Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathala Karandi
Pathala Karandi
Pathala Karandi
Ebook109 pages43 minutes

Pathala Karandi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண்ணின் ஆழ்மன ரகசியங்களை பாதாளக் கரண்டி சிறுகதையாய் உங்களை வாசிக்க வைக்கிறது. வாருங்களேன் படிக்கலாம் பாதாளக் கரண்டியுடன் பயணம் செய்யும் சிறுகதைகளை!

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580142809293
Pathala Karandi

Read more from Mala Madhavan

Related to Pathala Karandi

Related ebooks

Related categories

Reviews for Pathala Karandi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathala Karandi - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாதாளக் கரண்டி

    Pathala Karandi

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கரையான் புற்று

    கொஞ்சம் மெனக்கிடணும்!

    கோழி! பற! பற!

    மடை மாற்றம்

    மகுடி

    மனமும் மணமும்

    மனம் விரும்புதே

    மனிதம்

    மீட்சி

    நதி போல ஓடிக் கொண்டிரு!

    நீரடித்து விலகுமா நீர்

    நீர்க்குடம்

    ஓவியப் பாவை

    ஒருநாளிரவு

    பாதாளக் கரண்டி

    பத்மநாராயணன்

    பந்தயம்

    கரையான் புற்று

    அந்த அக்ரஹாரம் துக்கத்தில் மூழ்கி இருந்தது. வாசுதேவ ஐயர் தூக்கு போட்டுக் கொண்டு விட்டார்.

    வாசுதேவ ஐயர் அந்தக் கால பத்தாவது. பல முறை முயற்சித்தும் அந்த பத்தாவதை அவரால் பாஸ் பண்ண முடிய வில்லை.

    நானா? அந்தப் பரீட்ச்சையான்னு பார்த்துறலாம்டா! தன் எட்டு வயதுப் பேரனிடம் சொல்வார்.

    தாத்தா! விட்டுரு! அது பாவம் பொழச்சுப் போகட்டும்!

    நீயும் நானும் சேர்ந்து எழுதுவோமாடா? என்பார் கண்ணடித்து.

    போ! தாத்தா! அப்பக் கூட நீ பெயிலாப் போவ! இல்லன்னா என்னைப் பார்த்துப் பிட் அடிப்ப!

    நானா? பிட்டா? சான்ஸே இல்லடா சின்னப் பயலே! அப்படியெல்லாம் இருந்திருந்தா நான் முதல் அட்டெம்ண்டுலயே பாஸ் பண்ணி இருப்பேன். கெட்டது செய்யேன்! கெட்டதைப் பாரேன்! கெட்டதைக் கேளேன்! இது தான் என் பாலிசி!

    சொல்லிக் கொண்டிருந்த பொழுது உள்ளே வந்த நர்த்தனா "என்னடா ரிஷி? தாத்தாவ சீண்டிண்டு இருக்க? உனக்குப் படிக்கப் பாடம் இல்லையா? உங்கப்பா இங்க இருந்திருந்தா உன்னைக் கவனிச்சுப் படிக்க வைச்சிருப்பார்.

    ஏம்மா குழந்தையை சத்தம் போடற? மாப்பிள்ளை இல்லேன்னா என்ன? நான் கவனிச்சுப் படிக்க வைக்கறேன்... என்னடாப்பா ரிஷி... சரி தானே!

    தாத்ஸ்! தேவையா இது உனக்குத் தேவையா? பாட்டு பாடினான் ரிஷி.

    அத்தனை கலகலப்பானவரா போய் விட்டார்?

    அப்பா! நீ எனக்காக எத்தனை கஷ்டப்பட்ட? அம்மாவும் இல்லாம தாயுமானவராய் நீ என்னை வளர்த்தது என்னை இன்னொரு ஆத்துக்கு கல்யாணம் பண்ணி அனுப்பறதுக்கா? நான் மாட்டேன்! வேணும்னா ஆத்தோட மாப்பிள்ளையாப் பாரு!

    திண்ணையில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த வாசுதேவனின் மடியில் படுத்துக் கொண்டு விசும்பிய நர்த்தனாவைக் கோதிய அவர் கரம் நடுங்கிற்று.

    ஆத்து மாப்பிள்ளையா? நான் பட்ட பாடு இன்னொரு பிள்ளையும் படணுமாம்மா?

    உனக்கு வாய்ச்ச மாமனார் சரியில்ல அப்பா! ஆனா என் ஆத்துக்காரருக்கு வாய்க்கப் போற மாமனார் தங்கமாக்கும்!

    நினைவலைகளின் ஈரம் அவர் கண்களில் கண்ணீராய் வழிந்தது.

    அந்த ஈரத்தில் ஆத்தோட இருன்னு தன்னைப் பாடாய்ப் படுத்திய அவர் மாமனாரின் தடம் தெரியத் தன் தலையைக் குலுக்கிக் கொண்டார் அவர்.

    நம்மாத்துல மாட்டுக் கொட்டகை இல்ல. உன்ன மாதிரி சாணி அள்ள வேண்டாம்! நம்மாத்துல வயல் வேலையும் இல்ல..உன்னைப் படுத்தின மாதிரி சாப்பாடு கூட இல்லாம வேலை வாங்க வேண்டாம்! நம்மாத்துல பத்து பேர் இல்ல... அத்தனை பேருக்கும் சிஷ்ருக்ஷை பண்ணவும் வேண்டாம். ஏதோ ஒரு நாள் ரொம்ப அலுப்பா இருந்தா என் கால வேணா பிடிச்சு விடலாம்! என்ற நர்த்தனாவை

    சொல்லப்படாதும்மா! சொல்லப்படாது. பொம்மனாட்டி காலைப் பிடிச்ச பாவமெல்லாம் என்னோடு போகட்டும். உனக்காவது அன்பால ஆளற ஆம்படையான் வாய்க்கட்டும்

    அடடா! அப்பா! உன் கரையான் புற்றைச் சீண்டி விட்டுட்டேனா? அழிச்சுடு! நான் சொன்னதெல்லாம் அழிச்சுடு! அம்மா தான் உன் வாழ்வின் கரையானா இருந்தா. அவ காலைப் புடிச்சு கெஞ்சினே... நீ! திருந்தினாளா? அவ அப்பாவோட அகம்பாவம் அப்படியே வந்ததுலே அவ விளையாட்டுக்குத் தன்னை அழிச்சுக்கப் போறேன்னு பத்த வைச்ச தீ அவளை, அகங்காரத் தீயா அழிச்சுடுத்தே! அத்தோட அவ அப்பாவும்னா பொண்ணக் காப்பாத்தறேன்னு போய்ச் சேர்ந்தார். இதெல்லாம் நீ சொல்லிச் சொல்லி என் மனசுல ஆறா ரணமா பதிஞ்சு போச்சுப்பா!

    விடு ராஜாத்தி! உனக்கு என்னை விட உசத்தியா மாப்பிள்ளை அமைவான்! சொன்னபடி சல்லடை போட்டு சலித்து எடுத்தவன் தான் வசீகரன். சுயம்பு என்றான் சுதந்திரமானவன் என்றான்.

    வாசுதேவனும் என் மாப்பிள்ளை தங்கம்! என்றார்.

    அத்தனை பாசமானவரா போய்விட்டார்?

    வெண்மேகம் கருக்கொண்டால் என்ன அழகாக இருக்கிறது? நர்த்தனா தன் வீட்டு மொட்டை மாடியில் வசீகரனின் தோள் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

    அவளுக்குத் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் கருவுற வில்லையே என்று ஏக்கமாக இருந்தது. நல்ல டாக்டரைப் பாரும்மா என அப்பா அவளிடம் கூறியதில் வசீகரனிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தாள் அவள்.

    மழைக்கு அவ்வளவு ஆசையா நனி?

    யார் தான் ஆசைப்பட மாட்டார் வசீ!?

    மழைக்காலம் இன்னும் வரலை நமக்கு!

    காலம் கெட்டு வர்ற மழை யாருக்கும் பிரயோசனமில்லை வசீ!

    வரும் போது வரட்டுமே நனி!

    வழி அறியா மழைக்கு நாம் தானே வழி காண்பிக்க வேண்டும்? நாளை டாக்டரிடம் செல்லலாம். நல்ல நாளாம்!

    பின் நடந்த பல செக்கப்பில் இவள் கர்ப்பப்பையை உறுதியாக்க மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் என ஓடி செயற்கைக் கருவூட்டலில் வந்து நின்ற போது நர்த்தனா ஆடித்தான் போனாள். சில பல மருத்துவமனை வாசத்தின் விளைவு ரிஷி என்றான போது அத்தனை துன்பங்களும் மாயமாய் மறைந்தது.

    மாப்பிள்ளை! எனக்கு ரொம்ப சந்தோஷம்! இனி நீங்க தான் என் பிள்ளை! வாசுதேவன் தன் சொத்து அனைத்தையும் வசீகரன் பெயரில் மாற்றி ரிஷியின் பொறுப்பைத் தன் சொத்தாக ஏற்றுக் கொண்டார்.

    "மாமா! இதெல்லாம் எதுக்கு?

    இருக்கட்டும் மாப்பிள்ளே! இனி இவன் தான் என் சொத்து! அந்தத் தாயுமானவர் தாத்தாவுமானார்.

    அவரா... அத்தனை அன்பானவரா

    Enjoying the preview?
    Page 1 of 1