Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Netru Varai Kaadhali!
Netru Varai Kaadhali!
Netru Varai Kaadhali!
Ebook93 pages46 minutes

Netru Varai Kaadhali!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன்மானத்துடனும் கௌரவத்துடனும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நின்று சம்பாதிக்கும் ரஞ்சனி வாழ்க்கையில் அவள் அடைந்த ஏமாற்றம் என்ன? காணாமல் போன ரஞ்சனிக்கு என்ன நேர்ந்தது? அதற்கு காரணமானவன் யார்? சரியான க்ளூ கிடைக்காமல் அலையும் பரத் விடையை கண்டுபிடித்தாரா பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580100908068
Netru Varai Kaadhali!

Read more from Pattukottai Prabakar

Related to Netru Varai Kaadhali!

Related ebooks

Reviews for Netru Varai Kaadhali!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Netru Varai Kaadhali! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நேற்றுவரை காதலி!

    Netru Varai Kaadhali!

    Author :

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    சமீபகாலத்தில் காற்றில் ஈஸ்னோபில்ஸ் அதிகமாகி அதனால் அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் சென்னை.

    அடையாறில் கஸ்தூரிபா நகரில் இருந்த அன்னை தெரஸா பெண்கள் விடுதியின் இரட்டை மாடிக்கட்டிடம் லேசான தூறலால் நனைந்து கொண்டிருந்தது.

    பெண்கள் விடுதியில் ஏராளமான மரங்கள், மாலையில் பேட்மிண்ட்டன், ரிங்பால் விளையாட சின்ன மைதானம், சுதந்திர தினத்தன்று ஏற்றுவதற்கு ஒரு கொடிக்கம்பம், அதில் கைக்கெட்டும் தூரம் வரை பெண்களைப் பார்க்க வந்த விசிட்டர்கள் தடவின சுண்ணாம்பு மிச்சங்கள்.

    கேட்டில் ஒல்லியான தேகத்திற்கு சம்பந்தமேயில்லாத தேவாரம் மீசையுடன் வாட்ச்மேன். சதா பாக்கெட் ரேடியோவில் டிடிங் ஓசைக்குப் பின்னர் வர்த்தக விளம்பரங்களுக்கு மத்தியில் நேயர் விருப்பத்தில் ‘பட்டினப்பாக்கம் பலராம்’ பெயர் ஒலிக்கிறதா என்று கேட்பான். பட்டினப்பாக்கம் பலராம் இவன் தங்கை கணவன்.

    முதல் மாடியில் கடைசி அறையில் ரஞ்சனி மார்புவரை ஏற்றிக் கட்டின பாவாடையுடன் பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டு மேஜைமேல் எடுத்து வைத்த சேலை, ஜாக்கெட்டை அணியத் தொடங்கினாள்.

    கட்டிலில் குப்புறப்படுத்து கால்களை தாலாட்டிக் கொண்டே சினிமா புத்தகம் படித்த கௌரி திரும்பிப் பார்த்து, ஒரு நாளைக்கு நான் ஆம்பளையா மாறி உன்னை ரேப் பண்ணத்தான் போறேன்.

    நல்லப் பேச்சே வராதே உன் வாயில.

    நாங்க உணர்ச்சிகளை வார்த்தையில கொட்டி தீர்த்துடறோம். நீ மனசுக்குள்ளே தேக்கி வைக்கிறே. பேர் என்ன ரஞ்சனி?

    என்ன பேர்?

    அவன் பேர்.

    யாரு?

    பீலா வுடாதேம்மா. யாரோ ஒரு மீசை புதுசா உன் மனசுலே எண்ட்ரி கொடுத்திருக்கான். மறைக்காதே.

    ரஞ்சனி கொசுவம் பிடித்து சேலையை வயிற்றில் செருகிக்கொண்டே, எதாச்சும் உளறாம சும்மா இரு கௌரி என்று சீப்பெடுத்து கண்ணாடி முன் நின்றாள்.

    நேத்து தூக்கத்தில் உளறினது நீயா, நானா?

    வாட்?

    ‘உங்களை நான் மறக்கவே மாட்டேன். ஐ லவ் யூ. ஸோ மச்’ அப்படின்னு தூக்கத்திலே உளறினே. நான் கேட்டேன். உடனே டேப்புல பதிவு செய்யணும்னு எழுந்து ரெடி பண்றதுக்குள்ளே உன் உளறல் நின்னுப்போச்சு?

    செவண்ட்டி எம்.எம்.ரீல்!

    சொல்ல மாட்டியா அப்போ?

    என்ன சொல்லணும்?

    அவன் பெயர் என்ன?

    சும்மா கலாட்டா பண்ணாதே. அதெல்லாம் எதுவும் கிடையாது.

    ஒட்டும் பொட்டு வைத்துக்கொண்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டாள். கைப்பை எடுத்துக்கொண்டாள். ஆணியில் மாட்டின குடையை எடுத்துக்கொண்டாள்.

    வர்றேன். டைமாச்சு எனக்கு.

    பார்த்துக்கறேன். மறுபடி நீ தூக்கத்தில் உளறாமல் போய்டுவே? நான் அதை டேப் செஞ்சு ஹாஸ்டல்ல இருக்கிற அத்தனை பேரையும் அசெம்பிளி ஹால்ல கூட்டிவச்சி போட்டுக்காட்டி உன் மானத்தை வாங்கறேண்டி.

    ச்சீ போ! என்று சீப்பெடுத்து அவள் மீது வீசிவிட்டு, செருப்பணிந்து புறப்பட்டாள் ரஞ்சினி.

    ***

    தன் பஸ் வந்ததும் குடையை மடக்கிக்கொண்டு சென்று ஏறினாள் ரஞ்சனி.

    அமர இடம் கிடைத்தது. கண்டக்டரிடம் சீஸன் டிக்கெட் கொடுத்து திரும்ப வாங்கிக் கைப்பைக்குள் வைத்து அந்த கவிதைப் புத்தகம் எடுத்துக்கொண்டாள்.

    உதட்டோரக் கவிதைகள் என்று தலைப்பிருந்தது.

    முதல் பக்கத்தில்...

    அன்று: நான்-நீ

    நேற்று: நான்+நீ

    இன்று: நாநீன்

    - உன், நான்

    என்று பச்சை பால்பாய்ண்டால் எழுதப்பட்டிருந்தது.

    யாரும் கவனிக்காமல் குனிந்து அந்த வரிகளுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்...

    புத்தகத்தைப் புரட்ட... உள்ளிருந்து இன்லண்ட் கடிதம் விழுந்தது. நேற்று அம்மாவிடமிருந்து வந்த கடிதம்.

    எடுத்துப் பிரித்து மீண்டும் படித்தாள்.

    ‘காமாட்சி துணை’

    அன்புள்ள மகள் ரஞ்சனிக்கு உன் அம்மா பாசத்துடன் எழுதிக்கொண்டது. சௌக்கியமா? உன்னிடமிருந்து நீண்ட நாட்களாக கடிதம் இல்லை. இந்த மாதம் மணி ஆர்டரில் பணம் அனுப்பியபோது இரண்டு வரி நலம் விசாரித்து எழுதியிருந்தாயே, அதற்குப் பிறகு என்ன மௌனம். உன் உடல்நிலை நன்றாக இருக்கிறதல்லவா? வேதாசலம் அண்ணன் நான்கு தினங்களுக்கு முன்னால் இங்கே காஞ்சிபுரத்திற்கு வந்தவர் நம் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் சொன்ன ஒரு விவரத்திற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. அந்த விஷயத்தில் நான் பதில் சொல்வதும் சரியில்லை. விஷயம் உன் சம்பந்தப்பட்டது. அதனால்

    Enjoying the preview?
    Page 1 of 1