Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athikaalai Aanantham
Athikaalai Aanantham
Athikaalai Aanantham
Ebook159 pages49 minutes

Athikaalai Aanantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அகங்காரம், ஆணவம், பிடிவாத குணம் இவை அனைத்தும் ஒரு பெண்ணிற்கு இருந்தால் அவள் வாழ்க்கை நாசமாகிவிடும். பிரம்மா-அஞ்சனா இருவரின் அழகான குடும்ப உறவில் சூன்யம் வைத்தது யார்? பாசமான தன் கணவனை அஞ்சனா பிரிவதற்கான காரணங்கள் என்ன? பிடிவாத குணத்தால் நிர்மூலமான அஞ்சனாவின் வாழ்வு, இறுதியில் அஞ்சனாவின் நிலை என்ன? வாசித்து தெரிந்துக் கொள்வோம்...

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580100608227
Athikaalai Aanantham

Read more from Devibala

Related authors

Related to Athikaalai Aanantham

Related ebooks

Related categories

Reviews for Athikaalai Aanantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athikaalai Aanantham - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அதிகாலை ஆனந்தம்

    Athikaalai Aanantham

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    பெண்குழந்தை பிறந்திருக்கு!

    டாக்டர் வெளியே வந்து சொல்ல, பிரம்மா உற்சாகத்தால் துள்ளிவிட்டான்.

    பெண் குழந்தை வீட்டுக்கு ஐஸ்வர்யம். அதுவும் நவராத்திரிநாள்ல, துர்காஷ்டமி காலைல பிறந்த பெண் குழந்தை!

    என் பொண்ணு எப்படி இருக்கா?

    டாக்டரிடம் அம்மா கேட்டாள்.

    நார்மல் டெலிவரிதானே! நல்லா இருக்காங்க! பதினஞ்சு நிமிஷத்துல ரூமுக்குக் கொண்டு வந்துடுவோம்!

    அடுத்த பத்து நிமிடங்களில் குழந்தை, பட்டு ரோஜாவுக்கு கை கால்கள் முளைத்ததைப் போலவந்தது.

    அம்மா வாங்கிக்கொண்டாள்.

    பிரம்மா ஆசை பொங்க அதைப்பார்த்தான்.

    பரவசமாக இருந்தது. செக்கச்செவேலென்று, தலை கொள்ளாத முடியுடன் வசீகரமாக இருந்தது குழந்தை!

    தனியறையில் தொட்டிலில் கொண்டு போய் போட்டார்கள்

    அடுத்த இருபது நிமிடங்களில் அஞ்சனாவையும் கொண்டுவந்து கிடத்தினார்கள்! அவளுக்கு நினைவு இருந்தது.

    அம்மா அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

    என்கண்ணே! ஒரு குழந்தைக்கு நீ தாயாகணும்னு குடும்பமே தவிச்ச தவிப்பு கொஞ்சமா? கடவுள் கைவிடலை!

    பிரம்மா அருகில் வந்தான்.

    அவளைப் பார்த்து சந்தோஷமாகச் சிரித்தான்.

    நான் வீட்டுக்குப் போய் கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கி அக்கம் பக்கத்துக்குக் குடுத்துட்டு, ஜனணியையும் கூட்டிட்டு வர்றேன்!

    அஞ்சனா தலையாட்டினாள்.

    பிரம்மா வெளியே வந்தான்!

    பிரம்மா தனியார் நிறுவனம் ஒன்றில் பர்ச்சேஸ் அதிகாரி! பெற்றவர்களை சிறுவயதில் இழந்தவன். உடன் பிறப்புகள் உண்டு. ஒரு அண்ணன்; ஒருதங்கை!

    அண்ணன் நல்லவன். அண்ணி சுயநலக்காரி. அதனால் சுலபமாகக் குடும்பத்திலிருந்து அவனைப் பிரித்துவிட்டாள்.

    பிரம்மாவும் அவன் தங்கை சுமதியும் மற்றவர்கள் தயவில் தலையெடுக்க படாதபாடுபட்டார்கள்.

    சுமதியை ஒரு நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்தான் பிரம்மா அவள் இப்போது கணவனுடன் வெளிநாட்டில்!

    பிரம்மா பொதுவாக யாரிடமும் நெருங்கிப்பழகாத டைப்! அவன் மனதைக் கொடுத்ததே அஞ்சனாவிடம்தான்.

    அவளும் தனியாரில் ஸ்டெனோ. பிஸினஸ் ரீதியான சந்திப்புகளில் அவளைப் பார்க்க நேர்ந்து - அது பற்றிக்கொண்டு காதலானது!

    அஞ்சனாவுக்கு அப்பா இல்லை! அம்மா மட்டும்தான். அக்கா குடும்பத்துடன் இருவரும் வசித்தார்கள்!

    பிரம்மாவும் காதலித்ததால் கட்டின சேலையுடன் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தான்.

    அஞ்சனா சேமிப்பில் ஒரு லட்சம் வரை வைத்திருந்தாள்.

    கல்யாணம் நன்றாகவே நடந்தது!

    தனி வீடு பார்த்து, இருவரும் சந்தோஷமாக நல்லபடியாகவே குடித்தனம் நடத்தினார்கள்.

    இருவரும் சம்பாதிப்பதால் பணத்துக்கும் பஞ்சமில்லை!

    சந்தோஷமான வாழ்க்கை இரண்டு வருட காலங்கள் வரை நீடித்தது. லேசான சலிப்பு ஆரம்பமானது! ஒரு எந்திரத்தனம் தலையெடுத்தது.

    ‘இந்த வாழ்வும், சந்தோஷமும் யாருக்காக?’

    ‘எதை எதிர்பார்த்து?’

    பெரிதாகக் கேள்வி வந்தது. அக்கம் பக்கத்தார் குழந்தைகளுடன் கூடிக் குலவ, எல்லா வீட்டிலுமே சந்தோஷத்துக்கு வேர் குழந்தைகள்தான் என நன்றாகவே தெரிந்தது!

    நமக்கது ஏன் இன்னும் கிடைக்கவில்லை என்ற கேள்வி வந்தது.

    உடனே ஒரு கைனகாலஜிஸ்ட் டாக்டரிடம் முன் பதிவு செய்து கொண்டார்கள். பரிசோதனை இருவருக்கும் நிகழ்ந்தது.

    பிரம்மாவிடம் எந்தக் குறையும் இல்லை!

    அஞ்சனாவுக்கு உயிரணுக்கள் செல்லும் பாதையில் அடைப்பு இருக்கிறது என்று சொல்லி, ஒரு சிறு ஆபரேஷன் செய்யவேண்டும் என்றார்கள்.

    பிரம்மா உடனே சம்மதித்தான்.

    தேதி குறிக்கப்பட்டது.

    ஒரே நாளில் ஆபரேஷன் முடிந்து, மறுநாள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

    அவளை பெட் ரெஸ்ட்டில் வைத்து பிரம்மா கவனமாகப் பார்த்துக்கொண்டான்.

    அதன் பிறகு டாக்டர் குறித்துக் கொடுத்த நாளில்தான் இருவரும் சேர்ந்தார்கள்!

    சொல்லி வைத்தாற்போல நாள் தள்ளிப்போனது!

    ஐம்பதாவது நாள் இருவரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.

    அஞ்சனா கர்ப்பம் என்ற சேதியை டாக்டர் சொன்னார்.

    உள்ளங்கையில் வைத்து பிரம்மா தாங்கினான்.

    ஏறத்தாழ 65 நாட்கள் வரை எந்த பிரச்னையும் இல்லை அதன் பிறகு வயிற்று வலி அது இதுவெனத் தொடங்கி, எழுபத்திரெண்டாவது நாள் குழந்தை கலைந்தது.

    அந்த கருச்சிதைவினால், அஞ்சனா மிகபலமாக அடிபட்டுப்போயிருந்தாள்.

    அவளை பழைய நிலைக்குக்கொண்டு வர பிரம்மா பட்டபாடு கொஞ்சமில்லை! ஆறுமாதம் கழித்து அடுத்த கர்ப்பம்...! அது என்பது நாள் வரைதான் நீடித்தது!

    அதுவும் கலைந்தபோது இருவருமே நொறுங்கிப்போனார்கள்.

    மறுபடியும் டாக்டரிடம் வர,

    ‘கொஞ்ச நாளைக்கு கர்ப்பம் தரிக்காம இருந்தா, அஞ்சனாவுக்கு நல்லது’என்றார்!

    எனக்குக் குழந்தை பாக்யமே இல்லையா டாக்டர்?

    ஏன்மா அப்படி சொல்ற? ஒரு குழந்தையை சுமக்கற சக்தி உன் கர்ப்பப்பைக்கு தற்சமயம் இல்லை! கவலைப் படவேண்டாம். அதை உறுதிப்படுத்த என்ன சிகிச்சை செய்யணுமோ, செய்யலாம்!

    அடுத்த மாதமே சிகிச்சை தொடங்கியது.

    அந்த மருந்துகள், விலை உயர்ந்த ஊசிகள் அஞ்சனாவுக்குச் சேராமல், ஏராளமான பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட்டது! அதனால் உடம்பில் கட்டி, வீக்கம் எனப் பலபிரச்னைகள்.

    தினசரி நோயும், மருந்துமாக வேலைக்கே போக முடியவில்லை! வெறுத்துப்போனது!

    மருந்துகளை நிறுத்திவிட்டாள்.

    நான் தாயாக வேண்டாம். இந்த அவஸ்தை எனக்குத் தாங்கலை! என் வாழ்க்கையே பாழாப்போச்சு!

    அழுதாள் வாய்விட்டு!

    பிரம்மா சமாதானப்படுத்தினான்.

    என்னம்மா நீ?

    இல்லைப்பா! எத்தனைக்கெத்தனை சந்தோஷமா இருந்தமோ, அத்தனையும் கண்பட்டமாதிரி கலைஞ்சுபோச்சே!

    எதுவும் கலையலை, நீ இயல்பா இரு! குழந்தை விருப்பத்தை கொஞ்சகாலம் தள்ளி வைக்கலாம். நமக்கு யோகமிருந்தா கிடைக்கும்! புரியுதா? அதே ஏக்கத்துல இருந்தா, வாழ்நாள் முழுக்க வருத்தப்படத்தான் நேரமிருக்கும்!

    ஓரளவுக்கு தன்னைத்தேற்றிக் கொண்டுவிட்டாள் அஞ்சனா.

    மருந்துகளை நிறுத்தி, தற்காலிகமாக மனக் கவலைகளையும் தள்ளிப் போட்டுவிட்டு தன் உத்யோகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.

    இருவரும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்கள்.

    அலுவலகத்தில் அவளது நெருங்கிய ஸ்நேகிதிகள் சிலர் இந்தப் பிரச்சினையை வேறுவிதமாக அவளிடம் கொண்டுவந்தார்கள்.

    அஞ்சனா! குழந்தை ஆசை இருந்தா, தத்து எடுத்துக்கோயேன்!

    நம்முது மாதிரி ஆகுமா?

    ஏன் ஆகாது? எல்லாமே மனசைப் பொறுத்த விஷயம் அஞ்சனா! பாசம் காட்டணும்னு முடிவெடுத்துட்டா, அது! நம்ம குழந்தைதான்!

    எனக்கு இதைப் பற்றி ஐடியா இல்லை! அவர்கிட்டப் பேசிட்டு முடிவுக்கு வரலாம்!

    2

    அன்று இரவு சாப்பாட்டை முடித்துவிட்டுப் படுக்கைக்கு வந்தார்கள்.

    பிரம்மா அலுவலகக் கணக்குகள் எதையோ

    Enjoying the preview?
    Page 1 of 1