குயிலுக்கும் குளிருதுப் போலும்!

    மூன்று மணி நேரத்திற்கு முன்பு அணைக்கப்பட்ட ஏசியின் சில் அறைக்குள் அவர்களை அணைத்திருந்தது.

    விடாமல் கூவிய குயில் அவனை மறுபடி தட்டியெழுப்ப... சுவற்றில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் அதிகாலை ஐந்தரையைக் காட்ட...

    தாமோதரி கண் விழிக்கும் நேரம்தான்!

    புரண்டு படுக்க எத்தனிக்க... அசைய முடியவில்லை. தாமோதரியின் இடக்கை அவன் வயிற்றை வளைத்து, இடுப்பை அணைத்திருந்தது. விழித்திருக்கும்போது... அவன் தோளில் சாயக்கூட வெட்கப்படுபவள்... தூக்கத்தில் என்னெல்லாம் பண்ணுகிறாள்?

    நந்தன் இன்னும் நெருங்கினான்.

    முதல் நாள் மாலை சூடியிருந்த மல்லிகைப்பூவின் துணுக்குகள் கன்னத்திலும், கழுத்திலும் ஒட்டிக்கொண்டிருந்தன. இடக்கன்னத்தில் பளிச்சென்று மச்சம் கூடுதலான கவர்ச்சி, அவள் உறங்கிக் கொண்டிருக்கும் தைரியத்தில் அணிந்திருந்த நைட்டி சோம்பலாய் விலகியிருக்க... சற்று நேரம் கண்களை விலக்க முடியவில்லை. குழந்தையைப் போல் லேசாய் உதடுகள் பிளந்திருக்க... எப்போதும் இரு விரல்களால் இழுத்து அதை வாய்க்குள் சாக்லேட்டாய் சுவைக்கும் எண்ணம் வர... விரல்களை மடக்கி கட்டுப்படுத்திக் கொண்டான். வளைவு நெளிவுகளுடன்... செதுக்கிய சிலைப் போலிருந்தாள். இரவெல்லாம் அவனிடம் படாதபாடுப்பட்ட அவளின் சிற்றிடை... கிட்னி திருடனைப்போல் வா வாவென அழைக்க... மெல்ல அவள் இடையை பற்றினான். அந்த ஸ்பரிசத்திற்கே இன்னும் குறுகி... அவன் நெஞ்சில் முகத்தைப் பதுக்க...

    நந்தன் அப்படியே அவள் முகத்தை புதைத்துக்கொண்டான். அவள் நெற்றியில் இதழை ஒற்றி எடுத்தான். பூவின் மணம் அவன் நாசியில் ஊடுருவியது. ஒரு குழந்தையாய்... அவள் உறக்கம் கலையாத கவனத்துடன் அணைத்துக் கொண்டான்.

    கீச்... கீச்சென்ற குருவிகளின் அழைப்பு! கண்ணாடி ஜன்னல்கள் வழியே இலவச கரண்ட்டை சூரியன் அனுப்பி வெளிச்சம் பரப்பியிருக்க... ஹாலில் இருந்த டிவியின் காலைச் செய்திகள் காதில் விழ... விழித்தான் நந்தன்.

    வெளிச்சம் ரொம்பவே பளிச்சிட்டது. மார்பில் புதைந்திருந்த தாமோதரியைக் காணாமல் திகைத்து... பின் புரிய, இரவில் நடந்ததை எண்ணி உதடு பிரியாமல் சிரித்து... கட்டில் மூலையில் கிடந்த லுங்கியை எடுத்து அணிந்து பாத்ரூம் நோக்கி நடந்தான்.

    மாமா... காபி...! தட்டை ராகவன் முன் நீட்டினாள் தாமோதரி.

    அநியாயமா இருக்கே? இந்தக் கொரோனா இப்படி பாடாப்படுத்துதே! வேர்ல்ட் வார் மாதிரி ஜனங்க வீட்டுக்குள்ளேயே பதுங்கிக்கிடக்கிற சூழ்நிலைய உண்டாக்கிடுச்சே? செத்த பிறகு சாம்பல் ஆகுறதுக்கு கூட நாள் கணக்கில் காத்திருக்கிறதைப் பார்த்தா... உலகம் அழிஞ்சிடுமோன்னு பயமாயிருக்கு! டிவி மீதிருந்த பார்வையை விலக்கி, டம்ளரை எடுத்துக்கொண்டவர் அங்கலாய்த்தார்.

    கீரை ஆய்ந்துக் கொண்டிருந்த பார்வதி, ‘எந்நேரமும் செய்தியை பார்த்துட்டு புலம்பிக்கிட்டிருந்தா அதுவே நமக்கு நோய்தான். காமெடி சேனலை வைங்க...’ என்றவள், மருமகள் நீட்டிய காபி டம்ளரை எடுத்துக் கொண்டாள்.

    ‘கீரையை ஆய்ஞ்சுட்டேன். கொஞ்சம் மஞ்சள்த்தூள் போட்டு நாலஞ்சு முறை அலசிட்டு வேகப் போடு. எந்தக் கீரையில எந்த வைரஸோ?’

    வர வர நீயும் ட்ரெண்டிங்கா பேச ஆரம்பிச்சுட்டே! என்று நக்கலடித்தார்.

    முதல்ல சேனலை மாத்துங்க.

    செய்தி முடியட்டும்!

    முடிஞ்சதும் மறுபடி அதையேத் தொடங்குவான். பக்தி பாட்டாவது வைங்க!

    முதல்ல காப்பியக் குடி... அம்மா... காய்கறி ஏதாவது கட் பண்ற வேலை இருந்தா கொண்டு வந்து இவகிட்ட குடு... சும்மா நொய் நொய்னுட்டு...!

    ரொம்ப சீக்கிரம் பைத்தியம் பிடிச்சிடும் இவருக்கு! நந்து எந்திரிச்சிட்டானா?

    குளிச்சிட்டிருக்கார் அத்தே!

    டிபன் ரெடியாயிடுச்சா... நான் ஏதாவது உதவி பண்ணவா?

    வேணாம் அத்தே... எல்லாமே ரெடியா இருக்கு. சாப்பிட வாங்கள்!

    வேணாம்மா... இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டு பழக்கமில்லையே... காப்பிய குடிச்ச டம்ளரை கூட இன்னும் கீழே வைக்கல. நந்து சாப்பிட்டு கிளம்பட்டும். நாங்க அப்புறமா சாப்பிட்டுக்கிறோம்.

    சரிங்கத்தை!

    சட்டையின் முழங்கைப் பட்டனை போட்டபடி கண்ணாடி முன் நின்று பார்த்தான்.

    ‘ஆள் அம்சமாதான்டா இருக்கே?’ தன் தோற்றத்தில் முழு திருப்தியடைந்தவனாய் வெளியில் வந்தான்.

    ஊதுபத்தியின் நறுமணம் வீடு முழுக்க நிறைந்திருந்தது. ஒரு ஆள் மட்டுமே உள்ளே அமரும்படியான சின்ன பூஜையறையில் காமாட்சி அம்மன் விளக்கு எரிந்துக் கொண்டிருக்க... புகை பாலே நடனம்

    Enjoying the preview?
    Page 1 of 1